என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது.
    • முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது.

    சூரிய ஒளி காரணமாக காற்றில் ஈரப்பதம் இருக்காது. இதனால் முடி உதிர்வு, மற்றும் உயிரற்ற முடி ஒரு பொதுவான பிரச்னையாக மாறும். அதே சமயம் தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்னைகளும் ஏற்படும். முடி உதிர்தல், ஒட்டும் முடி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.

    இதுபோன்ற முடி தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட சிலர் தினமும் தலையை அலசுவார்கள். தினமும் தலைமுடியைக் கழுவுவது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இது முடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விளக்கங்களை இங்கே காண்போம்.

    தினமும் தலை குளிப்பது முடி உதிர்வை ஏற்படுத்துமா?

    கோடை காலமோ அல்லது குளிர் காலமோ, ஒவ்வொரு நபரும் தவறாமல் தலைமுடியை அலச வேண்டும். முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது. இது தானாகவே முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது. முடி உதிர்தலுக்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை.

    தலைமுடியை தேவைக்கு குறைவாகக் அலசினால், முடி வலுவிழந்து, உச்சந்தலையில் அதிகப்படியான சருமம் உற்பத்தியாகி, முடியை ஒட்டும் தன்மையுடையதாக்கி, முடி உதிர்வை அதிகரிக்கும். இதேபோல், ஒருவர் தலைமுடியை அலசினால், அது உச்சந்தலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உச்சந்தலையில் அதிக வறட்சி ஏற்படுவதுடன், முடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக மாறும். இதனால் தினமும் தலைக்கு குளிக்கக்கூடாது.

    வாரத்திற்கு எத்தனை முறை தலை குளிக்க வேண்டும்?

    வாரத்திற்கு எத்தனை முறை முடியை கழுவ வேண்டும் என்பது நபரின் முடி வகை மற்றும் முடி அடர்த்தியைப் பொறுத்தது. உதாரணமாக, ஒருவருக்கு சுருள் முடி இருந்தால், அவர்கள் 3-4 நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒருவருக்கு எண்ணெய் பசை இருந்தால், அவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஒருவருக்கு மெல்லிய மற்றும் நேரான முடி இருந்தால், தலைமுடி அழுக்காக இருக்கும் போது தான் தலைக்கு குளிக்க வேண்டும்.

    தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

    தலைக்கு குளிப்பதற்கு முன், உங்கள் முடி வகையை நினைவில் கொள்ளுங்கள். ஷாம்பூவில் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப் படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பூவை மட்டும் பயன்படுத்தவும்.

    ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. இது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

    • பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது.
    • குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது.

    குழந்தைகள், முதியவர்களுக்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகம் வழங்குகிறது.

    அதேபோல பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது. அவற்றில். `மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    பெண்களுக்காக சிறப்பாக தொடங்கப்பட்ட திட்டமான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது. அதாவது 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது.

    மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. குறுகிய காலத்திலேயே இந்த திட்டம் மிகவும் பிரபலமாகி விட்டது. இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    பெண்கள் சுயமாக வாழ்க்கை நடத்த உதவும் நோக்கில் இந்த திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு கூடுதல் வட்டி அளிப்பதோடு, வருமான வரி பிரிவு 80 சி-யின்படி வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. மற்றொரு முக்கிய அம்சம், இதில் 10 வயது மற்றும் அதற்கும் குறைவான பெண் குழந்தைகள் பெயரிலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    அடுத்த ஆண்டு (2025) மார்ச் 31-ந்தேதிக்கு முன்போ, அன்றைய தினமோ இந்த திட்டத்தில் பெண்கள் கணக்கை தொடங்கலாம்.

    தபால் அலுவலகம் தவிர, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் 4 தனியார் வங்கிகளிலும் இந்த கணக்கை ஆரம்பிக்கலாம்.

    • `ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
    • இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி.

    இன்றைய நாளில் இளம் வயதிலேயே பலரும் சந்திக்கும் பிரச்சினை நரைமுடி. அதற்காக பலவித செயற்கை சாயங்களை பூசி, பக்கவிளைவுகள் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். ஆனால், நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற உதவும் `ஹேர் ஸ்பிரே'யை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று பார்ப்போமா?

