என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு சத்துமிக்க பொரியலை கொடுக்க வேண்டுமா? அப்போ வாரம் ஒரு முறை குடைமிளகாய் பொரியலை செய்து கொடுங்கள். இதனால் உடலில் ஈரப்பதமும் அதிகரிக்கும்.
    தேவையான பொருள்கள்:

    குடைமிளகாய் - 2
    தக்காளி - 3
    வெங்காயம் - 1
    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    சீரகப்பொடி - 1/4 ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
    கடுகு - 1/2 ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பிறகு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வர்க்கி சுற்றுலா நகரமான ஊட்டியின் பாரம்பரிய உணவு பொருளாக திகழ்ந்து வருகிறது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    வர்க்கி தயாரிப்பதற்கு மூலப்பொருளாக மைதா மாவு உள்ளது. அதனுடன் சர்க்கரை, உப்பு, எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வர்க்கிக்கு புளிப்பு வர ஈஸ்ட் சேர்க்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ரவை, மைதா மாவு மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் மாவா மூலம் வர்க்கி தயாரிக்கப்படுகிறது. ஊட்டியில் தயார் செய்யப்படும் வர்க்கிகள் அனைத்தும் மரத்தால் ஆன மேஜைகளில் தான் கலவை செய்து தயாரிக்கப்படுகிறது. இதனால் ஊட்டி வர்க்கிக்கு எப்போதுமே தனி சுவை என்ற பெயர் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    மைதா -   2 கப்
    சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    டால்டா - கால் கப்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - ஒரு டீஸ்பூன்
    ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)
    தண்ணீர் - தேவையான அளவு.

    செய்முறை

    மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுவதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.

    மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து  மாவில் ஊற்றி பிசையவும்.

    மாவு, எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும்.  தேவைப்பட்டால் சிறிது டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில்  மாவை குறுக்கு வெட்டாக வெட்டவும்.

    அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும். அவனை (Oven) அதன் அதிகபட்ச  வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும்.

    இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20  முதல் 30 நிமிடம் வேக விடவும்.

    வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.

    வீட்டிலேயே  ஈஸ்ட்

    தேவையான பொருட்கள்


    மைதா - கால் கப்
    தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு.

    செய்முறை

    இவை  அனைத்தும் நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட். இதை ஒரு  வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இந்த மாவை நாண், ரொட்டி, குல்ச்சா என்று  உபயோகிக்கலாம். ஈஸ்ட் ஒவ்வொரு பேக்கரியிலும் ஒவ்வொரு முறையில்  தயாரிப்பதால், இங்கே பொதுவான முறை தரப்பட்டிருக்கிறது.
    பலாப்பழம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று பலாப்பழம், பால் சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய பலாப்பழத் துண்டுகள் - 2 கப்
    கோதுமை மாவு - அரை கப்
    சர்க்கரை - 2 கப்
    பால் - 2 கப்
    முந்திரி துண்டுகள் - தேவையான அளவு
    பாதாம் - தேவையான அளவு
    ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
    நெய் - கால் கப்
    சமையல் எண்ணெய் - அரை கப்
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை

    செய்முறை

    ஒரு கப் பாலில் பலாத் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    பாதாமை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை நன்கு வறுக்கவும்.

    முந்திரியையும் பொன்நிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

    ஒரு வாணலியில் மீதமுள்ள பால், அரைத்த பலா விழுது, கோதுமை மாவு, சர்க்கரை, சமையல் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

    கைவிடாமல் கிளறி இடைஇடையே நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

    சர்க்கரை கரைந்து எல்லாம் சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும்போது கேசரி பவுடரைச் சிறிதளவு பாலில் கரைத்து ஊற்றவும்.

