என் மலர்
பெண்கள் உலகம்
- சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும்.
- நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது.
கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். உணவு சமைக்கும்போதும் லேசாக வெளிப்படும் நறுமணம் கூட அதிகமாக உணர முடியும்.
சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.
தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறி தான். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும்.
வழக்கத்தை விட அதிகமாக சோர்வு இருந்தால் அதற்கு காரணம் கருத்தரித்தலாக இருக்கலாம்.
நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர மற்ற உணவுகள் சாப்பிட தோன்றும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.
வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர முடியும். இது அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர முடியும்.
இந்த அறிகுறிகள் மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.
இந்த அறிகுறிகளை உணரும்போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
- கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும்.
- கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல.
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
கர்ப்பமாக இருக்கும்போது உடலை ஆக்டிவாக வைத்திருப்பதும் முக்கியம். உங்கள் வயிற்றில் இருக்கும் சிறிய குழந்தையை நீங்கள் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும். இதனால், கர்ப்பிணிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வீக்கம் மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும். சமைக்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்து, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் வீட்டை துடைப்பது, துணி துவைப்பது, தரையை சுத்தம் செய்வது போன்ற வளைந்து கொடுக்கும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல. குழந்தையின் பாதுகாப்பிற்காக, இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம்.
பெரும்பாலான வீட்டு வேலைகள் கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் செய்யப்படலாம். இருப்பினும், சில வீட்டு வேலைகளை ஆரம்ப கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி பிறக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மீண்டும் மீண்டும் இதே போன்ற பணிகளைச் செய்யும்போது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்.
- வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.
ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும். நீண்ட மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆளிவிதைகளில் லிக்னான்ஸ் எனப்படும் தாவர கலவை உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டிஆக்சிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாத்து தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.
மேலும் முடிவளர்ச்சிக்கு சீரான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
- பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன.
- உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன.
குதிகால் வெடிப்பு, பித்த வெடிப்பு என்றழைக்கப்படும் பாத வெடிப்பு வருவதற்கான காரணங்கள், மற்றும் பித்த வெடிப்பு நீங்க எளிய வழிகள் பற்றி பார்க்கலாம்.
பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன. முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
தற்போது, 'பாத வெடிப்பு' என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினையாகும். இது "பித்த வெடிப்பு" என்றும் "கால் வெடிப்பு" என்றும் அழைக்கப்படுகிறது. இது அழகை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

குதிகால் வெடிப்பு காரணம் :
உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருக்கும்போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது, கிருமித் தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

மருதாணி
பாத வெடிப்புகளை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு, கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிய துண்டு சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.
இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு, அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால், பாத வெடிப்பு நீங்கும்.

எலுமிச்சை சாறு
குதிகால் வெடிப்புக்கு இளம் சூடான நீரில், 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் பாதங்களில் படிந்திருக்கும். இறந்த செல்களை நீக்கிவிட்டு, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.

மஞ்சள்
பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து, வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

மசாஜ்
குதிகால் வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் பாதங்களை மசாஜ் செய்வது ஆகும். பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம், வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.
- முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.
- பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சினை. என்றாலும் இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடிவளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகை கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
முகத்தில் ஏற்படும் முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முகமுடி வளர்ச்சியை கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களை காணலாம்.

முகத்தில் உள்ள முடியை நீக்கவும், முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் உதவியாக இருக்கும். முதலில் பப்பாளியை மசித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி வர சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.

