என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.
    • மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கர்ப்பத்தை திட்டமிடும் அனைவருக்கு கருத்தரிக்க சிறந்த நாட்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுவதில் குழப்பமாக இருக்கும். இப்படி குழப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் அண்டவிடுப்பின் நாட்களை சரியாய் தெரிந்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.

    ஓவரியில் இருந்து கரு முட்டையை வெளியிடும் போது அண்டவிடுப்பு நிகழ்கிறது, உங்கள் மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பு நிகழ்கிறது.

    அதாவது 28 நாள் சுழற்சியின் 11 நாள் முதல் 14-வது நாளில் அண்டவிடுப்பின் நடக்கிறது, இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருப்பை நீர்கட்டிகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.

    நீங்கள் சரியான 28-நாள் சுழற்சியைக் கொண்டிருந்தால், 14 -ம் நாளில் அண்டவிடுப்பு நிகழும்.

    எனவே, நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பினால், உங்கள் மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த நேரம்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அண்டவிடுப்பு வித்தியாசமாக இருக்கும், மேலும் இது பல காரணங்களால் கருவுறுதலை பாதிக்கலாம்.

    ஒருமுறை கருமுட்டை வெளியேற்றினால், விந்தணுவுடன் இணைந்து கருவுற கரு முட்டை 24 மணி நேரம் வரை மட்டுமே உயிர்வாழும்.

    எனவே ஒரு மாதத்தில் அண்டவிடுப்பு நடக்கும் நாள் தான் கருவுற சிறந்த நாட்கள், மற்ற நாட்கள் கர்ப்பம் தரிக்க சிறந்த நாட்கள் இல்லை.

    மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அப்போது தான் உங்கள் கரு முட்டை வெளியில் வரும், பிறகு அண்டவிடுப்பின் நிகழும் அந்த சமயத்தில் தாம்பத்தியம் கொள்ளுவதன் மூலம் கருத்தரிக்க முடியும்.

    இதைச் செய்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

    • நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
    • காய்கறி பொரியலுக்கும் எப்படி பயன்படுத்தலாம்.

    நூடுல்ஸ் செய்வதற்கான மாசாலா வீட்டிலேயே தயாரிக்கலாம். அதன் செய்முறை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

    நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேவேளையில் அதன் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை காய்கறி பொரியலுக்கும் பயன்படுத்தலாம். எப்படி செய்வது என்று காணலாம்.

    வீட்டிலில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்து இதை தயாரித்து விடலாம். பட்டை, சீரகம், கொத்தமல்லி விதை, மக்சள், பூண்டு, எண்ணெய், மிளகு ஆகிய இருந்தால் மட்டும் போதுமானது.

    கடைகளில் கிடைக்கும் மசாலா பொடிகளை வைத்தும் இதை தயாரிக்கலாம். இல்லையென்றால் வீட்டிலேயே பொடி தயாரித்து அதன் பிறகு நூடுல்ஸ் மசாலா தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்களில் 100கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் இல்லாமல் சீரகம், பட்டை, கொத்தமல்லி விதை, மிளகு ஆகியவற்றை நன்றாக வதக்க வேண்டும். கரம் மசாலா தயாரித்து வைத்துகொள்ள வேண்டும், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக ஈரப்பத்தம் இல்லாமல் வதக்கி அதையும் பொடியாக தயாரிக்க வேண்டும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, சீரகப் பொடி, மிளகுப் பொடி, சீரத்தூள், பட்டை தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், மிள்கு தூள், பூண்டு,வெங்காய தூள் எல்லாவற்றையும் சம அளவில் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்ளோதான். நூடுல்ஸ் மசாலா தயார். இதை உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், கோவக்காய் உள்ளிட்ட பொரியலுக்கு பயன்படுத்தலாம்.

    • இனி முகத்தை பிரகாசமாக வைக்க பார்லர் செல்ல வேண்டாம்.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

    இனி முகத்தை பிரகாசமாக வைக்க பார்லர் செல்ல வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

    * பச்சை பயறு மாவு, தயிர், மஞ்சள் சேர்த்து முகத்தில் கழுத்து பகுதியில் தடவி காயவைத்து கழுவினால் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறம் குறையும்.

