என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான கோதுமை மாவு கேசரி
Byமாலை மலர்25 July 2020 10:30 AM GMT (Updated: 25 July 2020 10:30 AM GMT)
கோதுமை மாவில் சத்தான சுவையான கேசரி செய்யலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்
நெய் - 1/2 கப்
சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6
செய்முறை:
கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத் தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும்.
மாவு சிறிது நேரத்தில், வெல்லப் பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)
ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 3/4 கப்
நெய் - 1/2 கப்
சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5 அல்லது 6
தண்ணீர் - ஒன்றரை கப்
செய்முறை:
கால் கப் நெய்யை ஒரு வாணலியில் விட்டு, அதில் கோதுமை மாவைக் கொட்டி மிதமான தீயில், மாவின் நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும், அதில் வெல்லத் தூளைப் போட்டு, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்துக் கிளறி, கீழே இறக்கி, வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லத்தை, அடி கனமான ஒரு வாணலியில் ஊற்றி, அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது சிறிதாக வறுத்து வைத்துள்ள கோதுமை மாவைத் தூவி, கை விடாமல் கிளறவும்.
மாவு சிறிது நேரத்தில், வெல்லப் பாகுடன் சேர்ந்து கெட்டியாகி விடும். மீதியுள்ள நெய், சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு (சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)
ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
இதைக் கத்தியால் கீறி, துண்டங்களாக வெட்டி எடுக்கலாம். அல்லது, அப்படியே ஒரு ஸ்பூனால் எடுத்தும் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X