அதேபோன்று கடலை மாவு மற்றும் மஞ்சள் பேக் கூட முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கடலைமாவு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு, சந்தனம் சேர்த்து ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி வரலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவில் சோளமாவு கலந்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி நன்றாக காய்ந்த பிறகு ஈரத்துணி கொண்டு துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும்.
முகத்தை வறட்சி மற்றும் முகத்தில் முடி பிரச்சனையில் இருந்து பாதுகாக்க மைசூர் பருப்பை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பால், தேங்காய் எண்ணெய் கலந்து பேக் மாதிரி முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி வலுவலுப்புத்தன்மை அளிக்கிறது.
- வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
- டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
உடல் எடையை குறைத்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைந்து முகம், கை, கழுத்து, கைவிரல் போன்ற பகுதிகளில் சுருக்கங்கள் தோன்றும். இதனை போக்குவதற்கு வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
இந்த டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். முட்டையின் வெள்ளைக்கரு, முல்தானிமட்டி, தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

டைட்டனிங் மாஸ்குகளும், ரைட்டனின் ஃபேஷியல்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகை பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை.
முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு மட்டுமில்லாமல் தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலும் வறண்ட சருமம் சுருக்கம் இல்லாமல் பொலிவாக இருக்கும்.

புரோட்டின் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. பெண்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும்.
- கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது கிடைக்கின்றன. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது.
கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.
தேவையானவை:
வெள்ளை அவல் – ½ கப்
பொட்டுக்கடலை – ¼ கப்
தேங்காய்த் துருவல் – ½ கப்
வேர்க்கடலை – ¼ கப்
வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய வெல்லம் – 1½ கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் முதலியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
எல்லா பொருட்களும் ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி அதனை பொடித்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும்.
பின்னர் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை வறுத்த மாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகபிடிக்கவும். மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான புரோட்டின் சத்து நிறைந்த லட்டு தயார்.

- சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும்.
- நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.
உடலுக்கு நன்மை பயக்கும் சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இதை யாரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இந்த சாமையை வைத்து இனிப்பான பொங்கல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்:
சாமை - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் சாமையை சுத்தமாக கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். ஏனெனில் ஊறிய சாமையை வேக வைக்க எளிமையாக இருக்கும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்தே வெந்துவிட்டதா என்பதை அறிய முடியும். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வாணலியில் நெய் விட்டு உருகும் வரை காத்திருந்து நெய்யில் வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் உருகி சாமையோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.
அதன் பிறகு அதில் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். சுவையான சாமை இனிப்பு பொங்கல் தயார்.
மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க உகந்த பலகாரமாக இந்த சாமை பொங்கல் இருக்கும்.

- காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
- வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.
செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த தேங்காய்ப்பால் குணுக்கு. இதனை பால் பனியாரம் என்று கூறுவார்கள். இந்த குணுக்கு வகைகளில் காரம், இனிப்பு என்று விதவிதமாக செய்வார்கள். இதனை காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இதில் உள்ள தேங்காய்ப்பால் உடல் உஷ்ணத்தை குறைத்து வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது. மேலும் உளுந்து உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது. எனவே அனைத்து வயதினரும் இதனை உண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்- 1
உளுந்து- 100
நாட்டு சர்க்கரை- 100
அரிசி- 2 ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு
ஏலக்காய்- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் அதிகம் சேர்க்காமல்) அரைக்க வேண்டும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகைஉப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.
அதற்குள் தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய் தூள், ருசிகேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். தித்திப்பான தேங்காய் பால் குணுக்கு தயார்.

- இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் கருவி.
- அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.
இந்த சோதனை பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய மருத்துவர்களால் செய்யப்படும் மருத்துவ முறையாகும். இது இடுப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வகையாகும். இதில் கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் யோனி பகுதிகளில் பரிசோதனை செய்ய இந்த கருவி பயன்படுகிறது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சோதனையானது உங்கள் உள் உறுப்புகளின் படங்களை உருவாக்க உயர்ந்த அதிர்வெண் அலைகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.
அடிவயிறு அல்லது இடுப்பு அல்ட்ராசவுண்ட் டிரான்ஸ்யூசர் பயன்படுத்தப்படும். இப்பரிசோதனையில் மருத்துவர் அல்லது பரிசோதனை செய்யும் நிபுணர் யோனி பகுதி வழியாக 2 அல்லது 3 அங்குல அல்ட்ராசவுண்ட் ஆய்வை செருகுவார். இது கர்ப்பத்தை கண்காணிக்கவும், அறுவை சிகிச்சைக்கு திட்டமிடவும் உதவிபுரியும்.
கர்ப்ப காலத்தில் கருவின் இதயத்துடிப்பை கண்காணிக்கவும், கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் காரணங்கள் உள்ளதா அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கான அறிகுறி உணரும் போது கருப்பை வாயை பார்க்க இவை பரிந்துரைக்கப்படுகிறது.
நஞ்சுக்கொடி அசாதாரணங்களை பரிந்துரைக்கவும். அசாதாரண ரத்தபோக்குக்கான மூலத்தை கண்டறியவும், சாத்தியமான கருச்சிதைவை கண்டறியவும், ஆரம்ப கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் யோனியின் உட்புறம் செருகுவதால் இது அசெளகரியத்தை கொடுக்கலாம். இந்த கருவியானது யோனியின் வடிவத்தை வளைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்முறை முடிந்தவரை வலியற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வைட்டமின் பி மற்றும் போலேட் சத்துக்கள் நிறையவே இருக்குது.
- ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய பாதிப்புகள் ஏற்படாமல்l தடுக்க உதவுகிறது.
கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தில் அதிகமான புரதம், தாமிரம், இரும்புச் சத்துக்கள் இருக்கிறது. மெக்னீசியம், கால்சியம் சத்துக்களும் இதில் இருக்கறதால் உடலுக்கு வேண்டிய உயிரோட்டம் கிடைக்குது. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் இதில் நிறையவே இருக்குது.
இதில் இருக்கிற ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கறதோட, சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படாம தடுக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
சிவப்பு சோளம்-2 கப்
அரிசி-அரை கப்
வெந்தயம்- ஒரு ஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
உளுந்து- கால்கப்
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- தாளிக்க
தேங்காய்- துருவல் ஒரு கப்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் அரிசியையும், சிவப்பு சோளத்தையும் கழுவி ஊற வைக்க வேண்டும். அதேபோல உளுந்தையும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு இவைமூன்றயும் வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு சேர்த்து 5 மணிநேரம் புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி இந்த கலவையினை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இபோது குழிப்பனியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக ஊற்றி எடுத்தால் சிவப்ப சோள குழிப்பனியாரம் தயார். கார சட்னியுடன் தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும். இதே மாவினை இட்லி, தோசையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
- உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம்.
- வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.
பொதுவாக குளிர்காலத்தில் தான் உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம். ஆனால் கோடை காலங்களிலும் லிப் பாம் அவசியம் என்கிறார்களே என்றால், கோடை காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க இந்த லிப் பாம் பெரிதும் உதவுகிறது.
குளிர் காலத்தில் உதடுகள் வறண்டு காணப்படும் என்பதால் பலரும் லிப் பாம் போடுவதற்கு மறப்பதில்லை. இதே பிரச்சினை கோடை காலத்தில் இருக்கும் என்பதாலும் லிப் பயன்படுத்தலாம்.
ஆனால் கோடை காலத்தில் பயன்படுத்தும் லிப் பாம் போல அதிக அடர்த்தி இல்லாமல் லேசாக இருக்கக்கூடிய மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய லிப் பாம்களை பயன்படுத்துவது நல்லது.

கோரமைட், ஹையாலரோனிக் ஆசிட் போன்றவை சேர்ந்த லிப் பாம்கள் நன்று வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள மிகவும் முக்கியம். உடல் திடீரென தண்ணீர் வறட்சியால் வறண்டு போகும் போது அது நேரடியாக எதிரொலிப்பது உதட்டில் தான். எனவே உதடுகள் வறட்சி அடையாமலும், கருத்துப்போகாமலும், வெயிலினால் பாதிப்படையாமலும் பாதுகாப்பதற்கு இந்த லிப் பாம்கள் உதவுகின்றன.
சூரிய வெப்பக்காற்றினால் உதடுகள் பாதிக்கப்பட்டு வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.
வயோதிகத்தை முதலில் சொல்வது உதடுகளும், சருமமும் தான். எனவே அவற்றை நல்ல முறையில் பராமரித்தால் தான் என்று இளமையாக இருக்க முடியும்.
மேலும் உதடுகளின் பராமரிப்புல் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு முக்கியத்துவம் பெறுவதால் கோடைகாலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.