    * 2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின்னர் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறையும்.

    * கற்றாழை சாறை குளிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன் தடவி, வந்தால் முகப்பரு குறையும். சிலருக்கு இது ஒவ்வாமை இருந்தால் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளலாம்.

    * பப்பாளி சாறுடன், முல்தானி மெட்டியை மிக்ஸ் செய்து முகத்தில் தடவிவிட்டு காய்ந்த பின்னர் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

    * வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழத்தின் தோல்களை அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்.

    * பாலை காய்ச்சி ஆற வைத்த பின்னர் காட்டன் பஞ்சை வைத்து பாலில் தோய்த்து முகத்தை துடைத்து வந்தால், முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு சுத்தமாகும்.

    • குழந்தைகளுக்கு பிடித்தமான டிஷ் வரிசையில் பட்டர் சிக்கன் கண்டிப்பா இருக்கும்.
    • வெண்ணையில் வைட்டமின் ஏ சத்து மற்றும் சிக்கனில் புரோடீன் உள்ளது.

    குழந்தைகளுக்கு பிடித்தமான டிஷ் வரிசையில் பட்டர் சிக்கன் கண்டிப்பா இருக்கும். இன்னைக்கு பட்டர் சிக்கன் சமைக்கப் போறேன்ன்னு மட்டும் சொல்லி பாருங்க. உங்க குழந்தைங்க ரொம்ப ஜாலி ஆயிடுவாங்க. வெண்ணையில் வைட்டமின் ஏ சத்து மற்றும் சிக்கனில் புரோடீன் உள்ளது. இது குழந்தைகளோட ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. ஹோட்டல்களில் பிரபலமா உள்ள இந்த பட்டர் சிக்கன் நம்ம வீட்டில் எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் -500 கிராம்

    வெங்காயம்- 2

    தக்காளி- 2

    இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    மல்லி தூள்- ஒரு ஸ்பூன்

    தயிர்- ஒரு ஸ்பூன்

    சீரக தூள்- ஒரு ஸ்பூன்

    கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    கஸூரி மெத்தி

    கொத்தமல்லி இலை

    ஃபிரெஷ் கிரீம்- தேவைப்பட்டால்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கனை நன்றான சுத்தம்செய்து எடுத்துகொள்ள வேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கெட்டி தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மசாலாவில் ஊறிய சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மசாலா விழுது தயாரிக்க ஒரு கடாயில் ஒரு துண்டு வெண்ணெய், சிறிதளவு எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, காஷ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்

    வதக்கியவற்றில் பத்து முந்திரி பருப்பு சேர்த்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து பட்டர் சிக்கன் செய்ய ஒரு கடாயில் வெண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து கலக்கிய பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    இந்த கலவையில் வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு சமைக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு பிறகு கஸூரி மெத்தி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மற்றும் எளிமையான பட்டர் சிக்கன் தயார்.

    • ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    • முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.

    இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாகும். எனினும், இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகைக் கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

    முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முக முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இந்த வீட்டு வைத்தியங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் முக முடிகளை அகற்றுவதன் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கலாம்.

    முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிப்பதற்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதும் ஒரு காரணமாகும். ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கன்னம், காதுகள், நெற்றி பகுதிக்கு அருகில் முடி வளரத் தொடங்குகிறது.

    முகத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ள ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்றும் முறைகளைக் காணலாம்.

    பப்பாளி மற்றும் மஞ்சள்

    முகத்தில் உள்ள முடிகளை நீக்கவும், முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் இந்த பேக் உதவுகிறது. பப்பாளி மற்றும் மஞ்சள் பேக் தயாரிக்க முதலில் பப்பாளியை மசித்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் முகத்தை சுத்தமாக்கலாம். இதனுடன் முகத்தில் உள்ள முடிகளை அகற்றலாம்.