    தேவையான பொருட்கள்:

    பிரிஞ்சி இலை- 3

    கிராம்பு- 1 ஸ்பூன்

    காபித் தூள்- 1 ஸ்பூன்

    தயாரிக்கும் முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் பிரிஞ்சி இலையை நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். பின்னர் அதில் கிராம்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து  இது ஆறியவுடன் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் காபி தூளை சேர்த்து கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

    இதை நரைமுடி இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஸ்பிரே செய்து வந்தால், விரைவில் நரைமுடி கருப்பாக மாறும். இதில் உள்ள காபி, மென்மையான கூந்தலுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.

    • கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும்.

    பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்றபின் 2,3 குழந்தைகளைக் கூடத் தாங்கும் அளவுக்கு விரிந்து கொடுக்கும் தன்மைப் பெற்றது. சில பெண்களுக்கு மாதவியின் போது பல்வேறு பிரச்னைகள் வருவதுண்டு. சிலருக்கு கர்ப்பப்பையில் கட்டிகள், புண்கள், சத்து குறைவு போன்ற பிரச்சனை வருவதும் உண்டு. மெனோபாஸ் நேரத்திலும் அதிகப்படியான ரத்தப்போக்கு இருப்பதுண்டு.

    மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தியானது 4 மில்லிமீட்டர் அளவுதான் இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மில்லிமீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொடுத்துச் சரி செய்யலாம் அல்லது கர்ப்பப்பையின் உள்ளே உள்ள திக்கான எண்டோமெட்ரியத்தை `ஹிஸ்ட்ரோஸ்கோப் எண்டோமெட்ரியல் அப்ளேஷன் (Hysteroscopic Endometrial Ablation) முறையில் சுரண்டி எடுத்துவிடலாம்.

    அதன்பிறகு ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


    கர்ப்பப்பை அறுவைசிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கை சாத்தியமில்லை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு அந்தக் காயம் ஆறும்வரை, அதாவது 3 மாதங்கள்வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தாம்பத்திய உறவில் முன்பிருந்த நாட்டம் இல்லை என உணர்வதெல்லாம் உண்மையல்ல, அது மனது சம்பந்தப்பட்டது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் வலி, ரத்தப்போக்கின் காரணமாக முன்பு இனிக்காத தாம்பத்யம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக மாறுவதாகச் சொல்கிறார்கள் பலரும்.

    கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரத்தப்போக்கு முற்றிலும் நின்றுவிடுவதால், மாதவிடாய் வராது. ஆனால், அவர்கள் மெனோபாஸ் அடைந்துவிட்டதை உடல் சில அறிகுறிகள் மூலம் உணர்த்தும். திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும். முடி உதிர்வு, சரும வறட்சி, அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவில் நாட்டமின்மை போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம். தேவைப்பட்டால் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் ஹெச்ஆர்டி சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

    • உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடு.
    • ‘ஐகிகாய்’ என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும்.

    ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையும், கலாசாரமும், அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களும் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடாக அது விளங்குவதுதான் அதற்கு காரணம். மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் ஜப்பானியர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வதும், அதனை கடைப்பிடிப்பதும் அவசியமானது.

    மகிழ்ச்சி :

    'ஐகிகாய்' என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும். எந்தவொரு சூழலிலும் அமைதியை கடைப்பிடிப்பது, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்பது, சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பது போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி மற்றும் மன நிறைவை கண்டறியலாம் என்பதை நோக்கமான கொண்டது. இந்த தத்துவத்தை ஜப்பானியர்கள் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை தக்கவைத்துக்கொள்கிறார்கள்.

    சாப்பாடு:

    உடலை கோவில் போல வழி நடத்த வேண்டும் என்பது ஜப்பானிய உணவுக்கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். மது, புகையிலை போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விலக்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதனை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

    உணவில் குறைந்த கலோரி கொண்ட பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்கிறார்கள். சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கலோரிகள் குறைவாக இருப்பதை உறுதி செய்கிறார்கள். அதனால் திருப்தியாக சாப்பிடுகிறார்கள். உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    கிரீன் டீ :

    கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பாலிபீனால்கள் அதிகம் இருக்கிறது. அதனால் ஜப்பானியர்கள் கிரீன் டீயை தங்கள் பாரம்பரிய பானமாக ருசிக்கிறார்கள்.