    முந்திரி, பாதாம், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

    சுவையான பலாப்பழ அல்வா தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திடீரென விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு விரைவாக இந்த ரெசிபியை செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது

    வறுத்து அரைக்க :

    துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
    தனியா - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    தாளிக்க :

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    மிளகாய் வத்தல் - 1
    கடுகு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

    செய்முறை :

    துவரம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    தயிர், தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பொடி எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, பெருங்காயத்தூள் போடவும்.

    கடுகு வெடித்தவுடன் தயிர் கலவையை ஊற்றி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    நுரை கூடி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

    சுவையான தயிர் ரசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம். இன்று தேங்காய் பால் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    தேங்காய் - அரை மூடி
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    பச்சை பட்டாணி - அரை கப்
    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
    பட்டை - 3,
    லவங்கம் - 5,
    ஏலக்காய் - 3,
    பிரியாணி இலை - 2,
    கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,
    முந்திரி - 50 கிராம்,
    நெய் - 100 கிராம்,
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

    பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை பட்டாணி, தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.

    கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

    இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு பெற்றோரை தொல்லை செய்வார்கள். இன்று ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை முட்டை சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    பரோட்டா - 2
    முட்டை - 1
    வெங்காயம் - 2
    எண்ணெய்  -  4 ஸ்பூன்
    தக்காளி - 1
    பச்சை மிளகாய்  - 2
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லி - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    கரம் மசாலா தூள் -  1 ஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி, ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக உதிரியாக வரும் வரை வதக்கவும்.

    அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும் .

    10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    சுட சுட சுவையான ரோட்டு கடை முட்டை கொத்து பரோட்டா தயார். இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி பர்ஃபி சாப்பிடலாம். இஞ்சி பர்ஃபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு இஞ்சி அல்லது சுக்குப் பொடி - 100 கிராம்
    கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லம் - ஒரு கப்
    நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    இஞ்சியைத் தோல் சீவி மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சுங்கள். (சிறிது பாகை எடுத்து தண்ணீரில் போட்டால் கரையாமல் இருக்கும். இது தான் பாகு பதம்).

    இந்த பக்குவம் வந்தவுடன் அரைத்த இஞ்சி விழுதை பாகில் சேர்த்து கைவிடாமல் நன்றாக கலக்கவும்.

    இந்தக் கலவை நன்றாக நுரைத்து திக்கான பதம் வந்ததும் அரை டேபிள் ஸ்பூன் நெய்,  ஏலக்காய்ப்பொடி தூவி கொஞ்சம் உப்பு தூவி இறக்குங்கள்.

    இப்பொழுது ஒரு தட்டில் நெய்யை தடவி அதன் மேல் இந்தக் கலவையைக் கொட்டுங்கள்.

    சூடாக இருக்கும் போதே சதுர வடிவில் பர்ஃபியாக வெட்டி சற்று ஆறியதும் அவற்றை தனியாக எடுங்கள்.

    சூடான காரசாரமான இனிப்பான இஞ்சி பர்ஃபி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு ரிப்பன் முறுக்கு செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரிப்பன் முறுக்கு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்,
    அரிசிமாவு - கால் கப்
    பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
    மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள், சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பூண்டு விழுது, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

    முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை முறுக்கு அச்சில் வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்தது வெந்ததும் எடுக்கவும்.

    கேழ்வரகு ரிப்பன் முறுக்கு தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன் ஒன்றாகும். இப்போது இந்த ஸ்பைஸி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    சிக்கன் – அரை கிலோ
    வெங்காயம் – 3
    இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
    தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – சிறிதளவு
    எண்ணெய் – தேவையான அளவு
    உப்பு – தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை – சிறிதளவு
    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கனைக் கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

    பின் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிக்கனைப் போட்டு வதக்க வேண்டும். சிக்கன் நன்கு வதங்கியதும், அதில் மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பிறகு சிக்கன் பாதி வெந்ததும், அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி மூடி வைக்க வேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு கிளறி விடவும்.

    சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் அதில் கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் போட்டு சிறிது நேரம் மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். 

    பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கினால், ஆந்திரா ஸ்பைஸி சிக்கன் தயார்..!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கேரட் - 2
    உருளைக்கிழங்கு - 2
    காலிபிளவர் - பாதி பூ
    பட்டாணி - 1 கப்
    பீன்ஸ் - 100 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2 
    தயிர் - 1/2 கப் 
    சீரகம் - 1 தேக்கரண்டி 
    கருவாப்பட்டை குச்சி - 1
    கருப்பு ஏலக்காய் - 1
    மிளகு - 5
    இலவங்கப்பட்ட இலை - 2
    பச்சை மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு 
    மசாலா தூள் - 1 தேக்கரண்டி கரம் 
    மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி 
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
    கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி 
    நெய் - 1/2 கப் 

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் பட்டை, பிரியாணி இலை, கருப்பு மிளகு, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். 

    அடுத்து அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளி, பச்சை மிளகாயை போட்டு வதக்கி கொள்ளுங்கள். 

    அடுத்து தயிர் சேர்த்த பிறகு எல்லா காய்கறிகளையும் போடுங்கள். காய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் என்று எல்லா மசாலாக்களையும் போட்டு கிளறிக் கொள்ளுங்கள்.

    பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து அதையும் காய்கறிகளுடன் சேர்த்து கிளறுங்கள். ரெம்ப கிளற வேண்டாம். ஏனென்றால் அரிசி உடைய வாய்ப்புள்ளது. இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் சமைத்து இறக்கவும்.

    பிறகு பாத்திரத்தில் இருந்து சுடச்சுட காய்கறி சாதத்தை எடுத்து தயிர் அல்லது ரைதா வச்சு பரிமாறுங்கள். 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட் உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ஆனால் சிலருக்கு பீட்ரூட் சாப்பிட பிடிக்காது. இதனால் அனைவரும் கவரும் படி பீட்ரூட்டில் சுவையான, இனிப்பான பாயாசத்தை செய்து கொடுங்கள்.
    தேவையான பொருள்கள்: 

    பீட்ரூட்- 4 
    பால்- 1 கப் 
    நெய்- 1 கப் 
    சர்க்கரை- 3/4 கப் 
    ஏலக்காய் பொடி- தேவையான அளவு 
    முந்திரி- தேவையான அளவு 

    செய்முறை:

    பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வழுவழுப்பாக அரைத்து கொள்ள வேண்டும். 

    ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் நறுக்கிய முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். 

    பிறகு அதில் பீட்ரூட்டை சேர்த்து கிளறிவிட வேண்டும். 

    சிறிது நேரம் கழித்து கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். 

    5 நிமிடத்திற்கு பிறகு அதில் பால் சேர்த்து 15 நிமிடம் சமைக்கவும். 

    அடுத்து அதில் ¾ கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். 

    ஏழு நிமிடத்திற்கு பிறகு சிறிது நெய் சேர்த்து இறக்கினால் சூடான பீட்ரூட் பாயாசம் தயார். 

    கடைசியில் பீட்ரூட் பாயாசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் முந்திரியை அலங்கரித்து சூடாக பறிமாறுங்கள்.. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொங்கலில் பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகையில் தைப்பொங்கல் ஸ்பெஷலாக கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கரும்பு சாறு - 1 லிட்டர்
    அரிசி - அரை கப்
    நெய் - விருப்பத்திற்கு ஏற்ப
    சுக்கு - சிறிதளவு
    முந்திரி - 1 கைப்பிடியளவு
    திராட்சை - 1 கைப்பிடியளவு
    பால் - அரை கப்

    செய்முறை

    சுக்கை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    கடாயில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.

    இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அரிசி மென்மையாக மாறும் வரை வேக விடவும். நன்றாக வெந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, சுக்குத்தூள சேர்த்து கிளறி இறக்கவும்.

    இப்போது இனிப்பான கரும்பு சாறு பாயாசம் தயார். 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×