    கடலை மாவு மற்றும் மஞ்சள்

    கடலை மாவு மஞ்சள் பேக் முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒரு ஸ்பூன் அளவிலான கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்க வேண்டும். இதில் அரை எலுமிச்சைச் சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு, சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

    எலுமிச்சை மற்றும் தேன்

    முகப்பொலிவுக்கு ஒரு ஸ்பூன் அளவிலான தேனில் எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தலாம். இப்போது முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவலாம். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.

    முட்டை மற்றும் சோளமாவு

    சோளமாவு மற்றும் முட்டையைக் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்கலாம். முட்டையின் வெள்ளைக் கருவை தலா ஒரு டீஸ்பூன் அளவிலான சோளமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.

    இந்த கலவையை பிரஷ் கொண்டு முகம் முழுவதும் மற்றும் முடிகள் உள்ள பகுதியில் நன்கு தடவிக் கொள்ளலாம். இதை 10 முதல் 15 நிமிடம் வரை உலர வைக்க வேண்டும். அதன் பின், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கலாம்.

    சர்க்கரை மற்றும் எலுமிச்சை

    கிண்ணம் ஒன்றில் 1 தேக்கரண்டி அளவிலான சர்க்கரை மற்றும் அரை எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். இதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு கலந்து பேஸ்ட்டாக மாற்றி முகத்தில் தடவி பின்னர் கன்னங்கள் மற்றும் நெற்றியில் மெதுவாக தேய்க்க வேண்டும். இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள முடியை நீக்க உதவுகிறது.

    பால் மற்றும் மசூர் பருப்பு

    முகத்தை வறட்சி மற்றும் முடி பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க, 2 ஸ்பூன் அளவிலான மசூர் பருப்பை பேஸ்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போன்றவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த பேக் பயன்படுத்துவது முகத்தில் உள்ள முடிகளை நீக்கி, முகத்தில் உள்ள கறைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

    இந்த ஃபேஸ் பேக்குகளின் உதவியுடன் முகத்தில் தோன்றும் முடியை எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நீக்கலாம். எனினும், உணர்திறன் மிகுந்த சருமம் என்பதால், புதிய பொருட்களைத் தேர்வு செய்யும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம்.
    • உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    முடியை வலுப்படுத்த நாம் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதில் முடி பராமரிப்பு நடைமுறை மிகவும் முக்கியமானது. கூந்தலை ஆரோக்கியமாக வைக்க தலைமுடிக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

    அதேபோல, ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவுவது அதிக நன்மை பயக்கும் என நம்பிக்கை உள்ளது. இதனால் கூந்தல் வலுவடைந்து, பளபளப்பை அதிகரிப்பதுடன், கூந்தலை மிருதுவாகவும் மாற்றுகிறது. இன்னும் சிலர், கூந்தல் பராமரிப்புக்காக ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து முடிக்கு பயன்படுத்துவார்கள்.

    ஹேர் ஆயிலை ஷாம்பூவுடன் கலந்து தடவுவதால் உண்மையில் ஏதாவது பலன் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழும்.

    ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலப்பது புதிதல்ல. இந்த செயல்முறை நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மை என்னவென்றால், பலர் இது முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். இதை உறுதிப்படுத்த நிபுணர்களிடம் பேசினோம். ஷாம்புவில் கேரியர் ஆயில் அல்லது ஏதேனும் ஹேர் ஆயில் கலந்து தடவலாம் என்கிறார்கள். இது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

    தலை முடி உதிர்வதை நிறுத்துவதோடு, முடியை வலுவாக்கும். ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து தடவினால், முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கலாம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    இருப்பினும், நீங்கள் எந்த வகையான ஷாம்பூவைப் பயன்படுத்துகிறீர்கள், எந்த அளவில் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்.

    இதுதவிர, நிரப்பப்பட்ட ஷாம்பு பாட்டிலில் ஹேர் ஆயிலைக் கலந்து குளிப்பதற்கு சிறிது நேரம் முன் தடவுவது நல்லது. இது உங்களுக்கு சேரவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்க வேண்டாம்.

