என் மலர்
புதுச்சேரி
- பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
- சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்
புதுச்சேரி:
காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சாதாரண ஜுரம், விபத்து என சென்றால்கூட, அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், அண்மையில் அரசு ஆஸ்பத்திரியின் உள்ள லிப்ட் உடைந்த நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த நாய்களின் கூட்டம், ஆஸ்பத்திரியில் உள்ளே குறிப்பாக பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதால், நோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருச்சாளி மற்றும் பூனைகள் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடம், மருந்தகம், கேண்டின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகலில் கூட நடமாடுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
- மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
திண்டிவனம் ஏரிக்கரையோரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது 6 நண்பர்களுடன் புதுச்சேரி எல்லை பகுதியான சேதராப்பட்டில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது உச்சகட்ட மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் தன்னுடன் வந்த நண்பர்களை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினார். இதனால் அவருடன் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவர் மணிகண்டனிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அவரை மணிகண்டன் பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார்.
அடி வாங்கிய நண்பர் அவரை விட்டு செல்லாமல் வாடா பிரச்னை ஆகப்போகுது எனக்கூறி அழைத்து செல்கிறார். பின்னர் மணிகண்டன் தன் சட்டையை கழற்றி நண்பரின் தலையில் அமுக்கி அழைத்து செல்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கே மதுபானம் அருந்தி கொண்டிருந்தவர்களை பார்த்து சண்டைக்கு வாடா.. நீ வேண்ணுனா.. வந்து பார்ரா என அவ்வழியே செல்பவர்களை வடிவேலு பாணியில் அழைத்தவாறு ஆபாச வார்த்தைகளால் அர்சித்தவாறு சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சேதராப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிகண்டனை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
நீங்கள் காக்கி சட்டை அணிந்திருக்கிறீர்கள், எந்த கம்பெனி செக்யூரிட்டி? எனக்கூறி தொப்பியை தட்டு விட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் நான் யாருனு தெரியுமா? என போலீசாரை தள்ளிவிட்டுள்ளார். இதில் கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும் அவரிடம் அடி வாங்கி ஓட்டம் பிடித்த நண்பர்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. போலீஸ் நிலையத்தில் வைத்து, மணிகண்டனிடம், வந்த இடத்தில் ஒழுங்கா குடி, இல்லாவிட்டால் தர்ம அடிதான் என அறிவுரை வழங்கினர். தொடர்ந்து மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
- விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் நகரை சேர்ந்தவர்கள் அருண், சரவணன், கணபதி (வயது 25), வாசிம் முசரப் (22). இவர்கள் காரைக்கால் அடுத்த தமிழகபகுதியான மயிலாடுதுறைக்கு காரில் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றனர்.
திரைப்படம் பார்த்துவிட்டு காரில் காரைக்காலில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பினர். இன்று காலை காரைக்கால் கோட்டுச்சேரி அருகே கார் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த வாய்காலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காரில் சிக்கிகொண்டு படுகாயம் அடைந்த அருண், சரவணனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த கணபதி, வாசிம் முசரப், செல்வம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் 'சீலியாக் ஆக்ஸிஸ்' எனப்படும் ரத்த நாளத்தை பாதித்து இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து புற்று நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 3 சுற்று சிகிச்சைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் அளவு குறைந்தது. இருந்தபோதிலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள் கணையம், மண்ணீரல் மற்றும் சீலியாக் ஆக்ஸிஸ் ரத்த நாளம் ஆகியவற்றை எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர்.
பொதுவாக இந்த அறுவை சிகிச்சை 25 முதல் 30 செ.மீ. அளவுக்கு வயிற்று பகுதி கிழிக்கப்பட்டு திறந்த முறையில் (ஓபன் சர்ஜரி) செய்யப்படும். ஆனால், ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் கலையரசன் மற்றும் டாக்டர் பிஜூ போட்டாக் கட் தலைமையிலான குழுவினர் கணைய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை ரோபோடிக் முறையில் 10 மணி நேரம் மேற்கொண்டனர்.
அதாவது, சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர். சிகிச்சை முடிந்த 6-வது நாள் பெண் நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பினார்.
'ரோபோடிக்' அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில் சிலமருத்துவ மனைகளில் மட்டுமே செய்யப்படுவதாகவும் ஜிப்மர் இயக்குனர்ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ரோபோடிக் முறையில் இதர புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டவை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் கூறினார்.
- கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- சட்டைப்பையில், 210 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அருளப்பிள்ளை தெருவில், வாலிபர் ஒருவர், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை விற்பதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது, அவரது சட்டைப்பையில், 210 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருமைஞானம் வேப்பஞ்சே ரியைச்சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது24) என்பது தெரியவந்தது. மேலும், அவரது வீட்டு குளியலறையில் மறைத்து வைத்திருந்த 500 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மதுக்கடை அருகே ஒருவர் மயங்கிய நிலையில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் படுத்து கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
புதுவை அடுத்த கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுக்கடை அருகே நேற்று காலை ஒருவர் மயங்கிய நிலையில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் படுத்து கிடந்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அவரை பரிசோதித்த போது பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை வைத்து அடையாளம் கண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் முட்லூரை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 39) என்பதும். கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வந்ததும் திருமணமாகி தீபா கவுரி (28) என்ற மனைவியும் 1 ½ வயதில் மகன் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் கடன் வாங்கியதில் மன உளைச்சல் இருந்ததாகவும் இதனால் பூச்சி மருந்தை மதுவுடன் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து பிணத்தை புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிருமாமாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
கேரள மாநிலம் வடகரா பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 52). அங்குள்ள ஓட்டலில் பணி செய்து வருகிறார். இவருக்கும், வயநாடு பகுதியை சேர்ந்த முகமது ரியாஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
சம்பவத்தன்று அவர்கள் புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் அசதியில் 2 பேரும் தூங்கி விட்டனர்.
மறுநாள் காலையில் இந்திரா கண் விழித்து பார்த்த போது அவரது 3 பவுன் செயினை காணவில்லை. முகமது ரியாசும் மாயமாகி இருந்தார். குடிபோதையில் தூங்கியபோது முகமது ரியாஷ் 3 பவுன் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா மாகி போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முகமது ரியாஷ் வயநாடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
- காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட காவிரி நீரின் ஒரு சிறிய அளவிலான பகுதி, கடந்த ஜூலை மாதம், டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு வந்தது. காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. நீர் என்பது கானல் நீராக மாறிவிட்டது. ஜூலை மாதம் வந்த காவிரி நீர் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. தொடர்ந்து வரும் என நம்பி ஏராளமான விவசாயிகள், குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் அதன்பிறகு தண்ணீர் வரவில்லை.
புதுச்சேரி அரசின் நிதி பற்றாகுறையால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகி, சரி செய்யமுடியாமல், ஆழ்குழாய் நீரும் இன்றி, விவசாயிகள் குறுவையை காப்பாற்ற வழியின்றி தவித்து வருகின்றனர். பல இடங்களில் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் 600 ஹெக்டேர் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக நிற்கிறது. எனவே, புதுச்சேரி முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோர், கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதி, காரைக்காலுக்கான காவிரி நீரை உரிமையோடு பெற்றுதர முன்வரவேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
- முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.
இவற்றில் 2023-24 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தரவரிசை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 162 மாணவர்களும், கேரளாவை சேர்ந்த 36 மாணவர்களும் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே இருவேறு மாநிலங்களில் இரட்டை குடியுரிமை அடிப்படையில் தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசையிடம் சமூக அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளது புதுவையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தந்த மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
- வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
- கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி காலணி தெருவைச்சேர்ந்தவர் வேலையன். இவரது மனைவி கிரிஜா (வயது28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. வேலையன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு செல்வது வழக்கம். வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். கிரிஜா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
வேலையன் வீட்டில் இல்லாத நேரத்தில், முருகன், கிரிஜா வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது. இந்நிலையில், கிரிஜா வீட்டில் தூங்கியபோது, விளக்கை அணைத்துவிட்டு, முருகன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். கிரிஜா சப்தம் போட்டதும், இதை யாரிடமாவது சொன்னால், உன்னை கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுதுவிட்டு முருகன் தப்பியோடிவிட்டார். இது குறித்து, கிரிஜா கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.
- புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில் பேனர் கலசாரம் அதிகரித்து உள்ளது.
- சாலைகளில் இருந்த 2 அலங்கார வளைவு பேனர்கள் அடுத்தடுத்து நடுரோட்டில் சரிந்து விழுந்தது.
புதுச்சேரி:
புதுவையில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில் பேனர் கலாசாரம் அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் வருகையையொட்டி நகரப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்-அவுட்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. ஆனால் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன.
இந்தநிலையில் புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு பேனர்களில் நேற்று இரவு அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சாலைகளில் இருந்த 2 அலங்கார வளைவு பேனர்கள் அடுத்தடுத்து நடுரோட்டில் சரிந்து விழுந்தது.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மீது அலங்கார வளைவு விழுந்ததில் பாதசாரிகள் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த அலங்கார வளைவு மற்றும் பேனர்களை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
- மாதத்திற்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
- 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார்
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு அரசுத்துரைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? மாதத்திற்கு எவ்வளவு நோயாளி கள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகள் தங்குவதற்காக 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார், அறை உபயோகத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும், தினசரி சுத்தமாக பராமரிக்கவேண்டும். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மாதந்திர தடுப்பு ஊசியை அவசியம் போட வேண்டும். சுகாதாரநிலையம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றார்.






