என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • துச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்

    தொகுதியை சேர்ந்த மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. அனிபால் கென்னடி

    எம்.எல்.ஏ. கலந்து

    கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மீனவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க.

    தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் நிர்வாகி ரகுராமன்

    ஆகியோர் கலந்து

    கொண்டனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பட்டியலிட்டு, திட்டங்கள் தயாரித்து, நிதி ஒதுக்கி 1½ ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருக்கலாம். இந்த இழப்புக்கு யார் பொறுப்பேற்பது? மத்திய அரசு கொடுக்கும் நிதியை செலவழிக்காமலும், மக்க ளுக்கு வேண்டிய அடிப் படை வசதிகளை உருவாக் காமலும் இருப்பதற்காகவா இங்கே இரட்டை எஞ்சின் அரசு நடைபெறுகிறது?

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால அளவு ஓராண்டு நீட்டிக்கப்பட்டு ரூ. 950 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப் பட்டன.

    ஸ்மார்ட் சிட்டி பணிக்கு ஒப்பந்தம் போட்டு 16 மாதங்கள் ஆகியும் இன்னும் இந்த திட்டங்களுக்கு அடிக் கல் கூட நாட்ட வில்லை.

    ஒப்பந்தப்படி இத்திட்டங்களை செயல் படுத்த முடியாது என்று என்.பி.சி.சி. கூறியுள்ளதாக தெரிகிறது.

    அந்த நிறுவனம் பணி செய்ய தயாராக இருந்தும் பூமி பூஜை போட்டு அனுமதி கொடுக்காததால் அந்த நிறுவனம் தன் பணியை தொடங்க முடிய வில்லை.

    அனுமதி அளிக்க வேண்டும்

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இதுபோல் சுணக்கம் இருக்கவே இல்லை. பிரச்ச னையின் தீவிரத்தை புரிந்து கொண்டு வளர்ச்சியை மனதில் கொண்டு இன்னும் 10 நாட்களுக்குள் திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டி ஒப்பந்ததாரர்கள் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 65 எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு
    • புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.

    புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165

    எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு இன்று நடந்தது.

    3 ஆயிரம் ஆசிரியர்கள்

    புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.

    தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.

    தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் மையங்கள் முன்பு திரண்ட னர். தேர்வர்களின் ஹால்டிக் கெட்டை பார்த்து மையத்திற்குள் அனும திக்கப்ட்டனர்.

    செல்போனுக்கு தடை

    அறைகளிலும் பணியில் இருந்த அலுவலர்கள் ஹால்டிக்கெட்டை பெற்று சரி பார்த்தனர்.

    தேர்வு அறைகளில் செல்போன், இயர்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

    இதனால், இவற்றை மீறி தேர்வர்கள் எடுத்து செல்கின்றனரா என சோதனை நடந்தது.

    மீறி மின் சாதனம் வைத்தி ருப்போர் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கயும் விடுக்கப்பட்டது.

    காலை 10 மணிக்கு மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை புதுவையில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகேவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுது கின்றனர்.

    இவர்களுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு விண்ணப்பித்தி ருந்தனர். விண்ணப்பித் தோரில் சுமார் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    • புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.
    • தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165

    எல்.டி.சி. எனப்படும் கீழ்நிலை எழுத்தர், 55 பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு இன்று நடந்தது.

    3 ஆயிரம் ஆசிரியர்கள்

    புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களையும் சேர்த்து தேர்வை 49 ஆயிரத்து 904 பேர் எழுது கின்றனர்.

    தேர்வு பணியில் 3 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.

    தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் பாஸ்போர்ட் போட்டோவை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இதில் ஒரு அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் காலை 10 மணிக்கு முன்னதாக வர வேண்டும். அதற்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் மையங்கள் முன்பு திரண்ட னர். தேர்வர்களின் ஹால்டிக் கெட்டை பார்த்து மையத்திற்குள் அனும திக்கப்ட்டனர்.

    செல்போனுக்கு தடை

    அறைகளிலும் பணியில் இருந்த அலுவலர்கள் ஹால்டிக்கெட்டை பெற்று சரி பார்த்தனர்.