    நன்மைகள்:

    பல முறை, சரியான அளவு எண்ணெய் மற்றும் ஷாம்பூவை கலந்து தடவுவது உச்சந்தலையில் இருந்து அரிப்புகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, ரோஸ்மேரி எண்ணெயை ஷாம்பூவில் தடவினால், இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இருப்பினும், உங்கள் உச்சந்தலையில் அரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். தூசி, மாசு போன்றவற்றால் அரிப்பு ஏற்பட்டால், இந்த ஷாம்பூவில் ரோஸ்மேரி எண்ணெயை கலந்து உபயோகிப்பது நன்மை பயக்கும்.

    தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம். இவற்றில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    மாறிவரும் வானிலை மற்றும் மாசுபாட்டின் காரணமாக, முடி உலர்ந்து உயிரற்றதாகிறது. இதன் காரணமாக முடியின் ஊட்டச்சத்தும் முடிவடைகிறது. அதேசமயம் ஷாம்பு கலந்த எண்ணெயை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால், முடிக்கு ஊட்டமளிக்கிறது.

    • ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம்.
    • துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்.

    'ஃபிரிட்ஜ்' எனப்படும் குளிர்பதன பெட்டி பலதையும் போட்டு அடைத்து வைப்பது பலரது வழக்கமாக உள்ளது. இதனால், ஃபிரிட்ஜ் கதவை திறந்ததுமே துர்நாற்றம் அடிக்கும் நிலையும் காணப்படுகிறது. இதைத் தவிர்க்கும் எளிய வழிகள் சில...

    * ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு துண்டாக வெட்டிய எலுமிச்சையை போடுங்கள். பின்னர் அந்த பாத்திரத்தை ஃபிரிட்ஜில் வைத்திடுங்கள். இப்படி செய்தால் ஃபிரிட்ஜில் தூர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.

    * ஃபிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து, அதை கொண்டு ஃபிரிட்ஜை கத்தம் செய்யவும். இது ஃபிரிட்ஜில் தூர்நாற்றத்தை எளிதில் நீக்கிவிடும்.

    * காபி கொட்டையின் உதவியுடனும் ஃபிரிட்ஜில் துர்வாசத்தை நீக்கலாம். காபி கொட்டைகளை ஃபிரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து, காலையில் ஃபிரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்காது.

    * ஃபிரிட்ஜின் துர்நாற்றத்தை நீக்க உப்பு போட்டு சுத்தம் செய்யலாம். வெந்நீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃபிரிட்ஜை சுத்தம் செய்தால் துர்வாடை எளிதில் நீங்கிவிடும்.

    * ஆரஞ்சு தோல்களை கொண்டும் ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்கலாம். இதற்கு ஆரஞ்சு பழத்தோலை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலே போதும். தூர்நாற்றம் தானாகவே மறைந்து விடும்.

    • கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.
    • ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்க உங்கள் உடலுக்கு கூடுதலான கர்ப்ப காலத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவை.

    மேலும், உங்கள் குழந்தைக்கு உணவளிக்க உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் பெறுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    பாதம்

    பாதாமில் கால்சியம், மெக்னீசியம், புரதம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது.

    பாதாம் சாப்பிடுவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.

    இதய நோயில் இருந்து காப்பாற்றும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

    புற்றுநோயைத் தடுக்க உதவும்.

    ஆற்றல் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

    பிஸ்தா

    பிஸ்தா மொறுமொறுப்பு சுவையான நட்ஸ் ஆகும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது.

    பிஸ்தாவில் நார்ச்சத்து, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், தாமிரம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    பிஸ்தா சாப்பிடுவது உங்கள் உறுப்புகள், தசைகள் மற்றும் திசுக்கள் சரியாக செயல்பட உதவுகிறது.

    கர்ப்பிணிப் பெண்களின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    முந்திரி

    கர்ப்ப காலத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் முந்திரியால் வழங்க முடியும். இதில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துகள் உள்ளது.

    முந்திரி ஒட்டுமொத்த செரிமானத்திற்கு நல்லது மற்றும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

    இது இரும்பின் சிறந்த மூலமாகும், ரத்த சோகையைத் தடுக்கவும் போராடவும் உதவுகிறது, மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

    இது கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரங்களாகும், எனவே அவை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.

