என் மலர்
ஆந்திர பிரதேசம்
- தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
- 1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.
திருப்பதி:
ஐதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானா போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்டார்.
மேலும் சந்திரசேகர ராவ் வரலாற்று மாணவர் அல்ல. ஆந்திர பிரதேசத்தின் பெரும்பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐதராபாத் மாநிலம் இருந்தது.
தெலுங்கு பேசும் மாநிலத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய இயக்கம் அப்போது இருந்தது. அப்படித்தான் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது ஒரு மாநிலத்தை பிரிப்பது குழந்தைகளின் விளையாட்டு அல்ல என கூறினார்.
இதுகுறித்து பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கூறியிருப்பதாவது:-
மிகவும் தாமதம் சிதம்பரம் ஜி. தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.
இப்போது, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தெலுங்கானா மக்கள் காங்கிரஸ் எங்கள் மீது செய்த அட்டூழியங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். மறக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளில் தேவஸ்தானத்தின் தங்க டெபாசிட் அளவு 10,258 கிலோ 17 கிராம் ஆக இருந்தது.
- இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தங்கம் டெபாசிட் அளவு 11,225 கிலோ 660 கிராம் ஆக அதிகரித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஏராளமான அளவில் குளறுபடிகள், முறைகேடுகள் நடைபெறுவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:-
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் செலுத்தும் பணம், தங்கம் ஆகியவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெண்டர் மூலம் வட்டியின் சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.15 ஆயிரத்து 938 கோடியே 68 லட்சம் தேவஸ்தானத்தின் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அந்தத் தொகை ரூ.17,816 கோடியே 15 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஒரே ஆண்டில் 1,877 கோடியே 47 லட்சம் ரூபாய் தேவஸ்தானம் சேமித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளில் தேவஸ்தானத்தின் தங்க டெபாசிட் அளவு 10,258 கிலோ 17 கிராம் ஆக இருந்தது.
இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தங்கம் டெபாசிட் அளவு 11,225 கிலோ 660 கிராம் ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 967 கிலோ 2 90 கிராம் தங்கத்தை தேவஸ்தான நிர்வாகம் சேமிப்பு செய்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் ரூ.4,791 கோடியே 6 லட்சம் பணமும், 3885 கிலோ 920 கிராம் தங்கமும் வங்கிகளில் தேவஸ்தான கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை.
- 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.
திருப்பதி:
ஐதராபாத் எம்.பி ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
ஒவைசி பா.ஜ.க.வின் பி டீம் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர் நிறுத்தப்படுவார் இதன் மூலம் பா.ஜ.க எளிதில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்து ஒவைசி, கூறுகையில் :-
ராகுலுக்கு அம்னீசியா என்ற அரசியல் மறதி நோய் உள்ளது. அவர் எளிதில் மறந்து விடுவார். நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கிஷன் ரெட்டி வெற்றி பெற்றார்.
இதில் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததா? 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.
ஆனால் அமேதியில் போட்டியிடவில்லை. அமேதியில் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அங்கு ஸ்மிருதி ராணியிடம் ராகுல் பணம் வாங்கினாரா? குஜராத்தில் பா.ஜ.க ஏன் வெற்றி பெறுகிறது. எவ்வளவு பணம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
- சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா.
- 35 பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை நடந்த சூரிய பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் `வேத நாராயணசாமி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதியம் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய நறுமண பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த சந்திர பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலையில் நடந்த சூரிய பிரபை, இரவு நடந்த சந்திர பிரபை வாகனச் சேவைகளுக்கு முன்னால் கலாசாரக் குழுவினர் நடனம் மற்றும் சங்கீர்த்தனங்களை வழங்கி பக்தர்களை கவர்ந்தனர். அதில் சூரியகாந்தி பூக்கள் போல வேடமிட்டும், ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் துணைவியார்களுடன் சூரிய நாராயணமூர்த்தி எழுந்தருளி இருப்பதுபோல் வேடமிட்ட ராஜமுந்திரியைச் சேர்ந்த ௩௫ பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.
