என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, இன்று அதிகாலை முதல் லேசான தொடர் மழை காரைக்காலில் பெய்தது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    அண்டை மாநிலமான தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

    • சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.
    • குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை நாளை கூட்டப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    சபையில் இரங்கல் தீர்மானம், பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. குளிர்கால கூட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், சபை நாளை ஒரு நாள் மட்டுமே நடைபெறும். இதனிடையே மத்திய அரசு புதுவைக்கு 2023-24ம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.

    புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டாக புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    இதற்காக மாநில திட்டக்குழுவை கூட்ட துறைவாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி விபரங்களை பெற்று ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு வரைவு பட்ஜெட்டை மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    • சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் ,
    • மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்வளத் துறை அதிகாரி சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் என அறிவித்து ள்ளார். தென்மேற்கு வங்கக்க டலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சூறாவளி க்காற்று வீசக்கூடும் என்றும், இதனால் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ள தாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்ரை அறிவித்துள்ளது.

    எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி வரவேண்டும். என காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி அறிவித்துள்ளார்.

    • கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
    • பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அக்க ரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவருக்கும், நல்லாத்தூர் மேலப்படுகை கிராமத்தை சேர்ந்த துர்காலட்சுமிக்கும் (வயது 35) 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசவ த்துக்காக துர்காலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அங்கு துர்காலட்சுமியில் தாய் தமிழரசி (65), தந்தை பரமசிவம் (75), சகோதரர்கள் ஆண்டவர் (40), நடராஜன் (38), பாட்டி வேதவல்லி (85) ஆகியோர் உள்ளனர்.   இந்நிலையில் கடந்த 26ந் தேதி அதிகாலை, பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் தாய், தந்தை, பாட்டி மற்றும் சகோதர்கள் 2 பேர் என 5 பேரை, மண்வெட்டியால் வெட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்று சமையல றையில் இருந்த கத்தியை எடுத்து, தன்னைத்தானே கழுத்தில் அறுத்துகொண்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இரத்தவெள்ளத்தில் நடராஜன் பக்கத்து வீட்டு கதவை தட்டி சப்தம் போட்டு நடந்த சம்பவத்தை கூறி உதவிகேட்டுள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரை யும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வேதவல்லி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்         இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் துர்க்கா லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்தாய்பால் அதிகம் சுரக்காத காரணத்தால், பால் கொடுக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தேன். குழந்தை சதா அழுந்துகொண்டே இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் யாரும் இதற்கு உதவவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு குழந்தை, மற்றவர்களை கொலை செய்ய முயன்றேன். என வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொ டர்ந்து, துர்க்காலட்சுமியை கைது செய்த போலீசார் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த சில மாதமாக மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருடு போனவண்ணம் உள்ளது
    • அவர்கள் 4 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக் கொண்டார்

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்க ளில், கடந்த சில மாதமாக மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருடு போனவண்ணம் உள்ளது     இது குறித்த புகார்கள் அதிகரித்ததை அடுத்து, காரைக்கால் நகர போலீசார், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, பிரவீன் குமார் தலைமையில், வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, காரைக்கால் நகர எல்லைக்குள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஒருவரை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், முன்னுக்கு பின் முறனாக பதில் கூறியதால், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்  விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 23) என்பதும், அண்மையில் காரைக்கால் நகர் பகுதி யில், 4 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக் கொண்டார். மேலும், இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை குருமூர்த்தி (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 75 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர் பிரதிநிதிகள் தங்கும் விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • பேனர்களின் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் படங்களும், வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.

    புதுச்சேரி:

    ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

    இந்தியா முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடுகள் நடைபெற உள்ளது.

    புதுவையில் நாளை (திங்கட்கிழமை) ஜி20 தொடக்க நிலை மாநாடு நடைபெறுகிறது. கூட்டத்தில் பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர்.

    மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளை தங்க வைக்க நகர பகுதியில் 2 நட்சத்திர விடுதிகளும், சின்ன வீராம்பட்டினம் பீச் ரெசார்டும் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    75 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க இன்று பிற்பகலில் பிரதிநிதிகள் வர தொடங்கினர். விமான நிலையத்தில் அவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்று ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்க வைத்தனர்.

    பிரதிநிதிகள் தங்கும் விடுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தங்கும் விடுதி, விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நாளை மாநாடு நடைபெறுகிறது. இதனால் சுகன்யா கன்வென்சன் சென்டர் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை)மாநாட்டு பிரதிநிதிகள் புதுவையை யடுத்து தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில்லுக்கு செல்கின்றனர். ஆரோவில் நகரை சுற்றி பார்ப்பதுடன், அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர்.

