
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் அரை பாகம் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் துள், தனியா தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை போட்டு மொறு மொறு என்று பொரித்து எடுத்து பரிமாறவும்.