என் மலர்
சமையல்
பிரெட்டை வைத்து எளிமையான முறையில் ரச மலாய் எப்படி செய்யலாம் என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
பிரெட் - 5 ஸ்லைஸ்கள்
சர்க்கரை - 50 கிராம்
முந்திரி - சிறிதளவு நறுக்கியது
பிஸ்தா - சிறிதளவு நறுக்கியது
கிஸ்மிஸ் - சிறிதளவு
பாதாம் - சிறிதளவு நறுக்கியது
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
பாலை நான்ஸ்டிக் வாணலியில் ஊற்றி சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதிக்கும் பொழுது கரண்டியால் அதை நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பாலானது நிறம் மாறும் பொழுது எடுத்து வைத்துள்ள சர்க்கரை, சிறிதளவு முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர் திராட்சை (கிஸ்மிஸ்) போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
பின்பு, நடுத்தரமாக தீயை வைத்து பாலானது நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை கரண்டியால் கிளறவும். அதன் மேல் ஆடையானது படியப்படிய அவற்றைக் கரண்டியால் கிளறி குறைந்தது இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாலானது கெட்டியாகத் துவங்கி விடும்.
இப்பொழுது பிரட் துண்டுகளை எடுத்து ஓரத்திலிருக்கும் பிரவுண் பகுதியை நீக்கி விட்டு வெள்ளைப் பகுதியை ஒரு டம்ளர் அல்லது விளிம்பு கூரான கிண்ணத்தின் உதவியால் பட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
இந்த வட்டமான வில்லைகளை மலாய் பாலில் அரை நிமிடம் ஊறவிட்டு பின்பு வெளியே எடுத்து தட்டில் வைத்து அவற்றின் மேல் மலாய் பாலை ஊற்றி அதன்மேல் மீதம் வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் குங்குமப்பூவைத் தூவினால் பிரெட் ரசமலாய் தயார்.
பால் - 1 லிட்டர்
பிரெட் - 5 ஸ்லைஸ்கள்
சர்க்கரை - 50 கிராம்
முந்திரி - சிறிதளவு நறுக்கியது
பிஸ்தா - சிறிதளவு நறுக்கியது
கிஸ்மிஸ் - சிறிதளவு
பாதாம் - சிறிதளவு நறுக்கியது
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
பாலை நான்ஸ்டிக் வாணலியில் ஊற்றி சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதிக்கும் பொழுது கரண்டியால் அதை நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பாலானது நிறம் மாறும் பொழுது எடுத்து வைத்துள்ள சர்க்கரை, சிறிதளவு முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர் திராட்சை (கிஸ்மிஸ்) போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
பின்பு, நடுத்தரமாக தீயை வைத்து பாலானது நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை கரண்டியால் கிளறவும். அதன் மேல் ஆடையானது படியப்படிய அவற்றைக் கரண்டியால் கிளறி குறைந்தது இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாலானது கெட்டியாகத் துவங்கி விடும்.
இப்பொழுது ஏலக்காய் பொடியைத் தூவி ஒரு நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாணலியை கீழே வைத்து நன்கு ஆற வைக்க வேண்டும். இந்த மலாய் பாலானது மேலும் கெட்டிப் பதத்தில் பார்க்கவே கலர் ஃபுல்லாக இருக்கும்.
இந்த வட்டமான வில்லைகளை மலாய் பாலில் அரை நிமிடம் ஊறவிட்டு பின்பு வெளியே எடுத்து தட்டில் வைத்து அவற்றின் மேல் மலாய் பாலை ஊற்றி அதன்மேல் மீதம் வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் குங்குமப்பூவைத் தூவினால் பிரெட் ரசமலாய் தயார்.
இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், காலையில் அதை வைத்து சூப்பரான கைமா இட்லி செய்யலாம். இந்த கைமா இட்லியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2
பச்சை பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - 1
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் (தனியா) தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
இட்லிகளை துண்டு களாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
இட்லி - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2
பச்சை பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - 1
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் (தனியா) தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
இட்லிகளை துண்டு களாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
சூப்பரான கைமா இட்லி ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இன்று குதிரைவாலி, தக்காளி சேர்தது தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி - 4 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, 8 மணி நேரம் புளிக்கவிடவும்.
மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
சூடான தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
குதிரைவாலி அரிசி - 4 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, 8 மணி நேரம் புளிக்கவிடவும்.
மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
சூடான தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சத்து நிறைந்த குதிரைவாலி தக்காளி தோசை ரெடி
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வாழைப்பழம், அவல், வேர்க்கடலை சேர்த்து செய்யும் இந்த கட்லெட் மிகவும் சத்தான ஸ்நாக்ஸ். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 2
சிவப்பு அவல் - அரை கப்
வேர்க்கடலை - கால் கப்
நாட்டு சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை
வாழைப்பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
சிவப்பு அவலை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் ஊற்ற ஊறவைத்து கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.
வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி விட்டு போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, ஊற வைத்த அவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு ஒருபுறம் சிவக்க வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
வாழைப்பழம் - 2
சிவப்பு அவல் - அரை கப்
வேர்க்கடலை - கால் கப்
நாட்டு சர்க்கரை - கால் கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை
வாழைப்பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
சிவப்பு அவலை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து தண்ணீர் ஊற்ற ஊறவைத்து கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.
வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி விட்டு போட்டு அதனுடன் பொடித்த வேர்க்கடலை, ஊற வைத்த அவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு ஒருபுறம் சிவக்க வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான சத்தான வாழைப்பழ கட்லெட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய் - 200 கிராம்
தக்காளி - ஒன்று
கேரட் - இரண்டு டீஸ்பூன்
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய், தக்காளி, கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும். தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின், ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகு தூள், சீரக தூள் தூவி பரிமாறவும்.
வெள்ளை பூசணிக்காய் - 200 கிராம்
தக்காளி - ஒன்று
கேரட் - இரண்டு டீஸ்பூன்
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய், தக்காளி, கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும். தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின், ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகு தூள், சீரக தூள் தூவி பரிமாறவும்.
உடலுக்கு குளுர்ச்சியான சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
இறால் சுக்கா தென்னிந்தியாவின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. நாவில் எச்சில் ஊறும் ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய இறால் - அரை கிலோ
குடைமிளகாய் (சிவப்பு மற்றும் மஞ்சள்) - 1
கல் பாசி - சிறிதளவு
அன்னாசி பூ - 2
காய்ந்த மிளகாய் - 10
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி- பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
இறாலை நன்றாக கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மஞ்சள் தடவிய இறாலைபோட்டு பொரித்து எடுக்கவும்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடை மிளகாயை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு கலவையை போட்டு கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி மற்றும் உப்பு போட்டு தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும்.
கடைசியாக வறுத்து இறால் மற்றும் வெட்டிய குடை மிளகாயை சேர்க்கவும்.
வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெட்டிய பச்சை மிளகாயை அலங்காரமாக வைத்து பரிமாறவும்.
பெரிய இறால் - அரை கிலோ
குடைமிளகாய் (சிவப்பு மற்றும் மஞ்சள்) - 1
கல் பாசி - சிறிதளவு
அன்னாசி பூ - 2
காய்ந்த மிளகாய் - 10
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி- பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
இறாலை நன்றாக கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மஞ்சள் தடவிய இறாலைபோட்டு பொரித்து எடுக்கவும்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடை மிளகாயை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு கலவையை போட்டு கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி மற்றும் உப்பு போட்டு தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும்.
கடைசியாக வறுத்து இறால் மற்றும் வெட்டிய குடை மிளகாயை சேர்க்கவும்.
வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வெட்டிய பச்சை மிளகாயை அலங்காரமாக வைத்து பரிமாறவும்.
சூப்பரான இறால் சுக்கா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
துளசியை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வராது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
முழு நெல்லிக்காய் - 5
பச்சை மிளகாய் - 3,
துளசி - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், இந்துப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்துத் துவையலாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, துவையலுடன் சேர்க்கவும்.
முழு நெல்லிக்காய் - 5
பச்சை மிளகாய் - 3,
துளசி - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், இந்துப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்துத் துவையலாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, துவையலுடன் சேர்க்கவும்.
சத்தான நெல்லிக்காய் துளசி துவையல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பட்டாணி சாட். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குட்டி பூரிகள் (கடைகளில் பாக்கெட் டாக கிடைக்கும்) - 10
காய்ந்த பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
கெட்டித் தயிர் - அரை கப்
ஸ்வீட் சட்னி - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்
ஓமப்பொடி (ஸ்நாக் வகை) - கால் கப்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை போட்டு வதக்கி, வெந்த பட்டாணி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
ஒரு தட்டில் பட்டாணி கலவையை சேர்த்து அதன் மேல் பொடித்த பூரி துண்டுகள், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
குட்டி பூரிகள் (கடைகளில் பாக்கெட் டாக கிடைக்கும்) - 10
காய்ந்த பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
கெட்டித் தயிர் - அரை கப்
ஸ்வீட் சட்னி - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்
ஓமப்பொடி (ஸ்நாக் வகை) - கால் கப்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை போட்டு வதக்கி, வெந்த பட்டாணி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
ஒரு தட்டில் பட்டாணி கலவையை சேர்த்து அதன் மேல் பொடித்த பூரி துண்டுகள், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான பட்டாணி சாட் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பிரண்டை சாப்பிட்டால் எலும்புக்கு வலுகிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, இன்று நாம் ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரண்டை இளசாக - 1 கப்
புளி - 50 கிராம்,
சின்னவெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1,
பூண்டு - 7 பல்,
சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
வெல்லம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடி செய்ய
நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
கசகசா - 1/4 தேக்கரண்டி
செய்முறை
பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்.
தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.
புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
பிரண்டை இளசாக - 1 கப்
புளி - 50 கிராம்,
சின்னவெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1,
பூண்டு - 7 பல்,
சாம்பார்பொடி - தேவைக்கேற்ப,
வெல்லம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடி செய்ய
நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
கசகசா - 1/4 தேக்கரண்டி
செய்முறை
பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம்.
தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும்.
தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.
புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று பாகற்காய் காரக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 300 கிராம்,
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 50மி.லி.,
தக்காளி - 2,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்.
செய்முறை
சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.
பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.
பாகற்காய் - 300 கிராம்,
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 50மி.லி.,
தக்காளி - 2,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்.
செய்முறை
சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.
பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.
சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
பால் - 1 லிட்டர்,
நாட்டு சர்க்கரை - 125 கிராம்,
ஏலக்காய் - 5 எண்ணம்,
கேரட் - 150 கிராம்
செய்முறை
கேரட்டை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும்.
அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் சூடான பாலில் கரண்டியால் கலக்கி கொண்டே கேரட் சாற்றை ஊற்ற வேண்டும். கேரட்டானது நறுமண பாலுக்கு அற்புதமான நிறத்தை கொடுப்பதுடன் வைட்டமின் ஏ சத்தையும் அளிக்கின்றது.
வாசனை மற்றும் சுவைக்காக ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பாலை பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.
தேவையான பொருட்கள்
பால் - 1 லிட்டர்,
நாட்டு சர்க்கரை - 125 கிராம்,
ஏலக்காய் - 5 எண்ணம்,
கேரட் - 150 கிராம்
செய்முறை
கேரட்டை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும்.
அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் சூடான பாலில் கரண்டியால் கலக்கி கொண்டே கேரட் சாற்றை ஊற்ற வேண்டும். கேரட்டானது நறுமண பாலுக்கு அற்புதமான நிறத்தை கொடுப்பதுடன் வைட்டமின் ஏ சத்தையும் அளிக்கின்றது.
வாசனை மற்றும் சுவைக்காக ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பாலை பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.
பின்பு பாலை ஆற வைத்து சுத்தமாக வடிகட்டி பேக்கிங் செய்து குளிர் சாதன பெட்டியில் குளிர்ச்சியாக வைத்து பருகலாம். அல்லது சூடாகவும் பருகலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
அல்வா நெய் அல்லது மற்ற எண்ணெய்களில் செய்யப்படும் ஒன்று. ஆனால், இந்த மஸ்கோத் அல்வா முழுக்க முழுக்க எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் பாலால் தயாரிக்கின்றனர்.
தேவையான பொருள்:
மைதா - 1/2 கப்
தேங்காய் - 1
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 10
செய்முறை
நீங்கள் அல்வா செய்வதற்கு முந்திய நாள் மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும். பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசையவும். பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். மறுநாள் வடிகட்டிய பாலின் மேலோடோயை மட்டும் நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.
தேங்காயை துருவி அதிலிருந்து 3 கப் வரை தண்ணீர் சேர்க்காமல் பாலை எடுத்து வைக்க வேண்டும்.
கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலினையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கிகொண்டே இருக்கவும்.
தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய் சூட்டில் வெளிவந்து அல்வா வேக சரியான பதத்திற்கு வந்துவிடும்.
தற்போது அல்வா சுருண்டு விடும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் பரிமாறலாம்.
மைதா - 1/2 கப்
தேங்காய் - 1
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 10
செய்முறை
நீங்கள் அல்வா செய்வதற்கு முந்திய நாள் மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும். பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசையவும். பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். மறுநாள் வடிகட்டிய பாலின் மேலோடோயை மட்டும் நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.
தேங்காயை துருவி அதிலிருந்து 3 கப் வரை தண்ணீர் சேர்க்காமல் பாலை எடுத்து வைக்க வேண்டும்.
கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலினையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கிகொண்டே இருக்கவும்.
தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய் சூட்டில் வெளிவந்து அல்வா வேக சரியான பதத்திற்கு வந்துவிடும்.
தற்போது அல்வா சுருண்டு விடும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் பரிமாறலாம்.
இப்பொழுது சுவையான மஸ்கோத் அல்வா தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்






