என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிடவேண்டும் அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வலியுறுத்தி, காரைக்காலில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நேற்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காரைக்கால் பெரிய பள்ளி வாசல் முகப்பில் தொடங்கிய இந்த பேரணி க்கு, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணை ப்பாளர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரணி, காரைக்கால் திருநள்ளாறு சாலை, பாரதியார் சாலை, தோமாஸ் அருள் வீதி, காமராஜ் சாலை வழியாக சென்று, காரைக்கால் கடற்கரை சாலையில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், திரு.பட்டினம், அம்பகரத்தூர், நிரவி, சேத்தூர், நல்லம்பல், திருநள்ளாறு, புதுத்துரை, நேரு நகர் பகுதி ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமு கர்கள், சமுதாய அமைப்பு களின் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்ட த்தில், சிறுபான்மை சமூ கங்கள் மற்றும் மதச்சார்பற்ற  அரசியல் கட்சிகளை யும், ஜனநாயக அமைப்பு களையும் அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வேண்டும். மாநில அரசின் உரிமை களையும், மாநில காவல் துறையின் அதிகாரங்க ளையும் முற்றிலும் பறிக்கக் கூடிய தேசிய புலனாய்வு முகமையை, ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிட வேண்டும். அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    • சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதை ஏற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு புது நகர் பகுதியில் கெஸ்ட் ஹவுசுடன் மதுபார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து காலாப்பட்டு பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது போராட்டம் நடத்தியவர்கள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தில் உரிமம் இல்லாமல் மது பார் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாரால் இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ காலாப்பட்டு தொகுதியில் காலாப்பட்டு, ஆலங்குப்பம் பகுதியில் 4 மது கடைகள் திறக்கப்படுவதாக இருந்ததை அறிந்து சட்டசபை வளாகத்தில் முற்றுகையிட்டேன்.

    எனக்கும், முதல்-அமைச்சருக்கும் இதனால் பிரச்சனை ஏற்பட்டது. இதனை நீங்கள் எல்லோரும் அறிந்தது தான். எனவே இந்த பகுதியில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளேன். இந்தப் பகுதியில் கூடுதலாக மதுக்கடைகள் பார் திறக்க அனுமதிக்க மாட்டேன். அவ்வாறு திறந்தால் மக்களோடு சேர்ந்து நான் போராடுவேன் என்று கூறினார்.

    கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதை ஏற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கில் விண்வெளி அறிவியல் கண்காட்சியை நடைபெற்றது.
    • விண்வெளி அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விண்வெளி அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்எல்ஏ நாஜிம், கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் பலர் உள்ளனர்.

    • காளிச்சரன் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார்.
    • நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு கைலாசநாதர் நகரைச்சேர்ந்தவர் காளிச்சரன். இவர் காரைக்காலில் உள்ள தனியார் மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 16.8.22 அன்று, தனது நண்பர் கணேஷ் என்பவர், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என அவரது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை கடன் கேட்டுள்ளார். காளிச்சரனும் மோட்டார் சைக்கிளை கடன் கொடுத்துள்ளார்.

    மறுநாள் கணேசிடம் மோட்டார் சைக்கிளை கேட்டபோது, தனது தாயுடன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். கணேஷ் தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளுடன் சென்று இருப்பார் என காளிச்சரன் இருந்துவிட்டார். சில நாட்கள் கழித்து, கணேஷ்க்கு போன் போட்டு கேட்டபோது, தான் இன்னும் காரைக்கால் வரவில்லை என கூறியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் காரைக்கால் வந்த கணேஷ், காளிச்சரனை பார்த்து, 16.8.22 அன்று காரைக்கால் பிரகார வீதியில் உள்ள தனியார் கிளினிக் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தஞ்சாவூர் சென்றதாகவும், வேலை பலுவில் அதை மறந்துவிட்டதாகவும், இன்று வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை என கூறியுள்ளார். 

    தொடர்ந்து, நண்பர்கள் இருவரும், பல இடத்தில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை என்பதால், காரைக்கால் நகர காவல்நிலையத்தில் காளிச்சரன் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகார வீதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன், மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • காரைக்காலில் தூக்கு போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • பணம் செலவானதால், மீண்டும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி மேல ஓடுதுறையைச்சேர்ந்தவர் செந்தில் சீதாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு நர்மதா(வயது19), கீர்த்தனா(17), யுவராஜ்(15) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதில், நர்மதா, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனை பார்த்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர் கண்டித்துள்ளனர். கடந்த 15ந் தேதி, வழக்கம் போல், செல்போன் பார்த்து கொண்டிருந்த மகளை, எப்போதும் செல்போனை பார்த்துகொண்டிருக்காதே. கொஞ்சம் நேரம் படி என தாய் கண்டித்தார். தொடர்ந்து, வீட்டு அறைக்கு சென்ற நர்மதா, நயிலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    எதார்த்தமாக மகளின் அறைக்கு சென்ற தாய் கீதா லட்சுமி, மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து, சத்தம் போட்டார். ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை தூக்கிலிருந்து காப்பாற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சைக்கு அதிகம் பணம் செலவானதால், மீண்டும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த நர்மதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, நிரவி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காரைக்கால் பாரதியார் சாலையை கடக்க முயன்ற என்ஜினீயர் விபத்தில் பலியானார்.
    • இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு தனியார் நூற்பாலையில், எலக்ட்ரிக் என்ஜினியராக வேலை செய்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது49). இவர் அதே பகுதியில், தனியார் நூற்பாலை குடியிருப்பில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார். காரைக்கால் ரெயில் நிலையம் அருகே பாரதியார் சாலையை கடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்களில் வேகமாக வந்த காரைக்கால் ராஜாத்தி நகரைச்சேர்ந்த கஜனி (26) என்பவர் மோதியது.

