என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.

    குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாசினி மற்றும் அவரது மகள்களை கொல்ல சுரேஷ் முடிவு செய்தார். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு கோதாவரி ஆற்று பாலத்திற்கு சென்றார். அப்போது பாலத்தில் நின்று செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார்.

    இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார்.

    திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார்.

    சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியம் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிறுமி லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.

    ஆற்று வெள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இக்கட்டான நிலையில் சிறுமி 100-க்கு போன் செய்தார்.

    எங்கள் தொலைபேசி அழைப்பிற்கு அந்த சிறுமி பதிலளித்தார், நாங்கள் அவளுக்கு தைரியத்தை ஊட்டினோம். ஒரு கையால் குழாயில் ஒட்டிக்கொண்டு, மறுபுறம் மொபைல் போனை வைத்துக்கொண்டு தொங்கினார். லட்சுமி கீர்த்தனா, டார்ச் லைட் வெளிச்சத்தை அவளைக் கண்டதும் உதவிக்காக கத்தினார்.

    "காலை 3.53 மணிக்கு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு லட்சுமி கீர்த்தனாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ரவுலபாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஜினி குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 15 நிமிடம் டார்ச் லைட் மூலம் சிறுமியை கண்டுபிடித்தனர்.

    லட்சுமி கீர்த்தனா இருட்டில் குழாயில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சுமார் 36 நிமிடங்கள் வரை அவர் மன தைரியத்துடன் இருந்தார். தைரியமாக போலீசுக்கு ஒத்துழைத்தார்".

    அவர் உயிருக்கு போராடிய நேரத்திலும் 100-க்கு போன் செய்து போலீசாரை அழைத்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ரகசிய தகவல்களை அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தனர்.
    • சமூக ஊடகங்களில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எக்கு ஆலை பாதுகாப்பு படை பிரிவில் சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த தமிஷா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

    இளம் பெண்ணுடன் அவர் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவரது நடமாட்டத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரது செல்போனை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ரகசிய தகவல்களை அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில் குமாரின் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கபில்குமாருடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தான இளம் பெண் தமிசா (பி. ஐ.ஓ) பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில்குமார் மீது 9 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ஏதாவது முக்கிய தகவலை அளித்தாரா என்பதை கண்டறிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அவரது செல்போன் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபில்குமாரின் செல்போன்களை சரிபார்த்த போது அவரது சமூக ஊடக கணக்குகளில் உள்ள அனைத்து செய்திகளும் நீக்கப்பட்டு இருந்தன.

    அவர் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் 3 செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்.

    இதுவரை எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் கைது செய்யப்படவில்லை. தடயவியல் ஆய்வுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.

    கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்கள் எல்லை தாண்டி காதல் வலை வீசி வருகின்றனர். இதன் மூலம் சதி திட்டம் திட்ட வாய்ப்புள்ளது.

    சமூக ஊடகங்களில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோதாவரி ஆற்று பாலத்தில் செல்பி எடுக்கலாம் என சுரேஷ் தெரிவித்தார்.
    • சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியும் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவருக்கு லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயதில் ஜெர்சி என 2 மகள்கள் இருந்தனர்.

    சுகாசினியின் கணவர் இறந்து விட்டார். குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை அறிந்த சுகாசினி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சுரேஷுக்கும் சுகாசினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவு சுரேஷ், சுகாசினிக்கு போன் செய்தார். அப்போது ராஜ மகேந்திரவரத்தில் உள்ள ஜவுளி கடையில் உனக்கும் உனது பிள்ளைகளுக்கும் துணி எடுத்து தருவதாக கூறினார்.

    பின்னர் தனது காரை எடுத்துக்கொண்டு சுகாசினி வீட்டிற்கு வந்தார். சுகாசினியும் அவரது 2 மகள்களையும் காரில் ஏற்றிக் கொண்டு ராஜ மகேந்திரவரம் நோக்கி சென்றார்.

    அப்போது வழியில் உள்ள கோதாவரி ஆற்று பாலத்தில் செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார். இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார்.

    அப்போது திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார்.

    சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியும் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.

    லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சிறுமி ஒருவர் குழாயை பிடித்துக்கொண்டு தொங்குவதை அந்த வழியாக சென்ற ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.

    ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.

    லஷ்மி கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மோகன் ரெட்டி, ரமேஷ் ரெட்டி, விஷ்ணு சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ரவி வெங்கடம்ப்பள்ளி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மோகன் ரெட்டி (வயது 27).

