என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஒடிசா
- 2009-ம் ஆண்டுக்குப் பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதா உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 21 தொகுதிகளை கொண்ட மக்களவைக்கும், 147 இடங்களை கொண்ட சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
2009-க்கு பிறகு நவீன் பட்நாயக் பா.ஜனதாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இரு கட்சி தலைவர்களும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் பா.ஜனதா தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
147 சட்டமன்ற இடங்களில் 100 இடங்களுக்கு மேல் பிஜு ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது. ஆனால் பா.ஜனதா அதிக இடம் கேட்கிறது.
அதேவேளையில் 21 மக்களவை இடங்களில் 14-ல் பா.ஜனதா போட்டியிட விரும்புகிறது. பா.ஜனதாவின் இந்த கோரிக்கையை ஏற்க பிஜு ஜனதா தளம் மறுத்துவிட்டது.
மூன்று நாட்கள் பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுடன் ஒடிசா மாநில பா.ஜனதா தலைவர் சமால் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் அவர் கூறுகையில் "கூட்டணி குறித்து பேசவில்லை. ஒடிசா தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் இறங்க போகிறது. டெல்லியில் வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றம் தேர்தலுக்கான எங்களுடைய தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து ஏதும் பேசவில்லை. எங்களுடைய பலத்துடன் தனியாக நிற்போம்" என்றார்.
கடந்த மக்களவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களிலும், பா.ஜனதா 8 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
- ஒடிசாவின் பல்வேறு துறைகள் பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுகின்றன.
- குடிசைவாசிகள் நில உரிமை, குடிநீர் குழாய் வசதி, கழிப்பிட வசதி குறித்து கேட்டறிந்தார்.
மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனரான பில்கேட்ஸ் இன்று காலை ஒடிசா மாநிலம் புவேனஸ்வரில் உள்ள பிஜு ஆதார்ஷ் காலனிக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகளை பார்வையிட்டுள்ளார். மேலும், அங்குள்ள குடியிருப்புவாசிகளுடன் உரையாடினார். அப்போது அரசு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.
இது தொடர்பாக மாநில வளர்ச்சி துறைக்கான கமிஷனர் அனு கார்க் கூறுகையில் "குடிசைவாசிகள் நில உரிமை பெற்றது, குடிநீர் குழாய் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி பெற்றுள்ளதை அவருக்கு நேரில் சென்று காண்பித்தோம். குடிசை பகுதிகள் நவீன காலனியாக மாற்றம் அடைந்ததை பார்த்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்" என்றார்.
மாநில நகர்ப்புற வளர்ச்சிதுறையின் செயலாளர் ஜி மதி வதனன், "மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன் அடைந்தவர்கள் உடன் பில்கேட்ஸ் பேசினார்" என்றார்.
பில்கேட்ஸ் உடன் பேசிய பெண்மணி ஒருவர் "நாங்கள் இதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கை, தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்" என்றார்.
நேற்று ஒடிசா வந்த பில்கேட்ஸ் பின்னர் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.
ஒடிசாவின் பல்வேறு துறைகள் பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகனுமான ஆனந்த் திருமண விழாவில் பில் கேட்ஸ் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள் இருக்கிறார்கள்.
- பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம்.
- தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம் என்றார்.
புவனேஸ்வர்:
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம்.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.
- உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஒடிசா அறிவித்தது.
- நன்கொடையாளர்களின் தைரியம், தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம் என தெரிவித்தது.
புவனேஷ்வர்:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா அரசு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறியதாவது:
உறுப்புகளை தானம் செய்யும் நபரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும்.
மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை அவர்களது உறவினர்கள் தானம் செய்ய தைரியமாக முடிவெடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும்.
நன்கொடையாளர்களின் தைரியம் மற்றும் தியாகத்தைக் கவுரவிப்பதே மாநில அரசின் நோக்கம்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.
- புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒடிசா:
ஒடிசா மாநிலத்தில் இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புஜ்ஜி ஆம்மா (52) என்ற பெண் புதைப்பதற்கு முன்பு கண்விழித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பிப்ரவரி 1-ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த புஜ்ஜி, சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி அதிகாலையில், புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மயானத்தில் புதைப்பதற்கு முன்பு அவர் எழுந்து வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அதே வாகனத்திலேயே மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
- பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்.
- சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புவனேஸ்வர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது யாத்திரை, தற்போது ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்து வருகிறது. இன்று யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது:-
பிரதமர் மோடி, தனது சாதி பற்றி பொய் சொல்கிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அந்த சமூகத்திற்கு 2000-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா.ஜனதா வழங்கியது. பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர். பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் காந்தி தனது யாத்திரையில் பிரதமர் மோடி, மத்திய அரசையும் விமர்சனம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#WATCH | Congress MP Rahul Gandhi says, "PM Modi was not born in the OBC category. He was born Teli caste in Gujarat. The community was given the tag of OBC in the year 2000 by the BJP. He was born in the General caste...He will not allow caste census to be conducted in his… pic.twitter.com/AOynLpEZkK
— ANI (@ANI) February 8, 2024
- இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
- வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.
பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
- பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.
புவனேஸ்வர்:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ஒடிசா சென்றார். அங்கு அவர் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் விழாவில் ரூ.68,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.
- தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்றார்.
- இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது என கார்கே தெரிவித்தார்.
புவனேஷ்வர்:
பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் கட்சியின், முதல் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் தெலுங்கானாவில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, பல மாநிலங்களில் நடக்க இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது, சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும்.
அமலாக்கத்துறை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புகிறது. அவர்கள் அனைவரையும் சீண்டிப் பார்க்கின்றனர். பயத்தின் காரணமாக சிலர் நட்பை பிரிகின்றனர், சிலர் கட்சியை பிரிகின்றனர், சிலர் கூட்டணியில் இருந்து பிரிகின்றனர்.
தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது. ஜனநாயகத்தைக் காப்பது மக்களின் பணியாகும் என தெரிவித்தார்.
- ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
- இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து ஆகாஷ்-என்ஜி ஏவுகணை இன்று காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இது வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பாகும். இன்றைய சோதனையின்போது, ஆகாஷ்-என்ஜி ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏவுகணையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை கண்டறியும் கருவி, லாஞ்ச்சர், ரேடார், கட்டுப்பாடு மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள் ஆகியவை உள்ளது.
இந்நிலையில், ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ, இந்திய விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
- ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
புவனேஸ்வர்:
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.
புவிசார் குறியீடு அங்கீகாரமானது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.
- அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
- முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்