என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சிக்கன் பிடிக்காத அசைவப் பிரியர்கள் என யாரேனும் உள்ளனரா? அவர்களுக்காகவே ஒரு புதுவித ரெசிப்பியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 4 மார்பு துண்டங்கள்
    எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
    எலுமிச்சை தோல் - சிறிதளவு
    சிக்கன் ஸ்டாக் - 2 கப்
    கார்ன்ஃப்ளவர் - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் -5
    வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    ஜாதிக்காய் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    லெமன் சிக்கன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக கழுவி அதில் உள்ள எலும்புகளை நீக்கி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தடவி ஊற விடவும்.

    அடுத்து 2 ஸ்பூன் கார்ன்ப்ளவரை நீரில் கரைத்துக் கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    எலுமிச்சைத் தோலினை துருவிக் கொள்ளவும்.

    சிக்கனை கார்ன்ஃப்ளவர் மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    அடுத்து தவாவில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், வெள்ளை மிளகுத் தூள், உப்பு, ஜாதிக்காய், துருவியஎலுமிச்சைத் தோல், சிக்கன் ஸ்டாக் போன்றவற்றினைப் போட்டு வேகவிடவும்.

    இதில் கார்ன்ஃப்ளவரை ஊற்றிக் கலந்து வேகவிட்டு இறக்கி, சிக்கனைப் போட்டு மீண்டும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி இறக்கினால் லெமன் சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ராகி நூடுல்ஸ் - ஒரு கப்,
    வெங்காயம் - கால் கப்,
    வெங்காயத் தாள் - தேவையான அளவு
    ப.மிளகாய் - 3
    நெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
    குடை மிளகாய் - 1,
    கோஸ் - சிறிய துண்டு
    எண்ணெய் - தேவையான அளவு

    ராகி வெஜ் நூடுல்ஸ்

    செய்முறை

    வெங்காயத்தாள், கேரட், ப.மிளகாய், வெங்காயம், குடை மிளகாய், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி, ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து குடைமிளகாய், கேரட், கோஸ், உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வேக வைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்.

    மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் ஒரு டீஸ்பூன் நெய், வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    சூப்பரான ராகி வெஜ் நூடுல்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிட அருமையான சிற்றுண்டி ஆலு போஹா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு -  1
    கேரட்  - 1
    வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு.

    ஆலு போஹா

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம், கேரட், இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஊற வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உருளைகிழங்கு, கேரட் துண்டுகள், உப்பு சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதில் பிசிறிய அவலை போட்டு (உதிர்த்து போட்டு) கலக்கவும்.

    நன்கு சூடானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கினால்…. சூப்பரான ஆலு போஹா தயார்.

    குறிப்பு: இதை அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் சட்னி தொட்டும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நூடுல்ஸ் என்றால் சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - அரை கப்,
    நறுக்கிய வெங்காயம் - அரை கப்,
    குடைமிளகாய் - 1
    கேரட் - அரை கப்,
    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    சில்லி கார்லிக் நூடுல்ஸ்

    செய்முறை:

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    குடைமிளகாய், கேரட்டை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.

    அடுத்து அதில் கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.

    நன்கு கலந்து வந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

    சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை மாவில் சத்தான சுவையான கேசரி செய்யலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்
    நெய் - 1/2 கப்
    சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6
    தண்ணீர் - ஒன்றரை கப்

    கோதுமை மாவு கேசரி

    செய்முறை:

    கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி  மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும்.

    ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத் தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.

    வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும்.

    மாவு சிறிது நேரத்தில், வெல்லப் பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)

    ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

    இதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நொறுக்குத்தீனிக்கு மாற்றாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புட்டு வகைகளை வீட்டில் தயாரித்து சுவைக்கலாம். இன்று சுவையான வாழைக்காய் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருடகள் :

    வாழைக்காய் - 3
    பெ.வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    தேங்காய் துருவல் - கால் கப்
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    வாழைக்காய்

    செய்முறை:

    பெரிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைக்காயை இரண்டாக கீறி அகன்ற பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி குழையவிடாமல் வேகவைத்து எடுக்கவும்.

    ஆறியதும் தோலை நீக்கி பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்ததும் உதிர்த்து வைத்த வாழைக்காய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து இடைவிடாமல் கிளறி வாழைக்காய் வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வாழைக்காய் புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சிக்கனை வைத்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம்.
    தேவையானப் பொருட்கள் :

    சிக்கன் துண்டுகள் - அரை கிலோ,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    பச்சை மிளகாய் - 6,
    எண்ணெ‌ய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    பெருஞ்சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்,
    மிளகு தூள் - தேவையான அளவு
    கரம்மசாலா - தேவையான அளவு
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    தேங்காய் துருவல் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.

    சிக்கன் பொடிமாஸ்

    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.

    கொத்தமல்லி, ன்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து சூடு ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எ‌ண்ணெ‌ய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப,மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், உப்பு போட்டு வதக்கவும்.

    சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

    தேங்காய் துருவல் விருப்பம் இல்லாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் -
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலந்து, ஃபிரிட்ஜில் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    அடுத்ததாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டுங்கள்.

    அடுத்ததாக தனியா பொடி, இடித்த மிளகுப் பொடி சேர்த்து சிறு தீயில் கிளறி விடவும்.

    இறுதியாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.

    பின் தண்ணீர் வற்றி சிக்கன் மென்மையாக வேகும் வரை கொதிக்க வையுங்கள்.

    தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.

    பரிமாறும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை தூவி பிரட்டிவிட்டுப் பரிமாறுங்கள்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் குடைமிளகாய் பொரியல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு - 2 பல்
    குடைமிளகாய் - 1
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது

    காளான் குடைமிளகாய் பொரியல்

    செய்முறை:

    வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாய், காளாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

    பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்தது தண்ணீர் வற்றியதும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான காளான் குடைமிளகாய் பொரியல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான குச்சி ஐஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று மாம்பழம் சேர்த்து குளுகுளு மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - அரை லிட்டர்,
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    சர்க்கரை - 100 கிராம்,
    பாதாம் - சிறிது
    முந்திரி - சிறிது
    மாம்பழம் - 1

    மாம்பழ குச்சி ஐஸ்

    செய்முறை

     பாலை நன்கு வற்ற காய்ச்சவும்.

    அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும்.

    அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.

    மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆற விடவும்.

    இதற்கிடையே மாம்பழத்தை தோல் சீவி நீளநீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும்.

    பால் அரிசி மாவு கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குல்பி அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.

    குல்பி அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம்.

    மாம்பழ குல்பி உறைந்ததும் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவை கேசரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் சூப்பரான சுவையில் மில்க் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 200 மில்லி லிட்டர்
    சர்க்கரை - 100 கிராம்
    ஏலக்காய் - 7
    வெள்ளை ரவை - 100 கிராம்
    நெய் - 30 மில்லி
    முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
    கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 2 டேபிள்ஸ்பூன்
    பாதாம் பருப்பு - 2
    பிஸ்தா - 2
    செர்ரி பழம் - 2

    மில்க் கேசரி

    செய்முறை:

    வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

    மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

    பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி, கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

    இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

    குறிப்பு:

    கேசரிக்கு நிறம் வேண்டு மென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம்

    அல்லது கேசரி மீது ஒரு சிட்டிகை குங்குமப் பூவைத் தூவியும் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று தர்பூசணியில் சூப்பரான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி - 2 கப்
    சர்க்கரை - தேவையான அளவு
    ஃபிரெஷ் கிரீம் - 2 ஸ்பூன்
    ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி

    தர்பூசணி ஐஸ்கிரீம்

    செய்முறை

    தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

    பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.

    2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×