    இவர் அதே பகுதியில் உள்ள அசோக் பில்லர் என்ற இடத்தில் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வந்தார். மோகன் ரெட்டி நேற்று முன்தினம் புதியதாக கார் ஒன்றை வாங்கினார்.

    அவரது நண்பர்களான ரமேஷ் ரெட்டி (28), விஷ்ணு சவுத்ரி (25), மதுசூதனன் ரெட்டி (25), சீனிவாச ரெட்டி (24) ஆகியோர் புதிய கார் வாங்கியதற்கு மது விருந்து வைக்கும்படி கேட்டனர்.

    நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 5 பேரும் காரை எடுத்துக்கொண்டு எர்ரகுண்ட பள்ளி மலைக்குச் சென்றனர்.

    அங்கு இரவு முழுவதும் மது குடித்தனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    காரை மோகன் ரெட்டி ஓட்டினார். மது போதையில் இருந்த மோகன் ரெட்டி காரை அதிகவேகத்தில் ஓட்டி வந்தார்.

    ரவி வெங்கடம்பள்ளி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.

    காரில் இருந்த மதுசூதன் ரெட்டி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த வீட்டின் குளியலறைக்குள் விழுந்தார்.

    மேலும் காரில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெடிகுண்டு வெடித்து விட்டதாக எண்ணி விபத்து நடந்த இடத்திற்கு ஓடி வந்தனர்.

    விபத்தை கண்ட அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    மோகன் ரெட்டி, ரமேஷ் ரெட்டி, விஷ்ணு சவுத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மதுசூதன் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தாடி பத்ரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மதுசூதன் ரெட்டி இறந்தார்.

    சீனிவாச ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது.

    அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.

    இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

    கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

    மேலும் உள்ளூர்காரர் என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கருதப்படுகிறது. வரும் 16-ந் தேதிக்குள், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து முதல்வர் ஜெகன் ஆலோசித்து வருகிறார்.

    இதில் தமிழகம், கர்நாடகம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரின் நியமிக்கப்பட உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 81,472 பேர் தரிசனம் செய்தனர். 34,820 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை.
    • வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா அரசின் பாசன நீர் மேலாண்மை திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    சந்திரபாபு நாயுடு பயணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    அதன்படி புங்கனூர் பகுதிக்கு வந்த சந்திரபாபு நாயுடுவை குறபலக்கோட்டா பகுதியில் தடுத்து நிறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் காத்திருந்தனர்.

    அதே நேரத்தில் அந்தப் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்தனர். திடீரென அங்கு மோதல் ஏற்பட்டது.

    2 கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் தாக்கிக் கொண்டனர். தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தினர். தடியடியில் 2 கட்சிகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    ஆவேசம் அடைந்த கட்சித் தொண்டர்கள் போலீசாரின் 2 வாகனங்களை கவிழ்த்து தீ வைத்தனர். தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 போலீசாருக்கு மண்டை உடைந்தது. 50 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தொண்டர்களை விரட்டியடித்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் போர்க்களமாக காட்சி அளித்தது.

    இந்நிலையில் அங்கு வந்த சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டிக்கு சவால் விடுக்கும் வகையில் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசினார்.

    அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி நேருக்கு நேர் வந்தால் மோதிப் பார்த்து கொள்ளலாம் என்று சந்திரபாபு நாயுடு சவால் விட்டார்.

    இதனால் பதற்றம் ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடுவை சுற்றி நின்று சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர். பின்னர் சந்திரபாபு நாயுடுவை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சித்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக சித்தூர் நகர பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அனைத்து பஸ்கள் வாகனங்கள் சித்தூர் மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

    பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை. வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

    ஆந்திர மாநில அரசு பஸ்கள் 56 மற்றும் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 12 அரசு பஸ்கள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதனால் வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் காட்பாடி சென்று அங்கிருந்து ரெயில் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதுபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். அவர்கள் திருப்பதி ரெயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர். ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலைக்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும் அதன் பிறகு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.
    • ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

    இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் .

    ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .

    தெலுங்கு மக்களுக்கு மூலதனம் இல்லாததால் வெட்கப்படுகிறேன். ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியையும் மாநிலத்தையும் , பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டார்.

    ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்துள்ளனர். நேற்று புங்கனூரில் கலவரம் ஏற்படுத்திவிட்டனர். சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர ரெட்டியின் கைக்கூலியாகிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

    டெல்லியில் நடந்த பா.ஜனதா கூட்டணிகள் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசி உள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து பாஜக கூட்டணியில் சேர முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆந்திர முதல்அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அளிக்கவில்லை. அவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

    2 கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரிப்பதால் ஆந்திர மாநிலத்தில் யார் வெற்றி பெற்றாலும் பா. ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • விண்கலத்தில் இருந்து உந்து கலத்தையும், லேண்டரையும் பிரிக்க வேண்டும்.
    • லேண்டர் உள்ளே இருக்கும் ரோவர் கருவி இறங்கி வந்து, நிலவில் கால் பதிக்கும். இதுதான் 10-வது கட்டம்.

    சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, நிலவை காட்டி உணவு ஊட்டுவது தாய்மார்களின் காலாகாலத்து பழக்கம். பிஞ்சு மனதை அப்படி என்னதான் வசியம் செய்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை, நிலவை பார்த்ததும் மதிமயங்கும் குழந்தைகளும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுகின்றனர். பூமியின் துணைக்கோள் நிலவு என்பதாலோ என்னவோ, ஏதோ ஒரு ஈர்ப்பு இரண்டுக்கும் இடையே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் வலம் வந்து கொண்டிருந்தாலும், நிலவு என்று நாம் அழைக்கும் சந்திரன் மீதான ஆராய்ச்சிகள் 1950-ம் ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்டுவிட்டன. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரஷியா இடையேதான் கடும் போட்டி நிலவியது. இரு நாடுகளும், சந்திரனின் வடதுருவத்தை ஆராய விண்கலங்களை அனுப்பியது. இதில், முதலில் வெற்றி பெற்றது ரஷியாதான் என்றாலும், 1969-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது.

    நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஆகிய விண்கலங்களை நிலவு ஆராய்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' அனுப்பியது.

    இதுவரை எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில்தான் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றன. தென்துருவத்தை ஆராயும் பணியை யாரும் தொடங்காத நேரத்தில், இந்தியா சந்திரயான்-2-ஐ நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. ஆனால், நிலவில் குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்கியபோது, லேண்டர் கருவி வேகமாக மோதி உடைந்தது. அதே நேரத்தில், விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, தற்போதும் அது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் 4 ஆண்டு கால இடைவிடாத முயற்சியின் பயனாய், மீண்டு எழுந்து மீண்டும் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அந்த விண்கலம் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு சீறிக்கொண்டு புறப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் பயண திட்டம் 10 கட்டங்களாக வகுக்கப்பட்டிருந்தது.

    முதற்கட்டமாக, பூமியின் தரைப்பகுதியில் இருந்து 170 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், உந்தப்பட்டு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. பூமிக்கு அருகே 170 கி.மீ. தூரத்திலும், தொலைவில் 36 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்திலும் நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இவ்வாறு விண்கலத்தை சுற்ற வைக்கப்பட்டது 2-வது கட்டம்.

    பூமியை சந்திரயான்-3 விண்கலம் சுற்றிக்கொண்டிருந்த நிலையில், அதை வெகுதூரத்தில் உள்ள நிலவு நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதுதான் 3-வது கட்டம். கடந்த 1-ந்தேதி தொடங்கிய 3-வது கட்ட பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

    பூமியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும், சரிசமமாக இருக்கும் சம ஈர்ப்பு விசைப்புள்ளி, நிலவில் இருந்து சுமார் 62 ஆயிரத்து 630 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அந்த புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்துவதுதான் 4-வது கட்டம் ஆகும். இந்த பணி எளிதானது அல்ல என்றாலும், துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    காரணம் என்னவென்றால், சம ஈர்ப்பு விசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, விண்கலம் பாதை மாறி செல்லும் வாய்ப்பு இருந்தது. அதனால், அந்த பிசிறுகளை சரிசெய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பணிகள் 5-வது கட்டத்தில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சம ஈர்ப்பு விசை புள்ளிக்கு சந்திரயான்-3 விண்கலம் கொண்டுவரப்பட்டது.

    அங்கிருந்து உந்து விசை கொடுத்து விண்கலத்தை தள்ளிவிட்டால், புவி ஈர்ப்பு விசை பிடியில் இருந்து, நிலவு ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 சென்றுவிடும். இதுதான் 6-வது கட்டம். இந்த பணிகள்தான் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு நடக்க இருக்கிறது.

    21 நாட்களுக்கு பிறகு, 6-வது கட்டத்தில் இருந்துதான் சந்திரயான்-3 விண்கலத்துக்கு அக்னி பரீட்சை ஆரம்பிக்க இருக்கிறது. இனி கடக்க இருக்கும் ஒவ்வொரு கட்டமும் சவாலானது. அவை சரியாக நடக்க வேண்டும். இதை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நிலவின் ஈர்ப்பு விசை வட்டத்துக்குள் சந்திரயான்-3 விண்கலம் வந்தவுடன், நிலவை நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கும். இதுதான் 7-வது கட்டம். அடுத்து, விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப்பாதையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து, நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு விண்கலத்தை கொண்டுவந்து நிறுத்த வேண்டும். இது 8-வது கட்டம்.

