search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் திருப்பட்டினத்தில் பெட்டிக்கடையில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல்
    X

    காரைக்கால் திருப்பட்டினத்தில் பெட்டிக்கடையில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல்

    • காரைக்கால் திருப்பட்டினத்தில் பெட்டிக்கடையில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் கெம்பிளாஸ் ட்தொழிற்சாலை பகுதியில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, திரு ப்பட்டினம் போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 140 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×