    இது குடல் நலனை பாதுகாக்கும், செல் சிதைவை தடுக்கும், நாள்பட்ட நோய்களில் இருந்து விலக்கி வைக்கும் பானமாக விளங்குகிறது. ஜப்பானிய பாரம்பரிய பானமான கிரீன் டீ உலக அளவில் பிரபலமடைந்தும் வருகிறது.

    சமூக ஈடுபாடுகள்:

    குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அடிக்கடி சமூக செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன் மூலம் சமூக தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி இயங்குவது சமூகத்திற்கு பயன்படும்படியாக அமைவதுடன் அவர்களின் உடல் செயல்பாடும் மேம்படுகிறது. அது அவர்களின் ஆரோக் கியத்திற்கும் நன்மை தருவதாகவும் அமைந்துவிடுகிறது.

    மெதுவாக சாப்பிடுதல்:

    ஜப்பானியர்கள் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். உணவை நன்றாக மென்று சாப்பிடவும் செய்கிறார்கள். அது செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு வித்திடுகிறது. அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுவதற்கு குடும்பத்தினரை அனுமதிப்பதில்லை. அப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் உறவு பந்தத்தையும் வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

    • குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.
    • கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

    மார்பகப் புற்றுநோய் குறித்த தகவல்கள் இல்லாததாலும், இணையத்தில் தவறான தகவல்கள் கிடைப்பதாலும், அது தாமதமாகக் கண்டறியப்படுகிறது. இந்த நோயை சரியாகக் கண்டறிவதன் மூலம், அதிலிருந்து விரைவாக மீட்க முடியும். ஹார்மோன் மாற்றங்கள், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மரபணு காரணங்கள் போன்ற பல காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

    * குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.

    * BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

    * ஹார்மோன் மாற்று சிகிச்சையின் (HRT) பயன்பாடும் ஆபத்தை அதிகரிக்கலாம்.

    * மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

    உணவில் அதிகப்படியான கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

    தடுப்பு நடவடிக்கைகள்

    மார்பக புற்றுநோயை தடுக்க, உணவு, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுகள்

    * பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் சாப்பிடுங்கள்.

    * கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கவும்.

    * உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்

    * தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான-தீவிர ஏரோபிக் செயல்பாட்டைப் பெறுங்கள்.

    * எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

    மது அருந்துதல் மற்றும் புகைத்தல்

    மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள். மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.

    புகை பிடிக்காதீர்கள். புகைபிடித்தல் மார்பக புற்றுநோயை மட்டுமல்ல, பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும்.

    மார்பகப் புற்றுநோயைத் தடுக்க, 40 வயதிற்குப் பிறகு வழக்கமான மேமோகிராபி செய்ய வேண்டும். மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய மேமோகிராபி உதவுகிறது.

    இது தவிர, உங்கள் மார்பகத்தை நீங்களே சரிபார்த்து, மடிப்புகளில் ஏதேனும் மாற்றத்தைக் காணலாம். மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகி, பரிசோதனைக்குப் பிறகு, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

    • மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும்.
    • லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.

    மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும். பொதுவாக இந்த பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், சில சூழ்நிலைகளில் ஆண்களும் இந்த பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். சிகிச்சையில் தாமதம் மற்றும் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாததால் மார்பக புற்றுநோய் தீவிரமடைகிறது.

    மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிக உயரம் உண்மையில் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறதா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

    மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், உடல் அமைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    NCBI -ல் வெளியிடப்பட்ட சில ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் உயரமான உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

    மார்பக புற்றுநோயைத் தூண்டும் காரணிகளில் உயரமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், உயரம் மட்டுமே மார்பக புற்றுநோயை ஏற்படுத்தாது. மார்பகப் புற்றுநோய்க்கு உயரத்தைத் தவிர, வேறு பல காரணங்களும் காரணமாக இருக்கலாம்.

    உடல் உயரம் அதிகரிக்கும் போது, ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படுகின்றன. இது மார்பக திசுக்களை பாதிக்கிறது. இது தவிர, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி (IGF-1) ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக, செல்கள் வளரும் அபாயமும் அதிகரிக்கிறது.

    • ஏ.சி.யை 20 டிகிரிக்கு மேல் வைப்பதே நல்லது.
    • ஏ.சி.யின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.

