என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் கருவி.
    • அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.

    இந்த சோதனை பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய மருத்துவர்களால் செய்யப்படும் மருத்துவ முறையாகும். இது இடுப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வகையாகும். இதில் கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் யோனி பகுதிகளில் பரிசோதனை செய்ய இந்த கருவி பயன்படுகிறது.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சோதனையானது உங்கள் உள் உறுப்புகளின் படங்களை உருவாக்க உயர்ந்த அதிர்வெண் அலைகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.

    அடிவயிறு அல்லது இடுப்பு அல்ட்ராசவுண்ட் டிரான்ஸ்யூசர் பயன்படுத்தப்படும். இப்பரிசோதனையில் மருத்துவர் அல்லது பரிசோதனை செய்யும் நிபுணர் யோனி பகுதி வழியாக 2 அல்லது 3 அங்குல அல்ட்ராசவுண்ட் ஆய்வை செருகுவார். இது கர்ப்பத்தை கண்காணிக்கவும், அறுவை சிகிச்சைக்கு திட்டமிடவும் உதவிபுரியும்.

    கர்ப்ப காலத்தில் கருவின் இதயத்துடிப்பை கண்காணிக்கவும், கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் காரணங்கள் உள்ளதா அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கான அறிகுறி உணரும் போது கருப்பை வாயை பார்க்க இவை பரிந்துரைக்கப்படுகிறது.

    நஞ்சுக்கொடி அசாதாரணங்களை பரிந்துரைக்கவும். அசாதாரண ரத்தபோக்குக்கான மூலத்தை கண்டறியவும், சாத்தியமான கருச்சிதைவை கண்டறியவும், ஆரம்ப கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் யோனியின் உட்புறம் செருகுவதால் இது அசெளகரியத்தை கொடுக்கலாம். இந்த கருவியானது யோனியின் வடிவத்தை வளைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்முறை முடிந்தவரை வலியற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வைட்டமின் பி மற்றும் போலேட் சத்துக்கள் நிறையவே இருக்குது.
    • ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய பாதிப்புகள் ஏற்படாமல்l தடுக்க உதவுகிறது.

    கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தில் அதிகமான புரதம், தாமிரம், இரும்புச் சத்துக்கள் இருக்கிறது. மெக்னீசியம், கால்சியம் சத்துக்களும் இதில் இருக்கறதால் உடலுக்கு வேண்டிய உயிரோட்டம் கிடைக்குது. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் இதில் நிறையவே இருக்குது.

    இதில் இருக்கிற ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கறதோட, சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படாம தடுக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    சிவப்பு சோளம்-2 கப்

    அரிசி-அரை கப்

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    உளுந்து- கால்கப்

    பச்சைமிளகாய்- 2

    கறிவேப்பிலை- தாளிக்க

    தேங்காய்- துருவல் ஒரு கப்

    பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    முதலில் அரிசியையும், சிவப்பு சோளத்தையும் கழுவி ஊற வைக்க வேண்டும். அதேபோல உளுந்தையும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு இவைமூன்றயும் வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு சேர்த்து 5 மணிநேரம் புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி இந்த கலவையினை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இபோது குழிப்பனியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக ஊற்றி எடுத்தால் சிவப்ப சோள குழிப்பனியாரம் தயார். கார சட்னியுடன் தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும். இதே மாவினை இட்லி, தோசையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.

    • உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம்.
    • வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.

    பொதுவாக குளிர்காலத்தில் தான் உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம். ஆனால் கோடை காலங்களிலும் லிப் பாம் அவசியம் என்கிறார்களே என்றால், கோடை காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க இந்த லிப் பாம் பெரிதும் உதவுகிறது.

    குளிர் காலத்தில் உதடுகள் வறண்டு காணப்படும் என்பதால் பலரும் லிப் பாம் போடுவதற்கு மறப்பதில்லை. இதே பிரச்சினை கோடை காலத்தில் இருக்கும் என்பதாலும் லிப் பயன்படுத்தலாம்.

