என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பருப்பு உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் பருப்பு உருண்டை ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருப்பு உருண்டை செய்ய


    ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்
    காய்ந்த மிளகாய் - 5
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    ரசம் வைக்க :


    நெய் - 3 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    புளி தண்ணீர் - 1 கப்
    தக்காளி - 1
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    சீரகப் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    பருப்பு உருண்டை ரசம்

    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

    மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும்.

    அதோடு மஞ்சள், தனியா , சீரகம் , மிளகு தூள், உப்பு, 2  1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

    ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.

    சூப்பரான பருப்பு உருண்டை ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 100 கிராம்
    குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 5 பல்
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
    வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    மைசூர் சில்லி சிக்கன்

    செய்முறை:

    சிக்கனை துண்களாக வெட்டி நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

    குடைமிளகாய், வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.

    அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

    மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான மைசூர் சில்லி சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் பிரெட் வடை. இந்த வடையை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 6,
    உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
    வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு,
    பச்சை மிளகாய் - 1,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பிரெட் வடை

    செய்முறை:

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான பிரெட் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட இந்த ஆம்லெட் புளிக்குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    புளி - எலுமிச்சை காய் அளவு
    மஞ்சத்தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
    கொத்த மல்லித்தூள் - அரை ஸ்பூன்
    சோம்பு - அரை ஸ்பூன்
    தேங்காய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க வேண்டிய பொருட்கள்:

    காய்ந்த மிளகாய் - 2
    மிளகு - அரை ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்

    தாளிக்க வேண்டிய பொருட்கள்:


    கடுகு -  1/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/4டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 1 கொத்து

    ஆம்லெட் புளிக்குழம்பு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய், சீரகம், மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு சோம்பையும், தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு முட்டை, உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய், சீரகம், மிளகு) பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்து கொள்ளவும்.

    பின்பு ஆம்லெட்டை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    தக்காளி குழைய வதக்கியதும் புளிச் சாரையுடன், மஞ்சத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

    மசாலா பச்சை வாசனை  போனவுடன் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது (தேங்காய் + சீரகம்) சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

    இறக்கும் பொழுது வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும்.

    சுவையான முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தான சிக்கனுடன் நெய் சேர்த்து சூப்பரான சிக்கன் நெய் சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    பாசுமதி அரிசி - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    எலுமிச்சைபழம் - அரை மூடி
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - கால் கிலோ
    தக்காளி - 3
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - 10 பல்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    பட்டை - சிறிது
    புதினா - கால் கட்டு
    கொத்தமல்லி இலை - கால் கட்டு
    முந்திரிப்பருப்பு - 10
    தேங்காய் - கால் மூடி
    நெய் - 100 கிராம்

    சிக்கன் நெய் சோறு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்கு கழுவி அதனுடன் 1 1/2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் உதிரியாக வேக வைத்து கொள்ளவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.

    தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும்.

    அடுத்து வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும். அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

    வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து அதில் தக்காளி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தணலில் வேக வைக்கவும்.

    அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும்.

    பிறகு கொத்தமல்லி, புதினாவைத் தூவவும்.

    அடுத்து அதில் ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும்.

    கடைசியில் வறுத்த முந்திரி பருப்பு, தனியான எடுத்து வைத்த வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் நெய் சோறு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தர்பூசணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தர்பூசணி பழத்தை வைத்து சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி பழம்(சிறியது) - 1
    வெல்லம் - அரை கிலோ
    தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
    நெய் - 50 கிராம்,
    முந்திரி - 10
    ஏலக்காய்த் தூள் - சிறிய அளவு

    தர்பூசணி

    செய்முறை:

    முந்திரியை நெய் விட்டு வறுத்து வைக்கவும்.

    தர்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.

    வெல்லத்தைப் பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும். பாதிபதம் வந்ததும், தர்பூசணி கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து வேகவிடவும்.

    இடையிடையே நெய் ஊற்றி, நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

    கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கொட்டி பரவலாக வைக்கவும், ஆறியதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும்.

