என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிஷ் சப்பாதி ரோலை எளிதாக முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4
    முள் இல்லாத துண்டு மீன் - 500 கிராம்
    வெங்காயம் - 2
    இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
    எலுமிச்சைபழச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    குடைமிளகாய் - 1
    பச்சை மிளகாய் - 3
    மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - 1 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    ஃபிஷ் சப்பாதி ரோல்

    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    நன்றாக கழுவிய மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

    பிறகு உதிர்த்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.

    பின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும்.

    பச்சை வாசனை போனவுடன் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும்.

    பின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் சப்பாத்தி ரோல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி. இந்த எள்ளு பொடி சத்தானதும் கூட. இன்று இந்த எள்ளு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எள் - 1 கப்
    உளுந்தம்பருப்பு - 1/4 கப்
    கடலைப்பருப்பு - 1/4 கப்
    காய்ந்தமிளகாய் - 6
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    எள்ளு பொடி

    செய்முறை:

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் , பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுத்த பின்னர் கடைசியாக எள்ளு , உப்பு சேர்த்து கிளற வேண்டும் .

    பின்னர் இக்கலவை ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கினால் சுவையான எள்ளு பொடி தயார் !!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறிய காலி ஃப்ளவர் - 1,
    கேரட் - 2,
    நூல்கோல் - 2,
    முள்ளங்கி - 2,
    மாங்காய் - 1,
    பச்சைப் பட்டாணி - 1 கப்,
    எலுமிச்சைப் பழச்சாறு - 1/2 கப்,
    கடுகு எண்ணெய் - 300 கிராம்,  
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய் தூள்,
    கடுகுத்தூள் - 1/2 கப்,
    மஞ்சள் தூள் - தேவைக்கு,
    நீளமாக வெட்டிய பச்சை மிளகாய், இஞ்சி - தேவைக்கு.

    மிக்ஸடு காய்கறி ஊறுகாய்

    செய்முறை:

    காலிஃப்ளவரை சுத்தம் செய்து கழுவிய பிறகே உபயோகிக்கவும்.

    மற்ற காய்களையும் சுத்தம் செய்து துணியால் துடைத்து 1/2 மணி நேரம் ஃபேனுக்கு அடியில்  உலர வைத்து உபயோகிக்கவும்.

    எல்லா காய்களையும் நறுக்கி, அதில் உப்பு, எலுமிச்சைச்சாற்றையும் கலந்து மூன்று நாட்களுக்கு சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் வைத்திருக்கவும். அடிக்கடி எடுத்து நன்றாக குலுக்கி விடவும்.

    பிறகு இரண்டு நாட்கள் வெயிலில் உலர விடவும்.

    ஒரு காய்ந்த சுத்தமான ஜாடி அல்லது பாட்டிலில் இந்தக் கலவையை கொட்டி மிளகாய் தூள், மஞ்சள், கடுகுத் தூள், பச்சையான கடுகு எண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.

    அப்படியே காற்றுப் புகாதபடி 3 நாட்கள் வைத்திருக்கவும்.

    இந்த காய்கறி மிக்ஸ் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையாக இருக்கும்.

    கடுகு எண்ணெய் பிடிக்காதவர்கள் நல்லெண்ணெய் சூடு செய்து பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் இந்த பச்சைப்பயறு பூண்டு துவையல். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப்பயறு - அரை கப்,
    பூண்டு - ஒரு பல்,
    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
    தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 5,
    புளி - கோலி அளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    பச்சைப்பயறு

    செய்முறை:

    வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

    பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும்.

    ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    சத்தான பச்சைப்பயறு பூண்டு துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான பூரி செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு மசாலா பூரி செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    ரவை - ஒரு டீஸ்பூன்
    ப.மிளகாய் - 3
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

    கேழ்வரகு மசாலா பூரி

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் ரவையை உப்பு சேர்த்து அரைக்கவும்.

    அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, சேர்த்துக் கலந்து ப.மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

    பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயதானவர் முதல் குழந்தைகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்தக் கஞ்சியைத் தரலாம். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருடகள் :

    சிவப்பு அவல் - ஒரு கப்
    பொட்டுக்கடலை - கால் கப்
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    பால் - 3 கப் துருவிய
    வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்.

