என் மலர்
ஒடிசா
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான அனுபமா உபாத்யாயா உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் டிடாரோன் கிளிபைசன் உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 25 நிமிடங்களில் முடிவடைந்தது.
- எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஒடிசாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது எம்.எல்.ஏ.க்கள் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் மந்திரி, மந்திரிகள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-வது சட்டசபை பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17-21, 21-18 என ஜப்பானின் அனா இவாகியை வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.
கட்டாக்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
- முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என வென்றது.
- அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.
கட்டாக்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின.
- இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார்.
ஒடிசாவில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் மூன்று பேரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஒடிசாவின் சுபர்ணபூர் மாவட்டத்தில் ஷோரூமில் பணிபுரியும் அந்த பெண் கடந்த வியாழக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற முகமூடி அணிந்த மூவர் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் இளம்பெண் மீது மயக்க மருந்து தெளித்துள்ளது. அப்பெண் மயங்கியதும் கடத்திச் சென்று மூவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சுயநினைவுக்கு திரும்பிய அப்பெண் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல்துறை, இரண்டு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை காலையில் பிடித்துள்ளது.
மூன்றாவது நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தில் காவல்துறையில் துணை ஆய்வாளர்கள் தேர்வில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் புகாரை சி.பி.ஐ.-க்கு மாற்றுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தத்தை கொடுத்து வந்தன.
இந்நிலையில் காவல் துணை ஆய்வாளர் பணியமர்த்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்த ஊழல் பரவியுள்ளதால், விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஊழலில் மாநிலங்களுக்கு இடையே குற்றவியல் கும்பலின் தொடர்பும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் ஒடிசா காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், இதுவரை 123 பேரை கைது செய்துள்ளனர். இதில் 114 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களும் அடங்குவர்.
இந்த திடீர் சம்பவம் எதிர்பாராத சூழ்நிலைகளைக் காரணம் காட்டி ஒடிசா காவல் ஆட்சேர்ப்பு வாரியம் தேர்வை காலவரையின்றி ஒத்திவைக்க வழிவகுத்தது.
ஒடிசா காவல்துறையில் 933 காவல் துணை ஆய்வாளர் பதவிகளுக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
- அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
- ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
ஒடிசாவில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் ஜஜ்பூர் மாவட்டத்தில் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தைச் சேர்ந்த சௌதாமினி என்ற 57 வயது பெண் அப்பகுதியில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது. ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால் ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்
- கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
ஒடிசா மாநிலம் தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கா சிலையை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா்.
தா்கா பஜாா் வழியாகச் ஊா்வலம் சென்றபோது, அதிக சத்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
அப்போது துா்கா சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்.வித்யாதா்பூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சி.டி.ஏ செக்டாா் 11-ல் முடிவடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
அப்போது அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப் பட்டன. மேலும் கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். வன்முறையை தடுக்க கட்டாக்கில் 13 காவல் நிலைய எல்லை பகுதிகளில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை ஒடிசா அரசு பிறப்பித்தது.
இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 10 மணி முதல் தர்கா பஜார், மங்களாபாக், பூரிகாட், லால் பாக் மற்றும் ஜகத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலானது.
மேலும், பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மவுஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே துா்கா சிலை கரைப்பின்போது ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கட்டாக் நகரில் இன்று 12 மணி நேர கடை அடைப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.
கட்டாக் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியப் பகுதிகளில் போலீசார் மற்றும் விரைவு நடவடிக்கை படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அமைதி காக்கும்படி முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
- கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் உபரி வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது.
- வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவியது.
ஒடிசா மாநிலம் 2022-23 நிதியாண்டில் உபரி வருவாய் ஈட்டியதில் இந்தியாவின் 3ஆவது பெரிய மாநிலம் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19,456 கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டியது பெருமிதம் என பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டில் இருந்து 24 வருடம் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
"விவேகமான நிதி மேலாண்மையுடன், 2022-23 ஆம் ஆண்டில் வருவாய் உபரியைக் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் "கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் ஒடிசா அதன் சொந்த வளங்களில் இருந்து வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஏராளமான நலத்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் மாநிலத்திற்கு உதவியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.






