என் மலர்
புதுச்சேரி
- மீன்பிடி தொழில் செய்து வரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
- சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால்மேடு சிங்காரவேலர் வீதியைச்சேர்ந்தவர் சரவணன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு யோஹனா(12), சஞ்சுஸ்ரீ(9), சஞ்சனா(7), சாய் (5) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இரவு சஞ்சனா மற்றும் சாய் ஆகிய இருவரும், வழக்கம் போல், வாசல் இரும்பு கேட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சுவர் இடிந்து இரும்பு கேட்டுடன் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் உறவினர்கள், சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இதில், சஞ்சனா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சாய் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.
- 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
- அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் மரியம் அவன்யூவைச்சேர்ந்தவர் முகம்மது இசாக். இவருக்கு இஸ்மத் நாச்சியாள் (வயது33) என்ற ஒரு பெண் குழந்தையும், அப்துல்ரஹ்மான் (32), ஜாகிர் உசேன் (31) ஆகிய 3 குழந்தைகள். இதில், இஸ்மத் நாச்சியாளுக்கு திருமணம் நடந்து, 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்ல மால் இறந்துவிட்டார். இதனால், ஜாகிர் உசேன் மனவே தனையில் இருந்துவந்தார். அடிக்கடி அக்காவை நினைத்து புலம்பி வந்தார். வெளிநாடுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, தந்தை முகம்மது இசாக், ஜாகிர் உசேனை, கடந்த 3 ஆண்டு களுக்கு முன், சவுதிக்கு டிரைவர் வேலைகாக அனுப்பி வைத்தார்.
அங்கு சென்றும், அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார். திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, பெண் பார்த்தனர். ஆனால், ஜாகிர் உசேன் திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த 22-ந் தேதி ஜாகிர் உசேன் வாந்தி எடுத்தார். தந்தை மற்றும் உறவினர்கள், ஜாகிர் உசேனை காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது, எலி பேஸ்டை, கூல்டிரிங்சில் கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவர் புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (31). இவர் என்ஜினீயரிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பிரியதர்ஷினி படித்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்துள்ளனர்.
இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 16.5.2012 அன்று விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர். போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பிரதீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
- மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.
- கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாத்துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவையில் ஆண்டுதோறும் பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடைபெற்று வந்தது.
பின்னர் கொரோனா காலத்தில் கண்காட்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் பாரம்பரிய கார் கண்காட்சி புதுவை கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்தது.
கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயல், நாட்டிலே தனித்துவமான பழமையான ஒரே போர்டு பேன்சி, ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ், செவர்லெட், போர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற கார் நிறுவனங்களின் 36 கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.
அதேபோல் முந்தைய கால 10 மோட்டார் சைக்கிள்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு காரிலும் அந்தந்த கார்களின் உரிமையாளர், தயாரிக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழமையான கார்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மேலும், அந்த கார்கள் முன்பு நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த கார்கள் அனைத்தும் இன்று காலை புதுவையில் இருந்து புறப்பட்டு சென்றன.
- பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
- பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் புதுவை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கு புதுவை விவசாயிகளிடமிருந்து 55 முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.
பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரித்து நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் கொடுக்காததால் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பிறகு அவர்களிடம் சமாதானம் பேசி, பணத்தை கொடுத்தப் பின் மீண்டும் பால் அனுப்பினர். தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பால் காலதாமதமாக வருகிறது.
மேலும் கடைகளுக்கும் காலதாமதமாக செல்கிறது. மேலும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கிடுக்குப்பிடி செய்து வருகின்றனர்.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில்லை. இதனால் புதுவையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் உள்ளூர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் கால்நடை விவசாயிகள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பால் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.
தற்போது பாண்லே நிறுவனம் பால், பாட்டில், அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பாக்கெட் போன்றவை கொள்முதல் செய்ததில் ரூ.25 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் உற்பத்தி குறைந்து கடைகளில் போதிய அளவு பாதாம் பால், குல்பி, சாக்லேட் போன்றவை இருப்பு இல்லாமல் உள்ளது. சில பூத் ஏஜெண்டுகள் சில தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
- புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு,
தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
புதுச்சேரி,ஆக.27-
புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்
அடுத்த கட்டமாக 23 அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.
