என் மலர்
நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு"
- உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.
- தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது55) வக்கீல். இவரது தாய் குப்புலட்சுமி. இவருக்கு சொந்தமான 22 ஆயிரம் சதுர அடி நிலம் புதுவையில் கிருஷ்ணா நகர் கிழக்கு கடற்ரை சாலையில் உள்ளது.
இந்த நிலத்தை, உருளையன்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமித்து வேலி அமைத்தார்.
இதுகுறித்து குப்புலட்சுமி நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். நில அபகரிப்பு பிரிவு தலைவரான தாசில்தார் ராஜேஷ் கண்ணன், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டார். அதில், குப்புலட்சுமியின் நிலத்தை, குணாதிலீபன் ஆக்கிரமித்திருப்பதை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன்பேரில் சப்-கலெக்டர் கந்தசாமி , நிலத்தை 15 நாளில் உரியவரிடம் ஒப்படைக்குமாறு குணாதிலீபனுக்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அளித்தார்.
ஆனால் நிலத்தை ஒப்படைக்காததால், தாசில் தார் ராஜேஷ்கண்ணன் போலீஸ் பாதுகாப்புடன், குணாதிலீபன் அமைத்திருந்த இரும்பு வேலியை அகற்றி, நிலத்தை மீட்டு குப்புலட்சுமியிடம் ஒப்படைத்தார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.
தி.மு.க. நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேற்று வருவாய் துறை அதிகாரிகள், ஊர் மக்களை அழைத்து மயான நிலத்தை சர்வே செய்தார்.
- அதிகாரிகள் அத்தி முகம் பொது மக்களுக்கு மயான நிலத்தை மீட்டு கொடுத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, அத்தி முகம் கிராமத்தில் பல வருடங்களாக மயானம் நிலத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து வந்தனர் .
இதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நள்ளிரவு நேரங்களில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அந்த வழியாக மண்சாலை அமைத்தனர்.
இதனை கண்ட அத்திமுக கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சரயுவிடம் புகார் அளித்தனர். புகார் மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நேற்று வருவாய் துறை அதிகாரிகள், ஊர் மக்களை அழைத்து மயான நிலத்தை சர்வே செய்தார்.
இதில் சுமார் 2.12 ஏக்கர் நிலம் ஆக்கரிமிப்பு செய்ய பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அத்தி முகம் பொது மக்களுக்கு மயான நிலத்தை மீட்டு கொடுத்தனர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டு கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டர் சரயுவிற்கும் நன்றி தெரிவித்து கொண்ட னர்.