    முந்திரியை உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈறுகள் மற்றும் பல் சிதைவைத் தடுக்க உதவும்.

    இது கொழுப்பு அளவுகளை பராமரிக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. முந்திரி வைட்டமின் கே இன் நல்ல மூலமாகும், இது கர்ப்ப காலத்தில் ரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது.

    வால்நெட்

    அக்ரூட் பருப்புகள் பசியின்மை, இனிப்புகள் மற்றும் பல சுவையான உணவுகளுக்கு ஒரு சிறந்த மூலப்பொருள். வால்நெட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த உலர்ந்த பழங்கள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானது மற்றும் சத்தானது.

    மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நல்ல தூக்கம் மற்றும் மனச்சோர்வு சரிசெய்ய உதவுகிறது.

    சரியான எடை மேலாண்மைக்கு உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கூடுதலாக, அத்திப்பழம் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றிற்கான உங்கள் தினசரி தேவைகளை கிட்டத்தட்ட உள்ளடக்கியது.

    ஒரு நாளைக்கு ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தை ஜூசாக குடித்தால், கர்ப்பிணித் தாயின் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து 10% கிடைக்கிறது. உடலின் தாது தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    ஆரோக்கியமான உணவுக்கு பங்களித்து செரிமானத்தை எளிதாக்குகிறது. ஒமேகா 3 மற்றும் ஃபோலிக் அமிலம் கருவின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. காலை சுகவீனத்தை குறைக்கிறது. இது இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாகும். உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

    ஆப்ரிகாட்

    ஆப்ரிகாட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, தாமிரம், வைட்டமின் ஈ போன்ற சத்துகள் உள்ளது. மேலும் இதனை எடுத்துகொள்வதால் கர்ப்பகால மலச்சிக்கலைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    தசை மற்றும் உறுப்பு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.

    பல பெண்கள் கர்ப்பகால நீரிழிவு நோயாலும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுகிறது.

    இதை சாப்பிடுவதால் தாய்க்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் நன்மை பயக்கும். ஆப்ரிகாட் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த உலர்ந்த பழங்களில் ஒன்றாகும். ஒரு சுவையான மில்க் ஷேக் செய்ய உலர்ந்த அப்ரிகாட் பழங்களை துண்டாக்கி தானியங்கள், இனிப்புகள் மற்றும் பலவற்றை சேர்த்து பாலுடன் கலக்கவும். பின்பு அதனை எடுத்துகொள்ளலாம்.

    பேரிட்சை

    பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்சினை வருவதை தவிர்க்க தாய்மார்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இது கருப்பையில் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    உங்கள் குழந்தைக்கு சுமூகமான பிறப்பை உறுதி செய்கிறது மற்றும் தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

    மக்னீசியம் நிறைந்தது, இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரும்புச்சத்து குறைபாட்டை நிர்வகிப்பதற்கும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பேரிட்சம்பழம் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது.

    • பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • பருப்பு வேகவைக்கும்போது, விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    ஆட்டுக்குடல் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால், ஆட்டுக்குடல் சீக்கிரம் வெந்து விடும்.

    பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    முட்டை ஆம்லெட் செய்யும்போது, காரம் சாப்பிடாதவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து குடை மிளகாயை சேர்த்தால், சுவை கூடுதலாகும்.

    ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளுவையும் சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

    சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது, அதில் விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    புளிச்சோறு, ரசம், வத்தக்குழம்பு போன்ற புளி சம்பந்தப்பட்ட உணவு தயார் செய்யும்போது அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவை கூடும்.

    புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு, நிலக்கடலையை வறுத்துப் போடாமல், எண்ணெய்யில் பொரித்துப்போட்டால், மொறு மொறு என்று இருக்கும்.

    பீன்ஸ், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால், ருசியாக இருக்கும்.

    பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது, தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

    குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9 சத்து கொண்டதாகும்.
    • பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    45 நாட்கள் கர்ப்பம் இருக்கும் போது போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கருசிதைவு ஏற்படாமல் தடுக்கும். ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி 9 சத்து கொண்டதாகும். அவை நீரில் கரையக்கூடியவை ஆகும்.

