என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுச்சேரி பஸ் நிலையத்தில் நடந்த ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது
- கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.
- கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் ஓசை மணி. இவரது மகன் பாலமுருகன் (வயது 28). ரவுடியான இவர் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் தொடர்புடையவர்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார். திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட அவர் காரைக்கால் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்து தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த அவரை அங்கிருந்துவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக னியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கடலூரை சேர்ந்த சூர்யா (25), விஷ்ணு (22) தேவ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் கடலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யா, விஷ்ணு, தேவ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்