என் மலர்
சமையல்
சிறுதானியங்களில் பல சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சாமை அரிசி, நாட்டுக்கோழி சேர்த்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி- ஒரு கப்
நாட்டுக்கோழி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டுவிழுது - 2 டீஸ்பூன்
புதினா - கால் கப்
கொத்தமல்லித்தழை - கால் கப்
ஏலக்காய் - 2
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
கல்பாசி - 1 சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
நெய்/நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சாமை அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.
நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நறுக்கிய கோழித்துண்டுகள், அதற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி -பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
கோழி வெந்ததும் துண்டுகளை தனியாகவும், அதன் தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.
இத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இத்துடன் வேக வைத்த கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு, கோழி வேக வைத்த தண்ணீரை ஊற்றி (1 கப் சாமைக்கு 2.5 கப் தண்ணீர்) கொதிக்க விடவும்.
இத்துடன் சாமையைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.
சூப்பரான சாமை நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.
குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு இது. சாமை உடலில் உள்ள சர்க்கரைச்சத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. கோழி வேக வைத்த தண்ணீரின் அளவு 2.5 கப் வரவில்லை என்றால்,வெறும் தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம்.
சாமை அரிசி- ஒரு கப்
நாட்டுக்கோழி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டுவிழுது - 2 டீஸ்பூன்
புதினா - கால் கப்
கொத்தமல்லித்தழை - கால் கப்
ஏலக்காய் - 2
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
கல்பாசி - 1 சிறிய துண்டு
மிளகு - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
நெய்/நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சாமை அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.
நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நறுக்கிய கோழித்துண்டுகள், அதற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி -பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
கோழி வெந்ததும் துண்டுகளை தனியாகவும், அதன் தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.
இத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இத்துடன் வேக வைத்த கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு, கோழி வேக வைத்த தண்ணீரை ஊற்றி (1 கப் சாமைக்கு 2.5 கப் தண்ணீர்) கொதிக்க விடவும்.
இத்துடன் சாமையைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.
சூப்பரான சாமை நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.
குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு இது. சாமை உடலில் உள்ள சர்க்கரைச்சத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. கோழி வேக வைத்த தண்ணீரின் அளவு 2.5 கப் வரவில்லை என்றால்,வெறும் தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம்.
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மாவு (மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும்) - ஒரு கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
சோயா மாவு - கால் கப்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.
இதை சிறிய அளவு உருண்டையாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் (அ) நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி ரெடி.
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மாவு (மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும்) - ஒரு கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
சோயா மாவு - கால் கப்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.
இதை சிறிய அளவு உருண்டையாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் (அ) நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி ரெடி.
வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப்,
வேக வைத்து, அரைத்த வேர்க்கடலை விழுது - அரை கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
வேர்க்கடலை விழுதுடன், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
கோதுமை மாவை சிறிய பூரிகளாக இட்டு, நடுவில் சிறிதளவு வேர்க்கடலை விழுதை வைத்து மூடி, மறுபடியும் லேசாக இடவும்.
எண்ணெயைக் காய வைத்து, அதில் செய்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.
அருமையான ருசியுடன் இருக்கும் இந்த பூரி.
கோதுமை மாவு - ஒரு கப்,
வேக வைத்து, அரைத்த வேர்க்கடலை விழுது - அரை கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
வேர்க்கடலை விழுதுடன், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
கோதுமை மாவை சிறிய பூரிகளாக இட்டு, நடுவில் சிறிதளவு வேர்க்கடலை விழுதை வைத்து மூடி, மறுபடியும் லேசாக இடவும்.
எண்ணெயைக் காய வைத்து, அதில் செய்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.
அருமையான ருசியுடன் இருக்கும் இந்த பூரி.
பரங்கிக்காய் குளிர்ச்சியானதாக இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் - 1 பெரிய பத்தை,
புளி - எலுமிச்சை அளவு,
பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.
தாளிக்க...
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 துளி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
பரங்கிக்காயின் தோலையும் விதைகளையும் நீக்கி விட்டு சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பரங்கி துண்டுகளை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பரங்கிக்காய் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
கரைத்த புளியை கொதிக்கும் பரங்கிக்காயில் சேர்த்து இத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதித்தவுடன் ஆற வைத்து மசிக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.
சூப்பரான பரங்கிக்காய் பச்சடி ரெடி.
பரங்கிக்காய் - 1 பெரிய பத்தை,
புளி - எலுமிச்சை அளவு,
பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.
தாளிக்க...
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 துளி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
பரங்கிக்காயின் தோலையும் விதைகளையும் நீக்கி விட்டு சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பரங்கி துண்டுகளை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பரங்கிக்காய் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
கரைத்த புளியை கொதிக்கும் பரங்கிக்காயில் சேர்த்து இத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதித்தவுடன் ஆற வைத்து மசிக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.