பின்னர் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏவின் பரிந்துரையின்படி முதல் கட்டமாக இளைஞர், மீனவர் அணி, இலக்கிய அணிக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, தற்போது கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைக்கு புதிய நிர்வா கிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர், வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரி மாநில கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் தலைவராக புலவர் பா. கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவராக சேவியர் ராஜேஷ், அமைப்பாளராக சிவசங்கரன், துணை அமைப்பாளர்களாக அன்பு மாறன்,ஸ்ரீதர், உத்திராபதி, தேசிகன், ஏழுமலை, வீரமணி, தியாகராஜன், வெங்கடஜலபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்த்து
புதிதாக நியமிக்கப்பட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் தி.மு.க. அமைப்பாளர் சிவாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா
- விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார்.
துச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்தது. விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக் கரசு, பொருளாளர் அருள் செல்வன், துணை செய்லா ளர் தினகரன் முன்னிலை வகித்தனர். சங்கீதா கண்ணன், திருக்குறள் முற்றோதல் குறித்து சிறப்புரை ஆற்றி னார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உசேன்,ராசா, சிவேந்தி ரன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனந்தராசன் நன்றி கூறினார்.
- அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது
- விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில்
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன், முதல்வர் சாந்தி ஜெயசுந்தர்
ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக விங் காமாண்டர் சாகர் துபராக், இளநிலை அதிகாரி சிவகுமார் ஆகியோர் க லந்து கொண்டு தேசிய மாணவர் படைபெயர் பலகையை திறந்து வைத்தனர். மேலும் தேசிய மாணவர் படையின் சிறப்புகள், நன்மைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில்
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி பெங்களூருவை சேர்ந்த தனியார் மென்பொருள் பயிற்சி அளிக்கும் நிறுவனமான எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தரமுடியும்.
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது
- இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும்.
கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது. கன்னியகோயில், அரியாங்குப்பம் வழியாக பேரணி சென்றது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனம் பயன்படுத்து வோர் சீட் பெல்ட் அணி வதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் எடுத்து ரைத்தனர்.
இந்தியாவில் 80 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனத்தினால் ஏற்படு கிறது. அதிலும் குறிப்பாக 20 முதல் 50 வயதிலான இளைஞர்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
பேரணியை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி டீன்.டாக்டர் ராகேஷ்சேகல், உயர் மருத்துவ தொழில் முறை கல்வி டீன். டாக்டர் மகாலட்சுமி, துணை பதிவா ளர் பெருமாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் நடனம், நாடகம் மூலம் முக்கிய சந்திப்பு பகுதிகளில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
அந்தப் பகுதியில் ஒரு சிறப்பு அம்சமாக அவசரநிலை பயிற்சி குறித்து வகுப்புகள் நடை பெற்று வருகிறது. நிகழ்ச்சி யின் இறுதியாக சாலை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
- குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஊசுடு தொகுதி
எம்.எல்.ஏ.வும், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சாய்.ஜெ. சரவணன்குமார் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் காலை உணவு சாப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், துணைத் தலைவர் முரளி, நிர்வாகிகள் ஏழுமலை, மீனா, தொகுதி மகளிர் அணி தலைவி லட்சுமி, கணபதி பா.ஜனதா தொகுதி பட்டியலின அணி தலைவர் சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூடப்பாக்கம் பா.ஜனதா கிளை தலைவர் முரளி, பாலு, ஜெகன், சதீஷ், ஆனந்த் ஆகியோரை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.
- துச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்
தொகுதியை சேர்ந்த மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. அனிபால் கென்னடி
எம்.எல்.ஏ. கலந்து
கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மீனவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க.
தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் நிர்வாகி ரகுராமன்
ஆகியோர் கலந்து
கொண்டனர்.






