என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர்:

    புதுவை வில்லியனூர் அருகே அனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54) கூலி தொழிலாளி அவரது மனைவி கலையரசி (47). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வருவார்.

    நேற்று காலை மகன் ராஜசேகர் மாட்டை ஓட்டிக் கொண்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன், கலையரசி மட்டும் தனியாக இருந்தனர்.

    அப்போது ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். ஆனால் கலையரசி பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கலையரசியை தாக்கி அவரது சேலையால் கழுத்தை நெரித்தார். இதில் கலையரசி பரிதாபமாக இறந்து போனார்.

    உடனே ராேஜந்திரன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். மாடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராஜசேகர் தாய் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க பணம் கொடுக்கமறுத்ததால் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35) ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார். அப்போது அங்குள்ள லிப்டை அவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனை தியேட்டர் நிர்வாகம் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்டு பிடித்தனர். மறுநாள் சதீஷ் அதே தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற போது தியேட்டர் நிர்வாகத்தினர் சதீஷை கண்டித்தனர். பின்னர் அங்கிருந்து சதீஷ் சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.

    அங்குள்ள பொருட்களை சூறையாடிவிட்டு தியேட்டர் ஊழியர்களை சதீஷ் மிரட்டி விட்டு சென்றார். இது குறித்து புகாரின் பேரில் உருளையபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் சதீஷை பிடிக்க அவரது வீட்டுக்கு போலீசார் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் அடிக்கடி சதீஷை தேடி அவரது வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த சதீஷின் மனைவி தீஷ்மா கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் தொல்லை கொடுத்ததால் ரவுடியின் மனைவி கையை கத்தியால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது.
    • நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கீழ காசாக் குடி பகுதியில், புதுச்சேரி அரசு இந்து சமய அற நிலையத் துறைக்குட்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவி லுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பல்வேறு தரப்பி னர் போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது.

    கோவிலுக்கு சொந்த மான நிலத்தை மீட்க பல்வேறு தரப்பினர் முயற்சித்து வந்தாலும், புதுச்சேரி அரசு இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி யினர் மற்றும் ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக் குழு, காரைக்கால் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் இன்ஜினியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    • மணிவண்ணன் திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
    • இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). இவர் காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில், தனது உறவினர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நாளடைவில் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும்.
    • நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும்.

    புதுச்சேரி:

    ராகுல்காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.

    இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து ஆம்பூர் சாலை அருகே நிறைவடைந்தது.

    ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும். அப்போது ராகுல்காந்தி பிரதமராவார்.

    இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. சோனியாகாந்தி 17 கேள்விகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலத் ஜோஷி பதில் சொல்லுகிறார்.

    புதுவையில் கவர்னரும், முதலமைச்சரும் சேர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆனால் மானியம் இன்னும் வரவில்லை. ஏனெனில் அந்த திட்டத்துக்கு ரூ.120 கோடி தேவை. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    • நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.
    • ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது.

    கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, திராவிட இயக்கங்களால்தான் கவர்னராக தமிழிசை பதவி வகிக்கிறார் என்று பேசினார். அவர் பேச்சுக்கு கவர்னர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்தார்.

    புதுவை கடற்கரை சாலையில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

    அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிற்கு சென்று படித்தேன். சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது.

    ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கின்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், ஏன் தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதலமைச்சர் பதவியை தர மறுக்கிறீர்கள்?

    உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை முதலில் எதிருங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.

    ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதலமைச்சராகவோ? ஆக்கிவிட முடியுமா?

    நீங்கள் எதையும் செய்வதில்லை. உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.
    • சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து, நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு கவனம் செலுத்தும்.

    புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.

    புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சிறுதானிய உணவும் வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். படிக்கும் மாணவர்களுக்கு அது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பு மாணவர்களின் சோர்வை போக்கவே சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    • அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.
    • பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள் ளாறை அடுத்த சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் அங்காளம்மை (வயது 65). இவர் சில ஆடுகளை மேய்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருத்துறை பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு, தனது 5 சவரன் தங்க நகைகளோடு சென்று விட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்து, தங்க நகைகளை வழக்கமாக் வைக்கும் வீட்டு அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.

    தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம் போல், வீட்டை பூட்டி, சாவியை, வீட்டின் மின்சார மீட்டர் பாக்ஸ் மீது வைத்து விட்டு ஆடுகளை மேய்க்க சென்று விட்டார். அங்காளம்மை வீட்டு சாவியை மீட்டர் பாக்ஸ் மீது வைப்பது, கிராம மக்கள் சிலருக்கு தெரியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வரும் அங்காளம்மை, நகை உள்ள அறை பக்கம் செல்ல வில்லை. நேற்று முன்தினம் அறைக்கு சென்று பார்த்த போதும் பீரோ சாவி, பீரோவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, யாரும் தெரிய வில்லை என கூறியுள்ளனர். இதை அடுத்த, அங்கா ளம்மை திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு கதவு மற்றும் பீரோவை திறந்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு அருகே நல்லெழுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி (வயது 57). இவரது மனைவி லதா (44). வெங்கட்ரமணி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை வீட்டிலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநள்ளாறு அடுத்த செல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வெங்கட்ரமணி படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விபத்து குறித்து திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து போலீஸ் நிலையம் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளது. தகவல் தெரிவித்து அரை மணி நேரம் கழித்து போலீசாரும், 108 ஆம்புலன்சும் வந்ததால் விபத்தில் உயிரிழந்த லதா, காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    மேலும் காலதாமதமாக போலீசாரும், ஆம்புலன்சும் வந்தனர். ஆனால் ஆம்புலன்சில் உதவி செவிலியர் இல்லை. டிரைவர் மட்டுமே ஆம்புலன்சில் வந்து உயிருக்கு போராடிய வரை முதல் உதவி எதுவும் செய்யமுடியாமல் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி பெண் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
    • மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மீன்பிடி துறை முகத்தின் முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் எம்.பி.சி -யில் இருந்து இ.பி.சி -க்கு மாற்றியதை மீண்டும் எம்.பி.சி -க்கு மாற்ற வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்கவேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்களும் வருகின்ற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட் டது.

    இது தொடர்பாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் (வயது 53), அப்போதைய செட்டில் மெண்ட் அதிகாரியாக இருந்த மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

    துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 30-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் பதுங்கி இருந்த மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜியை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக இருந்த ரமேசை தேடி வந்தனர். இதற்கிடையே ரமேஷ் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
    • சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் மாதவன், தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

    திரைத்துறையில் மாதவனுக்கு இருக்கும் பரந்துபட்ட அனுபவம் தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வளமை சேர்த்து ஆராக்கியமான வளர்ச்சியை கொண்டு வரும் என்றும் இந்த நிறுவனத்தை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன்.

    மாதவன் இயக்கி நடித்த "ராக்கெட்ரி-த நம்பி எஃபெக்ட்" திரைப்படம் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

    ×