என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார்.
    • விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத் துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, பொதுப்பணித்துறையை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார். பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து சில ஆலோசனை களை வழங்கினார்.

    மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறி வுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப் பாளரிடம் அறிவுறுத்தினார்.

    • படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
    • வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியின் அரசு பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் இருவருக்கு இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி பிளஸ்-1 மாணவனின் சகோதரர் சந்தானராஜ் தட்டிகேட்ட போது பிளஸ்-2 மாணவனின் நண்பர்கள் அவரை தாக்கினர்.

    இதையடுத்து சந்தானராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் சாரம் பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவன் அவரது நண்பர்களுடன் இருந்த போது மோதலில் ஈடுபட்டனர்.

    இதில் சந்தானராஜின் நண்பரான கல்லூரி மாணவர் திருமலையை (வயது18)எதிர்தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

    படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த சக்தி (19), ஆகாஷ் (20), மகேந்திரன் (22), சுபாஷ் (19) ஆகியோரை தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோஸ், பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (வயது 38). என்பவர் சிறுமியை தடுத்து நிறுத்தி சவுக்கு மரத்தில் கட்டி வைத்து பாலியல் பலத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி கூச்சலிட்டதால் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருந்த போதிலும் மரத்தில் கைகள் கட்டப்பட்டதால் இரவு முழுவதும் அந்த சிறுமி சவுக்கு தோப்பிலேயே தவித்துக்கொண்டிருந்தார். காலையில் அங்கு சென்றவர்கள் அந்த சிறுமியை மீட்டனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு அளித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார். 

    • முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.
    • 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மக்கள் நலக்கழகம் செயலாளர் பக்கிரி சாமி, இது குறித்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்க னுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 'ஸ்வதேஷ் தர்ஷன்' ஆலோசனை க்கூட்டத்தில், காரைக்கால் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.

    குறிப்பாக இத்திட்ட த்தில் காரைக்கால் வணிகம் பெருகுவதற்கும், காரைக்கால் நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக, வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, காரைக்கால் நகர் பகுதிக்கு வரும் பலர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர், மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்கு வரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க, காரைக்கால் பழைய பஸ் நிலையம் பகுதி, கடந்த பல ஆண்டுகளாக உபயோகம் இன்றி இருப்பதால், அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் இத்திட்டத்தின் கீழ் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோல், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது.
    • 2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். விழாவில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை கொட்டி மரக்கன்றுகள் நட்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது. சில ஆண்டுக்கு முன்பு பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசினால் இந்து மதம் சார்ந்து பேசுவது போல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும். அதற்கேற்ப இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.

    புதுவையில் முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
    • அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிருந்தால் மண்டல். இவர் புதுச்சேரி சேதராப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பிருந்தால் மண்டல் நேற்று மதியம் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். அப்போது ஒரு மர்ம நபர் பிருந்தால் மண்டலின் செல்போனை திருட முயன்றார். சத்தம் கேட்டு கண்விழித்த பிருந்தால் மண்டல் இதை பார்த்து திடுக்கிட்டு கூச்சலிட்டார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த நபரை முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அந்த நபரை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை செய்ததில் அவர், திண்டிவனம் சிங்கனூர் புது காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அசோக் என்பதும், இவர் மீது சென்னை, விக்கிரவாண்டி மற்றும் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அசோக் தான் வசிக்கும் பகுதி அருகே அவர் டிபன் கடை நடத்தி வருவதும், பண தேவைக்காக பகுதி நேரமாக இதுபோல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே, செல்போன் திருடனை பொதுமக்கள் பிடித்து முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.
    • புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    புதுச்சேரிக்கு ரெயில் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புதுவை ரெயில்நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரெயில்நிலையம் அழகுற மேம்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.

    இந்த பட்டியலில் தற்போது புதுவையும் இடம்பெற்றுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை திருப்பதி இடையிலான 340 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் சந்திப்பு, மதுராந்தகம், சென்னை சென்ட்ரல், அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

    • வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் குமரன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 46).

    தற்போது கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் என்ற இடத்தில் அவர் புதிதாக வீடு கட்டி வந்தார்.சண்முக சுந்தரம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு சண்முகசுந்தரம் புதுவையில் இருந்து தனியார் பஸ்சில் கண்டமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கும் பஸ்சில் வந்த ஒரு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய சண்முகசுந்தரத்தை பஸ்சில் தகராறு செய்த கும்பல் அவரை தலையில் பின் பக்கமாக தாக்கினர் இதில் நிலைத்தடுமாறி சண்முகசுந்தரம் கீழே விழுந்தார்.

