என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பெண்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை டாக்டரிடம் சொல்ல தயங்குகிறார்கள்.
    • இது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிகள் மருத்துவரிடம் தனக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தங்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை மருத்துவர்களிடம் கூட நேரடியாக சொல்ல தயங்குகிறார்கள்.

    இது வெட்கப்பட வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது பாலியல் குறித்த பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகளை மருத்துவரிம் மறைக்க கூடாது. கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு நீங்கள் விரும்பினால் இந்த பிரச்சனைகளை நீங்கள் மருத்துவரிடம் மறைக்க கூடாது.

    அடிவயிற்று வலி

    மாதவிடாயின் போது பிடிப்புகள், மார்பக வலி மற்றும் தலைவலி உண்டாகலாம். சில பெண்களுக்கு மிதமானது முதல் தீவிரமானது வரை இந்த வலி இருக்கும் சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு இருக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு மாதமும் வேதனையாக மோசமானதாக இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    உடலுறவின் போது வலி

    தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது உடலுறவில் தீவிரமாக வலி இருந்தால் இது இயல்புதான் என்று நினைக்காமல் மருத்துவரிடம் ஆலோசியுங்கள். ஏனெனில் பிறப்பு உறுப்பில் வறட்சி தன்மை இருந்தால் உடலுறவின் போது அசெளகரியம் உண்டாக்குவதோடு வலியையும் ஏற்படுத்தும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

    பெண்களுக்கு உடலுறவின் போது பிறப்புறுப்பு வறட்சியாகவே இருந்தால் அல்லது உறவுக்கு பின்பு பெண் உறுப்பில் ரத்தக்கசிவு இருந்தால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

    வெள்ளைப்படுதல்

    பெண்களின் பிறப்புறுப்பில் கசியும் வெள்ளைப்படுதல் பெண் உறுப்பை பாதுகாக்கவே. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் முன்பு அல்லது பின்பு இந்த வெள்ளைப்படுதல் இருக்கும். இது எல்லாருக்குமே பொதுவானது. ஆனால் சிலருக்கு வெள்ளைப்படுதல் அதிகரிப்பதோடு அவை நிறத்திலும் மஞ்சள் பச்சை என்று இருந்தால் அது உடனடியாக கவனிக்க வேண்டியதே. உடனடி சிகிச்சை தேவையாக இருக்கலாம்.

    பெண் உறுப்பு பகுதியில் கட்டி

    பெண்களின் பிறப்புறுப்பு பகுதியின் உட்பகுதி வல்வா என்று அழைக்கப்படும். இந்த இடத்தில் வரும் புடைப்புகள் மற்றும் வளர்ச்சியை கண்டறிந்தால் நீங்கள் தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். இது ஹெர்பேஸ் அல்லது மருக்கள் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்க்களின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உங்கள் பாலியல் வரலாறு குறித்து வெளிப்படையாக இருப்பது அவசியம். 

    • வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம்.
    • கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம். ஆனால் எல்லா நேரங்களிலும் எண்ணெய் தேய்க்கலாமா என்றால், அதிலும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

    எண்ணெய் வைத்தவுடன் சீப்பு போடுவது

    பெண்கள் வழக்கமாக, கூந்தலில் உள்ள சிக்குகளை நீக்க, கூந்தலுக்கு எண்ணெயிட்ட பிறகு சீப்பை பயன்படுத்தி வாருவது இயற்கையானது. ஆனால் இது ஒரு பெரும் தவறு, அதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

    அதே மாதிரி, நல்ல எண்ணெய் மசாஜ் செய்த பிறகு, சீப்பு பயன்படுத்தினாலும் உச்சந்தலையில் உள்ள கூந்தல் உடையக்கூடியதாக மாறும். அதாவது, கூந்தலுக்கு எண்ணெய் வைத்தவுடன் கூந்தலுக்கு சீப்பு பயன்படுத்துவது உடைப்பு மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலுக்கு சீப்பு வேண்டும் என்றால், மெதுவாக உச்சந்தலையில் இருந்து கீழ்நோக்கி சீவலாம்.

