என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகள் இட்லி என்றால் சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இப்படி வித்தியாசமான முறையில் ஸ்டஃப்டு மசாலா இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - ஒரு பெரிய கப்
    பட்டாணி - 1/2 கப்
    உருளை கிழங்கு - 2 (பெரியது)
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை
     
    பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

    உருளைக் கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும்.

    கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.

    அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும்.

    இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா ஸ்டஃப்டு இட்லி தயார்.

    சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அவல் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பு அவல் - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
    மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கெட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    ரஸ்க்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    வாய் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு அவலைச் சேர்த்து தண்ணீரில் அலசி, பிறகு 10 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

    இதனுடன் மற்ற பொருள்கள் பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) சேர்த்துப் பிசையவும்.

    இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து தட்டையாகத் தட்டவும்.

    இதை ரஸ்க்தூளில் புரட்டவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த அவல் மினி ரொட்டியைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

    சத்தான அவல் ரொட்டி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    சாதாரண காபியை விட ஃபில்டர் காபியின் நறுமணமும், சுவையும் அடடே பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல வைக்கும்.. சரி, இப்போ ஃபில்டர் காபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்...
    தேவையான பொருட்கள்:

    பால், காபி தூள் - 3 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்கவும்.

    பிறகு, காபி ஃபில்டரின் மேல் பகுதியில் காபி பவுடரை சேர்க்கவும். அத்துடன் சுடு தண்ணீரை ஊற்றி மூடி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சவும்.

    ஒரு டம்ளரில் தேவையான அளவு சர்க்கரை போட்டு, அத்துடன் டீகாஷன் மற்றும் பால் சேர்த்து ஸ்பூன் வைத்து கலக்கினால் சுட சுட ஃபில்டர் காபி ரெடி..!

    குறிப்பு: ஒரு முறை பயன்படுத்திய டிகாஷனை மேற்ப்படி கூறியதுபோல் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடியும். இன்று பச்சரிசி, மிளகு சேர்த்து தவலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய்,
    உப்பு - தேவையான அளவு.

    தவலை அடை

    செய்முறை:

    பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.

    அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

    அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும்.

    ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    சத்தான சுவையான தவலை அடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உணவுகளை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில் இன்று ஸ்மைலி சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரெட் துண்டு - 4,
    சாஸ் அல்லது மையோனஸ் - தேவையான அளவு

    செய்முறை

    4 பிரட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளுங்கள்.

    ஸ்மைலி சாண்ட்விச்

    இரண்டு பிரட் துண்டுகளுக்கு நடுவே சாஸ் அல்லது மையோனஸ் தடவி, ஒட்டிக்கொள்ளுங்கள்.

    வீட்டில் புதினா சட்னி இருந்தால் அதையும் மையோனஸுடன் தடவிக்கொள்ளலாம்.

    சாண்ட்விச்சின் மேல் பாகத்தில் சாஸ் ஊற்றி கண் மற்றும் வாய் பகுதிகளை உருவாக்கி கொள்ளுங்கள்.

    அழகுபடுத்த ஆலிவ் பழங்களை கூட நறுக்கி, கண் பகுதியை உருவாக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீர்ச்சத்து மிகுந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி - கால் கிலோ
    வெங்காயம் - 1 பெரியது
    தக்காளி - 2
    கறிவேப்பிலை - 1 கொத்து
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
    உப்பு - தேவைக்கு
    சிறு பருப்பு - 50 கிராம்
    கடுகு, சீரகம் - தாளிக்க
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    முள்ளங்கி

    செய்முறை :

    முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.

    சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.

    இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான தந்தூரி சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். செய்வதும் மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள்

    சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :


    தயிர் - ஒரு கப்
    பூண்டு - ஒன்று
    இஞ்சி - ஒரு துண்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சைமிளகாய் - 2
    லவங்கம் - 4
    எலுமிச்சை - பாதி
    மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    பிரியாணி செய்ய :

    அரிசி - அரை கிலோ
    சிக்கன் லெக்பீஸ் - 4
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

    தாளிக்க :

    பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா2

    செய்முறை


    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக்கால் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

    அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.

    அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

    விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.

    அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி, பூண்டு உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.
    தேவையான பொருட்கள்

    பூண்டு - 12 பற்கள்
    இஞ்சி - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 10
    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    வெல்லத்துருவல் - அரை டீஸ்பூன்
    கடுகு மற்றும் உளுந்து - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.

