என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார்.
    • திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார்.

    புதுச்சேரியில் பைக்கில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணியிடமிருந்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் கர்ப்பிணியின் நகையை பறித்து சென்றனர்.

    திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நகையை பறித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

    • கடல் அலைகள் 5 அடிக்கு மேல் எழுந்தது.
    • கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், புதுவை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இது புயலாக மாறும் சூழ்நிலை உள்ளதால், தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 2-ந் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக புதுவையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வரை 7.5 செ.மீ. மழை புதுவையில் பதிவானது. நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த தரைக்காற்று வீசியது. கடலில் அலைகளில் 5 அடிக்கு மேல் எழுந்தது.

    இதையடுத்து கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பாண்டி மெரீனா கடற்கரைக்கு செல்லும் பாதையையும் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர். பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    கடல் சீற்றத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுமக்கள் கடலில் இறங்காதவாறு கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடும்படி உத்தரவிட்டார்.

    பலத்த காற்று வீசியதில் இந்திராநகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே ராட்சத மரம் பெயர்ந்து சாலையில் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் இந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    மோசமான வானிலை நிலவுவதை குறிப்பிடும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதுவை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை ஒன்றுடன், ஒன்று பிணைத்து கட்டி வைத்துள்ளனர்.

    சோலை நகர், வீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு உட்பட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கரைக்கு இழுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். புயல் கரையை கடக்குக்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியில் 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.


    புதுச்சேரியில் புயல் எச்சரிக்கையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது. சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நகர பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் இல்லை. பொதுமக்களும் வீடுகளில் முடங்கினர்.

    புதுவையில் இன்று காலை முதல் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்து வருவதால் மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

    புதுச்சேரியில் புயல், கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் ஆலோசனை நடத்தினார்.

    புயல், கன மழையை எதிர்கொள்ள அரசின் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று புயலாக மாறுகிறது.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    • இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
    • புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆதலால் புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

    • புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
    • புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    காரைக்காலிலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற போலியான தூதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களுக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 3 சுயநிதி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியவர்கள் (என்.ஆர்.ஐ.,) மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத அடிப்படையில் 116 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு 4 கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.

    என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற போலியான தூதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் 44 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்கள் ரத்து செய்து, லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் சென்டாக் நிர்வாகம் புகார் அளித்தது. 44 மாணவர்கள் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், அதனை உண்மை என சமர்ப்பித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    2-ம் கட்டமாக 6 சான்றிதழ் மற்றும் 25 சான்றிதழ் என 31 மாணவர்களும் போலி தூதரக சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. போலி ஆவணம் சமர்பித்த 31 மாணவர்களின் பட்டியல் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் 31 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில், போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களுக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைக்கப்பட் டனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    விசாரணையில் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ஒரு சில ஏஜென்ட்டுகள் போலி துாதரக சான்றிதழ்கள் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. அந்த ஏஜென்டுகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார்.
    • அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பா.ம.க., வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு புதுச்சேரி பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகாபலிபுரத்தில் நடைபெறும் பா.ம.க. சித்திரை திருவிழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது:-

    வன்னியரான ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக உள்ளார். ஆனால் அவர் வன்னியராக நடந்து கொள்வதில்லை. வன்னியருக்கு இருக்கக்கூடிய வீரம், உறுதி அவரிடமில்லை. யாரைப் பார்த்தாலும் வழவழப்பான சிரிப்பு. அதிலேயே அனைவரையும் கவிழ்த்து விடுகிறார்.

    முதலமைச்சர் வீட்டு வாசலில் கொலை நடக்கிறது. மாதம் தோறும் கொலை நடக்கும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதற்கு சளைக்காமல் தமிழ்நாடு வந்து விட்டது. தமிழகத்தில் கொலை சாதாரணமாகி விட்டது.

    12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சித்திரை திருவிழா வன்னியர் சங்கத்தின் இளைஞர் மாநாடு மகாபலிபுரத்தில் நடத்தப்படும். போலீசார் தடுத்தாலும் தடையை மீறி மாநாடு நடத்தப்படும். மாநாட்டிற்கு இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும்.

    சினிமாவில் நடித்து கொண்டிருந்த துணை முதல்வர் நடிகைகளுடன் ஆட்டம் போடுவது போல் அரசியலை நினைக்கிறார். அடுத்தும் எங்க ஆட்சி தான் என ஆட்டம் போடுகிறார். இதுக்கு போட்டியாக அடுத்து ஒரு சினிமா நடிகர் வந்துள்ளார். அவர் ஒரு கூட்டம் போட்டு 2026-ல் ஆட்சி என்கிறார். அடுத்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    காரைக்கால்:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு உள்ளது.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்கட்சி விவகாரங்களை சமூக வலை தளங்களில் வெளியிட வேண்டாம். இதனால் கட்சி வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. இக்கட்சி அனைத்து விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் சமூக பண்பாட்டு தளத்தை இயக்கும் இயக்கமாக உள்ளது.

    தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சொல்கிறது என்றால், அது நடைமுறைக்கு சாத்தியமானது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழுகிறது. 2026-ல் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை. இப்போது தான் கூட்டணி தொடக்கப் புள்ளியாக உள்ளது. எனவே வரும் தேர்தலில் காலம் கனியும் என்றும் சொல்ல முடியாது.

    அ.தி.மு.க. கூட்டணி அழைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியில் விவாதித்தார்களா? என்ற தகவல் இல்லை. யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லிவிட முடியாது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு உள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதிலும், இந்தியா கூட்டணியை உருவாக்கியதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு உண்டு. அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவது விடுதலை சிறுத்தைகளின் நோக்கமும், கடமைகளுள் ஒன்று. எங்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறாது. ஆனால், வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.

    புதுச்சேரி:

    கும்பகோணத்தைச் சேர்ந்த 24 வயது என்ஜினீயரிங் பட்டதாரி பெண். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தனியார் விடுதியில் தங்கி சுத்துக்கேணியில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி இரவு விடுதியில் இருந்து வெளியேறிய அவர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை தேடி வந்தனர். அந்த பெண் மதுரைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அவரது தாய் முன்னிலையில் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் இளம்பெண் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் கழிவறை கதவை தட்டி அந்த பெண்ணை வெளியே வர செய்தனர். அப்போது வெளியே வந்த அந்த இளம்பெண் திடீரென வாந்தி எடுத்தார்.

    விசாரணையில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை இளம்பெண் குடித்தது தெரிய வந்தது. மாயமானது குறித்து தாய் முன்பு போலீசார் விசாரணை நடத்தியதால் அவமானத்தில் ஆசிட் குடித்ததாக அந்த இளம்பெண் கூறினார்.

    இதையடுத்து போலீஸ் வாகனம் மூலம் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணையின்போது, இளம்பெண் ஆசிட் குடித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேற்று இரவு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்ய வில்லை.

    அதேநேரத்தில் தீபாவளியன்று கனமழை பெய்தது. இதன்பிறகு மீண்டும் பெரியளவில் மழை பெய்யவில்லை. வழக்கம் போல் வெயில் அடித்து வந்தது.

    இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரி வித்தது. இதனால் தமிழகம், புதுவை, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என் தெரிவிக்கப் பட்டிருந்தது.

    இதையடுத்து நேற்றைய தினம் புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியது. காலை முதலே லேசான குளிர்ந்த காற்றுடன் வானம் மப்பும், மந்தார முமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4 மணிக்கு லேசான மழை பெய்தது.

    இதன்பிறகு இரவு 10 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை விடிய விடிய தொடர்ந்தது. இதனால் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளது.

    விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள லாஸ் பேட்டை, கருவடிக்குப்பம், கிருஷ்ணா நகர், கோரிமேடு ஆகிய பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வானம் இருண்டு கருமேக கூட்டத்துடன் காணப்படுகிறது. வெளிச்சமே இல்லை. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.

    இதேபோல காரைக் காலிலும் கனமழை பெய்தது. மழை காரணமாக காரைக்கால் மாவட்ட அரசு, தனியார் பள்ளி, கல்லூரி களுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    புதுவையில் தொடர் மழை பெய்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மழையில் நனைந்த படியே மிகுந்த அவதியுடன் சென்றனர்.

    • பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் அதிக விலைக்கு வாங்குவதாக விளம்பரம் வந்தது.
    • ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனுாரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 55). இவரது பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம் என விளம்பரம் வந்தது.

    இதனை பார்த்த ராஜேஷ் அதில் இருந்த தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் உங்களிடம் எந்த காலத்து நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு உள்ளது என கேட் டுள்ளார். அதற்கு ராஜேஷ் 50 வருடத்திற்கு முந்தைய 5 ரூபாய் நோட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    அதற்கு அந்த நபர் ரூபாய் நோட்டை போட்டோ எடுத்து அனுப்புமாறும் அது பழைய நோட்டுத்தானா என பார்த்து உறுதி செய்து கொள்வதாக தெரிவித்தார்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த நபர் இது பழங்கால நோட்டு தான் இதை நாங்கள் ரூ.4 லட்சத்திற்கு எடுத்து கொள்கிறோம் என கூறி, பின்னர் ரூ. 4 லட்சத்திற்கான முதலில் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேஷ் ரூ. 35 ஆயிரம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் எதிர் முனையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×