என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் டெங்குவிற்கு இருவர் பலியானதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நல வழித்துறை தீவிரமாக இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நலவழித்துறையினர் காரைக்கால் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் கூறியதாவது;-

    காரைக்கால் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 80 நபர்களுக்கு டெங்கு கண்டறிய ப்பட்டுள்ளது. இதில் சுமார் 32 நபர்கள் அண்டை மாநி லங்களை சேர்ந்தவர்கள். காரைக்காலை சேர்ந்தவர்கள் 50 நபர்கள். இந்த மாதம் இன்றுவரை 6 நபர்கள் காரைக்காலை சேர்ந்தவர்களுக்கும், அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் 4 நபர்கள் என்று மொத்தம் 10 நபர்களுக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மழைக்காலம் என்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் வீட்டையும் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு தண்ணீர் தேங்காமல் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை ஆரம்பத்தில் கண்டறிந்து விட்டால் குணமாக்கி விடலாம். காலம் கடத்துவதும் சுயமாக மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவதும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். கொசு ஒழிப்பு பணியிலும் டெங்கு விழிப்புணர்வு பணியிலும் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
    • அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    பாகூர்:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சை வள்ளி. இவர் புதுவையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் துப்புரவளராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு இறந்து விட்டார்.

    இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஸ்வான் (12) 2 மகன்கள். கமலேஷ் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தான்.

    இவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் செல்போனில் ப்ரீ பையர் எனும் விளையாட்டை தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவும் கமலேஷ் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான். இன்று காலை செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்காக தனது தாய் பச்சை வள்ளியிடம் பணம் கேட்டான். அதற்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் தருவதாக கமலேஷிடம் கூறிவிட்டு பச்சையம்மாள் வேலைக்கு சென்று விட்டார்.

    விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்தும் செல்போனில் விளையாட முடியாத வேதனையில் இருந்த கமலேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கமலேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் பச்சைவள்ளிக்கு தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பச்சைவள்ளி பதறி அடித்து கொண்டு வீட்டு வந்தார். அங்கு மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போனில் விளையாடுவதற்கு ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • புதுவை மக்களிடையே டெங்கு பீதி அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் பருவமழை தொடங்கும் முன்பே புதுவையில் டெங்கு, மலேரியா வேகமாக பரவி வருகிறது.

    புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம் ஆகும். எனவே, இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதுடன் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் புதுவை தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (வயது 28), குருமாம் பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதனால் புதுவை மக்களிடையே டெங்கு பீதி அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
    • காதல் விவரம் தெரியவந்ததையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.

    காரைக்கால்:

    சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் தீபிகா (வயது19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்த கவுதம் (22). டிப்ளமோ படித்துள்ள இவர் அம்பத்தூரில் தங்கி இருந்து வேலை தேடி வந்தார். அப்போது, தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.

    இவர்களது காதல் விவரம் தெரியவந்ததையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி காதலன் கவுதமுடன் காரைக்காலில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து தமிழக பகுதியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் மகளை கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் சென்னை அம்பத்தூர் போலீசில் பெற்றோர் தரப்பில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் நேற்று மாணவியை தேடி காரைக்கால் சென்றனர்.

    இதையறிந்த காதல் ஜோடி, காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சம் அடைந்தது. அவர்களை துரத்தி பிடிக்க வந்த போலீசாரை கோர்ட்டு வக்கீல்கள் தடுத்தனர்.

    அப்போது திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி அதற்கான சான்றுகளை காதல் ஜோடியினர் காட்டினர். மாணவியின் பெற்றோர் மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கெஞ்சினர்.

    அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோர்ட்டு வாசலில் வைத்து தனது உறவினர்களிடம் நகைகளை தீபிகா கழற்றி கொடுத்துவிட்டு, காதல் கணவருடன் சென்றார். இச்சம்பவம் காரைக்கால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
    • தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் முல்லை நகர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் (வயது 28). பெயிண்டர் வேலை செய்கிறார். இவர் அதே தெருவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்த தாக கூறப்படுகிறது. அந்த ப்பெண் மைனர் என்பதால், பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் தந்தை, அவரது உறவினர்கள் அரவிந்த்ராஜை பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்த் ராஜ் தனது நண்பர் நந்தகோபால் மற்றும் சிலருடன் அங்குள்ள சுடுகாடு பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மேற்கண்ட 4 பேர், அரவிந்த்ராஜ்ஜை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்துள்ளனர். தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.

    அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அரவிந்த்ராஜை விரட்டி சென்று அடித்த பொழுது, அவரது தாய் மீனா தடுத்த பொழுது அவரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த அரவிந்த் ராஜ், அவரது தாய் ஆகியோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தல்.
    • நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் 5ஆக உயர்ந்துள்ளது.

    இதனால், கேரளா மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதன் எதிரொலியால், கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாஹேவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

    மேலும், புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாஹேயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி- கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிபா வைரஸ் பரவல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
    • மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது56). தனியார் மில் தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி, சொந்த வேலை காரணமாக, காரைக்கால் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பு ம்போது, பிள்ளைத்தெ ருவசல் மின் நிலையம் அருகே சாலையில் ஆடு குறுக்கே போனதால், ஆட்டின் மீது மோதி, தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார். காரை க்கால் அரசு ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட சிவக்குமார், மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார். அங்கு 10 நாள் சிகிச்சையில் இருந்த சிவக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், புதுச்சேரியில் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் உள்ள குருமாம்பேட் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) என்பவர் உயிரிழந்துள்ளார்.

    மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதேபோல், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மீனா ரோஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    மீனா ரோஷினி நேற்று உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று காயத்ரி என்ற கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

      புதுச்சேரி:

      புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

      அரசு பதவிகளில் இடம்பெறாத என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக அவர்களுக்கு வாரிய பதவிகள் தர வில்லை.

      இதனால் ஏற்கனவே அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் அறங்காவலர் குழு அமைக்கக்கூட பரிந்துரைகளை ஏற்கவில்லை என பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் போர்க்கொடி உயர்த்தினார்.

      அவர் சட்டசபையில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

      தங்கள் தொகுதியில் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ ஏற்கனவே புகார் கூறி வந்தார். இதற்காக சட்டமன்ற நிகழ்வுகளை புறக்கணிக்கப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். சபாநாயகர் செல்வம் அவரை அழைத்து பேசி சமாதானப்படுத்தினார். பணிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

      ஆனால் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, காலம் கடந்தும் தனது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை என தற்போது மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவர் சட்டசபை முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த முடிவை சபாநாயகர் செல்வத்திடம் கடிதமாகவும் அவர் வழங்கியுள்ளார்.

      புதுவை சட்டசபை வரும் 20-ந் தேதி கூட உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் திடீர் போராட்ட அறிவிப்பு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

      பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வே ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      • புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
      • 3 மணி நேரத்திற்கு மேலாக பஸ்கள் இல்லாமல் காத்திருப்பதாக தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

      புதுச்சேரி:

      புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

      இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

      ஆனால் இரவு 11.30 மணிக்கு மேலும் பஸ் எதுவும் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையம் எதிரே மறைமலை அடிகள் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இது பற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

      அப்போது பயணிகள், தாங்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக பஸ்கள் இல்லாமல் காத்திருப்பதாக தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

      பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

      • 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
      • இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

      புதுச்சேரி:

      நாகப்பட்டினம் நம்பியார் நகர் பழைய காலணித் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவக்குமார்(34), அவரது மனைவிலதா, அவரது மகன் லோகேந்தி ரன், சகோதரர் முத்து மாணிக்கம், முத்து மாணிக் கத்தின் மகள் சோபியா மற்றும் உறவினர்கள் அபிஷா, கோபிகா ஆகிய 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.

      பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு, நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திரு.பட்டினம் பைபாஸ் சாலை, நாகப்பட்டி னம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றபோது, 2 மோட்டார் சைக்களில் வந்த 4 பேர், நீங்கள் எல்லாம் யார், காரை ஏன் தள்ளிகொண்டு போகிறீர்கள் என அதிகார தோரணையில் விசாரித்த னர்.

      அப்போது, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும், வினோத்தை தாக்கினர். அப்போது தடுக்க வந்த சிவக்குமார் அவரது மனைவி லதா, முத்து மாணிக்கத்தையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 பேரும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, திரு.பட்டினம் போலகம் புதுகாலணியைச்சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர் கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்பு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.

      • நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
      • பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.

      புதுச்சேரி:

      காரைக்கால் மாவட்டத் தில் உள்ள, புதுச்சேரி அரசின் கூடுதல் வேளாண் துறையில், கடந்த பல ஆண்டுகளாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண் பட்ட தாரி அலுவலர் நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் வேளாண் துறையில் பணிபுரியும் அதி காரிகளுக்கு, பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, வேளாண் துறை முன்பு அதி காரிகள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில், நீண்ட காலமாக பணிபுரியும் வேளாண் அலுவலர்களுக்கு உடனடியாக வேளாண் துறை துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். விவசாயத்துறை மற்றும் அதை சார்ந்த நிறு வனங்கள், துறைகளில் கூடுதல் இயக்குனர்கள், இணை பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

      விவசாய அதிகாரி பதவிக்கு இன்றியமையாத தகுதியாக பி.எஸ்.சி அக்ரி பட்டத்தை சேர்த்து ஆட்சேர்ப்பு விதிகளை திருத்த வேண்டும். எந்த தாமதமும் இன்றி அனைத்து தொழிற்நுட்ப பதவிகளை யும் முறைபடுத்த வேண்டும். வேளாண்துறை உயர் அதிகாரி களுக்கு இடையே நிலவும் பனிப்போரை கருத்தில் கொண்டு வேளாண் இயக்குனர் பதவியை தகுந்த பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.

      வேளாண்துறையில் உள்ள தொழிற்நுட்ப பணி யிடங்க ளின் பணியாளர் மதிப்பாய்வு மற்றும் மறு சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். இணை வேளாண் இயக்குனர், கூடுதல் வேளாண் இயக்கு னர் மற்றும் வேளாண்துறை இயக்குனர்கள் ஆகியோரை புதுச்சேரி குடிமைப்ப ணி யில் (பி.சி.எஸ்) இணைத்திட வேண்டும். துறையில் உள்ள வேளாண் அலுவலர்களின் காலி பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். கோரிக்கைகள் நிறை வேறாத பட்சத்தில் இன்று முதல் (12.9.23)தொடர் போராட்டம் நடைபெறும் என அதிகாரிகள் அறி வித்துள்ளனர். அதன்படி இன்று முதல் பணி புறக்க ணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரி களுக்கு ஆதரவாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதர வை தெரிவித்து வருகின்ற னர்.

      ×