    பின்னர் அங்கு கிடந்த கற்களால் சண்முக சுந்தரத்தின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

    இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சண்முகசுந்தரம் இறந்து கிடந்தது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் கொலையான சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது.

    இதனால் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
    • இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கை நடைபெறும்.

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். முத்தியால்பேட்டை செங்குந்தர் மரபினர் சார்பில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவில் உபயதாரர்களான பைபர் கட்டுமர உரிமையாளர்கள், தனியார் ஊழியர்கள், மில் தொழிலாளர்கள், விசைப்படகு உரிமையாளர்கள், சான்றோர் குல மரபினர்கள், சீமென்கள் எனப்படும் கப்பல் என்ஜினீயர்கள், விசைப்படகு தொழிலாளர்கள், ஆற்றில் தொழில் செய்வோர் என ஒவ்வொரு நாளும் விழா களை கட்டும்.

    விழா நடைபெறும் நாட்களில் இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கையுடன் சாமி வீதியுலா என ஒவ்வொரு உபயதாரர்களும் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை நடத்துவர். சினிமா பின்னணி பாடகர்கள், சினிமா இசை அமைப்பாளர்கள், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை போட்டி போட்டுக்கொண்டு ஏற்பாடுகளை செய்வார்கள்.

    இந்த விழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளாமானோர் வருவார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டி, பொட்டி வண்டி கட்டிக்கொண்டு விழா தொடங்கும் நாளில் இருந்து விழா முடியும் வரை வீராம்பட்டினத்திலேயே தங்கியிருந்து நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.

    வீராம்பட்டினம் தேரோட்ட விழாவுக்கும், முத்து பல்லக்கு விழாவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நாளடைவில் இரு சக்கர வாகனம் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பெருகி விட்டதால் தற்போது சிறப்பு பஸ்கள் விழாவுக்கு இயக்கப்படுவது படிப்படியாக குறைந்து விட்டது.

    மேலும் வெளியூர்களில் இருக்கும் வீராம்பட்டினம் மீனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து விழா முடியும் வரை தங்கியிருந்து விழாவை கண்டு களிப்பர். அவர்களுக்கு வீராம்பட்டினம் மீனவர்கள் முகம் சுளிக்காமல் தினமும் விருந்து வைத்து உபசரிப்பர்.

    • அரியாங்குப்பம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    • இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    புதுவை:

    புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தேரோட்டம் நாளை காலை 8 மணியளவில் நடக்கிறது.

    இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினர்.

    விழாவில் உள்ளூர் மட்டுமின்றி தமிழக பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அவ்வப்போது மாநில அந்தஸ்து விவகாரம் அரசியல் கட்சிகளால் விஸ்வரூபம் எடுக்கும். இதற்காக பந்த், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களும் களை கட்டும். ஆனால் மீண்டும் அடங்கிப் போய்விடும். சமீப காலமாக முதலமைச்சர் ரங்கசாமி, அரசுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிகாரம் இல்லை என்பதை அரசு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

    புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடியை விரைவில் சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பல முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என கூறினார்.

    • துர்கா வாந்தி எடுத்துள்ளார். அதை பார்த்த சரவணன் என்ன காரணம் என துர்காவிடம் கேட்டுள்ளார்.
    • தன்னை பிரிந்த ஏக்கத்தில் மனைவி எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்திருக்கலாம்

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பருத்திக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா (வயது 34). வீட்டில் இருந்து வருகிறார். சரவணனுடன் வேலை செய்யும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற சரவணன், கடந்த 20 நாட்களாக அவருடன் தங்கிவிட்டார். கடந்த 11-ந் தேதி சரவணன் வீட்டிற்கு வந்தார். மறுநாள் 12ந் தேதி காலை சரவணனின் மனைவி துர்கா வாந்தி எடுத்துள்ளார். அதை பார்த்த சரவணன் என்ன காரணம் என துர்காவிடம் கேட்டுள்ளார். நீங்கள் ஊரில் இல்லாத நேரத்தில் சரியாக சாப்பிடவில்லை. அதனால் வாந்தி வந்துள்ளது என துர்கா கூறியதாக தெரிகிறது.

    மேலும், சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சரவணன் அழைத்தபோது, துர்கா செல்ல மறுத்துள்ளார். மறுநாள் 14-ந்தேதி துர்காவிற்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் நெடுங்காடு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு துர்காவை பரிசோதித்த டாக்டர்கள், துர்கா எலி பேஸ்ட் சாப்பிட்டதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தபோதும், துர்கா பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் தன்னை பிரிந்த ஏக்கத்தில் மனைவி எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் நெடுங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×