என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆலு சாட் எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 1
    இஞ்சி - ஒரு துண்டு
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
    தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    சாட் மசாலா - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை உப்பு - தேவையான அளவு

    ஆலு சாட்

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சி, தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்றாக

    பிறகு, தக்காளி சேர்த்து வேக விடவும்.

    கூடவே, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித்தூள், மிளகுத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.

    பின்னர், சாட் மசாலா, தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் விடவும்.

    இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    பரிமாறும்போது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிஸ்ச்சர் , கொத்தமல்லித்தழை, சாட் மசாலா தூவி, தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் அசத்தலாக இருக்கும்..

    அசத்தலான சுவையில் ஆலு சாட் ரெடி..!.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வித்தியாசமான முறையில் செய்யும் இந்த பாறை மீன் குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாறை மீன் - அரை கிலோ
    துருவிய தேங்காய் - அரைக் கப்
    மஞ்சள்தூள் - 1டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2டேபிள்ஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    நல்ல மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 10
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - 1 கொத்து
    தக்காளி - 1
    புளி தண்ணீர் - அரை கப்
    பூண்டு - 10 பல்
    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    பாறை மீன் குழம்பு

    செய்முறை

    மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    பின்னர் அதில் புளித்தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய், நல்ல மிளகு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள், மிளகாய் தூள், பூண்டு, சின்னவெங்காயம், மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மசாலாவை புளித்தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனோடு சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    இப்பொழுது இந்த கலவையோடு தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

    கொதித்த பின்பு மிதமான சூட்டில் மீதி 10 நிமிடம் வேகவிடவும்.

    கடைசியாக சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

    இப்போது சுவையான பாறை மீன் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு கொள்ளு மிகவும் நல்லது. இன்று கொள்ளுவை வைத்து சுவையான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்மதி அரிசி - 3 கப்
    கொள்ளு - ஒரு கப்
    நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - ஒரு கப்
    பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை - தலா ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிது
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - 2
    தயிர் - ஒரு கப்
    பிரியாணி மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - 2 தேக்கரண்டி
    எண்ணெய், நெய் - தலா 2 மேசைக்கரண்டி

    கொள்ளு புலாவ்

    செய்முறை :

    கொள்ளு மற்றும் பாஸ்மதி அரிசியை ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வதக்கவும்.

    அடுத்து அதில் பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கிய பின் தக்காளி, கொத்தமல்லி தழை, கொள்ளு, காய்கறி கலவை தயிர் உப்பு சேர்க்கவும்.

    அரை கப் தண்ணீர் விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசியை விட 3 மடங்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் ஊறிய அரிசியை வடித்து கொதிக்கும் நீரில் போடவும்.

    4 நிமிடம் கொதித்த பின் அரிசியை வடித்து கொள்ளு குருமாவில் போட்டு 15 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

    சூடான கொள்ளு புலாவ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரைப்பதற்கு :


    புழுங்கல் அரிசி - 4 கப்,
    முழு உளுந்து - 1 கப்,
    துவரம் பருப்பு - கால் கப்,
    வெந்தயம் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    ஊத்தப்பத்துக்கு :

    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 6 பல்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    துருவிய சீஸ் - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கு
    கேரட் - 3

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
     
    அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவவும்.

    கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.

    வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சீஸ் ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 3
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்

    செய்முறை :


    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் அரை பாகம் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

    நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் துள், தனியா தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை போட்டு மொறு மொறு என்று பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :
     
    பூண்டு - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2 (பெரியது)
    வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
    குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    புளி - 1 எலுமிச்சை அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 50 கிராம்
    சமையல் எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    பூண்டு குழம்பு
     
    செய்முறை :
     
    பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
     
    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
     
    புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
     
    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.
     
    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
     
    குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
     
    குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி விடவும்.
     
    இப்போது சுவையான பூண்டு குழம்பு தயார்!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் ப்ரோக்கோலி கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ப்ரோக்கோலி - கால் கிலோ
    சீரகம் - அரை டீஸ்பூன்
    ஏலக்காய் - 2
    வெங்காயம் - பாதி
    இஞ்சி பூண்டு விழுது - முக்கால் டீஸ்பூன்
    தக்காளி விழுது - அரை கப்
    முந்திரி - 5
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - கால் டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    ப்ரோக்கோலி

    செய்முறை:

    முதலில் ப்ரக்கோலியை துண்டுகளாக எடுத்து சுடு தண்ணீரில் உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.

    முந்திரியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    தொடர்ந்து, அரைத்து வைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.