    இரவு முழுவதும் கூந்தலில் எண்ணெய் வைத்திருப்பது

    பெரும்பாலான இந்திய பெண்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, இரவு முழுவதும் உச்சந்தலையில் எண்ணெயை வைத்திருப்பது. இது உங்கள் கூந்தலை கிரீஸ் மற்றும் பிசுபிசுப் தன்மை கொண்டதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் படுக்கை மற்றும் தலையணையில் இருந்து அழுக்குகளையும் சேகரிக்கும்.

    இந்த அழுக்கு உங்கள் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களுடன் எளிதில் கலந்துவிடும் மற்றும் உச்சந்தலையில் சிக்குகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, உங்கள் கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    கூந்தல் ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தேய்ப்பது

    சில பெண்களுக்கு ஈரமான கூந்தலுக்கு எண்ணெய் பூசும் பழக்கம் உள்ளது. இந்த தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். உங்கள் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைமுடியின் வேர்க்கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.

    மேலும் மென்மையான சிக்கு மற்றும் இழுப்பது கூட முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கூந்தலை பாதுகாக்க, முதலில் உங்கள் கூந்தலை உலரவிட்டு, பின்னர் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

    அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்துதல்

    உலர்ந்த கூந்தல் மற்றும் உச்சந்தலையாக இருந்தாலும், அதிகப்படியான எண்ணெயை பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் கூந்தலுக்கு தேவைப்படுவதை விட அதிகமாக பயன்படுத்த வேண்டாம். எண்ணெயில் இருந்து விடுபட உங்களுக்கு நிறைய ஷாம்பு தேவைப்படும், இது உங்கள் கூந்தலை பராமரிக்கும். அதன் இயற்கையான பாதுகாப்பு எண்ணெய்களை எடுத்துக்கொள்ளும்.

    கூந்தலை மிகவும் இறுக்கமாக கட்டுவது

    முன்பு குறிப்பிட்டபடி, உச்சந்தலை கூந்தல் தளர்வானதாக இருப்பதால், எண்ணெய் வைத்தப் பிறகு, உங்கள் கூந்தலின் மயிர்க்கால்கள் பாதிக்கப்படக்கூடியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். அதனால், உங்கள் கூந்தலை இறுக்கமாக அல்லது பின்னலில் கட்டுவது வேர்களை பலவீனப்படுத்தி கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும். ஒரு தளர்வான குறைந்த போனிடெயில் கட்டவும்.

    • கொள்ளு ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
    • ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

    அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைந்து உடல் எடை எளிதில் குறையும்.

    தேவையான பொருட்கள் :

    முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 2

    தக்காளி - 3

    வரமிளகாய் - 5

    மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - சிறிதளவு

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    செய்முறை:

    கொள்ளினை 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கொள்ளினை எடுத்து கழுவி வடிகட்டிவிட்டு அதனை ஒரு துணியில் வைத்து கட்டி இரவு முழுவதும் விட வேண்டும். காலையில் எடுத்து பார்த்தால் கொள்ளு சிறிது முளைகட்டி இருக்கும்.

    முளைகட்டிய கொள்ளினை பாத்திரத்தில் கொட்டி வேக வைக்க வேண்டும்.

    ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, சீரகம், வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் வேக வைத்த கொள்ளு சிறிதளவு சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மசாலா கலவையினை வேகவைத்த கொள்ளுவில் சேர்க்க வேண்டும். மசாலா கொதித்து வரும்போது தாளிப்பு சேர்க்கலாம்.

    அதற்காக மீண்டும் வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தாளித்து கொள்ளு குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான கொள்ளு குழம்பு தயார்.

     

    • கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம்.
    • கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி.

    ஒரிசாவில் மிகவும் பிரபலமான தஹி வாலே பைங்கன் ரெசிப்பி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது தயிர், கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி தான் இது. பொதுவாக கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம். ஆனால் இந்த மாதிரி செய்திருக்க மாட்டீர்கள். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    பெரிய கத்தரிக்காய்- 2

    வெங்காயம்- 1

    தயிர்- ஒரு கப்

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 4

    கடுகு- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் இந்த ரெசிப்பி செய்வதற்கு பெரிய கத்தரிக்காய்களை பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய்களை வட்டமாகவும், சிறுது தடிமனாகவும் இருக்குமாறு பார்த்து வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காயில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூள், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய்களை முன்னும், பின்னுமாக உடையாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு கப் தயிரை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த தயிரினை வறுத்து வைத்துள்ள கத்தரிக்காய்களின் மேல் ஊற்றி பிரட்டிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து இந்த தாளிப்பு கலவையை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள தயிர் கத்தரிக்காய் கலவையில் ஊற்றி பிரட்டி எடுத்தால் தஹி வாலே பைங்கன் தயார்.