    சந்திரயான்-3 விண்கலத்தின் உள்ளே உந்துகலம் (புரோபல்சன் மோடுலே) தரையிறங்கி கலம் (லேண்டர்) என்ற 2 முக்கிய பகுதிகள் உள்ளன. இதில், லேண்டர் உள்ளே ரோவர் கருவி இருக்கிறது. விண்கலத்தை அப்படியே நிலவில் தரையிறக்க முடியாது. முதலில், விண்கலத்தில் இருந்து உந்து கலத்தையும், லேண்டரையும் பிரிக்க வேண்டும்.

    அவ்வாறு பிரித்து, லேண்டரை அதிகபட்சம் 100 கி.மீ. முதல் குறைந்தபட்சம் 30 கி.மீ. வரை நீள்வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அதன்பிறகு கடும் சவாலான 9-வது கட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் இம்மாதம் 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நடக்க இருக்கிறது. அதாவது, லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. கடந்த முறை சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்தது இந்த இடத்தில்தான். எனவே, சந்திரயான்-3-ஐ பத்திரமாக தரையிறக்க லேண்டரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை பாதுகாப்பாக லேண்டரை தரையிறக்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

    லேண்டர் தரையிறங்கியதும், அதில் உள்ள 4 சுவர்களில் ஒன்று, சாய்வுப் பலகைப் போல திறந்து கீழ்நோக்கி இறங்கும். அந்த வழியாக, லேண்டர் உள்ளே இருக்கும் ரோவர் கருவி இறங்கி வந்து, நிலவில் கால் பதிக்கும். இதுதான் 10-வது கட்டம். அதன்பின்னர், ரோவர் தனது ஆய்வு பணியை தொடங்கும்.

    இத்தனை பணிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும். தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும் பெறும்.

    அடுத்து, 2025-ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக, ரோபோக்களையும் அனுப்பி சோதனை செய்ய திட்டம் வகுத்துள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் வெற்றி பெற்றால், இந்தியாவும் சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும். இப்போது, பூமியில் இருந்து நிலவைப் பார்ப்பதுபோல், அப்போது நிலவில் இருந்து பூமியை பார்க்க முடியும். பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் புதிய வழி பிறக்கும்.

    • முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு புங்கனூர் பகுதிக்கு சென்றார்.
    • அவரது கான்வாயை தடுத்து நிறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முயற்சி செய்தனர்.

    அமராவதி:

    ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளைப் பார்வையிட தெலுங்கு தேச கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதிக்குச் சென்றார். அவரை தடுத்து நிறுத்துவோம் என ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், நேற்று திட்டமிட்டபடி சந்திரபாபு நாயுடு புங்கனூர் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரது கான்வாயை தடுத்து நிறுத்த ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்தனர்.


    அப்போது அங்கு தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்தனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு, சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    கட்சி தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தடியடியில் இரு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனால் ஆவேசமடைந்த கட்சித் தொண்டர்கள் போலீசாரின் இரு வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்களை விரட்டியடித்தனர். கட்சித் தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    • மரத்தை சிறிது அளவு வெட்டிய போது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது .
    • மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர் சுத்தமாகவும் குடிப்பதற்கு சுவையாகவும் இருப்பதாக கூறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் போடு ராஜு துரு கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று பொதுமக்கள் விறகு சேகரிக்கச் சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு மரத்தை வெட்டினர். மரத்தை சிறிது அளவு வெட்டிய போது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது .தொடர்ந்து தண்ணீர் நிற்காமல் அதிக அளவு வெளியேறியது.

    பொதுமக்கள் அந்த தண்ணீரை பிடித்து குடித்தனர். தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பதாக தெரிவித்தனர். சிலர் குடங்கள் மற்றும் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து சென்றனர் .

    அந்த மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர் சுத்தமாகவும் குடிப்பதற்கு சுவையாகவும் இருப்பதாக கூறினர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    • ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரசாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது.
    • மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

    தெலுங்கானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மும்முனை போட்டி நிலவுகிறது.

    ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே யார் ஆட்சியை பிடிப்பது எனும் போட்டி கடுமையாக உள்ளது.

