search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநள்ளாறில் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் திருட்டு
    X

    திருநள்ளாறில் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் திருட்டு

    • அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.
    • பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள் ளாறை அடுத்த சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் அங்காளம்மை (வயது 65). இவர் சில ஆடுகளை மேய்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருத்துறை பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு, தனது 5 சவரன் தங்க நகைகளோடு சென்று விட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்து, தங்க நகைகளை வழக்கமாக் வைக்கும் வீட்டு அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.

    தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம் போல், வீட்டை பூட்டி, சாவியை, வீட்டின் மின்சார மீட்டர் பாக்ஸ் மீது வைத்து விட்டு ஆடுகளை மேய்க்க சென்று விட்டார். அங்காளம்மை வீட்டு சாவியை மீட்டர் பாக்ஸ் மீது வைப்பது, கிராம மக்கள் சிலருக்கு தெரியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வரும் அங்காளம்மை, நகை உள்ள அறை பக்கம் செல்ல வில்லை. நேற்று முன்தினம் அறைக்கு சென்று பார்த்த போதும் பீரோ சாவி, பீரோவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, யாரும் தெரிய வில்லை என கூறியுள்ளனர். இதை அடுத்த, அங்கா ளம்மை திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு கதவு மற்றும் பீரோவை திறந்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×