    இந்த ரெசிப்பி சாதம் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும்.

    • கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி.
    • ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும்.

    இந்த கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி. முகலாயர்கள் காலத்தில் ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த ரெசிபியை அவர்கள் ஈத் பெருநாளான ரம்ஜான் அன்று செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    அத்தகைய இனிப்பு ரெசிப்பியை நாம் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை வீடுகளில் முக்கியமான விழாக்காலங்களில் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா- 200 கிராம்

    சர்க்கரை- 200 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, ஏலக்காய், பிஸ்தா

    தேங்காய்- ஒரு ஸ்பூன்

    திராட்சை- ஒரு ஸ்பூன்

    பால்கோவா- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணொலியில் நெய் விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு சேமியாவையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு தண்ணீர் கொத்ததும் அதில் வறுத்த பொருட்கள் மற்றும் ஏலக்காய்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு சேமியாவையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கலவை சிறிது கெட்டியானதும் அதில் பால்கோவா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கிமாமி சேமியா தயார்.

     

    • பார்ட்டிகளில் செய்து அசத்துவதற்கு ஏற்ற டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 250 கிராம்

    பெரிய வெங்காயம்- 3

    பெரிய தக்காளி- 2

    பச்சை மிளகாய்- 1

    பூண்டு- 10பல்

    மல்லி தூள்- 2ஸ்பூன்

    சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்

    கரமசாலா- 1 1/4 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 1/4 ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

    முந்திரி பருப்பு- 20

    பாதாம் பருப்பு- 10

    ஃப்ரஷ் கீரிம்- 1/4 கப்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையானஅளவு

    தயிர்- ஒரு கப்

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், வெங்காயம், பிரெட் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய், பட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அதில் அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்து கலந்து அதில் பொறித்து வைத்துள்ள சிக்கன் கோப்தாக்களை போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கிரீமியான சிக்கன் மலாய் கோப்தா தயார். அதற்கு மேல் கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.

     

    • வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது.
    • வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை.

    இந்த கத்திரி வெயில் காலம் அனைவரையும் வதைத்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வெயில் மாலை வரை மக்களை திணறடிக்கிறது.

    வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது. வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை. ஏ.சி. வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் அதன்மூலம் இளைப்பாறுகிறார்கள். ஆனால் ஏ.சி. வாங்க முடியாதவர்களின் பாடு திண்டாட்டம் தான். சரி ஏ.சி. இல்லாட்மல் வீட்டை குளுமையாக வைத்திருக்க முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். அதற்கான வழிகள் இதோ....

    ஏ.சி. இல்லாத வீடுகளில் மின்விசிறி இருக்கும். மின் விசிறியை பயன்படுத்தி அறையை குளிரவைக்க முடியும். மின் விசிறியிலும் கூரையை ஒட்டி உள்ள சீலிங் ஃபேனை விட டேபிள் ஃபேன் அதிக குளிர்ந்த காற்றைத் தரும்.

    இந்த மின்விசிறிகள் மட்டுமின்றி, எக்சாஸ்ட் மின் விசிறிகளையும் பயன்படுத்தலாம். சமையலறை போன்ற வெப்பமான இடங்களில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற இவை உதவும். ஏ.சி.இல்லாமல் அறையை ஓரளவு குளுமையாக வைத்திருக்க எக்சாஸ்ட் ஃபேன்கள் கைகொடுக்கும்.

    திரைச்சீலைகள் மூலம், சூரியக் கதிர்கள் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம் . வெளிர்நிற திரைச்சீலைகளை பயன்படுத்துவது சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க உதவும். வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வண்ண ஜன்னல் கண்ணாடிகளும் ஓரளவுக்கு அறையின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க உதவும்.

    இயற்கையான காற்றோட்டத்துக்கான வழிகளைச் செய்யலாம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில். குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்துவைக்கலாம். ஒரே நேரத்தில் பல ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்துவைக்கும் போது. பாதுகாப்பு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

    அறையில் குளிர்ந்த நீரைத் தெளித்து பிறகு மின் விசிறியை ஓடவிடுங்கள். அப்போது தரையில் தெளிக்கப்பட்ட நீர் ஆவியாகி, அறைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இது கோடை காலத்தில் உஷ்ணத்தை வெல்ல ஏ.சி. இல்லாவிட்டாலும், கொஞ்சம் செலவு செய்ய முடியும் என்றால், ஏர் கூலர் ஒன்றை வாங்கலாம்.

    சிறிய இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். விரைவாக குளிர்ச்சியைக் கொடுப்பதில் இது சிறப்பாக செயல்படும். தற்போது சிறிய, குறைந்த விலையிலான ஏர் கூலர்கள் கிடைக்கின்றன.

    அறையில் சில அழகுத் தாவரங்களை வைத்து வளர்க்கலாம். அவை வீட்டை குளிர்விக்க உதவுகின்றன. ஏனெனில் அவை சுவாசிக்கும்போது சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கின்றன, சுத்திகரிக்கவும் செய்கின்றன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் கொடுக்கின்றன.

    வீட்டைச் சுற்றிலும் இடம் இருந்தால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.

    பொதுவாக, அதிக வெப்பத்தை உமிழும் எதையும் செய்யாமல் இருப்பதும் அறை வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வீட்டில் குண்டு பல்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து எல்.ஈ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற செயல்கள் மூலம், வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து. குளுமையாக வைத்திருக்கலாம்.

    • பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது.
    • எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம்.

    பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. இதை எப்படி போக்கலாம் என தெரியாமல் பலரும் குழம்புகிறார்கள். பொடுகின் முதல்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை எளிதாக விரட்டி விடலாம்.

    அதற்கு வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பொடுகு பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும்.

    முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் மாதிரி செய்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து பின்னர் கழுவினால் பொடுகு நீங்கிவிடும்.

    இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த விழுதையும் தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகுத்தொல்லை தீரும்.

    இந்த முறைகளை வாரத்துக்கு ஒரு தடவை செய்யலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது.

    ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பெண்களுக்கு கன்னம், மேல் உதடு, தாடை பகுதிகளில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கிறது. இது போன்ற முடி வளர்ச்சி அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. இது குறிப்பாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வருகிறது. ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதற்கு பெண்கள், த்ரெட்டிங், வேக்சிங் அல்லது ட்வீசிங் போன்றவற்றை செய்து தற்காலிகமாக முடியை நீக்கி வருகின்றனர். ஆனால், இதற்கு நிறைந்த தீர்வாக ஹார்மோன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

    பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - இது ஹார்மோன் குறைபாடு பிரச்சனையாகும். இதனால் பெண்களின் மாத விடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இதில் ஆண்களின் ஹார்மோன் ஆன ஆண்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனை வரும். இது போன்ற முடி வளர்ச்சி, மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.


    நாளமில்லா சுரப்பி கோளாறுகள் - நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது. இதனால் பெண்களுக்கு உடல் பருமன், வயிற்றை சுற்றி கொழுப்பு சேருதல், மற்றும் நீரிழுவு நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    மரபணு காரணம் - மரபணு காரணமாக அம்மா, அக்கா, அத்தை ஆகியோர்க்கு இந்த பிரச்சனை இருந்தால், இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    முதுமை - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முடி வளரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக செயல்படும். அதனால் கூட இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை முதுமையில் வரும்.

    கர்ப்ப காலம் - பெண்கள் உடலில் பல படிநிலைகளில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது. பருவம் அடைதல், கர்ப்ப காலம், உடல் பருமன், மாத விடாய் சுழற்சி நிற்கும் ஆகிய நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அதனால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி வரலாம்.


    அட்ரீனல் சுரப்பி கட்டிகள் - அட்ரீனல் ஹார்மோன் குறைபாடுகளால், உடலில் ஆண்ட்ரொஜென் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இதன் காரணமாக கருப்பையில் கட்டிகள் வளரும். மேலும் தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கும்.