    சிவப்பு அவல் பால் கஞ்சி

    செய்முறை:

    அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும்.

    அடி கனமான கடாயில் பால் ஊற்றி நன்றாக காய்ச்சவும்.

    பிறகு தீயைக் குறைத்து பொடித்த அவல், பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

    இறக்கும் சமயத்தில் துருவிய வெல்லம் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

    சத்தான சிவப்பு அவல் பால் கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த மாங்காய்த் துருவல் ஊறுகாய். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய்த் துருவல் - ஒரு கப்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    வறுத்துப் பொடி செய்த மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    மாங்காய்த் துருவல் ஊறுகாய்

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, மாங்காய்த் துருவலை சேர்த்து 3 நிமிடம் கிளறவும்.

    இதில் மஞ்சள்தூள், உப்பு, வறுத்து அரைத்த மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

    சூப்பரான மாங்காய்த் துருவல் ஊறுகாய் ரெடி.

    இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    'பார்ட்டி', 'ட்ரீட்' என அதிகம் கொழுப்பு சத்து நிறைந்த உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் அதை பேலன்ஸ் செய்வதற்கு, இந்த சத்து நிறைந்த எளிய உணவை சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம் - தலா ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய் - தலா ஒரு கப்,
    முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    நியூட்ரிஷியன் வெஜிடபிள் சாலட்

    செய்முறை:

    கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.
    குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸ் வெஜிடபிள் சேர்த்து அருமையான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3,
    குடைமிளகாய் - 1,
    முட்டைகோஸ் - 100 கிராம், (விருப்பப்பட்டால்)
    கேரட் - கால் கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 3,
    கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
    சீஸ் - ஒரு சிறு கட்டி,
    எண்ணெய் - தேவையான அளவு,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - சுவைக்கேற்ப.

    சீஸ் வெஜிடபிள் ஆம்லெட்

    செய்முறை:

    கேரட், முட்டை கோஸ், ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.

    அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.

    விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம்.

    சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க அடிக்கடி நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம். நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    முழு நெல்லிக்காய் - 20,
    கெட்டித் தயிர் - அரை கப்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    கீறிய பச்சை மிளகாய் - 2,
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    நெல்லிக்காய்

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போட்டு வறுத்து, நெல்லிக்காய், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும்.

    விரலால் லேசாக அமுங்கும் பதம் வரும்போது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

    சிறிது ஆறியதும் தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக சுவையாக செய்து கொடுக்க விரும்பினால் சேமியா, முட்டை சேர்த்து சுவையான இந்த டிபனை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    முட்டை - 3
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - தேவைகேற்ப
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - சிறிதளவு
    சோம்பு - கால் ஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சைமிளகாய் - 3
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    முட்டை சேமியா

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் சேமியாவை சேர்த்து  நன்றாக வறுத்து கொள்ளலாம்.

    அதே கடாயில் ஒரு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு , சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளலாம்.

    கடாயில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு  தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

    உங்களுக்கு தேவையானால் கேரட்,பீன்ஸ், பச்சைப்பட்டாணி போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.

    ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 250 மி.லி வீதம் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும்.

    சேமியா நன்றாக வெந்ததும் இதனுடன் பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்துக் கிளறி கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவி கலந்து இறக்கவும்.

    சூப்பரான சேமியா முட்டை உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எளிய முறையில் வீட்டிலேயே லெமன் சோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எலுமிச்சை காய் - 1
    எலுமிச்சை பழம் - 2
    சர்க்கரை - ஒரு கப்
    தண்ணீர் - ஒரு கப்
    எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன்
    சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

    லெமன் சோடா

    செய்முறை:

    சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் (சர்க்கரை கரைந்தும் ஒரு நிமிடம் வரை கொதிக்கவிடவும்). பிறகு ஆறவைக்கவும்.

    எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து கொட்டை இல்லாமல் ஆறிய பாகுடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும்.
     
    அருமையான லெமன் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×