    இத்துடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

    வதக்கிய பொருட்களுடன் சிறிது நீர், வெல்லத்துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.

    காரசாரமான பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட இந்த செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கத்தரிக்காய் - 6
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    கடலை மாவு - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து பொடிக்க :

    தனியா - 2 ஸ்பூன்
    கடலை பருப்பு - 1 ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்
    மிளகு - அரை ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு

    கத்தரிக்காய் வறுவல்

    செய்முறை :

    கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

    அடுத்து தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

    தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும்.

    இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும்.

    சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் ரெடி.

    சாம்பார் சாதம், தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாகற்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. பாகற்காயை வதக்கிச் சாப்பிட்டாலும், ஆவியில் வேக வைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
    தேவையான பொருட்கள்

    பாகற்காய் - 150 கிராம்
    முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
    தனியா - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 6
    புளி மற்றும் வெல்லம் - சிறிதளவு
    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    விதையை நீக்கி பாகற்காயை நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

    பின் பாகற்காயை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

    வதக்கிய பொருட்களுடன் புளி, வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    அத்துடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்.

    பாகற்காய் சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிங்கர் சிப்ஸை கடைகளில் வாங்கி கொடுத்து இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஃபிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
    மிளகாய் வற்றல் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    முதலில் உருளைக் கிழங்கின் தோலினை சீவிக் கொள்ளவும்.

    பின்னர் உருளைக் கிழங்கினை நீளவாக்கில் 1/4 இன்ஞ் தடிமனில் வட்ட வட்டமாக வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெட்டிய உருளைக் கிழங்கு வில்லைகளைப் போடவும்.

    பின்னர் வட்ட வில்லைகளை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக விரல் வடிவத்தில் வெட்டி தண்ணீரில் போடவும்.

    விரல் வடிவத்துண்டுகள் ஒரே அளவில் இருக்குமாறு வெட்டிக் கொள்ளவும். அப்போதுதான் எண்ணெயில் பொரித்து எடுக்கும்போது ஒரே சீராக வேகும்.

    உருளைக் கிழங்கு துண்டுகளை வடிகட்டியில் போட்டு வடித்துக் கொள்ளவும்.

    காட்டன் துணியில் வடிகட்டி உருளைக் கிழங்கு துண்டுகளை உலர்த்தி விடவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, காஷ்மீரி மிளகாய் வற்றல் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கிளறிக் கொள்ளவும்.

    உருளைக் கிழங்கின் மேற்புறம் உலர்ந்த பின்பு அதனை எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் சோள மாவுக் கலவையை சேர்க்கவும்.

    எல்லா கிழங்கிலும் சோள மாவுக் கலவை படுமாறு நன்கு குலுக்கி விடவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோளமாவு பிரட்டிய உருளைக் கிழங்கினை போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் தயார்.

    குறிப்பு

    விருப்பமுள்ளவர்கள் சோள மாவிற்கு பதிலாக அரிசி மாவையோ, மைதாவையோ பயன்படுத்தி சிப்ஸ் தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் மிளகாய்ப் பொடிக்குப் பதில் மிளகுப் பொடி சேர்த்தும் சிப்ஸ் தயார் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரண்டை கை வலி, கால் வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து. பிரண்டை எலும்புகளை பலப்படுத்துவதோடு முறிந்த எலும்புகளை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டது.
    தேவையான பொருட்கள்

    பிரண்டைத் தண்டு - 1 கட்டு
    சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
    வெள்ளைப் பூண்டு - 3 பற்கள் (பெரியது)
    சீரகம் - 1 ஸ்பூன்
    மிளகு - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - 2 கொத்து
    கறிவேப்பிலை - 2 கீற்று
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    பிரண்டையின் மேற்தோலை பிரித்து எடுத்து சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த பிரண்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

    குக்கரில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அதனுடன் 4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.

    ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.

    குக்கரின் ஆவி அடங்கியதும் பிரண்டையில் உள்ள நீரை வடிகட்டவும். வடிகட்டில் தங்கியுள்ளதை நன்கு மசித்து மீண்டும் சூப்பில் நன்கு கலந்து விடவும்.

    பரிமாறும் போது கொத்தமல்லி இலை, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சுவையான பிரண்டை சூப் தயார்.

    இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.

    குறிப்பு

    பிரண்டையை தேர்வு செய்யும் போது இளம்பச்சை நிறத்தில் உள்ள இளந்தண்டினைத் தேர்ந்தெடுக்கவும். இளந்தண்டு கைகளில் அரிப்பினை அவ்வளவாக ஏற்படுத்தாது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×