    முடி வளர்ச்சி இருக்கிறது என்பதை உறுதி செய்தவுடன், மருத்துவரை அணுகி எந்த காரணத்தால் இப்படி முடி வளர்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
    • செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது.

    வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். சில செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்றால், அதைக் கட்டாயமாக வீட்டிற்கு முன் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன்படி நிறைய பேரின் வீடுகளில் பொன் அரளிச் செடியை வீட்டிற்கு முன் வளர்த்து வருவார்கள். அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை தான் பொன் அரளிச்செடி என்று கூறுவோம். இந்த அரளிச்செடி வீட்டில் வளர்க்கலாமா? இதோடு சேர்த்து சிவப்பு அரளி செடியையும் வீட்டில் வைப்பது சரியா? தவறா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


    இந்த சிவப்பு அரளி செடியை நாம் எல்லோரும், வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவில் (lamp post) அதிகமாக வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்? என்று பல பேருக்கு தெரிந்திருக்காது. பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. காற்றில் இருக்கும் கெட்ட சக்தியை தனக்குள் ஈர்த்துக்கொண்டு நல்ல காற்றை வெளிப்படுத்துவது தான் இந்த செவ்வரளி செடியின் தன்மை. அதாவது கார்பன் மோனாக்சைட், கார்பன்-டை-ஆக்சைடு இவைகளை தனக்குள் ஈர்த்து சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மை காரணமாகத்தான் இந்த செடியை காற்று மாசுபடும் இடத்தில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் அதை வைத்துள்ளார்கள்.

    இதனால் இந்த செவ்வரளி செடியை நம் வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் வீட்டிற்குள் வரும் காற்று சுத்தமாக வருவதற்கு இது ஒரு காரணமாக தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகளோ அல்லது தெரியாதவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடக் கூடாது என்பதற்காக இந்த செடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.


    கூடுமானவரை இந்த சிவப்பு அரளிப்பூவை உக்கிரமான தெய்வங்களுக்கு சூட்டுவதால் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த இரண்டு காரணங்கள் தான். செவ்வரளி பூ முருகனுக்கும் மிக உகந்தது தான். சிவபெருமானும் தன் தலையில் செவ்வரளி பூ பூவை சூடி இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் செவ்வரளி பூ செடியை முன் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். பின் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு பயமும் வேண்டாம்.

    அடுத்தபடியாக பொன் அரளி பூவிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொன் அரளி பூவை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய தொட்டியில் இந்த இரண்டு செடியையும் வைத்து வளர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.
    • ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    வீட்டில் இருந்தவாறு குறைந்தபட்ச வருமானத்திலிருந்து அதிகபட்ச வருமானம் வரை தரும் பெண்களுக்கு ஏற்ற பிசினஸ்.

    இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலையே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    மேலும் வீட்டிலேயே கடுமையான உழைப்பை செலுத்திய பெண்களால் பிறகு வேலைக்காக வெளியே செல்வது இயலாத காரியம் என்பதால் வீட்டில் இருந்தவரை வருமானம் ஈட்டும் தொழில்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குறைந்த நேரத்தில், முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

    • இந்த நிலையில் வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்களுக்கு ஏற்ற தொழில்கள், வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யும் பெண்கள் சீசனுக்கு மட்டும் இல்லாமல், முழு நேரத் தொழிலாக ஹோம் பேக்கரி தொடங்கி பயன்பெற முடியும்.


    • கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும், தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் போதிய வருமானம் கிடைக்கும்.

    • சிறிய நகை உற்பத்தி, செயின், கம்மல் போன்ற பல்வேறு வகைகளில் நகை வடிவங்களை சிறிய அளவில் வீட்டிலிருந்தவாரு தயாரித்தால் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்தே வருமானம் ஈட்ட முடியும்.


    • வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங் வர்த்தக நடவடிக்கையாக பயன்படுத்த முடியும். கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.

    • தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.


    • மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். இவையும் பயன்தரும் வணிக நடவடிக்கைகள் ஆகும். மேலும் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    • தற்போது ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதும் ஏற்ற வணிக நடவடிக்கையாகும்.


    • மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகு கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறான வணிக நடவடிக்கைகள் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான பிசினஸ்க்காக உருவெடுத்து இருக்கின்றனர்.

    ×