search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் - புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
    X

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் - புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    • அரியாங்குப்பம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    • இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    புதுவை:

    புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தேரோட்டம் நாளை காலை 8 மணியளவில் நடக்கிறது.

    இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினர்.

    விழாவில் உள்ளூர் மட்டுமின்றி தமிழக பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×