என் மலர்
இந்தியா

திருப்பதியில் கணவன், மனைவி பங்கேற்கும் சிறப்பு ஹோம பூஜைக்கான டிக்கெட் வெளியீடு
- திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
- அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் மலை அடிவாரத்தில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது.
இங்கு வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு ஹோமத்தில் கணவன் மனைவி தம்பதியாக கலந்து கொண்டால் நன்மை பெறலாம் என்பது ஐதீகம்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழாக்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா ரூ.14,000 ஒப்பந்த மற்றும் பிற வகையான ஊழியர்களுக்கு ரூ. 6,850 பிரமோற்சவ சன்மானமாக வழங்கப்படும். இதற்காக ரூ. 20 கோடி நிதியை தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்துள்ளது.
திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.