    தேர்வு அறைகளில் செல்போன், இயர்போன், கால்குலேட்டர் உட் பட மின் சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

    இதனால், இவற்றை மீறி தேர்வர்கள் எடுத்து செல்கின்றனரா என சோதனை நடந்தது.

    மீறி மின் சாதனம் வைத்தி ருப்போர் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கயும் விடுக்கப்பட்டது.

    காலை 10 மணிக்கு மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அதன்பிறகு வந்தவர்கள் யாரும் மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வை புதுவையில் 37 ஆயிரத்து 329, காரைக்காலில் 5 ஆயிரத்து 534, மாகேவில் ஆயிரத்து 216, ஏனாமில் 2 ஆயிரத்து 825 பேர் எழுது கின்றனர்.

    இவர்களுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 14, மாகேவில் 6, ஏனாமில் 10 என மொத்தம் 137 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு பதவிக்கு 213 பேர் வீதம் 220 பணியிடங்களுக்கு 46 ஆயிரத்து 904 பேர் தேர்வு விண்ணப்பித்தி ருந்தனர். விண்ணப்பித் தோரில் சுமார் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    • புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன
    • ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.

    புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன.

    இயற்கை சீற்றத்தாலும், கடலின் குறுக்கே அமைக்கப்பட்ட துறைமுகம், தமிழ் நாடு பகுதியான தந்திராயன்குப்பம் மற்றும் பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பின்ளைச் சாவடி கிராமத்தின் தெற்கு சுடலோர பகுதிகளில், கடல் அரிப்பை தடுக்க மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கை போன்றவை களால் புதுவை பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடல் அரிப்பு மேலும் அதிகமாகி வருகிறது.

    இதனால், பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராமத்தில் வாழும் மீனவர்கள் உள்ளிட்ட, கடலோர மக்களின் வீடுகள், வலை பின்னும் கூடம் போன்ற அடிப்படை உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. பாதிப்புகளில் இருந்து மக்களையும் அவர்களது உடைமைகளையும் காக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் என்.சி.சி.ஆர். தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்று, பிள்ளைச் சாவடி கிராமத்தில் கடல அரிப்பை தடுக்கும் வகையில், கடலோரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

    கடல் அரிப்பை தடுக்கும் வகையில் 6 தடுப்பு சுவர்கள் அமைக்கபட இருக்கின்றன. 50 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச்சுவரும் 40 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 30 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 20 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச் சுவரும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தடுப்புச் சுவர்கள் வெவ்வேறு இடைவெளி விட்டு அமைக்க வும், அதில் 2 டன்னில் இருந்து 10 கிலோ வரை எடையுள்ள கருங்கல் கற்கள் 3 லேயர்களாக போடப்படும் வகையில் கடலோர தடுப்புப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.6¼ கோடியாகும். இந்த் திட்ட பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    நிகழ்ச்சியில். பொதுப் பணித்துறை அமைச்சர் நாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, தலைமை பொறியாளர், பழனியப்பன் கண்காணிப்பு பொறியாளர், பாஸ்கரன, உதவி பொறியாளர் சீனு, சம்பந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    இதே போல் புதுவை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் ஓடையில் ரூ.3 கோடியில் பக்கவாட்டு கால்வாயுடன் கூடிய கான்கிரீட் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியையும் பூமி பூஜை செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    ஒட்டு மொத்தமாக புதுவையில் இன்று ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.

    • காரைக்கால் திருநள்ளாறில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவி லுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை முன்பு, வாலிபர் ஒருவர் நின்று கொண்டு செல்போன் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில், திருந ள்ளாறு போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது, அங்கு திருநள்ளார் நகர் பகுதியை ச்சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவரை போலீசார் சோதனை செய்ததில், அவரது செல்போனில் பொது மக்களுக்கு 3 எண் கொண்ட தடை செய்ய ப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மாரிமுத்தை போலீசார் கைது செய்து, அவரது கையில் இருந்த ரூ.250 மற்றும் ஒரு செல்போனை போலீசார் பறி முதல் செய்தனர்.

    • இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
    • தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.

    அகில இந்திய அளவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    இந்தியா கூட்டணி சார்பில் 2 முறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளவும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் பா.ஜனதா சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் டெல்லியில் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் துரிதப்படுத்தியுள்ளன.

    புதுவையில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய எம்.பி. வைத்தி லிங்கமே மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.