சூப்பரான பரங்கிக்காய் பச்சடி ரெடி.
வெங்காயத்தை போலவே வெங்காயத்தாளிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை கடலைப்பருப்புடன் சேர்த்து வடையாக சுட்டும் சாப்பிடலாம். இதோ வெங்காயத்தாள் வடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 15 பல்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
சோம்பு - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை
கடலைப்பருப்பை முக்கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி காய்ந்த மிளகாய் சேர்த்து கரகககரப்பாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் வெங்காயம், நசுக்கிய பூண்டு, வெங்காயத்தாள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி எண்ணெய்யிலிட்டு பொரிக்க வேண்டும்.
மிதமான தீயில் சில நிமிடம் திருப்பி போட்டு வேகவைத்து கருகிவிடாமல் சிவந்த நிறத்தில் எடுத்தால் கமகம மணத்துடன் கரகர மொறுமொறு வெங்காயத்தாள் வடை ரெடி.
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 15 பல்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
சோம்பு - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை
கடலைப்பருப்பை முக்கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி காய்ந்த மிளகாய் சேர்த்து கரகககரப்பாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் வெங்காயம், நசுக்கிய பூண்டு, வெங்காயத்தாள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி எண்ணெய்யிலிட்டு பொரிக்க வேண்டும்.
மிதமான தீயில் சில நிமிடம் திருப்பி போட்டு வேகவைத்து கருகிவிடாமல் சிவந்த நிறத்தில் எடுத்தால் கமகம மணத்துடன் கரகர மொறுமொறு வெங்காயத்தாள் வடை ரெடி.
காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் வேர்க்கடலை, அவல் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - ஒரு கப்,
ஊற வைத்த கெட்டி அவல் - கால் கப்,
கார்ன் - கால் கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு, பச்சை மிளகாய் துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வேர்க்கடலையையும் கார்னையும் வேக வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த வேர்க்கடலை, கார்னையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மாங்காய்த் துண்டு, தேங்காய்த் துண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சூப்பரான வேர்க்கடலை அவல் சாலட் ரெடி.
வேர்க்கடலை - ஒரு கப்,
ஊற வைத்த கெட்டி அவல் - கால் கப்,
கார்ன் - கால் கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு, பச்சை மிளகாய் துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வேர்க்கடலையையும் கார்னையும் வேக வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த வேர்க்கடலை, கார்னையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மாங்காய்த் துண்டு, தேங்காய்த் துண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சூப்பரான வேர்க்கடலை அவல் சாலட் ரெடி.
குஜராத்தி உணவுகளில் முத்தியா குஜராத்தி மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 250 கிராம்,
கடலைமாவு - 100 கிராம்,
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி,
ப.மிளகாய் - 3,
இஞ்சி - 1 துண்டு,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
ஈனோ எனப்படும் புரூட் சால்ட் - 1/4 தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு - 1,
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.
தாளிக்க
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை,
சீரகம் - 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிகவும் பொடியாகத் துருவிய கோஸ் உடன் உப்புக் கலந்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் கோஸை நன்றாக பிழிந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
கடலைமாவு மற்றும் ப.மிளகாய், உப்பு, இஞ்சி, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், பெருங்காயம் ஆகியவற்றை கோஸ் உடன் சேர்த்து, தேவையான நீர் சேர்த்து, மென்மையான மாவு தயாரிக்கவும்.
உள்ளங்கையில் சிறிது தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, உருளை வடிவில் உருட்டி, 15, 20 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
ஆறிய பின் துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் தாளித்து ஆவியில் வேகவைத்த முத்தியாவுடன் சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.
சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான முத்தியா குஜராத்தி ரெடி.
முட்டைக்கோஸ் - 250 கிராம்,
கடலைமாவு - 100 கிராம்,
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி,
ப.மிளகாய் - 3,
இஞ்சி - 1 துண்டு,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
ஈனோ எனப்படும் புரூட் சால்ட் - 1/4 தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு - 1,
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.
தாளிக்க
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை,
சீரகம் - 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிகவும் பொடியாகத் துருவிய கோஸ் உடன் உப்புக் கலந்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் கோஸை நன்றாக பிழிந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
கடலைமாவு மற்றும் ப.மிளகாய், உப்பு, இஞ்சி, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், பெருங்காயம் ஆகியவற்றை கோஸ் உடன் சேர்த்து, தேவையான நீர் சேர்த்து, மென்மையான மாவு தயாரிக்கவும்.
உள்ளங்கையில் சிறிது தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, உருளை வடிவில் உருட்டி, 15, 20 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
ஆறிய பின் துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் தாளித்து ஆவியில் வேகவைத்த முத்தியாவுடன் சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.
சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான முத்தியா குஜராத்தி ரெடி.
பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் (பெரியது) - 350 கிராம்,
பாலக்கீரை - 12,
புதினா-10 இலைகள்,
கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு,
இஞ்சி - 1/2 துண்டு,
எலுமிச்சைசாறு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குடை மிளகாய் - 1 துண்டு,
மிளகுத்தூள் - ருசிக்கேற்ப
செய்முறை
வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். சிறிதளவு வெள்ளரிக்காயை எடுத்து துருவிக்கொள்ளவும்.
இஞ்சி, குடைமிளாகாய், பாலக், புதினா, கொத்தமல்லி, வெள்ளரி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த ஜூஸ் உடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
கடைசியாக துருவிய வெள்ளரிக்காயை மேலே தூவி பரிமாறவும்.
குளுகுளு வெள்ளரி, பாலக் கூலர் ரெடி.
வெள்ளரிக்காய் (பெரியது) - 350 கிராம்,
பாலக்கீரை - 12,
புதினா-10 இலைகள்,
கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு,
இஞ்சி - 1/2 துண்டு,
எலுமிச்சைசாறு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குடை மிளகாய் - 1 துண்டு,
மிளகுத்தூள் - ருசிக்கேற்ப
செய்முறை
வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். சிறிதளவு வெள்ளரிக்காயை எடுத்து துருவிக்கொள்ளவும்.
இஞ்சி, குடைமிளாகாய், பாலக், புதினா, கொத்தமல்லி, வெள்ளரி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த ஜூஸ் உடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
கடைசியாக துருவிய வெள்ளரிக்காயை மேலே தூவி பரிமாறவும்.
குளுகுளு வெள்ளரி, பாலக் கூலர் ரெடி.
குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நேந்திரம் பழம் - 4
தேங்காய்த்துருவல் - கால் கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
சர்க்கரை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - தேவைக்கு
செய்முறை:
நேந்திரம் பழத்தை தோலூரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் 5 நிமிடங்கள் வேகவிட்டு ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு கூழாக அரைத்துக்கொள்வும்.
அதனை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயில் வைத்து கிளறிவிடவும்.
அத்துடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூளை சேர்த்துக்கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறி விடவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும்போது கீழே இறக்கிவிடவும்.
அதில் முத்திரி பருப்புகளை தூவி ருசிக்கலாம்.
நேந்திரம் பழம் - 4
தேங்காய்த்துருவல் - கால் கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
சர்க்கரை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - தேவைக்கு
செய்முறை:
நேந்திரம் பழத்தை தோலூரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் 5 நிமிடங்கள் வேகவிட்டு ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு கூழாக அரைத்துக்கொள்வும்.
அதனை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயில் வைத்து கிளறிவிடவும்.
அத்துடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூளை சேர்த்துக்கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறி விடவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும்போது கீழே இறக்கிவிடவும்.
அதில் முத்திரி பருப்புகளை தூவி ருசிக்கலாம்.
இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதை - அரை கப்
உளுந்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - அரை டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு மிளகாய், கொத்தமல்லி விதையை வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும்.
அதேபோல் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் கொட்டி அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து பொடியாக்கி பயன்படுத்தவும்.
கொத்தமல்லி விதை - அரை கப்
உளுந்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - அரை டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு மிளகாய், கொத்தமல்லி விதையை வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும்.
அதேபோல் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் கொட்டி அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து பொடியாக்கி பயன்படுத்தவும்.
மொறுமொறுப்பான பக்கோடா வகைகளை வீட்டிலேயே தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக டீ, காபியுடன் சேர்த்து ருசிக்கலாம். உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
வறுத்த சேமியா - கால் கிலோ
கடலை மாவு - 50 கிராம்
இஞ்சி துண்டு - 1
பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)
அரிசி மாவு - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, இஞ்சி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு பொரித்தெடுக்கவும்.
சூப்பரான சேமியாபக்கோடா ரெடி.
வறுத்த சேமியா - கால் கிலோ
கடலை மாவு - 50 கிராம்
இஞ்சி துண்டு - 1
பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)
அரிசி மாவு - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, இஞ்சி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு பொரித்தெடுக்கவும்.
சூப்பரான சேமியாபக்கோடா ரெடி.
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 டம்ளர்
அரிசி - 1 டம்ளர்
கடலை பருப்பு - 1 டம்ளர்
உளுந்து - 1/2 டம்ளர்
வத்தல் - 5
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்பு
செய்முறை
கம்பு, அரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக ஊறியதும் அதனுடன் வத்தல், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
அடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்தது மாவை நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சத்தான கம்பு அடை ரெடி.
கம்பு - 1 டம்ளர்
அரிசி - 1 டம்ளர்
கடலை பருப்பு - 1 டம்ளர்
உளுந்து - 1/2 டம்ளர்
வத்தல் - 5
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்பு
செய்முறை
கம்பு, அரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக ஊறியதும் அதனுடன் வத்தல், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
அடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்தது மாவை நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சத்தான கம்பு அடை ரெடி.






