என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும்.
    • 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம்.

    வயது அதிகரிக்கும்போது இளமை தோற்றப் பொலிவு மங்கத் தொடங்கிவிடும். சருமத்தில் சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும். வயது முதிர்ச்சிக்கு அடித்தளமிடும் இத்தகைய மாற்றம் சிலரிடத்தில் விரைவாகவே தென்படும். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் 40 வயதுக்கு பிறகும் இளமை தோற்றத்தை தக்கவைக்கலாம். முன்கூட்டியோ, விரைவாகவோ முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கலாம். அதற்கு வித்திடும் விஷயங்கள்...

     சிவப்பு குடைமிளகாய்

    உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் 'சூப்பர் புட்' உணவாக கருதப்படும் இது நம்பமுடியாத அளவுக்கு விரைவாக வயதாகும் தன்மையை தடுக்கக்கூடியது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடியது.

    மேலும் சரும நலனுக்கு நன்மை சேர்க்கும் கரோட்டினாய்டுகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. அவை சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப்போராட உதவும். சூரியக்கதிர்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும்.

    பப்பாளி

    உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு பொருள், பப்பாளி. இது விரைவில் வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

    இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். வயதான அறிகுறிகள் வெளிப்படுவதை தாமதப்படுத்தும்.

    ப்ளூபெர்ரி

    இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சூரிய ஒளி, மாசுபாடு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும் அந்தோசயனின் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளும் அவற்றில் உள்ளன. மேலும் கொலாஜன் இழப்பைத் தடுத்து பொலிவான சருமத்தை தக்கவைக்கவும் உதவும்.

    புரோக்கோலி

    வைட்டமின் சி, கே, நார்ச்சத்து, போலேட், லுடீன், கால்சியம் உள்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட காய்கறியாக புரோக்கோலி விளங்குகிறது. இதில் வைட்டமின் சி இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையையும் அளிக்கிறது.


    அவகேடோ

    இந்த பழத்தில் வீக்கத்தை குறைக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு வித்திடுகின்றன. மேலும் அவகேடோ பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. பளபளப்பான புள்ளிகளற்ற சரும அழகுக்கு அடிகோலுகிறது.

    • 15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    • தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அதிக வலி இருக்கலாம். சில சமயங்களில் குறைவான வலியை உணரலாம். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் பாடல் கேட்க பிடிக்கும், சிலருக்கு பேச பிடிக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவாக உள்ள குணாதிசயம் கோபப்படுவது.

    மற்ற நாட்களை விட, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அதிக கோபம் வருவதாக பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தேசிய மருத்துவ நூலகத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், இதுக் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது, 15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்டுள்ள கட்டுரையில், மாதவிடாய் நோய்க்குறி(PMS) உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக கோபப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள் மனநிலை மாற்றங்கள், அதிகப்படியான பசி, சோர்வு மற்றும் எரிச்சல் ஆகும்.


    இதனுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களின் மனநிலை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால், பெண்கள் அதிகம் எரிச்சலடைவார்கள். அன்றாட வாழ்க்கையில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பெண்கள் கூட மாதவிடாய் நாட்களில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிடுகிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

    ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் மட்டுமே பெண்கள் கோபப்படுகிறார்கள் என்பது கிடையாது. ஒவ்வொரு பெண்ணின் குணாதிசயமும் மாறுப்படுகிறது, அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    எனவே மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஏன் அதிகம் கோபப்படுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

    • முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது.
    • நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.

    பூக்கள் என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ரோஜா என்றாலே சொல்லவா வேண்டும். அதுவும் நமது வீட்டில் வளர்ந்தால் எப்படி இருக்கும். நம்மில் பலருக்கு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ அதிகமா ரோஸ் செடி வைத்து வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனா நாம எவ்வளவுதான் ரோஸ் செடி வைத்து வளர்த்தாலும், சீக்கிரமாக இறந்து விடும். இல்லை என்றால் பூக்களே பூக்காது.