    ஆளும்கட்சி கூட்டணி தரப்பில் பா.ஜனதா போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓராண்டுக்கு முன்பே புதுவை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அவர் மாதம் 2 முறை புதுவை வந்து கட்சி தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளார்.

    பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் சேர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. தொகுதிதோறும் வாக்காளர் சந்திப்பு இயக்கமும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் புதுவை பா.ஜனதாவினர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவையை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட வேண்டும் என கட்சித்தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களின் பெயரும் வேட்பாளராக பேசப்படுகிறது. இதனிடையே பா.ஜனதாவை ஆதரிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. பா.ஜனதா சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதா கட்சி கூட்டங்களில் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பா.ஜனதாவில் செயல்பட்டு வந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தேர்தலில் வெற்றி பெற்ற பின் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் ஏற்கனவே வணிகர்கள் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தனக்கு வணிகர்கள், தான் சார்ந்த சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இது போல் பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா நிர்வாகி ஆகியோரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

    அவர்கள் தனித்தனியாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    • எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது. இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, காரைக்காலில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த மாரத்தான்போட்டியினை காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பரண்டு சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    • நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.
    • தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கல்மண்டபத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 47). விவசாயி. இவர் ஒரு வர்த்தக செயலி மூலம் நிறைய பொருட்கள் வாங்கினார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், வர்த்தக நிறுவன மேலாளர் பேசுகிறேன் என முதலில் அறிமுகமாகி கொண்டார்.

    பின்னர் நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் கேட்ட சில தகவல்களை குமாரசாமி கொடுத்தார். பின்னர் அவர் பரிசீலனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி குமாரசாமி 2 தவணையாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அவர்கள் காரை அவருக்கு கொடுக்கவில்லை.

    மாறாக மேலும் பணம் செலுத்தும்படி கூறினர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து குமாரசாமியிடம் ரூ.8 லட்சத்து 69 ஆயிரம் மோசடி செய்தது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    புதுச்சேரியை சேர்ந்தவர் ரோகிணி. தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீங்கள் இணைய வழியில் முதலீடு செய்தால் தினந்தோறும் 10 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் ரூ.6 லட்சத்து 58 ஆயிரம் முதலீடு செய்தார்.

    பின்னர் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த விமல கோபாலன் என்பவர் ரூ.55 ஆயிரமும் இழந்தனர்.

    இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
    • அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டி மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். டைல்ஸ் வேலை பார்த்து வரும் இவரது மகன் சிவராஜன் (வயது16). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். சிவராஜன் பள்ளிக்கு செல்போனை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.

    இதனால் பயந்து போன மாணவன் வீட்டுக்கு செல்லாமல், பள்ளியி லிருந்து காரைக்கால் கடற்கரைக்கு சென்றார். இந்நிலையில், சிவராஜன் உடல், காரைக்கால் முகத்துவாரத்தை ஒட்டிய, அரசலாற்று பகுதியில் மிதந்தை கண்டு அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மாணவன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.
    • கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் ஓசை மணி. இவரது மகன் பாலமுருகன் (வயது 28). ரவுடியான இவர் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் தொடர்புடையவர்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார். திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட அவர் காரைக்கால் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்து தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த அவரை அங்கிருந்துவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக னியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கடலூரை சேர்ந்த சூர்யா (25), விஷ்ணு (22) தேவ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் கடலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யா, விஷ்ணு, தேவ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
    • தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பிரபல பெண் தாதா எழிலரசி, கடந்த 2019-ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த தொழில் அதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன்கன் அஜேஸ் ராமு, சிவகாளி முத்து ஆகியோ ருக்கு சொந்தமான மதுபான கடையை கூலிப்படை யினர் மூலம் தாக்குதல் நடத்தியது, அஜேஷ் ராம் மற்றும் சிவகாளி முத்துவை மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கியது தொடர்பாக அஜேஷ் ராம் மற்றும் சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

    அதன் பேரில், பெண் தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூலிப்படையினரை கொண்டு சிவகாளி முத்து வுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக சிவகாளிமுத்து அளித்த புகாரை தொடர்ந்து, திருப்பட்டினம் போலீசார், நிரவியில் உள்ள சிவகாளி முத்து வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×