    வெயில் நாட்களில், வீடுகள், தஅலுவலகங்கள் தோறும் 'ஏ.சி.' எனப்படும் குளிர் சாதனங்கள் 'ஓவர்டைம்' ஆக இயங்கிவருகின்றன. இதனால் 'கரண்ட் பில்'லும் எகிறுகிறது. வீட்டில் விடிய விடிய ஏ.சி. ஓடினாலும் கரண்ட் பில் கையைச்'சுட'க் கூடாது என்று நினைக்கிறீர்களா? அதற்கு சின்னச் சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். அவை, இவைதான்...

    சிலர் நல்ல குளிர்ச்சி வேண்டும் என்று நினைத்து. ஏ.சி.யை மிகவும் குறைவான வெப்பநிலையில் வைப்பார்கள். ஆனால் அவ்வாறு ஏ.சி. இயங்கும்போது அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். எனவே ஏ.சி.யைமிகவும் குறைவான வெப்பநிலையில் வைக்காமல் 20 டிகிரிக்கு மேல் வைப்பதே நல்லது. மனித உடலுக்குத் தேவையான வெப்பநிலை 24 டிகிரி என்பதால் அந்த அளவி லேயே ஏ.சி. வெப்பநிலையை வைக்கலாம். இதனால் கரண்ட் பில்லை மிச்சப்படுத்தலாம்.

    ஏ.சி.யை சர்வீஸ் செய்து பயன்படுத்தும்போது அது நன்றாக வேலை செய்யும். இதன் மூலமும் கரண்ட் பில்லை குறைக்க முடியும். ஏ.சி.யின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். பில்டரில் தூசு இருந்தால் அது ஏ.சி.யின் குளிரூட்டும் திறனை குறைக்கும்.

    அதேபோல் ஏ.சி.யை பயன்படுத்தும்போது கதவு. ஜன்னல் ஆகியவை நன்றாக மூடி இருக்கிறதா என்பது உறுதிசெய்துகொள்ளுங்கள். ஏனெனில் அனல் காற்று உள்ளே வந்தால் ஏ.சி.யால் உட்புறத்தை குளிர்விக்க நேரம் ஆக லாம். கதவு, ஜன்னல்களை கவனமாக மூடிவைப்பதன் மூலமும் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.

    சிலருக்கு, ஏ.சி.யை இயக்கும்போது சீலிங்பேனையும் போடலாமா என்ற சந்தேகம் இருக் கும். ஆனால் ஏ.சி.யை பயன்படுத்தும்போது கூரை மின் விசிறியையும் சுழலவிடுவது நல்லதுதான். இதனால் குளிர்காற்று, அறையின் மூலை முடுக்கிலும் வேகமாக சென்றடையும். இதன் மூலம் கரண்ட் பில் கட்டுப்படும்.

    ஏ.சி.யில் இருக்கும் டைமரை 'ஆன்' செய்வது நல்லது. இதனால் அறை குளிர்ச்சியான உடன் ஏ.சி. தானாவே அணைந்துவிடும். இவ்வாறு தொடர்ந்து ஏ.சி. ஓடிக்கொண்டிருப்பது தவிர்க்கப்படுவதால் மின் செலவும் குறையும்.

    வெளி வெளிச்சம் அதிகம் வராமல் தடுக்கும் வகையில் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகளைப் பயன் படுத்தலாம்.

    அறை, ஹாலுக்கு தேவையான அளவு 'டன் ஏ.சி.யை பயன்படுத்துங்கள். குறைந்த உட்பரப்புக்கு. குறைவான 'டன்' ஏ.சி.யே போதும். 'இன்வெர்ட்டர்' ஏ.சி.யானது மின்சார பயன்பாட்டு அளவை குறைக்கும். எனவே அதை பார்த்து வாங்கலாம்.

    • மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம்.
    • ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.

    இன்றைய வாழ்க்கைச்சூழலில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. அதனை திறம்பட நிர்வகிப்பது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைத்து மனதுக்கு மறுமலர்ச்சியை பெற்றுத்தரும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இவை..

    * மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம். இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில் சுவாசத்தில் கவனம் செலுத்தி ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிட சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும்.

    * மன அழுத்தத்தை நிர்வகிக்க அன்பானவர்களின் ஆதரவு முக்கியமானது. வலுவான சமூக தொடர்பு கொண்டவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். நேரில் சந்திப்பது, செல்போனில் பேசுவது, வீடியோவில் அரட்டை அடிப்பது என ஏதாவதொரு வகையில் உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களுடன் சில நிமிடங்களை செலவிடுவதும், உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைப்பதும் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும். மனதுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும். எனவே நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.