    அத்துடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.

    பின்னர், அரைத்து வைத்த முந்திரி விழுது, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

    இந்நிலையில், ப்ரக்கோலி சேர்த்து கிளறி மூடிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சுவையான ப்ரக்கோலி கிரேவி ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இது ஒரு சீனநாட்டு உணவு செய்முறையாகும். காரமான அதேநேரத்தில் புளிப்பும் இனிப்புமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - கால் கிலோ
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    பூண்டு - 10 பல்
    பச்சை மிளகாய் - 4
    சிவப்பு மிளகாய் - 4
    சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - தேவையான அளவு
    ரைஸ் ஒயின் - 5 மில்லி லிட்டர்
    ஓய்ஸ்டர் சாஸ் - 1 டீஸ்பூன்
    சிக்கன் சீஸனிங் - 1 டீஸ்பூன்
    சோள மாவு- 2 டீஸ்பூன்
    எள் - தேவையான அளவு
    வெங்காயத்தாள், - தேவையான அளவு

    மாண்டரின் சிக்கன்

    செய்முறை :

    சிக்கன் நெஞ்சுக்கறியை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், வெங்காய தாள், பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், சோள மாவு, சோயா சாஸ், உப்பு மற்றும் ரைஸ் ஒயின் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஒரு மணிநேரம் நன்றாக ஊறிய பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துகொள்ளவும்.

    கடாயை  அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, வெங்காயம், ஓய்ஸ்டர் சாஸ், மற்றும் சிவப்பு மிளகாய், மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை ஊற்றவும்

    பின் அதில் பொரித்த சிக்கன், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    கடைசியாக எள், வெங்கயாத்தாளை தூவி சூடாக பறிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புரதச் சத்து மற்றும் வைட்டமின்கள் (பருப்பு), நார்ச்சத்து (மொச்சை) ஆகியவை கலந்துள்ள சரிவிகித உணவு இது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்,
    பச்சை மொச்சை - அரை கப்,
    துவரம்பருப்பு - அரை கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 2,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்.

    மொச்சைப் பருப்பு சாதம்

    செய்முறை:

    அரிசியுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்தபின், சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், மொச்சையைச் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மொச்சை வேகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு, வேகவைத்த சாதம், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான மொச்சைப் பருப்பு சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    பச்சைப் பட்டாணி - கால் கப்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    கடுகு - அரை டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    உருளைக்கிழங்கு பட்டாணி சாதம்

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்துதோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை  வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை  அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து இதனுடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு அதில் உதிரியாக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலுடன் கறிவேப்பிலை, தேன் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 100 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    சர்க்கரை - கால் டீஸ்பூன்
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு (பொரிக்க)
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
    சில்லி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
    கார்ன்ஃப்ளேக்ஸ் - 50 கிராம் (நொறுக்கியது)

    பேட்டர் செய்ய:

    கார்ன்ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
    மைதா - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை

    இறால் கறிவேப்பிலை தேன் வறுவல்

    செய்முறை

    இறாலைக் கழுவி சுத்தம் செய்து, அதன் நடுவே நன்கு கீறி விடவும்,  ஆனால், இறாலை இரண்டாகப் பிளக்கக் கூடாது.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேட்டர் செய்ய கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைக்கவும்.

    இறாலை ஒவ்வொரு பீஸாக எடுத்து பேட்டரில் புரட்டி எடுத்து நொறுக்கிய கார்ன் ஃப்ளேக்ஸில் போட்டு புரட்டவும்.

    இப்படி அனைத்து பீஸ்களையும் கார்ன்ஃப்ளாரில் புரட்டி தனியாக வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டுக்கு வந்ததும் இறாலைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இதில் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் தண்ணீர் ஊற்றி சில்லி பேஸ்ட், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஊற்றி சாஸ் பதத்துக்குக் கொதித்ததும் அதில் பொரித்த இறாலைச் சேர்த்துப் புரட்டி தேன் ஊற்றிப் பரிமாறவும்.

    இறாலை மட்டும் பொரித்தெடுத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து, மேலே தூவியும் சாப்பிடலாம்.

    இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாட்டுக்கோழியில் சூப்பரான காரசாரமான கொத்துக்கறி மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதை சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    பெரியவெங்காயம் - 3
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    மிளகுதூள் - 4 டீ ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல்

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த கறியை எலும்பு இல்லாமல் எடுத்து கொத்துக் கறியாக வெட்டிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

    அடுத்து சிக்கனை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் சீரகத்தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    மசாலா கறியில் சேர்ந்தவுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×