    தர்பூசணி அல்வா தயார். சுவையும், சத்தும் மிக்கது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வெரைட்டியில் சமோசா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாட்டு இறைச்சியில் சூப்பரான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)
    உருளைக்கிழங்கு - 4
    பச்சை மிளகாய் -  3
    பெரிய வெங்காயம் -  2
    கறிமசாலா -  1 தேக்கரண்டி
    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
    மிளகாய் பொடி - தேவையான அளவு
    சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி
    ஏலக்காய்-  2
    கருவாப்பட்டை-  2
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்

    சமோசா செய்ய:

    மைதா மாவு - 3 தேக்கரண்டி
    சமோசா பட்டி (wrap) (கடைகளில் கிடைக்கும், கிடைக்காதவர்கள் தனியாக மைதா மாவு வைத்துக் கொள்ளவும்)

    மாட்டு இறைச்சியில் அருமையான சமோசா செய்யலாம்

    செய்முறை:

    மாட்டு கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
     
    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த கறியை சிறிது உப்பு, மஞ்சள் இட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

    உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

    மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தோசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும்.

    (சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை போட்டு அது பொரிந்ததும் இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்.

    அதோடு இஞ்சி பூண்டு அரைத்ததை போட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்

    இதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா மல்லி பொடி, மிளகாய் பொடி, தேவையான அளவு போட்டு கிளறி விடவும்.

    கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

    சமோசா பட்டி கிடைக்காதவர்கள், மைதாமாவில் சிறிது வெந்நீர், தேவையான உப்பு, சீரகம் போட்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும்.  

    பின்பு மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும். இவற்றை சப்பாத்தி போல உருட்டி எடுத்து அவற்றை கத்தி மூலம் இரு பாகமாக வெட்டி வைத்துக் கொள்ளலாம்.

    சமோசா உறையில் தேவையான அளவு இறைச்சி கலவையை ஒரு மூலையில் வைத்து முக்கோணமாய் சுற்றவும்.

    சுற்றி முடிந்ததும் கடைசியில் சமோசாவின் மூலைகளை கரைத்த மாவால் ஒட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    சமோசா பட்டியை நாமாக செய்திருந்தால் அதே மாவிலேயே ஒட்டி விடலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்த வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மாட்டு இறைச்சி சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 100 கிராம்
    கடலை மாவு - 2 டீஸ்பூன்
    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    புதினா - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

    சேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும்.

    வடிகட்டிய சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், மிளகாய் தூள், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறவும் (நீர் சேர்க்க வேண்டாம். சேமியாவின் ஈரம் போதுமானது).

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்தக் கலவையை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சில்லி முட்டை மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 2
    பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கிராம்பு, பூண்டு - 2
    உப்பு - சுவைக்கேற்ப
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    சில்லி முட்டை மசாலா

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

    இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.

    சில்லி முட்டை மசாலா ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் வைத்து சூப்பரான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பிரெட் - 2 ஸ்லைஸ்,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    சாக்லேட் பார் - ஒன்று.

    சாண்ட்விச்

    செய்முறை:

    இரண்டு ஸ்லைஸ் பிரெட்டில் வெண்ணெயை தடவி வைக்கவும்.

    சாக்லேட்டை இரண்டாக உடைத்து அதை ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.

    சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளியமுறையில் ஹோட்டல் ஸ்டைலில் சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    கோஸ் - 1/2 கப்
    கேரட் - 2
    குடை மிளகாய் - 1/2 கப் சிவப்பு
    குடை மிளகாய் - 1/2 கப் பச்சை
    வெங்காயம் - 1
    ஸ்ப்ரிங் ஆனியன் - ஒரு கையளவு
    சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
    வினிகர் - 2 மேஜைக்கரண்டி
    கிரீன் சில்லிசாஸ் - 1 மேஜைக்கரண்டி
    ரெட் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 2 பல்
    பச்சை மிளகாய் - 2
    மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    சில்லி நூடுல்ஸ்

    செய்முறை.:

    வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.

    நூடுல்ஸ் 80 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம்.)

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.

    சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.

    அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை நன்கு கலக்குமாறு பிரட்டி போடவும்.

    நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி நூடுல்ஸ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டிரை ஃப்ரூட் சேர்த்து செய்யும் அல்வா குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே எளியமுறையில் இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பேரீச்சை பழம் - 100 கிராம்,
    கர்ஜூர் - 8 (விதை நீக்கியது)
    நெய் - 100 கிராம்,
    சர்க்கரை - 250 கிராம்,
    எண்ணெய் - 50 மில்லி,
    டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
    முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,
    வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்

    டிரை ஃப்ரூட் அல்வா

    செய்முறை :

    முதலில் பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊற வைத்து, மறு நாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.

    நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.

    வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்).

    அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.

    ஒட்டாமல் வரும் போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான டிரை ஃப்ரூட் அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×