என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் குமரன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 46).

    தற்போது கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் என்ற இடத்தில் அவர் புதிதாக வீடு கட்டி வந்தார்.சண்முக சுந்தரம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு சண்முகசுந்தரம் புதுவையில் இருந்து தனியார் பஸ்சில் கண்டமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கும் பஸ்சில் வந்த ஒரு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய சண்முகசுந்தரத்தை பஸ்சில் தகராறு செய்த கும்பல் அவரை தலையில் பின் பக்கமாக தாக்கினர் இதில் நிலைத்தடுமாறி சண்முகசுந்தரம் கீழே விழுந்தார்.

    பின்னர் அங்கு கிடந்த கற்களால் சண்முக சுந்தரத்தின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

    இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சண்முகசுந்தரம் இறந்து கிடந்தது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் கொலையான சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு பொருத்தபட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது.

    இதனால் கொலையாளிகளை அடையாளம் காணுவதில் போலீசருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
    • இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கை நடைபெறும்.

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். முத்தியால்பேட்டை செங்குந்தர் மரபினர் சார்பில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவில் உபயதாரர்களான பைபர் கட்டுமர உரிமையாளர்கள், தனியார் ஊழியர்கள், மில் தொழிலாளர்கள், விசைப்படகு உரிமையாளர்கள், சான்றோர் குல மரபினர்கள், சீமென்கள் எனப்படும் கப்பல் என்ஜினீயர்கள், விசைப்படகு தொழிலாளர்கள், ஆற்றில் தொழில் செய்வோர் என ஒவ்வொரு நாளும் விழா களை கட்டும்.

    விழா நடைபெறும் நாட்களில் இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கையுடன் சாமி வீதியுலா என ஒவ்வொரு உபயதாரர்களும் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை நடத்துவர். சினிமா பின்னணி பாடகர்கள், சினிமா இசை அமைப்பாளர்கள், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை போட்டி போட்டுக்கொண்டு ஏற்பாடுகளை செய்வார்கள்.

    இந்த விழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளாமானோர் வருவார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டி, பொட்டி வண்டி கட்டிக்கொண்டு விழா தொடங்கும் நாளில் இருந்து விழா முடியும் வரை வீராம்பட்டினத்திலேயே தங்கியிருந்து நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.

    வீராம்பட்டினம் தேரோட்ட விழாவுக்கும், முத்து பல்லக்கு விழாவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நாளடைவில் இரு சக்கர வாகனம் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பெருகி விட்டதால் தற்போது சிறப்பு பஸ்கள் விழாவுக்கு இயக்கப்படுவது படிப்படியாக குறைந்து விட்டது.

    மேலும் வெளியூர்களில் இருக்கும் வீராம்பட்டினம் மீனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து விழா முடியும் வரை தங்கியிருந்து விழாவை கண்டு களிப்பர். அவர்களுக்கு வீராம்பட்டினம் மீனவர்கள் முகம் சுளிக்காமல் தினமும் விருந்து வைத்து உபசரிப்பர்.

    • அரியாங்குப்பம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    • இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    புதுவை:

    புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தேரோட்டம் நாளை காலை 8 மணியளவில் நடக்கிறது.

    இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினர்.

    விழாவில் உள்ளூர் மட்டுமின்றி தமிழக பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அவ்வப்போது மாநில அந்தஸ்து விவகாரம் அரசியல் கட்சிகளால் விஸ்வரூபம் எடுக்கும். இதற்காக பந்த், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களும் களை கட்டும். ஆனால் மீண்டும் அடங்கிப் போய்விடும். சமீப காலமாக முதலமைச்சர் ரங்கசாமி, அரசுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிகாரம் இல்லை என்பதை அரசு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

    புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடியை விரைவில் சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பல முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என கூறினார்.

    • துர்கா வாந்தி எடுத்துள்ளார். அதை பார்த்த சரவணன் என்ன காரணம் என துர்காவிடம் கேட்டுள்ளார்.
    • தன்னை பிரிந்த ஏக்கத்தில் மனைவி எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்திருக்கலாம்

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பருத்திக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா (வயது 34). வீட்டில் இருந்து வருகிறார். சரவணனுடன் வேலை செய்யும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற சரவணன், கடந்த 20 நாட்களாக அவருடன் தங்கிவிட்டார். கடந்த 11-ந் தேதி சரவணன் வீட்டிற்கு வந்தார். மறுநாள் 12ந் தேதி காலை சரவணனின் மனைவி துர்கா வாந்தி எடுத்துள்ளார். அதை பார்த்த சரவணன் என்ன காரணம் என துர்காவிடம் கேட்டுள்ளார். நீங்கள் ஊரில் இல்லாத நேரத்தில் சரியாக சாப்பிடவில்லை. அதனால் வாந்தி வந்துள்ளது என துர்கா கூறியதாக தெரிகிறது.