அதேபோல் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், அன்னமாச்சாரியார் கலையரங்கம், ராமச்சந்திரா புஷ்கரிணி பகுதியில் நடந்த பக்தி இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் மக்கள், பக்தர்களை கவர்ந்தன.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
- 6-வது நாளான நேற்று கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா.
- சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி.
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று கிருஷ்ணர் அலங்காரத்தில், சர்வபூபால வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. மாலையில் தங்க தேரோட்டமும் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலையில் தங்க தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடந்தது.
காலையில் கிருஷ்ணர் அலங்காரத்தில் சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 4.20 மணி முதல் 5.20 மணி வரை தாயார் தங்க ரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- கிரி பாபு மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
- தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த மதுரா நகரை சேர்ந்தவர் கிரி பாபு (வயது 27). கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி, ராஜேஸ்வரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 மாத குழந்தை உள்ளது.
கிரி பாபு மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அப்பலாய குண்டாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் மனைவிக்கு போன் செய்த கிரி பாபு குடும்பம் நடத்த வரவேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஸ்வரி உன்னுடைய நடத்தை மாற்றிக் கொண்டால்தான் வருவேன் என்றார். நீ குடும்ப நடத்த வரவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என கிரி பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று கிரி பாபு வாட்ஸ்அப் வீடியோ காலில் மனைவிக்கு போன் செய்தார். மின்விசிறியில் கயிறை தொங்கவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
இதனைக் கண்ட ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கணவரிடம் கெஞ்சினார். இருப்பினும் கிரி பாபு மனைவியை பார்க்க வைத்து மின்விசிறியில் தூக்கில் தொங்கி இறந்தார்.
இதுகுறித்து ராஜேஸ்வரி அலிப்பிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரி பாபு பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனை.
- சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தொடங்கியது.
சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரிசுவாமி கூறியதாவது:-
உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு கோடி குங்குமார்ச்சனையும் செய்யப்பட்டது. தெலுங்கு கார்த்திகை மாதத்தில் வில்வ இலையை சமர்ப்பித்து பரமேஸ்வரரை வழிபட்டால் கோடி பிறவிகளின் பலன் அடைந்து, முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உலக நன்மைக்காக வாயு லிங்கேஸ்வரருக்கு கோடி வில்வ இலைகளால் அர்ச்சனை மற்றும் பூஜைகள் சாஸ்திரப்படி தொடங்கி நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் முக்கிய அர்ச்சகர்கள், வேதபண்டிதர்களான அர்த்தகிரி, மாருதிசர்மா, ருத்விக்குகள் அர்ச்சனைக்கு தீட்சை எடுத்தனர்.முதலில் கலச ஸ்தாபன பூஜை செய்து, அதன் பிறகு வேத பண்டிதர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்பாளுக்கு கோடி குங்குமார்ச்சனையும் நடத்தினர்.
கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தினமும் 2 காலங்களில் நடத்தப்படுகிறது. கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தம்பதியினர், நிர்வாக அதிகாரி சாகர்பாபு தம்பதியினர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்துக்கு சிறப்புப்பூஜை.
- உற்சவர் பத்மாவதி தாயாருக்கு, தங்க ஆபரணங்கள்
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக நேற்று இரவு யானை வாகன வீதிஉலா நடந்தது. நேற்று நடந்த யானை வாகனத்திலும், இன்று (புதன்கிழமை) இரவு நடக்கவிருக்கும் கருட வாகனத்திலும் எழுந்தருளும் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு, தங்க ஆபரணங்கள் அணிவிப்பதற்காக ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரம் திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்துக்கு சிறப்புப்பூஜைகள் செய்ததும், அதை ஒரு பெட்டியில் வைத்து தலையில் சுமந்தபடி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. ஊர்வலமாகக் கொண்டு வந்தார்.
ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் திருச்சானூருக்கு அனுப்பி வைத்தார்.