    அதற்காகவே ரோஸ் செடி வாங்கி வளர்ப்பதற்கு தயங்குவோம். இனி இந்த தயக்கம் வேண்டாம். இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ள சில டிப்ஸை உங்கள் ரோஸ் செடிக்கு (rose plant) செய்து வளர்த்து பாருங்கள். ரோஸ் செடி நன்றாக வளரும் மற்றும் செடியில் அதிகளவு பூக்களும் பூக்கும்.


    முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது. அதனுடன் இரண்டு இலைகளை சேர்த்து பறிக்க வேண்டும். அப்போது தான் ரோஸ் செடியில் அடுத்த துளிர்கள் விட்டு நன்கு வளர ஆரம்பிக்கும்.

    ரோஸ் செடியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு செடியாக இருந்தாலும் சரி செடிகளை வாங்கும்போது அதிகமாக துளிர்களை உள்ள செடிகளை மட்டும் தேர்வு செய்து வாங்கவும்.

    மேலும் ரோஸ் செடி வாங்கும் போது ஐந்து இலைகள் உள்ள செடிகளை தேர்வு செய்து வாங்கினால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    ரோஸ் செடிக்கு இயற்கை உரமாக வாரத்தில் ஒரு முறையாவது சமையலறை கழிவுகளான டீ தூள், காபி தூள், வெங்காய தோல், பூண்டு தோல், முட்டை ஓடு மற்றும் மக்கக்கூடிய காகிதங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்ட்டிக் பேனரில் வைத்து மூடி வைக்கவும்.


    ஒரு வாரம் வரை தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு குச்சியால் கிளறி விடவும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையை ரோஸ் செடிக்கு உரமாக இட்டு வந்தால் ரோஸ் செடி செழிப்பாக வளரும்.

    ரோஸ் செடிக்கு வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றாமல் மண், ஊட்ட சத்துக்காக நம் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தின் நீரை மட்டும் வடிகட்டி தண்ணீராக ஊற்றலாம். இவ்வாறு ஊற்றுவதால் செடி நன்றாக வளரும்.

    நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.

    இனி அவ்வாறு தூக்கி எரிய வேண்டாம். வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை ரோஸ் செடிக்கு ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    ரோஸ் செடிகளுக்கு உரம் வைக்கப்போகிறோம் என்றால் அன்று முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது.

    அதே போல் செடிகளுக்கு உரம் வைக்கும் போது மாலை நேரத்தில் வைத்தால் அதிக பலன் கிடைக்கும்.

    ரோஸ் செடிக்கு (rose plant) வாரம் ஒரு முறையாவது இயற்கை டானிக் ஊற்றுவதால் செடி நன்றாக வளரும் அதுமட்டும் இன்றி பூக்களும் அதிகளவு பூக்கும்.


    இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு வாங்கி கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    இந்த பேனரில் கடலை பிண்ணாக்கை கொட்டவும். பின்பு 10 லீட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    பின்பு அந்த பேனரை காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைக்கவும். (காற்று உள்ளே சென்று விட்டால் அவற்றில் புழுக்கள் வைத்து விடும் எனவே காற்று புகாத அளவிற்கு பேனரை நன்றாக மூடிவைத்து கொள்ளவும்)

    ஐந்து நாட்கள் கழிந்து இந்த கலவையை திறந்து பார்த்தால் நன்றாக நுரைத்து இருக்கும். இந்த கலவையை ஒரு பக்கெட் அளவிற்று எடுத்து கொண்டு. 10 லீட்டர் தண்ணீரில் கலந்து ரோஸ் செடி மற்றும் அனைத்து செடிகளுக்கும் தண்ணீராக ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும்.
    • நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது.

    கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். உணவு சமைக்கும்போதும் லேசாக வெளிப்படும் நறுமணம் கூட அதிகமாக உணர முடியும்.

    சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

    தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறி தான். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும்.

