என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது.
    • கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி புதுவையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். மழையால் சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது. நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது.
    • சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு காரைக்காலை அனைத்து வகையிலும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறி ப்பாக சொல்லப்போ னால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது. மாணவ ர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் வசதி முற்றிலும் கிடையாது.

    சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது. நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. முதல் கட்டமாக, புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து, காரைக்காலில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஓரிரு நாளில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது, கல்வித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    • காரைக்கால் திருப்பட்டினத்தில் பெட்டிக்கடையில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் கெம்பிளாஸ் ட்தொழிற்சாலை பகுதியில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, திரு ப்பட்டினம் போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 140 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு சேத்தங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் நா ராய ணமூர்த்தி(வயது57). இவர், தனக்கு சொந்தமான வயல் ஒன்றை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச்சேர்ந்த ராஜே ந்திரன்(48) என்பவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பணத்தை திருப்பி கொடுத்து, நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ரா ஜேந்திரன் சம்பந்தப்பட்ட நிலத்தில் நாற்று நட்டதாக கூறப்படுகிறது.

    விபரம் அறிந்த நாராயணமூர்த்தி, வயலுக்கு சென்று தட்டி கேட்டபோது, வயலில் கிடந்த குச்சி ஒன்றால் ராஜேந்திரன் நாராய ணமூர்த்தியை தாக்கி யுள்ளார். தொடர்ந்து, ராஜேந்திரனின் அண்ணன் சந்திரசேகரர்(50), அவரது மகன் தினேஷ்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து நாராயணமூர்தியை தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நாராயணமூர்த்தி, திருநள்ளாறு தேனூர் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்ப த்திரியில் சேர்கப்ப ட்டார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள்.
    • நிஷாந்தி செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகை மோசடி புகார்களை சட்டம்-ஒழுங்கு போலீசாரே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மோசடி புகார்களை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் வங்கியில் கடன் பெற்று தருவதாக மேலும் 2 பெண்களிடம் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    கிருமாம்பாக்கம் அருகே மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ஞானசவுந்தரி (வயது30). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் செல்போனில் மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கியில் இருந்து பெர்சனல் லோன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்பிறகு குறிப்பிடப்பட்ட செல்போன் நம்பரில் ஞானசவுந்தரி தொடர்பு கொண்டபோது அதில் பேசிய தீபா என்ற பெண் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு ரூ.5 ஆயிரத்து 750 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    அதன்படி ஞானசவுந்தரி அந்த பணத்தை கூகுல் பே மூலம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தும்படி கூறியதின் பேரில் ஞானசவுந்தரி ரூ.16 ஆயிரத்து 500, ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 77 ஆயிரத்து 750 அனுப்பி வைத்தார்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து பணம் செலுத்தும்படி தொந்தரவு செய்து வந்தனர்.

    இதனால் ஞானசவுந்தரி தனக்கு லோன் வேண்டாம் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்கும்படி கூறியபோது அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யபட்டதை அறிந்த ஞானசவுந்தரி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    பாகூர் காலனி தேசமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி நிஷாந்தி. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் செல்போனில் பிரதமரின் திட்டத்தில் ஒரு சதவீத வட்டியில் 20 சதவீத மானியத்தில் பணம் கடன் வழங்குவதாக மெசேஜ் வந்தது.

    இதையடுத்து நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள். நிதி நிறுவனத்தில் கடன் பெற வேண்டுமானால் முதலில் ரூ.5 ஆயிரத்து 850-ஐ செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    அன்படி நிஷாந்தி தனது வங்கி கணக்கில் இருந்து குகூல் பே மூலம் செலுத்தினார். மீண்டும் மறுமாதம் ரூ.28 ஆயிரத்து 288 செலுத்துமாறு கூறியதால் அந்த பணத்தையும் நிஷாந்தி அனுப்பி வைத்தார்.