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி தற்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்கி, அக்கூட்டணி மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என தேசிய அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    தெலுங்கானாவில் இவர் மீதும், இவரது ஆட்சி மீதும் சற்று அதிருப்தி நிலவி வருகிறது. என்றாலும், இவருக்கு எம்.ஐ.எம். கட்சி மறைமுகமாக ஆதரவு தருவதாலும், தெலுங்கானாவில் முஸ்லிம்களின் வாக்கு அதிகம் இருப்பதாலும், சந்திரசேகர ராவே 3-வது முறையாக முதல்வராக ஆட்சி அமைப்பார் என கூறப்படுகிறது.

    ஆனால், தெலுங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து, இதுவரை நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், 46 இடங்களில் வெற்றி பெற்று ஐதராபாத்தில் 2-வது செல்வாக்கு மிக்க கட்சியாக பா.ஜ.க. தன்னை வெளிப்படுத்தி கொண்டது.

    காங்கிரஸ் தான் தனது எதிரி என்பதை இதன் மூலம் சந்திரசேகர ராவ் மாற்றி கொண்டு, பா.ஜ.க.வை குறிவைக்க தொடங்கினார்.

    ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரசாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது. இதனை தொடர்ந்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பா.ஜ.க. வை வீழ்ச்சி அடைய செய்து, காங்கிரஸ் வெற்றி பெற்றதால், தெலுங்கானா காங்கிரஸாருக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது.

    இம்முறை கண்டிப்பாக தெலுங்கானாவையும் நாம் தான் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் கட்சியினர் மார்தட்டி கூறும் அளவிற்கு சென்று விட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. , தெலுங்கானா தலைமையை மாற்றியது. மாநில தலைவராக இருந்த பண்டி சஞ்சய்க்கு பதில், மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டியை தெலுங்கானா மாநில தலைவராக அறிவித்தது.

    இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆகர்ஷ் தெலுங்கானா எனும் திட்டத்தின் கீழ் முக்கிய பிரபலங்களை பா.ஜ.க.வில் இழுக்கும் படலம் தொடங்கி விட்டது. இந்நிலையில்தான் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இதனை தொடர்ந்து, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில், மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டி அம்பர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இது தவிர வேணு கோபால் ரெட்டி, முரளிதர ராவ், இந்திர சேனா ரெட்டி, விவேக், இந்திர லட்சுமி நாராயணா, ராமச்சந்திர ராவ், பிரபாகர், ஆச்சாரி, மகேஸ்வர ரெட்டி, ராத்தூர் ரமேஷ், பாபு மோகன், ஸ்ரீகாந்த், விஸ்வேஸ்வர ராவ், மகேஸ்வர் ரெட்டி, நரசைய்யா கவுட், பிரதீப் ராய், ராகேஷ் ரெட்டி, ஹரிஷ் பாபு, சத்திய நாராயணா, கிஷன் ரெட்டி, லட்சுமண், பண்டி சஞ்சய், ஷோயம் பாபுராவ், ஈட்ல ராஜேந்தர், ரகுவந்தன் ராவ், டி.கே. அருணா, ஜிதேந்திரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    வரும் தேர்தலில் "டார்கெட் 75" என்ற இலக்கு நிர்ணயித்து பா.ஜ.க.வினர் 75 இடங்களில் வெற்றி பெற வேண்டுமென பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளார். 2-ம் கட்டமாக 45 பேர் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.
    • அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

    திருப்பதி:

    தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதேபோல் தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் ஒரே மாதத்தில் லட்சாதிபதிகளாகவும்,கோடீஸ்வரர்களாகவும் மாறி உள்ளனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து சந்தைகளில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.

    தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.

    சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது.

    அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

    நேற்று மர்ம நபர்கள் இரவோடு இரவாக தோட்டத்தில் புகுந்து 450 கிலோ தக்காளி திருடி சென்றுவிட்டனர்.

    இதேபோல் மதனப்பள்ளி மார்க்கெட் பகுதியில் கடையில் கதவை உடைத்து திருட்டு கும்பல் புகுந்தனர்.

    அங்கிருந்த 50 கிலோ தக்காளியை திருடி சென்றனர்.

    சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த நக்க பண்டாவை சேர்ந்தவர் லோகராஜ். இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் இருந்த தக்காளியை அறுவடை செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்தார்.

    பின்னர் தக்காளி விற்பனையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கஞ்சா போதையில் இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் லோகராஜை வழிமறித்தனர்.

    பீர் பாட்டிலால் லோகராஜ் மீது சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4.50 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து லோகராஜ் புங்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சித்தூர் மற்றும் அன்னமய மாவட்டத்தில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ×