search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "work completed"

    • அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது.
    • ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியில் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்கு சொந்தமான காரைக்கால் அம்மையார், சித்தி விநாயகர், பொய்யாத மூர்த்தி விநாயகர், அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது. ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது உற்சவம் நடைபெற்று முடிந்த காலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மே மாதம் உண்டியல் எண்ணப்பட்டது.

    தொடர்ந்து, அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொள்வது என அறங்காவலர் குழு முடிவு செய்து, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இதற்கான பணி ஆணை பெற்று, உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது. சுமார் 30 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றது. உண்டியலில் ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 130 இருந்தது, அத்தொகை உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டதாக, கோவில் அறங்காவல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் தார்சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
    • இரவு முழுவதும் எம்.எல்.ஏ. கண்காணித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி-வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தபணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று இரவு முழுவதும் அங்கிருந்து கண்காணித்தார். இதைத்தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பணிகளை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வழக்கம் போல் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். மேலும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செட்டிநாடு கலைநயத்துடன் கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
    • சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடத்தில், தொல்பொருட்களை காட்சிப்படு த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர்(பொறுப்பு) மணிவண்ணன் முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்ப டுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

    கீழடி அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்ப டுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொது மக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளது.அகழாய்வு பணிகளின் போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சங்க காலத்தமிழர்களின் பெருமைகளை பறைச்சாற்றும் வகையில் உலகளவில் புகழ் பெறவுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டி டத்தில் நடைபெற்று வரும் நிறைவுப்பணிகள் தொடர்பாக இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்துப்பணிகளும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு)சிவானந்தம், கீழடி கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்ட (சென்னை) செயற்பொ றியாளர் மணிகண்டன், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×