என் மலர்
நீங்கள் தேடியது "Mother Padmavati of Thiruchanur"
- 6-வது நாளான நேற்று கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா.
- சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி.
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று கிருஷ்ணர் அலங்காரத்தில், சர்வபூபால வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. மாலையில் தங்க தேரோட்டமும் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலையில் தங்க தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடந்தது.
காலையில் கிருஷ்ணர் அலங்காரத்தில் சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 4.20 மணி முதல் 5.20 மணி வரை தாயார் தங்க ரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.