    மாநாட்டையொட்டி ஜி20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கையை புதுவை அரசு எடுத்து வருகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

    அதேபோல் புதுவை பாரம்பரிய கட்டிடங்களான சட்டமன்ற வளாகம், தலைமை செயலகம், புதிய மேரி கட்டிடம், டி.ஜி.பி. அலுவலகம், பாரதி பூங்கா, கவர்னர் மாளிகை, மற்றும் தலைவர்களின் சிலைகளும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    மேலும், நகர பகுதியில் முக்கிய இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புதுவையின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையிலும், சுற்றுலாவை வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப் பட்டுள்ளது.

    மாநாட்டையொட்டி நகரம் முழுவதும் பிரதிநிதிகளை வரவேற்று பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேனர்களின் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் படங்களும், வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.

    நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்தது. இதில் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையின் 37 குழுவினர் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டர் வல்லவன் தலைமையிலான அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

    அப்போது தீயணைப்பு வாகனம் அபாய அலாரம் அடித்தபடி அரங்கிற்குள் வந்தபோது அங்கே பணியில் இருந்த தாசில்தார் மகாதேவன் குறுக்கே வந்துவிட்டார். தீயணைப்பு வாகன டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் தாசில்தார் மீது தீயணைப்பு வாகனம் மோதி கீழே விழுந்தார்.

    ஆனால், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் பாதுகாப்பு ஒத்திகையில் இருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவிழுனர் அவரை உடனடியாக முதல் உதவி சிகிச்சையளித்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிமெண்ட் மற்றும் மணலை கலக்க உதவும், கலவை எந்திரத்தில், கலவை தயார் செய்து கொண்டி ருந்தார்.
    • டாக்டர்கள் கூறியதை அடுத்த தமிழின் வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் பாலூரைச்சேர்ந்தவர் தமிழ் (வயது22). இவர், காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த மேஸ்திரி மணிகண்டன் (40) தலைமையில் கட்டிட வேலை செய்து வருகிறார். தமிழ் சம்பவத்தன்று, கட்டிடங்கள் கட்டும்போது, ஜல்லி, சிமெண்ட் மற்றும் மணலை கலக்க உதவும், கலவை எந்திரத்தில், கலவை தயார் செய்து கொண்டி ருந்தார். அப்போது, கலவை எந்திரத்தில் சத்தம் வந்ததை யடுத்து, தமிழ் கலவை எந்தி ரத்தில் உள்ளே கையை விட்டு ஆயில் ஊற்றினார். அப்போது தமிழின் வலது கை எந்திரத்தில் சிக்கியது. தொடர்ந்து, தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரிசியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தமிழ் உயிருடன் இருக்கவேண்டுமென்றால் வலது கையை துண்டிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதை அடுத்த தமிழின் வலது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து காரைக்கால் திரும்பிய தமிழ், காரைக்கால் நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் தொழிலாளியை வேலை செய்ய அனுமதித்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிளாஸ் பிரசாத் சௌத்ரி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அவர் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரி வித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடியில் உள்ள புதுச்சேரி என்.ஐ.டியில், நேபாளத்தை சேர்ந்த கிளாஸ் பிரசாத் சௌத்ரி (வயது43) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று என்.ஐ.டி. யில் காவலாளியாக வேலை செய்யும் திருவேட்டக்குடி கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மருத முத்து என்பவர், பணிக்கு சென்று, என்.ஐ.டி நிர்வாக கட்டிடம் எதிரே பொருட்கள் வைத்தி ருக்கும் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, கிளாஸ் பிரசாத் சௌத்ரி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, என்.ஐ.டி. அதிகாரி ஜெயராமனிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரி வித்தார். அதன்பேரில், போலீ சார் தற்கொலை செய்து கொண்ட கிளாஸ் பிரசாத் சௌத்ரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து கிளாஸ் பிரசாத் சௌத்ரி யுடன் பணிபுரிந்து வரும் வட மாநில தொழி லாளர்களி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.
    • விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஜி20 மாநாடு வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதன்பின் கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.

    புதுவையில் வருகிற 30, 31-ந் தேதிகளில் ஜி20 கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க பல நாட்டு பிரநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை சிறப்பாக நடத்த புதுவை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 30-ந் தேதி புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கருத்தரங்கு நடக்கிறது.

    மாநாட்டையொட்டி ஜி 20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. பல கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புதுவை நகர பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். புதுவை பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையிலும், சுற்றுலா தலமாக வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப்படும். மாநாடு வெற்றிகரமாக நடைபெற புதுவையின் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    சுற்றுலா பயணிகளுக்கு தடை என தவறான வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30-ந் தேதி இந்தோனேஷியா, இந்தியா, பிரேசில் விஞ்ஞானிகள் இணைந்து புதுவையில் நடைபெறும் கூட்டத்தை வழிநடத்துகின்றனர். 31-ந் தேதி ஆரோவில் சென்று பல இடங்களை பார்வையிடுகின்றனர்.

