search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்ததால் பரபரப்பு
    X

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்ததால் பரபரப்பு

    • துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.

    எனவே அவர் நேற்று பகல் முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை. அவரது அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இரவு 10 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருவதாக சட்டசபை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று முதலமைச்சரின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முதலமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணியளவில் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். சுமார் 20 நிமிடம் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 10.20 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் ரங்கசாமி இரவில் திடீரென சட்டசபைக்கு வந்ததால் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×