    வழக்கத்தை விட அதிகமாக சோர்வு இருந்தால் அதற்கு காரணம் கருத்தரித்தலாக இருக்கலாம்.

    நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர மற்ற உணவுகள் சாப்பிட தோன்றும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

    வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர முடியும். இது அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர முடியும்.

    இந்த அறிகுறிகள் மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

    இந்த அறிகுறிகளை உணரும்போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும்.
    • கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல.

    கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

    கர்ப்பமாக இருக்கும்போது உடலை ஆக்டிவாக வைத்திருப்பதும் முக்கியம். உங்கள் வயிற்றில் இருக்கும் சிறிய குழந்தையை நீங்கள் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும். இதனால், கர்ப்பிணிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வீக்கம் மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும். சமைக்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்து, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். 

    கர்ப்பிணி பெண்கள் வீட்டை துடைப்பது, துணி துவைப்பது, தரையை சுத்தம் செய்வது போன்ற வளைந்து கொடுக்கும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல. குழந்தையின் பாதுகாப்பிற்காக, இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம்.

    பெரும்பாலான வீட்டு வேலைகள் கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் செய்யப்படலாம். இருப்பினும், சில வீட்டு வேலைகளை ஆரம்ப கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி பிறக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மீண்டும் மீண்டும் இதே போன்ற பணிகளைச் செய்யும்போது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
    • தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

    ஆளி விதைகள் அறிவியல் பெயர் லினம் உசுடாடிசிமம் ஆகும். ஆளிவிதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து காரணமாக முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

    ஆளிவிதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு பங்களிக்கும். நீண்ட மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

    ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

    ஆளிவிதைகளில் லிக்னான்ஸ் எனப்படும் தாவர கலவை உள்ளது. இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டிஆக்சிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாத்து தலைமுடிகளின் வேர்கள் பலவீனம் அடைவதில் இருந்து தடுக்கிறது.

    மேலும் முடிவளர்ச்சிக்கு சீரான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன.
    • உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன.

    குதிகால் வெடிப்பு, பித்த வெடிப்பு என்றழைக்கப்படும் பாத வெடிப்பு வருவதற்கான காரணங்கள், மற்றும் பித்த வெடிப்பு நீங்க எளிய வழிகள் பற்றி பார்க்கலாம்.

    பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில்தான் இணைகின்றன. முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும்.

    தற்போது, 'பாத வெடிப்பு' என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினையாகும். இது "பித்த வெடிப்பு" என்றும் "கால் வெடிப்பு" என்றும் அழைக்கப்படுகிறது. இது அழகை மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

    குதிகால் வெடிப்பு காரணம் :

    உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருக்கும்போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது, கிருமித் தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    மருதாணி

    பாத வெடிப்புகளை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு, கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிய துண்டு சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.

    இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு, அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால், பாத வெடிப்பு நீங்கும்.

    எலுமிச்சை சாறு

    குதிகால் வெடிப்புக்கு இளம் சூடான நீரில், 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் பாதங்களில் படிந்திருக்கும். இறந்த செல்களை நீக்கிவிட்டு, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.

    மஞ்சள்

    பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து, வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

    மசாஜ்

    குதிகால் வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் பாதங்களை மசாஜ் செய்வது ஆகும். பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம், வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.

    • முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.
    • பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

    இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சினை. என்றாலும் இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடிவளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகை கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

    முகத்தில் ஏற்படும் முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முகமுடி வளர்ச்சியை கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களை காணலாம்.

    முகத்தில் உள்ள முடியை நீக்கவும், முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் உதவியாக இருக்கும். முதலில் பப்பாளியை மசித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி வர சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.

    அதேபோன்று கடலை மாவு மற்றும் மஞ்சள் பேக் கூட முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கடலைமாவு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு, சந்தனம் சேர்த்து ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

    ஒரு ஸ்பூன் தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி வரலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

    முட்டையின் வெள்ளைக்கருவில் சோளமாவு கலந்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி நன்றாக காய்ந்த பிறகு ஈரத்துணி கொண்டு துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும்.