    புதுவை மாநாட்டில் 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும். டி.ஐ.ஜி. தலைமையில் 37 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், அக்கார்டு, ரெசிடன்சி, ரேடிசன் ஓட்டல்கள், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

    இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1-ந் தேதி வரை அமலில் இருக்கும். பிரதிநிதிகள் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். வழக்கம்போல மதுக்கடை உட்பட அனைத்து கடைகளும் திறக்கலாம். மாநாட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்
    • 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை போராட்டம்

    புதுச்சேரி:

    பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    • சபாபதி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர்.
    • தாய் பத்மாவதி தனது சொத்துக்களை சரிசமமாக அனைத்து குழந்தைகளுக்கும் எழுதி வைத்தாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே வரிச்சிக்குடி புது த்தெருவில் வசித்து வந்தவர் சபாபதி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய சகோதரர் சங்கர் (வயது56) என்பவர், வரிச்சிக்குடியில் தனியாக வசித்து வந்தார். மூத்த சகோதரர் இளங்கோவன் (66) வெளிநாட்டிலும் மற்றவர்கள் வெளி நாட்டிலும், இந்தியாவிலும் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு சபாபதி இறந்துபோனார். இதனால், பத்மாவதி இளைய சகோதரர் சங்கர் பாதுகாப்பில் சபாபதி வீட்டிலேயே வசித்து வந்தார். தாய் பத்மாவதி செலவுக்காக, சகோதரர், சகோதரிகள் மாதம் மாதம் ஒரு தொகையை, சங்கர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளனர்.

    மேலும், பத்மாவதி வசம் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் நகைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நி லையில், கடந்த 2017ல் பத்மாவதி கீழே விழுந்து காயம் அடைந்ததால், சங்கர் தாயை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பராமரித்து வந்துள்ளார். பின்னர், தாய் பத்மாவதி தனது சொத்துக்களை சரிசமமாக அனைத்து குழந்தைகளுக்கும் எழுதி வைத்தாக கூறப்படுகிறது. தாய் உடல் நிலை பாத்திக்க ப்பட்டு இருந்ததை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு, சங்கர், தாய், தந்தையின் பூர்வீக சொத்துக்கள், சகோதரர், சகோதரிகளுக்கான உரிமங்கள் சிலவற்றையும், பத்மாவதி வங்கியில் டெபாசிட் செய்திருந்த சுமார் 7.50 லட்சம் பணம் மற்றும் சகோதர்கள் அனுப்பிவந்த பணம் அனைத்தையும் சங்கர் தனது பெயருக்கு மாற்றிகொண்டார்.

    இந்நிலையில், பத்மா வதி கடந்த 2021ல் இறந்துபோனார். தொடர்ந்து காரைக்கால் வரிச்சிச்குடி திரும்பிய இளங்கோவனுக்கு, தாயின் பணம், நகை, சொத்துக்களை சங்கர் ஏமாற்றி பறித்துகொண்டதாக மற்ற சகோதரர்கள் மூலம் அறிந்து கொண்ட இளங்கோவன், இது குறித்து, கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில், சகோதரர் சங்கர் தங்களது தாய், தந்தையர்களின் சொத்துக்கள், பணம் மற்றும் சகோதர, சகோதரி களுக்கான சொத்துக்களை தாயிடமிருந்து ஏமாற்றி பறித்துக் கொண்டதாகவும், மேலும் சில அரசு முத்திரை தாள்கள், பத்திரங்கள், வெறும் பேப்பர்களில் பத்மாவதியின் கையெ ழுத்தை மிரட்டி வாங்கி வைத்திருப்பதாகவும் அதனை சங்கரிடமிருந்து மீட்டு தர வேண்டுமென புகார் கொடுத்தார். போலிசார் இது சிவில் வழக்கு, கோர்ட் மூலம் தீர்த்துகொள்ளும்படி அனுப்பி வைத்துவிட்டனர். தொடர்ந்து, உயர் அதிகாரிகாளை இளங்கோ வன் சந்தித்து புகார் கொடுத்தும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால், இளங்கோவன் காரைக்கால் கோர்ட்டில் இது குறித்து முறையிட்டார். தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில், போலீ சார் சங்கர் மீது இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • புதுவையில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு கண்டு, அதை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துறைத் தலைவர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதுவையில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரியமான கதராடைகளை அணிந்து, கைத்தறி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் அரசுத்துறைகளுக்கு அனுப்பிய மற்றொரு உத்தரவில், "மாதம் தோறும் 15-ந் தேதி மக்கள் குறைகளைத் தீர்க்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் மனுக்களைப் பெற வேண்டும்.

    இந்த மனுக்களுக்கு தனியாக கோப்புகளைத் தயார் செய்து வைத்து, தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு கண்டு, அதை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×