search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    போட்டி போட்டு விழாவை நடத்தும் உபயதாரர்கள்
    X

    போட்டி போட்டு விழாவை நடத்தும் உபயதாரர்கள்

    • ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
    • இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கை நடைபெறும்.

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். முத்தியால்பேட்டை செங்குந்தர் மரபினர் சார்பில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவில் உபயதாரர்களான பைபர் கட்டுமர உரிமையாளர்கள், தனியார் ஊழியர்கள், மில் தொழிலாளர்கள், விசைப்படகு உரிமையாளர்கள், சான்றோர் குல மரபினர்கள், சீமென்கள் எனப்படும் கப்பல் என்ஜினீயர்கள், விசைப்படகு தொழிலாளர்கள், ஆற்றில் தொழில் செய்வோர் என ஒவ்வொரு நாளும் விழா களை கட்டும்.

    விழா நடைபெறும் நாட்களில் இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கையுடன் சாமி வீதியுலா என ஒவ்வொரு உபயதாரர்களும் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை நடத்துவர். சினிமா பின்னணி பாடகர்கள், சினிமா இசை அமைப்பாளர்கள், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை போட்டி போட்டுக்கொண்டு ஏற்பாடுகளை செய்வார்கள்.

    இந்த விழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளாமானோர் வருவார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டி, பொட்டி வண்டி கட்டிக்கொண்டு விழா தொடங்கும் நாளில் இருந்து விழா முடியும் வரை வீராம்பட்டினத்திலேயே தங்கியிருந்து நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.

    வீராம்பட்டினம் தேரோட்ட விழாவுக்கும், முத்து பல்லக்கு விழாவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நாளடைவில் இரு சக்கர வாகனம் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பெருகி விட்டதால் தற்போது சிறப்பு பஸ்கள் விழாவுக்கு இயக்கப்படுவது படிப்படியாக குறைந்து விட்டது.

    மேலும் வெளியூர்களில் இருக்கும் வீராம்பட்டினம் மீனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து விழா முடியும் வரை தங்கியிருந்து விழாவை கண்டு களிப்பர். அவர்களுக்கு வீராம்பட்டினம் மீனவர்கள் முகம் சுளிக்காமல் தினமும் விருந்து வைத்து உபசரிப்பர்.

    Next Story
    ×