என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Livelihood Movement"

    • கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க இளைஞா் திறன் திருவிழா நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக ஊரக பகுதியில் வசிக்கும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் இளைஞா் திறன் திருவிழா முகாம் வட்டார இயக்க மேலாண்மை அலுவகத்தில் நடைபெற்றது.

    அரசு அங்கீகாரம் பெற்ற 20-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வழங்கும் நிறுவ னங்கள் கலந்து கொண்டு தாங்கள் வழங்கும் பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்து இளைஞா்களை பயிற்சிக்கு தோ்வு செய்தனா்.

    கமுதி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளை சார்ந்த 700-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் மற்றும் திட்ட இயக்குநா் அபிதா ஹனீப் ஆகியோர் தலைமையில் இந்த இளைஞா் திறன் திருவிழா நடைபெற்றது.

    இந்த முகாமில் மகளிா் திட்ட அலுவலா்கள் கிருஷ்ணகுமார் (நிதி உள்ளக்கம்), உதவிதிட்ட இயக்குநா் சரவணபாண்டி யன் (திறன்), உதவி திட்ட அலுவலா் கிருஷ்ணன் (என். யு.எல்.எம்.) கலந்து கொண்டனா்.

    விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளா்கள் திரவியம், சேதுபதி பில்லத்தியான், மாரிமுத்து சாந்தி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

    • .காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர்.
    • பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    புதுச்சேரி 

    புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை. ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை இணைந்து, அக்டோபர் 6-ந் தேதி முதல் 5 நாட்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மூலம், போதைப் பொருளுக்கு எதிராக, காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர். இதன் முதல் நிகழ்ச்சியாக, காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியியில் தொடங்கிய இந்த பேரணியை, மாவட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்பேரணி, பள்ளிகளை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் பதாதைகள் ஏந்தி சென்றனர். இந்நிகழ்வில் பள்ளியில் துணை முதல்வர் கனகராஜ், வட்டார வளர்ச்சித்துறையின் மாரியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×