என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பொங்கல் ஸ்பெஷல்: இனிப்பான கரும்பு சாறு பொங்கல்
Byமாலை மலர்13 Jan 2021 9:40 AM GMT (Updated: 13 Jan 2021 9:40 AM GMT)
பொங்கலில் பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகையில் தைப்பொங்கல் ஸ்பெஷலாக கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கரும்பு சாறு - 1 லிட்டர்
அரிசி - அரை கப்
நெய் - விருப்பத்திற்கு ஏற்ப
சுக்கு - சிறிதளவு
முந்திரி - 1 கைப்பிடியளவு
திராட்சை - 1 கைப்பிடியளவு
பால் - அரை கப்
செய்முறை
சுக்கை நன்றாக பொடித்து கொள்ளவும்.
கடாயில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.
இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அரிசி மென்மையாக மாறும் வரை வேக விடவும். நன்றாக வெந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, சுக்குத்தூள சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது இனிப்பான கரும்பு சாறு பாயாசம் தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X