என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த மாம்பழ சீசனில் சூப்பரான மாம்பழ பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள்

    பால் -  1 லிட்டர்
    சர்க்கரை - தேவையான அளவு
    பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    நன்கு கனிந்த மாம்பழம் - 2

    மாம்பழ பால்

    செய்முறை

    மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்றாக கொதிக்க வைத்து பால் அரை லிட்டராக சுண்டியதும் இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மாம்பழத்தை கலந்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.

    சூப்பரான மாம்பழ பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொரோனா தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாதம் - 1 கப் வடித்த,
    புளிக்காத தயிர் - 50 மி.லி. ,
    ஆறவைத்த பால் - 100 மி.லி. ,
    உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு,
    உலர்ந்த கறுப்பு திராட்சை - 1 மேஜை கரண்டி ,
    எண்ணெய் - 2 தேக்கரண்டி,
    கடுகு அரை - தேக்கரண்டி ,
    மாதுளை முத்துக்கள் - 100 கிராம் ,
    நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - 3 மேஜை கரண்டி ,
    வெள்ளரி துண்டுகள் - 3 மேஜை கரண்டி
    திராட்சை பழம் - 2 மேஜை கரண்டி நறுக்கிய ,
    சீரகம் - 1 தேக்கரண்டி ,
    இஞ்சி துண்டுகள் - 3 தேக்கரண்டி ,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை .

    ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம்

    செய்முறை:

    நன்றாக வெந்த சாதத்துடன் உப்பு மற்றும் பாலை ஊற்றி பிசையவும். சாதம் சூடாறிய பின்பு தயிரை சேர்த்து பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் அனைத்து பழவகைகளையும் சேர்த்து கிளறி, புளிக்கும் முன்பே சாப்பிடவும்.

    அருமையான ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் கேரட் வைத்து, முட்டை சேர்க்காமல் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா - 3/4 கப்
    கோதுமை மாவு - 1/4 கப்
    துருவிய கேரட் - 1/2 கப்
    தயிர் - 3/4 கப்
    ஆலிவ் ஆயில் - 1/4 கப்
    பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 1/2 கப்
    வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
    பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    வால்நட்ஸ் - ஒரு கையளவு

    முட்டை சேர்க்காத கேரட் கேக்

    செய்முறை:

    வால்நட்ஸை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

    முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும்.

    பின் ஒரு பௌலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.

    பின்பு அதில் ஏலக்காய் பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, வால்நட்ஸை பொடியாக வெட்டிப் போட்டு, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.

    பின்னர் மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.

    அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

    அடுத்து கேக் நன்கு வெந்து விட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும் போது, டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக் செய்து இறக்க வேண்டும்.

    இறுதியில் ஓவனில் இருந்து எடுத்த உடனேயே ஒரு ஈரமான துணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனை ஒரு தட்டில் குப்புற தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்து, 1 மணி நேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், முட்டை சேர்க்காத கேரட் கேக் ரெடி !

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆற்றலை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பாதாம் பூண்டு பாலை குடிக்கலாம். இன்று இந்த பால் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 500 மி.லி. ,
    மிளகுதூள் - 1 தேக்கரண்டி,
    சுக்கு தூள் - 1 தேக்கரண்டி,
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி,
    தேன் - 1 மேஜை கரண்டி,
    பூண்டு - 1,
    பாதாம் -  12  

    பாதாம் பூண்டு பால்

    செய்முறை:

    அடுப்பில் பாலை வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகுதூள், சுக்கு தூள், சுத்தம் செய்த பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.

    200 மி.லி. அளவுக்கு பால் வற்றியதும் இறக்கி தேன் கலந்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெனிலா மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெனிலா எசன்ஸ் - 3 டீஸ்பூன்
    சர்க்கரை - 3/4 கப்
    பால் - 1/2 லிட்டர்
    வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப்
    பாதாம், பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)

    வென்னிலா மில்க் ஷேக்

    செய்முறை:

    முதலில் மிக்ஸி ஜாரில் பால், வெனிலா ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வெனிலா மில்க் ஷேக் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பப்பாளி பழத்தில் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது. இன்று பப்பாளி பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பப்பாளி பழம் - 1
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுதூள் - அரை டீஸ்பூன்
    கருப்பு உப்பு - அரை டீஸ்பூன்
    எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையானது.

