
குதிரைவாலி அரிசி - 4 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, 8 மணி நேரம் புளிக்கவிடவும்.
மிக்சியில் தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
சூடான தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.