search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 8 டன் போதை பொருள் பறிமுதல்- 7 பேர் கைது
    X

    கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 8 டன் போதை பொருள் பறிமுதல்- 7 பேர் கைது

    • புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு புதுவையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2 கண்டெய்னர் லாரி மற்றும் 2 இருசக்கர வாகனத்தில் புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவைக்கு கண்டெய்னர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×