திருச்சானூரை அடைந்ததும், அங்குள்ள மஞ்சள் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரத்தை ஊர்வலமாக பத்மாவதி தாயார் கோவிலுக்குள் எடுத்துச் சென்று, அதை ஏழுமலையான் கோவில் துணை அதிகாரி லோகநாதம் ஒப்படைக்க, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார்.
முதலில் மூலவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்ரீவாரி லட்சுமி காசு மாலை ஆரம் அணிவிக்கப்பட்டு, பின்னர் யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
அப்போது திருச்சானூர் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன் உடனிருந்தார். திருமலையில் நடந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி உடனிருந்தார்.
- வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் `மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு சாஸ்திர பூர்வமாக மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர் ஆகிய நறுமண திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. மாலை 3.30 மணியில் இருந்து 5 மணி வரை வசந்தோற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, உதவி அதிகாரி ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
- திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
- அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை அடிவாரத்தில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது.
இங்கு வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு ஹோமத்தில் கணவன் மனைவி தம்பதியாக கலந்து கொண்டால் நன்மை பெறலாம் என்பது ஐதீகம்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழாக்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ.14,000 ஒப்பந்த மற்றும் பிற வகையான ஊழியர்களுக்கு ரூ. 6,850 பிரமோற்சவ சன்மானமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 20 கோடி நிதியை தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்துள்ளது.
திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
- மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபூரில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மதுரவாடா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்த போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல டிரைவர் முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
லாரியில் இருந்த மது பாட்டில்கள் சாலையில் சிதறின. இதனைக் கண்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையில் சிதறி கிடந்த மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மதுரவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மது பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்களை விரட்டி அடித்தனர். பின்னர் லாரியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பாக நின்றனர். இதையடுத்து மற்றொரு லாரி கொண்டுவரப்பட்டு மது பாட்டில்கள் ஏற்றி அனுப்பப்பட்டன.
சாலையில் மது பாட்டில்களை அள்ளிசென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் குடித்து கும்மாளமிட்டனர்.
- மல்லா ரெட்டி மூதாட்டியிடம் வெற்றிச் சின்னமான இரட்டை விரலை காண்பிக்கும்படி மூதாட்டியிடம் கூறினார்.
- பெண்கள் கைகளை தட்டியபடி ஆரவாரம் செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானாவில் அமைச்சராக உள்ள மல்லா ரெட்டி மேட்சல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
60 வயதான மல்லா ரெட்டி தனது தொகுதி மக்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது நடனம் ஆடுவது பொது மக்களிடம் இயல்பாக பழகுவது உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர் மீது அந்த தொகுதி மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மல்லா ரெட்டி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஏராளமான மூதாட்டிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். தனது அருகில் இருந்த மூதாட்டியை பார்த்த மல்லா ரெட்டி தனது மடியில் அமருமாறு கூறினார்.
மூதாட்டி வெட்கப்பட்டு அவரது மடியில் உட்கார மறுத்தார். இதையடுத்து மல்லா ரெட்டி மூதாட்டியை தூக்கி கொண்டு நடனம் ஆடினார்.
அப்போது மல்லா ரெட்டி மூதாட்டியிடம் வெற்றிச் சின்னமான இரட்டை விரலை காண்பிக்கும்படி மூதாட்டியிடம் கூறினார்.
அருகில் இருந்த பெண்கள் கைகளை தட்டியபடி ஆரவாரம் செய்தனர். அமைச்சர் மூதாட்டியை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த தேர்தலின் போது ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் சலூன் கடைக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு கட்டிங், சேவிங் செய்தார்.
மேலும் திறந்தவெளியில் குழந்தை ஒன்று மலம் கழித்துக் கொண்டு இருந்தது. இதனை கண்ட வேட்பாளர் ஓடிப்போய் சென்று குழந்தையின் தாயிடம் தண்ணீர் வாங்கி குழந்தைக்கு கால் கழுவி விட்டு ஓட்டு கேட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை யாராலும் மறக்க முடியாது.