    பப்பாளி

    செய்முறை:

    பப்பாளி பழத்தை தோல் விதை நீக்கி துண்டுகளாக்குங்கள்.

    அதனுடன் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறுங்கள்.

    எந்த நேரத்துக்கும் ஏற்ற எளிய சாலட் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று வெண்டைக்காய் வைத்து சூப்பரான மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 13,
    ஓரளவு புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,
    மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    வெண்டைக்காய் மோர்க்குழம்பு

    செய்முறை:

    வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.

    இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை வெயில் காலத்தில் உடல் வறண்டு விடாமல் இருக்க நீர்ச்சத்து நிறைந்த இந்த ஜூஸை குடிக்கலாம். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிர்ணிப் பழம் - 200 கிராம்,
    மாதுளை முத்துக்கள் - அரை கப் ,
    இளநீர் - ஒரு கப்,
    இளநீர் வழுக்கை - 2 மேஜை கரண்டி ,
    தேன் - 2 தேக்கரண்டி,
    உப்பு - ஒரு சிட்டிகை,
    தண்ணீர் - 200 மி.லி. ,
    குல்கந்த் - சிறிதளவு ,
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    கிர்ணிப் பழத்தை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

    அத்துடன் இளநீர் வழுக்கை, இளநீர் கலந்து விழுதாக அரைக்கவும்.

    அதில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு, குல்கந்த், தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், பூரி, சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் பன்னீர் மசாலா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 100 கிராம்
    பன்னீர் - 100 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலாத்தூள் - 1 /2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கட்டித்தயிர் - 1 கப்
    முந்திரிப்பருப்பு - 15
    எண்ணெய்-தேவையான அளவு

    அரைக்க

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
    நறுக்கிய தக்காளி - 1 1/2 கப்
    முந்திரிப் பருப்பு - 10

    காளான் பன்னீர் மசாலா

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.   

    காளான்களை நன்கு கழுவி நறுக்கவும்.

    பன்னீரை துண்டுகளாக்கவும்.

    ஒரு பெரிய கடாயில்  சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

    பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.

    தக்காளி குழைய வதங்கியதும இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.

    இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு,  சேர்த்து கலக்கவும்.

    அடுத்து அதில் கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.

    கடைசியாக பன்னீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    காளான் பன்னீர் மசாலா மனக்க மனக்க சுவைக்க ரெடி...

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் கேழ்வரகு சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி (கேழ்வரகு) - 100 கிராம்
    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    பெரிய வெங்காயம் - ஒன்று
    கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு
    முருங்கை இலை - சிறிதளவு.

    கேழ்வரகு

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு,  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

    அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும்.

    சூப்பான சத்தான கேழ்வரகு - பருப்பு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஊறுகாய் சப்பாத்தி, பூரி, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். இந்த ஊறுகாய் மாதக் கணக்கில் கெடாது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பொடியாக நறுக்கிய (அ) துருவிய மாங்காய்  - ஒரு கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைத்த சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்,
    கசகசாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - ஒரு டீஸ்பூன்,

    மாங்காய் இனிப்பு ஊறுகாய்

    செய்முறை:

    கொடுத்துள்ள எல்லா பொருட்களையும், ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு மெல்லிய துணியால் கட்டவும்.

    வெயிலில் 10 முதல் 20 நாள் வைக்கவும்.

    இதில் உள்ள சர்க்கரை கரைந்து லேகியம் மாதிரி ஆகிவிடும்.

    இந்த பதத்தில் எடுத்து வைக்கவும். மாதக் கணக்கில் கெடாது.

    சப்பாத்தி, பூரி, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.
    லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ' 'கே’ போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

    தேவையான பொருட்கள் :

    லெட்டூஸ் இலை - 10
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று (பொடியாக
    வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், (குழைய கூடாது)
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    லெட்டூஸ்

    செய்முறை:

    லெட்டூஸ் இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துநன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

    நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும்.

    மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×