என் மலர்
புதுச்சேரி

தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை புதிய நிர்வாகிகள் சிவா எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சி.
தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
- பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
- புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு,
தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
புதுச்சேரி,ஆக.27-
புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்
அடுத்த கட்டமாக 23 அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.
பின்னர் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏவின் பரிந்துரையின்படி முதல் கட்டமாக இளைஞர், மீனவர் அணி, இலக்கிய அணிக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, தற்போது கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைக்கு புதிய நிர்வா கிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர், வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரி மாநில கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் தலைவராக புலவர் பா. கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவராக சேவியர் ராஜேஷ், அமைப்பாளராக சிவசங்கரன், துணை அமைப்பாளர்களாக அன்பு மாறன்,ஸ்ரீதர், உத்திராபதி, தேசிகன், ஏழுமலை, வீரமணி, தியாகராஜன், வெங்கடஜலபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்த்து
புதிதாக நியமிக்கப்பட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் தி.மு.க. அமைப்பாளர் சிவாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.






