search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் சுவர் விழுந்து 7 வயது பெண் குழந்தை பலி
    X

    காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் சுவர் விழுந்து 7 வயது பெண் குழந்தை பலி

    • மீன்பிடி தொழில் செய்து வரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
    • சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால்மேடு சிங்காரவேலர் வீதியைச்சேர்ந்தவர் சரவணன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு யோஹனா(12), சஞ்சுஸ்ரீ(9), சஞ்சனா(7), சாய் (5) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இரவு சஞ்சனா மற்றும் சாய் ஆகிய இருவரும், வழக்கம் போல், வாசல் இரும்பு கேட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சுவர் இடிந்து இரும்பு கேட்டுடன் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் உறவினர்கள், சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இதில், சஞ்சனா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சாய் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

    Next Story
    ×