என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் மாதவன்"
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் நிறுவனங்கள் தயாரித்த இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தை தொடர்ந்து, நடிகர் மாதவன் தற்போது மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.
இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கிறார்.
இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் ஜி.டி.நாயுடு (GDN) படத்தை இயக்குகிறார், ராக்கெட் படத்தை தயாரிக்கும் அதே நிறுவனங்கள் இப்படத்தையும் தயாரிக்கின்றன.
ஜி.டி. நாயுடு பிறந்த இடமான கோயமத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி.டி.நாயுடு படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்.
- நடிகர் மாதவனுக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. பூனேவில் உள்ள இந்த நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்த எக்ஸ் பதிவில் அவர், "இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்."
"உங்களின் முந்தைய அனுபவம் மற்றும் கடுமையான தொழில்தர்மம் ஆகியவை இந்த நிறுவனத்திற்கு பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களது அனுபவம் நல்லபடியான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனம் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளுக்கான சர்வதேச தொடர்பு மையத்தின் உறுப்பினராக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது.
- மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
- சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் மாதவன், தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
திரைத்துறையில் மாதவனுக்கு இருக்கும் பரந்துபட்ட அனுபவம் தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வளமை சேர்த்து ஆராக்கியமான வளர்ச்சியை கொண்டு வரும் என்றும் இந்த நிறுவனத்தை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன்.
மாதவன் இயக்கி நடித்த "ராக்கெட்ரி-த நம்பி எஃபெக்ட்" திரைப்படம் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.






