என் மலர்
புதுச்சேரி

அரசு விழாக்களில் பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும்: கவர்னர் தமிழிசை
- நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது.
- 2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும்.
புதுச்சேரி:
புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். விழாவில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை கொட்டி மரக்கன்றுகள் நட்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது. சில ஆண்டுக்கு முன்பு பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசினால் இந்து மதம் சார்ந்து பேசுவது போல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும். அதற்கேற்ப இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.
புதுவையில் முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