    முகத்தை வறட்சி மற்றும் முகத்தில் முடி பிரச்சனையில் இருந்து பாதுகாக்க மைசூர் பருப்பை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பால், தேங்காய் எண்ணெய் கலந்து பேக் மாதிரி முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி வலுவலுப்புத்தன்மை அளிக்கிறது.

    • வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
    • டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    உடல் எடையை குறைத்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைந்து முகம், கை, கழுத்து, கைவிரல் போன்ற பகுதிகளில் சுருக்கங்கள் தோன்றும். இதனை போக்குவதற்கு வாரத்திற்கு ஒரு முறை டைட்டனிங் ஃபேஷியல் செய்ய வேண்டும்.

    இந்த டைட்டனிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். முட்டையின் வெள்ளைக்கரு, முல்தானிமட்டி, தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

    டைட்டனிங் மாஸ்குகளும், ரைட்டனின் ஃபேஷியல்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க உதவுகின்றன. சருமத்தின் அழகை பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை.

    முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு மட்டுமில்லாமல் தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலும் வறண்ட சருமம் சுருக்கம் இல்லாமல் பொலிவாக இருக்கும்.

    புரோட்டின் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. பெண்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

    • இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும்.
    • கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.

    இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது கிடைக்கின்றன. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது.

    கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.

    தேவையானவை:

    வெள்ளை அவல் – ½ கப்

    பொட்டுக்கடலை – ¼ கப்

    தேங்காய்த் துருவல் – ½ கப்

    வேர்க்கடலை – ¼ கப்

    வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்

    துருவிய வெல்லம் – 1½ கப்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்

    செய்முறை:

    வெறும் வாணலியில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் முதலியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    எல்லா பொருட்களும் ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி அதனை பொடித்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும்.

    பின்னர் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை வறுத்த மாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகபிடிக்கவும். மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான புரோட்டின் சத்து நிறைந்த லட்டு தயார்.

     

    • சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும்.
    • நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

    உடலுக்கு நன்மை பயக்கும் சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இதை யாரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இந்த சாமையை வைத்து இனிப்பான பொங்கல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    சாமை - 1 கப்

    தண்ணீர் - 2 கப்

    நெய் – ½ கப்

    வெல்லம் – ½ கப்

    ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்

    முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் சாமையை சுத்தமாக கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். ஏனெனில் ஊறிய சாமையை வேக வைக்க எளிமையாக இருக்கும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்தே வெந்துவிட்டதா என்பதை அறிய முடியும். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு வாணலியில் நெய் விட்டு உருகும் வரை காத்திருந்து நெய்யில் வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் உருகி சாமையோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.

    அதன் பிறகு அதில் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். சுவையான சாமை இனிப்பு பொங்கல் தயார்.

    மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க உகந்த பலகாரமாக இந்த சாமை பொங்கல் இருக்கும்.

     

    • காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
    • வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.

    செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த தேங்காய்ப்பால் குணுக்கு. இதனை பால் பனியாரம் என்று கூறுவார்கள். இந்த குணுக்கு வகைகளில் காரம், இனிப்பு என்று விதவிதமாக செய்வார்கள். இதனை காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

    இதில் உள்ள தேங்காய்ப்பால் உடல் உஷ்ணத்தை குறைத்து வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது. மேலும் உளுந்து உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது. எனவே அனைத்து வயதினரும் இதனை உண்ணலாம்.

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்- 1

    உளுந்து- 100

    நாட்டு சர்க்கரை- 100

    அரிசி- 2 ஸ்பூன்

    எண்ணெய்- பொறிப்பதற்கு

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் அதிகம் சேர்க்காமல்) அரைக்க வேண்டும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகைஉப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.

    அதற்குள் தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய் தூள், ருசிகேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். தித்திப்பான தேங்காய் பால் குணுக்கு தயார்.

     

    ×