என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மிக்ஸ்டு காய்கறி ஊறுகாய்
Byமாலை மலர்16 May 2020 10:23 AM GMT (Updated: 16 May 2020 10:23 AM GMT)
எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறிய காலி ஃப்ளவர் - 1,
கேரட் - 2,
நூல்கோல் - 2,
முள்ளங்கி - 2,
மாங்காய் - 1,
பச்சைப் பட்டாணி - 1 கப்,
எலுமிச்சைப் பழச்சாறு - 1/2 கப்,
கடுகு எண்ணெய் - 300 கிராம்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய் தூள்,
கடுகுத்தூள் - 1/2 கப்,
மஞ்சள் தூள் - தேவைக்கு,
நீளமாக வெட்டிய பச்சை மிளகாய், இஞ்சி - தேவைக்கு.
செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து கழுவிய பிறகே உபயோகிக்கவும்.
மற்ற காய்களையும் சுத்தம் செய்து துணியால் துடைத்து 1/2 மணி நேரம் ஃபேனுக்கு அடியில் உலர வைத்து உபயோகிக்கவும்.
எல்லா காய்களையும் நறுக்கி, அதில் உப்பு, எலுமிச்சைச்சாற்றையும் கலந்து மூன்று நாட்களுக்கு சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் வைத்திருக்கவும். அடிக்கடி எடுத்து நன்றாக குலுக்கி விடவும்.
பிறகு இரண்டு நாட்கள் வெயிலில் உலர விடவும்.
ஒரு காய்ந்த சுத்தமான ஜாடி அல்லது பாட்டிலில் இந்தக் கலவையை கொட்டி மிளகாய் தூள், மஞ்சள், கடுகுத் தூள், பச்சையான கடுகு எண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.
அப்படியே காற்றுப் புகாதபடி 3 நாட்கள் வைத்திருக்கவும்.
இந்த காய்கறி மிக்ஸ் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையாக இருக்கும்.
சிறிய காலி ஃப்ளவர் - 1,
கேரட் - 2,
நூல்கோல் - 2,
முள்ளங்கி - 2,
மாங்காய் - 1,
பச்சைப் பட்டாணி - 1 கப்,
எலுமிச்சைப் பழச்சாறு - 1/2 கப்,
கடுகு எண்ணெய் - 300 கிராம்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய் தூள்,
கடுகுத்தூள் - 1/2 கப்,
மஞ்சள் தூள் - தேவைக்கு,
நீளமாக வெட்டிய பச்சை மிளகாய், இஞ்சி - தேவைக்கு.
காலிஃப்ளவரை சுத்தம் செய்து கழுவிய பிறகே உபயோகிக்கவும்.
மற்ற காய்களையும் சுத்தம் செய்து துணியால் துடைத்து 1/2 மணி நேரம் ஃபேனுக்கு அடியில் உலர வைத்து உபயோகிக்கவும்.
எல்லா காய்களையும் நறுக்கி, அதில் உப்பு, எலுமிச்சைச்சாற்றையும் கலந்து மூன்று நாட்களுக்கு சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் வைத்திருக்கவும். அடிக்கடி எடுத்து நன்றாக குலுக்கி விடவும்.
பிறகு இரண்டு நாட்கள் வெயிலில் உலர விடவும்.
ஒரு காய்ந்த சுத்தமான ஜாடி அல்லது பாட்டிலில் இந்தக் கலவையை கொட்டி மிளகாய் தூள், மஞ்சள், கடுகுத் தூள், பச்சையான கடுகு எண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.
அப்படியே காற்றுப் புகாதபடி 3 நாட்கள் வைத்திருக்கவும்.
இந்த காய்கறி மிக்ஸ் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையாக இருக்கும்.
கடுகு எண்ணெய் பிடிக்காதவர்கள் நல்லெண்ணெய் சூடு செய்து பயன்படுத்தலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X