    அதிக அளவு பிறப்பு குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு பெரும்பாலும் ஃபோலிக்-அமில மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

    திருமணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் கர்ப்பம் ஆகவில்லை என்றாலும் கருத்தரிப்பதற்கு முன்பில் இருந்து ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இந்த மருந்து உடலில் ரத்த அணுக்கள் சரியாக முதிர்ச்சியடையத் தவறிவிடுகின்ற (மெகாலோபிளாஸ்டிக் அனீமியா) என்கிற ஒரு குறிப்பிட்ட வகை ரத்த சோகையைத் தடுப்பதற்கும் மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    உடல் குறைபாடுள்ள நிலையில் சோர்வினை போக்குவதற்கு ஃபோலிக் அமில மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. வாய்ப்புண், நோயால் ஏற்படும் வெளிறிய தோற்றம், தொடர்ச்சியான பலவீனம் மற்றும் சோம்பல் ஆகியவற்றை குறைக்க ஃபோலிக் அமில மாத்திரை பயன்படுகிறது.

    கவனிக்க வேண்டியவை:

    ஆரோக்கியமான உணவு: கர்ப்ப கால பழங்கள் மற்றும் கர்ப்ப கால காய்கறிகளை தினமும் உணவுகளில் எடுத்துகொள்ளுங்கள். அவை கொஞ்சம் உங்களுக்கு மன உறுதியைத் தருவதோடு மட்டுமில்லாமல், உங்கள் சுவை மொட்டுகளையும் உங்களுள் இருக்கும் குழந்தையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

    தவிர்க்க வேண்டியவை:

    கர்ப்ப காலத்தில், சில உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    உணவுகளை நன்கு சமைப்பது போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் உண்மையில் நன்றாக இருக்கும். மிக குளிர்ந்த மற்றும் சூடான பானங்களை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    UTI அறிகுறிகளைக் கவனியுங்கள்

    சிறுநீர் கழிப்பதில் வலி ஏற்பட்டாலோ அல்லது நீங்கள் கழிவறை சென்றும் சிறுநீர் வரவில்லை என்றால், உங்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று இருக்கலாம். எனவே அப்படி இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சரிபார்க்கவும்.

    உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருந்தால், உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கலாம். கர்ப்பத்தின் ஆறாவது வாரத்திற்குப் பிறகு, இந்த வகை தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது.

    எனவே கர்ப்பம் உறுதி செய்தவுடன் அதற்கான உணவுமுறைகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி வரப்போகும் குழந்தைக்கான ஆரோக்கியமான வாழ்க்கையினை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    • அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.
    • குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும்.

    பெண்கள் பெரும்பாலும் 45 நாட்கள் கர்ப்பம் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பல குழப்பத்தில் இருப்பார்கள். 45 நாட்கள் கர்ப்பம் என்பது 6 வாரங்கள் அதாவது இரண்டு மாதம் ஆகும்.

    45 நாட்களில் உங்கள் குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி இருக்கும். அதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்க்கலாம்.

    கண்கள் மற்றும் நாசிகள் போன்றவை சிறிதாக உருவாக தொடங்கும். அவர்களின் சிறிய வாய்க்குள், நாக்கு மற்றும் குரல் நாண்கள் உருவாகத் தொடங்கி இருக்கும்.

    கைகள் மற்றும் கால்கள் சிறிய துடுப்புகளாக வளரத் தொடங்கி, அவை நீண்டு, மூட்டுகளாக வளரும். முதுகெலும்பு ஒரு சிறிய வால் போன்று நீண்டு இருக்கும். அது சில வாரங்களில் மறைந்துவிடும்.

    அறிகுறிகள்

    * காலை நோய் என்பது நாளின் எந்த நேரத்திலும் ஏற்படும் குமட்டல் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 5 அல்லது 6 வது வாரத்தில் தொடங்கி முதல் மூன்று மாதங்களின் முடிவில் குறையலாம்.

    * அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், உங்கள் உடலில் அதிக ரத்தம் பாய்வதால் உங்கள் சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீரை சமாளிக்க வேண்டிய நிலை வருகிறது.