    ஆனால் கோடை காலத்தில் பயன்படுத்தும் லிப் பாம் போல அதிக அடர்த்தி இல்லாமல் லேசாக இருக்கக்கூடிய மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய லிப் பாம்களை பயன்படுத்துவது நல்லது.

    கோரமைட், ஹையாலரோனிக் ஆசிட் போன்றவை சேர்ந்த லிப் பாம்கள் நன்று வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

    சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள மிகவும் முக்கியம். உடல் திடீரென தண்ணீர் வறட்சியால் வறண்டு போகும் போது அது நேரடியாக எதிரொலிப்பது உதட்டில் தான். எனவே உதடுகள் வறட்சி அடையாமலும், கருத்துப்போகாமலும், வெயிலினால் பாதிப்படையாமலும் பாதுகாப்பதற்கு இந்த லிப் பாம்கள் உதவுகின்றன.

    சூரிய வெப்பக்காற்றினால் உதடுகள் பாதிக்கப்பட்டு வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.

    வயோதிகத்தை முதலில் சொல்வது உதடுகளும், சருமமும் தான். எனவே அவற்றை நல்ல முறையில் பராமரித்தால் தான் என்று இளமையாக இருக்க முடியும்.

    மேலும் உதடுகளின் பராமரிப்புல் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு முக்கியத்துவம் பெறுவதால் கோடைகாலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • பெண்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை டாக்டரிடம் சொல்ல தயங்குகிறார்கள்.
    • இது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிகள் மருத்துவரிடம் தனக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தங்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை மருத்துவர்களிடம் கூட நேரடியாக சொல்ல தயங்குகிறார்கள்.

    இது வெட்கப்பட வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது பாலியல் குறித்த பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகளை மருத்துவரிம் மறைக்க கூடாது. கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு நீங்கள் விரும்பினால் இந்த பிரச்சனைகளை நீங்கள் மருத்துவரிடம் மறைக்க கூடாது.

    அடிவயிற்று வலி

    மாதவிடாயின் போது பிடிப்புகள், மார்பக வலி மற்றும் தலைவலி உண்டாகலாம். சில பெண்களுக்கு மிதமானது முதல் தீவிரமானது வரை இந்த வலி இருக்கும் சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு இருக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு மாதமும் வேதனையாக மோசமானதாக இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    உடலுறவின் போது வலி

    தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது உடலுறவில் தீவிரமாக வலி இருந்தால் இது இயல்புதான் என்று நினைக்காமல் மருத்துவரிடம் ஆலோசியுங்கள். ஏனெனில் பிறப்பு உறுப்பில் வறட்சி தன்மை இருந்தால் உடலுறவின் போது அசெளகரியம் உண்டாக்குவதோடு வலியையும் ஏற்படுத்தும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

    பெண்களுக்கு உடலுறவின் போது பிறப்புறுப்பு வறட்சியாகவே இருந்தால் அல்லது உறவுக்கு பின்பு பெண் உறுப்பில் ரத்தக்கசிவு இருந்தால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

    வெள்ளைப்படுதல்

    பெண்களின் பிறப்புறுப்பில் கசியும் வெள்ளைப்படுதல் பெண் உறுப்பை பாதுகாக்கவே. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் முன்பு அல்லது பின்பு இந்த வெள்ளைப்படுதல் இருக்கும். இது எல்லாருக்குமே பொதுவானது. ஆனால் சிலருக்கு வெள்ளைப்படுதல் அதிகரிப்பதோடு அவை நிறத்திலும் மஞ்சள் பச்சை என்று இருந்தால் அது உடனடியாக கவனிக்க வேண்டியதே. உடனடி சிகிச்சை தேவையாக இருக்கலாம்.

    பெண் உறுப்பு பகுதியில் கட்டி

    பெண்களின் பிறப்புறுப்பு பகுதியின் உட்பகுதி வல்வா என்று அழைக்கப்படும். இந்த இடத்தில் வரும் புடைப்புகள் மற்றும் வளர்ச்சியை கண்டறிந்தால் நீங்கள் தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். இது ஹெர்பேஸ் அல்லது மருக்கள் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்க்களின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உங்கள் பாலியல் வரலாறு குறித்து வெளிப்படையாக இருப்பது அவசியம். 

    • வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம்.
    • கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம். ஆனால் எல்லா நேரங்களிலும் எண்ணெய் தேய்க்கலாமா என்றால், அதிலும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

    எண்ணெய் வைத்தவுடன் சீப்பு போடுவது

    பெண்கள் வழக்கமாக, கூந்தலில் உள்ள சிக்குகளை நீக்க, கூந்தலுக்கு எண்ணெயிட்ட பிறகு சீப்பை பயன்படுத்தி வாருவது இயற்கையானது. ஆனால் இது ஒரு பெரும் தவறு, அதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

    அதே மாதிரி, நல்ல எண்ணெய் மசாஜ் செய்த பிறகு, சீப்பு பயன்படுத்தினாலும் உச்சந்தலையில் உள்ள கூந்தல் உடையக்கூடியதாக மாறும். அதாவது, கூந்தலுக்கு எண்ணெய் வைத்தவுடன் கூந்தலுக்கு சீப்பு பயன்படுத்துவது உடைப்பு மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலுக்கு சீப்பு வேண்டும் என்றால், மெதுவாக உச்சந்தலையில் இருந்து கீழ்நோக்கி சீவலாம்.

    இரவு முழுவதும் கூந்தலில் எண்ணெய் வைத்திருப்பது

    பெரும்பாலான இந்திய பெண்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, இரவு முழுவதும் உச்சந்தலையில் எண்ணெயை வைத்திருப்பது. இது உங்கள் கூந்தலை கிரீஸ் மற்றும் பிசுபிசுப் தன்மை கொண்டதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் படுக்கை மற்றும் தலையணையில் இருந்து அழுக்குகளையும் சேகரிக்கும்.

    இந்த அழுக்கு உங்கள் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களுடன் எளிதில் கலந்துவிடும் மற்றும் உச்சந்தலையில் சிக்குகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, உங்கள் கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    கூந்தல் ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தேய்ப்பது

    சில பெண்களுக்கு ஈரமான கூந்தலுக்கு எண்ணெய் பூசும் பழக்கம் உள்ளது. இந்த தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். உங்கள் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைமுடியின் வேர்க்கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.

    மேலும் மென்மையான சிக்கு மற்றும் இழுப்பது கூட முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கூந்தலை பாதுகாக்க, முதலில் உங்கள் கூந்தலை உலரவிட்டு, பின்னர் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

    அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்துதல்

    உலர்ந்த கூந்தல் மற்றும் உச்சந்தலையாக இருந்தாலும், அதிகப்படியான எண்ணெயை பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் கூந்தலுக்கு தேவைப்படுவதை விட அதிகமாக பயன்படுத்த வேண்டாம். எண்ணெயில் இருந்து விடுபட உங்களுக்கு நிறைய ஷாம்பு தேவைப்படும், இது உங்கள் கூந்தலை பராமரிக்கும். அதன் இயற்கையான பாதுகாப்பு எண்ணெய்களை எடுத்துக்கொள்ளும்.

    கூந்தலை மிகவும் இறுக்கமாக கட்டுவது

    முன்பு குறிப்பிட்டபடி, உச்சந்தலை கூந்தல் தளர்வானதாக இருப்பதால், எண்ணெய் வைத்தப் பிறகு, உங்கள் கூந்தலின் மயிர்க்கால்கள் பாதிக்கப்படக்கூடியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். அதனால், உங்கள் கூந்தலை இறுக்கமாக அல்லது பின்னலில் கட்டுவது வேர்களை பலவீனப்படுத்தி கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும். ஒரு தளர்வான குறைந்த போனிடெயில் கட்டவும்.

    • கொள்ளு ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
    • ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

    அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைந்து உடல் எடை எளிதில் குறையும்.

    தேவையான பொருட்கள் :

    முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 2

    தக்காளி - 3

    வரமிளகாய் - 5

    மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - சிறிதளவு

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    செய்முறை:

    கொள்ளினை 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கொள்ளினை எடுத்து கழுவி வடிகட்டிவிட்டு அதனை ஒரு துணியில் வைத்து கட்டி இரவு முழுவதும் விட வேண்டும். காலையில் எடுத்து பார்த்தால் கொள்ளு சிறிது முளைகட்டி இருக்கும்.