    இதில், கோபால கிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்து போனார். இது குறித்து, கோபாலகிருஷ்ணனின் நண்பர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கஜனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிஷோரின் தலையில் பலத்த காயமுற்று மயங்கினார்.
    • போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி தென்பாதியைச்சேர்ந்தவர் விஜயக்குமார். இவரது மகன் கிஷோர் (வயது 12). சம்பவத்தன்று சிறுவன் கிஷோர் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு, மேலகாசாகுடி சாலையில் சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, மேலகாசாகுடி சாலையில் திரும்பும், போது, அதே ஊரைச்சேர்ந்த சாலித்நாதன் (22) என்பவர் ஓட்டி வந்த வாகனம் பயங்கரமாக மோதியது. இதில், கிஷோரின் தலையில் பலத்த காயமுற்று மயங்கினார்.

    இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 2 பேரையும், அங்குள்ளோர், காரைக்கால் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்த்தனர். மேல்சிகிச்சைகாக கிஷோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, செந்தில் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெங்கடேசன் புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
    • வெங்கடேசன் என்.ஆர். நகர் பகுதியில் வந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே ஓடைவெளி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). இவர் புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தார்.

    பின்னர் தனியாக மோட்டார் சைக்கிளில் பழைய சுண்ணாம்பாறு ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது என்.ஆர். நகர் பகுதியில் வந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தனர். அதோடு சிலரை வரவழைத்து போலீஸ்காரர் வெங்கடேசனை மீண்டும் தாக்கினர்.

    இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் உடனடியாக அவசர போலீஸ் 100-க்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    பின்னர் காயமடைந்த வெங்கடேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தவளகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிச்சாமி ஏட்டு லட்சுமணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் வெங்கடேசனை தாக்கிய கும்பல் முன் விரோதத்தால் தாக்கியதா? அல்லது தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் வெங்கடேசனை தாக்கி நகையை பறித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ்காரரை தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
    • 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றன.

    மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் ஒருங்கிணைந்து மாதூகா நார்ய சக்தி என்ற பெயரில் ஆன்மீக அமைப்பை நடத்தி வருகின்றனர்.

    இதன் சார்பில் ஆண்டுதோறும் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜா விழாவில் 9 நாட்கள் விரதமிருந்து 10-வது நாள் துர்கா சிலையை கடலில் கரைப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழா கொண்டாடப்படவில்லை.

    2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு துர்கா பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 9 நாட்களும் விரதம் இருந்து தினமும் பல்வேறு பூஜைகளை முடித்த பெண்கள் வேனில் துர்கா சிலையை வைத்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு வந்தனர். வடமாநில இசையுடன் ஆண்கள் துர்க்கா சிலையை கடலில் கரைத்தனர்.

    • மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம், புதுவையை சேர்ந்த 13 சகோதரர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் தாயகம் திரும்புகின்றனர்.
    • மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் 13 சகோதரர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர் முயற்சிகளால் மியான்மரில் சிக்கிய சகோதரர்களை மீட்ட மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் மற்றவர்களும் தாயகம் திரும்புவர்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

    • புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும்.
    • இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி வந்துள்ள மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக முழுமூச்சில் பணிகள் செய்து வருகிறோம். தேசிய கல்விக்கொள்கையில் உள்ளூர்மொழிக்கும், தாய்மொழிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    புதிய கல்விக்கொள்கையால் அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகள் வந்து விடும். அனைத்து விஷயங்களையும் பள்ளிக்கல்வியிலேயே அறிய முடியும். இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார் செய்ய வழிவகுக்கும். தேசிய கல்விக்கொள்கையை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தேசிய கல்விக்கொள்கையில் ஆக்கப்பூர்வ முயற்சியை நாங்கள் தருகிறோம்.

    ஆனால், தேசிய கல்விக்கொள்கையை அரசியல் காரணங்களுக்காக தான் சிலர் எதிர்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். என்பது தனிப்பட்ட அமைப்பு. தசரா காலத்தில் அவர்கள் ஊர்வலம் செல்வது வழக்கம். இந்தியா ஜனநாயக நாடு. அவரவருக்கு உரிய தனிப்பட்ட பார்வைகளை வெளிப்படுத்த அனுமதியுண்டு. புதுவையில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். அது வரவேற்கத்தக்கது. மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலித்து விரைவில் முடிவு தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு செய்தல் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது.

    இதைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கிடையே, தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர்.

    இந்நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அப்போது, மின்துறை ஊழியர்கள் முதல் மந்திரி ரங்கசாமியை சந்திக்க சட்டபேரவைக்கு வந்தனர். இதனால் அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மின்துறை ஊழியர்களுடன் முதல் மந்திரி ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல் மந்திரி ரங்கசாமி உறுதியளித்ததைத் தொடர்ந்து கடந்த 6 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×