    * லாவெண்டர், சாமந்தி, சந்தனம் போன்ற வாசனைகள் அமைதியுடன் தொடர்புடையவை. இந்த எண்ணெய்களை சருமத்தில் தடவலாம். குளிக்கும் நீரில் சில துளிகள் சேர்க்கலாம்.

    * ஓவியம் தீட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்தை குறைக்கும். தினமும் இதற்கு முடியாத பட்சத்தில் வாரந்தோறும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

    * ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். 4-7-8 சுவாச பயிற்சியை முயற்சிக்கவும். அதாவது 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும், 7 விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும், பின்பு 8 விநாடிகள் சுவாசத்தை வெளியேற்றவும்.

    * சிரிப்பு யோகா செய்வதும் பலன் தரும். ஆக்சிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கச்செய்து எண்டோர்பின்களை வெளியிடும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    * செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது, அதனுடன் நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். தனிமை உணர்வையும் குறைக்கும். மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

    * டிஜிட்டல் திரைகள் மற்றும் சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்வையிடுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வித்திடும். அதனை ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். அது மனதை இதமாக்கும். மறுமலர்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும்.

    * தோட்டக்கலையில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தை குறைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செடிகளை நடுவது, வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது, தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மையை பெற்றுத்தரும். தினசரி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் இணைய வைக்கும்.

    • வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும்.
    • 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம்.

    வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும். சருமத்தில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும். வயது முதிர்ச்சிக்கு அடித்தளமிடும் இத்தகைய மாற்றம் சிலரிடத்தில் விரைவாகவே தென்படும். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம். முன்கூட்டியோ, விரைவாகவோ முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கலாம். அதற்கு வித்திடும் விஷயங்கள்...

     சிவப்பு குடைமிளகாய்

    உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் 'சூப்பர் புட்' உணவாக கருதப்படும் இது நம்பமுடியாத அளவுக்கு விரைவாக வயதாகும் தன்மையை தடுக்கக்கூடியது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடியது.

    மேலும் சரும நலனுக்கு நன்மை சேர்க்கும் கரோட்டினாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. அவை சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப்போராட உதவும். சூரியக்கதிர்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும்.

    பப்பாளி

    உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு பொருள், பப்பாளி. இது விரைவில் வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

    இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். வயதான அறிகுறிகள் வெளிப்படுவதை தாமதப்படுத்தும்.

    ப்ளூபெர்ரி

    இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சூரிய ஒளி, மாசுபாடு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும் அந்தோசயனின் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அவற்றில் உள்ளன. மேலும் கொலாஜன் இழப்பைத் தடுத்து பொலிவான சருமத்தை தக்கவைக்கவும் உதவும்.

    புரோக்கோலி

    வைட்டமின் சி, கே, நார்ச்சத்து, போலேட், லுடீன், கால்சியம் உள்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட காய்கறியாக புரோக்கோலி விளங்குகிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையையும் அளிக்கிறது.


    அவகேடோ

    இந்த பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு வித்திடுகின்றன. மேலும் அவகேடோ பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. பளபளப்பான புள்ளிகளற்ற சரும அழகுக்கு அடிகோலுகிறது.

    • 15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    • தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அதிக வலி இருக்கலாம். சில சமயங்களில் குறைவான வலியை உணரலாம். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் பாடல் கேட்க பிடிக்கும், சிலருக்கு பேச பிடிக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவாக உள்ள குணாதிசயம் கோபப்படுவது.

    மற்ற நாட்களை விட, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அதிக கோபம் வருவதாக பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தேசிய மருத்துவ நூலகத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், இதுக் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது, 15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்டுள்ள கட்டுரையில், மாதவிடாய் நோய்க்குறி(PMS) உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக கோபப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள் மனநிலை மாற்றங்கள், அதிகப்படியான பசி, சோர்வு மற்றும் எரிச்சல் ஆகும்.


    இதனுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களின் மனநிலை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால், பெண்கள் அதிகம் எரிச்சலடைவார்கள். அன்றாட வாழ்க்கையில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பெண்கள் கூட மாதவிடாய் நாட்களில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிடுகிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

    ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் மட்டுமே பெண்கள் கோபப்படுகிறார்கள் என்பது கிடையாது. ஒவ்வொரு பெண்ணின் குணாதிசயமும் மாறுப்படுகிறது, அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    எனவே மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஏன் அதிகம் கோபப்படுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

    • முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது.
    • நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.