    முளைகட்டிய கொள்ளினை பாத்திரத்தில் கொட்டி வேக வைக்க வேண்டும்.

    ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, சீரகம், வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் வேக வைத்த கொள்ளு சிறிதளவு சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மசாலா கலவையினை வேகவைத்த கொள்ளுவில் சேர்க்க வேண்டும். மசாலா கொதித்து வரும்போது தாளிப்பு சேர்க்கலாம்.

    அதற்காக மீண்டும் வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தாளித்து கொள்ளு குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான கொள்ளு குழம்பு தயார்.

     

    • கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம்.
    • கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி.

    ஒரிசாவில் மிகவும் பிரபலமான தஹி வாலே பைங்கன் ரெசிப்பி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது தயிர், கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி தான் இது. பொதுவாக கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம். ஆனால் இந்த மாதிரி செய்திருக்க மாட்டீர்கள். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    பெரிய கத்தரிக்காய்- 2

    வெங்காயம்- 1

    தயிர்- ஒரு கப்

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 4

    கடுகு- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் இந்த ரெசிப்பி செய்வதற்கு பெரிய கத்தரிக்காய்களை பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய்களை வட்டமாகவும், சிறுது தடிமனாகவும் இருக்குமாறு பார்த்து வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காயில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூள், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய்களை முன்னும், பின்னுமாக உடையாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு கப் தயிரை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த தயிரினை வறுத்து வைத்துள்ள கத்தரிக்காய்களின் மேல் ஊற்றி பிரட்டிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து இந்த தாளிப்பு கலவையை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள தயிர் கத்தரிக்காய் கலவையில் ஊற்றி பிரட்டி எடுத்தால் தஹி வாலே பைங்கன் தயார்.

    இந்த ரெசிப்பி சாதம் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும்.

    • கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி.
    • ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும்.

    இந்த கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி. முகலாயர்கள் காலத்தில் ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த ரெசிபியை அவர்கள் ஈத் பெருநாளான ரம்ஜான் அன்று செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    அத்தகைய இனிப்பு ரெசிப்பியை நாம் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை வீடுகளில் முக்கியமான விழாக்காலங்களில் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா- 200 கிராம்

    சர்க்கரை- 200 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, ஏலக்காய், பிஸ்தா

    தேங்காய்- ஒரு ஸ்பூன்

    திராட்சை- ஒரு ஸ்பூன்

    பால்கோவா- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணொலியில் நெய் விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு சேமியாவையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு தண்ணீர் கொத்ததும் அதில் வறுத்த பொருட்கள் மற்றும் ஏலக்காய்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு சேமியாவையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கலவை சிறிது கெட்டியானதும் அதில் பால்கோவா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கிமாமி சேமியா தயார்.

     

    • பார்ட்டிகளில் செய்து அசத்துவதற்கு ஏற்ற டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 250 கிராம்

    பெரிய வெங்காயம்- 3

    பெரிய தக்காளி- 2

    பச்சை மிளகாய்- 1

    பூண்டு- 10பல்

    மல்லி தூள்- 2ஸ்பூன்

    சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்

    கரமசாலா- 1 1/4 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 1/4 ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

    முந்திரி பருப்பு- 20

    பாதாம் பருப்பு- 10

    ஃப்ரஷ் கீரிம்- 1/4 கப்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையானஅளவு

    தயிர்- ஒரு கப்

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், வெங்காயம், பிரெட் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய், பட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அதில் அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்து கலந்து அதில் பொறித்து வைத்துள்ள சிக்கன் கோப்தாக்களை போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கிரீமியான சிக்கன் மலாய் கோப்தா தயார். அதற்கு மேல் கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.

     

    • வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது.
    • வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை.

    இந்த கத்திரி வெயில் காலம் அனைவரையும் வதைத்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வெயில் மாலை வரை மக்களை திணறடிக்கிறது.