    * கர்ப்பகால ஹார்மோன்களும் இதில் பங்கு வகிக்கின்றன. நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லது நிறமற்றதாக இருந்தால், உங்கள் உடலில் நன்கு நீரேற்றமாக இருக்கும்.

    * பல கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 10 வாரங்களில் தங்கள் மனநிலை மாற்றம் அதிகரிக்கிறது. ஒரு தாயாக மாறும் உணர்வினை அவர்கள் அதிகம் உணர்வார்கள். சில நேரங்களில் எதையாவது நினைத்து திடீரென்று மனம் நோகும் நிலையில் இருப்பார்கள்.

    * கர்ப்பிணிகளை அவர்களது துணை கண்டிப்பாக நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் மேலும் மனச்சோர்வடைந்திருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் அவர் உங்களுக்கு தேவையான விஷயங்களை பரிந்துரைப்பார்.

    * மார்பக மென்மை கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். அதிகரித்த ஹார்மோன் அளவுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன, இது உங்கள் மார்பகங்களில் வீக்கம், வலி, கூச்சம் அல்லது தொடுவதற்கு வழக்கத்திற்கு மாறாக மென்மையாக்கும்.

    * பல பெண்களுக்கு, சோர்வு கர்ப்பத்தின் முதல் அறிகுறிகளில் ஒன்றாகும். ஆரம்பகால கர்ப்பத்தில் சோர்வு ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் இது புரோஜெஸ்ட்டிரோனின் வியத்தகு அதிகரிப்பு போன்ற ஹார்மோன் மாற்றங்களால் இந்த சோர்வு இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு உங்கள் வாயில் ஒரு உலோக சுவையை ஏற்படுத்தும். 1 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது, புளிப்பு அல்லது அமில உணவுகளை உண்பது அல்லது புதினா பசையை மெல்லுவதன் மூலம் இந்த சுவை உணர்வை கட்டுப்படுத்தலாம்.

    குறிப்பாக கர்ப்ப காலத்தில் தலைவலி பொதுவானது. கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதத்தை அடைந்தவுடன் தலைவலி குறையலாம். யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் இந்த தலைவலியினை குறைக்கலாம்.

    • பார்ப்பதற்கு சிம்பிளாக தெரிந்தாலும், ருசி அப்படி இருக்கும்.
    • ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம்.

    குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற வட இந்திய பகுதிகளில், தால் தோக்லி என்ற டிஷ், பிரபலமாக இருக்கிறது. பார்ப்பதற்கு சிம்பிளாக தெரிந்தாலும், ருசி அப்படி இருக்கும்.

    இதில் எண்ணெய் சேர்க்கப்படாது. நெய் கொண்டு தான் செய்யப்படும். அதுவும் குறைந்த அளவு தான். அதனால் இது ருசி மட்டும் அல்ல, ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம். இத்தகைய தால் தோக்லி உணவை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    பூண்டு - 5 பல்

    கோதுமை மாவு- 1 கப்

    ஓமம் - 1/4 டீஸ்பூன்

    நெய் - 3 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயம் - சிறிதளவு

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    மல்லி இலை - ஒரு கைப்பிடி

    செய்முறை

    குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரை கப் துவரம் பருப்பை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து மூடவும். 5 விசில் வரும் வரை விடவும்.

    தற்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாதி மாவு பதத்திற்கு பிசையவும்.

    பின்னர் இந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக்கொள்ளவும். இதனை சின்ன சின்ன துண்டுகலாக நறுக்கவும். இதனை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். கடுகு வெடித்ததும், வெந்த பருப்பை சேர்த்துக்கொள்ளவும்.

    இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருப்பை கலந்துவிட்வும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    இவை நன்கு கொதித்து வந்ததும், நறுக்கி வைத்த மாவு துண்டுகளை இதில் சேர்க்கவும். 15 நிமிடம் வேக வைக்கவும்.

    அவ்வளவு தான் தால் தோக்லி ரெடி. இதனை வேறு பாத்திரத்தில் மாற்றி, இதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லி இலை சேர்த்து சாப்பிடவும்.

    ×