    மேலும், சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சரவணன் அழைத்தபோது, துர்கா செல்ல மறுத்துள்ளார். மறுநாள் 14-ந்தேதி துர்காவிற்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் நெடுங்காடு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு துர்காவை பரிசோதித்த டாக்டர்கள், துர்கா எலி பேஸ்ட் சாப்பிட்டதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தபோதும், துர்கா பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் தன்னை பிரிந்த ஏக்கத்தில் மனைவி எலிபேஸ்ட் சாப்பிட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் நெடுங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
    • மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்து தமிழக பகுதியான ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு செல்லும் குதிரை பண்ணை சாலையில் தனியார் விடுதி உள்ளது.

    அங்கு வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விடுதி உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு சுமார் 20 பெண்கள் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து நடனமாட வைத்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ்பிரபாஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
    • ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் வி.புதூர் கிராமத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் பிரகாஷ் மற்றும் புதுச்சேரி ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த அன்பரசி ஆகியோரது திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் நடத்தி வைத்தனர்.

    இதில் ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-

    ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.

    ஆனால் அதற்கான சூழல் அமையாத நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தில் அனைவரது ஆதரவோடு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றார்.

    இப்போது ஆட்சியில் இருக்கிறவர்கள் நாட்டின் சுதந்திரத்தை தாங்கள் தான் கொண்டு வந்த மாதிரி பாவனை காட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் பெற உயிர் தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று கூறினார். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை.
    • அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    புதுச்சேரி:

    புதுவை சஞ்சீவி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கொத்தனார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.

    இந்த நிலையில் அவரது அண்ணன் கோபி சர்க்கரை நோய்க்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் இருந்து கவனித்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
    • இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    கவர்னர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு வந்தால் அவர்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் அவர்களுக்கு தான் நஷ்டம்.

    அன்போடு அழைத்ததன் பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து. பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    முன்னதாக கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை என்று கூறினார்.
    • செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பார்மசி படிப்பை தொடர விருப்பம் இல்லாமல் கல்லூரி மாண வன் தூக்கு போட்டு தற்கொ லை செய்து கொண்டார். காரைக்கால் அன்பு நகரை சேர்ந்தவர் லூர்து தாஸ். இவருடைய மூத்த மகன் அருள் பெனடிக் (வயது 19). இவர் நாகப்பட்டி னத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வந்தார். இந்நிலையில் அருள் பெனடிக் தனது பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை நண்பர்களோடு சேர்ந்து வேற படிப்பை படிக்க போவதாக கூறினார். அதற்கு அருள்பெனடிக் தந்தை லூர்து தாஸ் வேறு கல்லூரியில் சேர்த்துவிட நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் லூர்து தாஸ் மனைவி மற்றும் 2-வது மகன் யுவராசுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளி யூர் சென்றனர். நிகழ்ச்சிக்கு அருள் பெனடிக்கையும் வருமாறு பெற்றோர் அழைத்தனர். அதற்கு தனக்கு வேலை இருப்பதாக கூறி வீட்டில் இருந்தார். இதனையடுத்து அருள் பெனடிக் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை லூர்துதாஸ் பெனடிக்கின் செல்போனிற்கு அழைத்த போது அது சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக வந்தது. இதனால் அருள் பெனடிக்கின் நண்பர்களை தொடர்பு ெகாண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார். 

    அதன்படி அருள்பெனடி க்கின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்து போது அருள் பெனடிக் தூக்கில் பிணமாக தொங்கி யதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீட்டின் கதவை உடைத்து அருள்பெனடிகின் நண் பர்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அருள்பெனடிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு பெனடிக்கை பரிசோ தித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினார். இது குறித்து காரைக்கால் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
    • வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் நாளை 15-ந் தேதி சுதந்திரதினம் விடுமுறை என்பதால், அன்றைய தினம் நடைபெறவேண்டிய மக்கள் குறைதீர்ப்பு முகாம், இம்மாதம் 17-ந் தேதி நடைபெறும். முகாமில், வழக்கம் போல், அனைத்து அரசுத்துறை அதிகாகள் முன்னிலையில், கலெக்டர் குலோத்துங்கன் காலை 9.30 மணி முதல், பிற்பகல் 10 மணி வரை மக்கள் குறைகளை கேட்பார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
    • ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி-விழுப்புரம் சாலை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பேக்கரி உள்ளது.

    அந்த கடைக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆனந்திடம் தகராறு செய்தது. அடுத்த சில நிமிடத்தில் அந்த கும்பல் ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி பொருட்களை சூறையாடினர்

    உடனே அங்கிருந்த ஊழியர்கள் ஆனந்தை மீட்டனர். பேக்கரிக்குள் 8 பேர் கொண்ட கும்பல் ஊழியரை தாக்கும் சி.சி.டி.வி. வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

    இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    பேக்கரி உரிமையாளர் சிமெண்டு வாங்கித் தருவதற்கு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தான் உழவர் கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் பேக்கரிக்குள் புகுந்து ஊழியர் ஆனந்தை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

    கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், உழவர்கரை ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல், கடை சூறை, அடித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உழவர்கரையை சேர்ந்த சுப்ரமணி (33) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    ×