    பூக்கள் என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ரோஜா என்றாலே சொல்லவா வேண்டும். அதுவும் நமது வீட்டில் வளர்ந்தால் எப்படி இருக்கும். நம்மில் பலருக்கு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ அதிகமா ரோஸ் செடி வைத்து வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனா நாம எவ்வளவுதான் ரோஸ் செடி வைத்து வளர்த்தாலும், சீக்கிரமாக இறந்து விடும். இல்லை என்றால் பூக்களே பூக்காது.

    அதற்காகவே ரோஸ் செடி வாங்கி வளர்ப்பதற்கு தயங்குவோம். இனி இந்த தயக்கம் வேண்டாம். இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ள சில டிப்ஸை உங்கள் ரோஸ் செடிக்கு (rose plant) செய்து வளர்த்து பாருங்கள். ரோஸ் செடி நன்றாக வளரும் மற்றும் செடியில் அதிகளவு பூக்களும் பூக்கும்.


    முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது. அதனுடன் இரண்டு இலைகளை சேர்த்து பறிக்க வேண்டும். அப்போது தான் ரோஸ் செடியில் அடுத்த துளிர்கள் விட்டு நன்கு வளர ஆரம்பிக்கும்.

    ரோஸ் செடியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு செடியாக இருந்தாலும் சரி செடிகளை வாங்கும்போது அதிகமாக துளிர்களை உள்ள செடிகளை மட்டும் தேர்வு செய்து வாங்கவும்.

    மேலும் ரோஸ் செடி வாங்கும் போது ஐந்து இலைகள் உள்ள செடிகளை தேர்வு செய்து வாங்கினால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    ரோஸ் செடிக்கு இயற்கை உரமாக வாரத்தில் ஒரு முறையாவது சமையலறை கழிவுகளான டீ தூள், காபி தூள், வெங்காய தோல், பூண்டு தோல், முட்டை ஓடு மற்றும் மக்கக்கூடிய காகிதங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்ட்டிக் பேனரில் வைத்து மூடி வைக்கவும்.


    ஒரு வாரம் வரை தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு குச்சியால் கிளறி விடவும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையை ரோஸ் செடிக்கு உரமாக இட்டு வந்தால் ரோஸ் செடி செழிப்பாக வளரும்.

    ரோஸ் செடிக்கு வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றாமல் மண், ஊட்ட சத்துக்காக நம் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தின் நீரை மட்டும் வடிகட்டி தண்ணீராக ஊற்றலாம். இவ்வாறு ஊற்றுவதால் செடி நன்றாக வளரும்.

    நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.

    இனி அவ்வாறு தூக்கி எரிய வேண்டாம். வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை ரோஸ் செடிக்கு ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    ரோஸ் செடிகளுக்கு உரம் வைக்கப்போகிறோம் என்றால் அன்று முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது.

    அதே போல் செடிகளுக்கு உரம் வைக்கும் போது மாலை நேரத்தில் வைத்தால் அதிக பலன் கிடைக்கும்.

    ரோஸ் செடிக்கு (rose plant) வாரம் ஒரு முறையாவது இயற்கை டானிக் ஊற்றுவதால் செடி நன்றாக வளரும் அதுமட்டும் இன்றி பூக்களும் அதிகளவு பூக்கும்.


    இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு வாங்கி கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    இந்த பேனரில் கடலை பிண்ணாக்கை கொட்டவும். பின்பு 10 லீட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    பின்பு அந்த பேனரை காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைக்கவும். (காற்று உள்ளே சென்று விட்டால் அவற்றில் புழுக்கள் வைத்து விடும் எனவே காற்று புகாத அளவிற்கு பேனரை நன்றாக மூடிவைத்து கொள்ளவும்)

    ஐந்து நாட்கள் கழிந்து இந்த கலவையை திறந்து பார்த்தால் நன்றாக நுரைத்து இருக்கும். இந்த கலவையை ஒரு பக்கெட் அளவிற்று எடுத்து கொண்டு. 10 லீட்டர் தண்ணீரில் கலந்து ரோஸ் செடி மற்றும் அனைத்து செடிகளுக்கும் தண்ணீராக ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    ×