என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வித்தியாசமான சுவையில் பாறை மீன் குழம்பு
Byமாலை மலர்12 Aug 2020 10:31 AM GMT (Updated: 12 Aug 2020 10:31 AM GMT)
வித்தியாசமான முறையில் செய்யும் இந்த பாறை மீன் குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாறை மீன் - அரை கிலோ
துருவிய தேங்காய் - அரைக் கப்
மஞ்சள்தூள் - 1டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
நல்ல மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1
புளி தண்ணீர் - அரை கப்
பூண்டு - 10 பல்
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் அதில் புளித்தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், நல்ல மிளகு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள், மிளகாய் தூள், பூண்டு, சின்னவெங்காயம், மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த மசாலாவை புளித்தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனோடு சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இப்பொழுது இந்த கலவையோடு தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு மிதமான சூட்டில் மீதி 10 நிமிடம் வேகவிடவும்.
கடைசியாக சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
பாறை மீன் - அரை கிலோ
துருவிய தேங்காய் - அரைக் கப்
மஞ்சள்தூள் - 1டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
நல்ல மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1
புளி தண்ணீர் - அரை கப்
பூண்டு - 10 பல்
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் அதில் புளித்தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், நல்ல மிளகு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள், மிளகாய் தூள், பூண்டு, சின்னவெங்காயம், மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த மசாலாவை புளித்தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனோடு சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இப்பொழுது இந்த கலவையோடு தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு மிதமான சூட்டில் மீதி 10 நிமிடம் வேகவிடவும்.
கடைசியாக சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
இப்போது சுவையான பாறை மீன் குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X