என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசலாற்றில் பிளஸ்-1 மாணவன் பிணம்: கொலையா? போலீசார் விசாரணை
    X

    மாணவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அரசலாற்றில் பிளஸ்-1 மாணவன் பிணம்: கொலையா? போலீசார் விசாரணை

    • பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
    • அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டி மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். டைல்ஸ் வேலை பார்த்து வரும் இவரது மகன் சிவராஜன் (வயது16). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். சிவராஜன் பள்ளிக்கு செல்போனை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.

    இதனால் பயந்து போன மாணவன் வீட்டுக்கு செல்லாமல், பள்ளியி லிருந்து காரைக்கால் கடற்கரைக்கு சென்றார். இந்நிலையில், சிவராஜன் உடல், காரைக்கால் முகத்துவாரத்தை ஒட்டிய, அரசலாற்று பகுதியில் மிதந்தை கண்டு அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மாணவன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×