    அதன்பிறகு நிஷாந்தியிடம் தொடர்புகொண்ட அவர்கள் தாங்கள் செலுத்திய பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என்று உறுதி கூறியதின் அடிப்படையில் பல கட்டமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 300-ஐ நிஷாந்தி அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு நிஷாந்தி அந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த நிஷாந்தி இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரைக்காலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மாயமானார்.
    • தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி மெயின் சாலையில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி கிருத்திகா. கிருத்திகாவின் தந்தை விஸ்வநாதன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதிலிருந்து கிருத்திகாவின் தாய் செல்வராணி(வயது72) மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசி கொன்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ந் தேதி, வீட்டில் அமர்ந்திருந்த செல்வராணி மாயமாகிவிட்டதாக கூற ப்படுகிறது. உறவினர்கள் மற்றும் பல இட்டங்களில் தேடியும், செல்வரானி கிடை க்காததால், கிருத்திகா காரைக்கால் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் , தாயை தேடி கண்டுபிடித்துதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராணியை தேடிவருகின்றனர்.

    • சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
    • நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் மனோகரன்(வயது50). இவர் நேற்று காலை வழக்கம் போல், கடற்கரை ஓரம் நடைபயிற்சி மேற்கொண்டார். சவுக்கு தோப்பு அருகே, அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. தொடர்ந்து, கிராம முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.

    அடையாளம் தெரியாத காரணத்தால், நிரவி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரை பற்றி அடையாளம் யாருக்கேனும் தெரிந்தால், நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு புதுவையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2 கண்டெய்னர் லாரி மற்றும் 2 இருசக்கர வாகனத்தில் புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவைக்கு கண்டெய்னர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரைக்காலில் ேபாலீசாரை தாக்கிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி பூவம் சிவன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி அதிகாலை 12.05 மணிக்கு, சொந்தவேலையாக காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் சந்தைதிடலருகே மோட்டார் சைக்களில் சென்று போது மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து பிரகாஷ், காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் திருட்டுப் போன பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து, காரைக்கால் நகர் பகுதியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த அத்திக்கு ரகுமான் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
    • புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவை வந்தார்.

    இன்று அவர் கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ரூபாய் புதுவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுவை பெஸ்டு புதுவையாக மாற்ற முதல்-அமைச்சருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். புதுவை-விழுப்புரம் சாலை ரூ.92 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். புதுவையில் முதல்கட்டமாக 1400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டுவதும் அவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்டு வருகிறோம்.

    சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

    விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார்.
    • மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

    புதுச்சேரி:

    மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்தார். இன்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் பிரதமரின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இன்று மதியம் 3 மணிக்கு முத்தியால்பேட்டை சோலை நகர் இளைஞர் விடுதியில் மீனவ சமுதாய மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    மாலை 4.30 முதல் 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் புதுவை மாநில வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார். மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இரவு புதுவையில் தங்கும் மத்திய மந்திரி எல்.முருகன் நாளை காலை 10 முதல் 11 மணி வரை பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.யோடு பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

    தொடர்ந்து 11.45 மணிக்கு 45 அடி சாலை மகாராஜா மகாலில் நடைபெறும் மண்டல குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து முதலியார்பேட்டை அசோக்பாபு எம்.எல்.ஏ. வீட்டில் உணவருந்தும் மத்திய மந்திரி, மாலை 4 மணிக்கு பாகூரில் பா.ஜனதா நிர்வாகிகளோடு கலந்துரையாடுகிறார். பின்னர் 6.30 மணிக்கு புதுவை ஓட்டல் சற்குருவில் வியாபாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    மத்திய மந்திரி வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள கருமாதி மண்டபம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சா விற்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து விசாரித்த போலீசார், காரைக்கால் நேருநகரைச்சேர்ந்த அமர்நாத் (வயது22) என்பது தெரியவந்தது. போலீசார் அமர்நாத்தை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 120 கிராம் எடைகொண்ட 12 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    ×