    வெயில் நேரத்தில் வெளியே செல்ல முடியாது. வீட்டிலேயே இருக்கலாம் என்றாலும் புழுக்கம் தாள முடியவில்லை. ஏ.சி. வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்கள் அதன்மூலம் இளைப்பாறுகிறார்கள். ஆனால் ஏ.சி. வாங்க முடியாதவர்களின் பாடு திண்டாட்டம் தான். சரி ஏ.சி. இல்லாட்மல் வீட்டை குளுமையாக வைத்திருக்க முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். அதற்கான வழிகள் இதோ....

    ஏ.சி. இல்லாத வீடுகளில் மின்விசிறி இருக்கும். மின் விசிறியை பயன்படுத்தி அறையை குளிரவைக்க முடியும். மின் விசிறியிலும் கூரையை ஒட்டி உள்ள சீலிங் ஃபேனை விட டேபிள் ஃபேன் அதிக குளிர்ந்த காற்றைத் தரும்.

    இந்த மின்விசிறிகள் மட்டுமின்றி, எக்சாஸ்ட் மின் விசிறிகளையும் பயன்படுத்தலாம். சமையலறை போன்ற வெப்பமான இடங்களில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற இவை உதவும். ஏ.சி.இல்லாமல் அறையை ஓரளவு குளுமையாக வைத்திருக்க எக்சாஸ்ட் ஃபேன்கள் கைகொடுக்கும்.

    திரைச்சீலைகள் மூலம், சூரியக் கதிர்கள் நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்கலாம் . வெளிர்நிற திரைச்சீலைகளை பயன்படுத்துவது சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சுமார் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க உதவும். வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வண்ண ஜன்னல் கண்ணாடிகளும் ஓரளவுக்கு அறையின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க உதவும்.

    இயற்கையான காற்றோட்டத்துக்கான வழிகளைச் செய்யலாம். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில். குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்துவைக்கலாம். ஒரே நேரத்தில் பல ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்துவைக்கும் போது. பாதுகாப்பு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.

    அறையில் குளிர்ந்த நீரைத் தெளித்து பிறகு மின் விசிறியை ஓடவிடுங்கள். அப்போது தரையில் தெளிக்கப்பட்ட நீர் ஆவியாகி, அறைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இது கோடை காலத்தில் உஷ்ணத்தை வெல்ல ஏ.சி. இல்லாவிட்டாலும், கொஞ்சம் செலவு செய்ய முடியும் என்றால், ஏர் கூலர் ஒன்றை வாங்கலாம்.

    சிறிய இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். விரைவாக குளிர்ச்சியைக் கொடுப்பதில் இது சிறப்பாக செயல்படும். தற்போது சிறிய, குறைந்த விலையிலான ஏர் கூலர்கள் கிடைக்கின்றன.

    அறையில் சில அழகுத் தாவரங்களை வைத்து வளர்க்கலாம். அவை வீட்டை குளிர்விக்க உதவுகின்றன. ஏனெனில் அவை சுவாசிக்கும்போது சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கின்றன, சுத்திகரிக்கவும் செய்கின்றன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் கொடுக்கின்றன.

    வீட்டைச் சுற்றிலும் இடம் இருந்தால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.

    பொதுவாக, அதிக வெப்பத்தை உமிழும் எதையும் செய்யாமல் இருப்பதும் அறை வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வீட்டில் குண்டு பல்புகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து எல்.ஈ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற செயல்கள் மூலம், வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து. குளுமையாக வைத்திருக்கலாம்.

    • பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது.
    • எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம்.

    பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. இதை எப்படி போக்கலாம் என தெரியாமல் பலரும் குழம்புகிறார்கள். பொடுகின் முதல்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை எளிதாக விரட்டி விடலாம்.

    அதற்கு வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பொடுகு பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும்.

    முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் மாதிரி செய்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து பின்னர் கழுவினால் பொடுகு நீங்கிவிடும்.

    இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த விழுதையும் தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகுத்தொல்லை தீரும்.

    இந்த முறைகளை வாரத்துக்கு ஒரு தடவை செய்யலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    ×