என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பெயர் விளக்கம் : ‘த்வி’என்றால் இரண்டு என்றும் ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ப்ரசரணா’ என்றால் நீட்டி வைத்தல் என்றும் பொருள். இரண்டு கால் பாதங்களையும் நீட்டி வைத்திருப்பதால் இந்த ஆசனத்திற்கு ‘தவி பாத ப்ரசரணாசனம் என்று பெயர் அமைந்துள்ளது.
செய்முறை : நான்காம் நிலையில் உள்ளுக்குள் இழுத்த மூச்சை வெளியேவிடாமல் அடக்கி மற்றொரு காலையும் பின்நோக்கி நீட்டி வைத்திருந்த, காலோடு சேர்த்து வைத்து இரண்டு முழங்கால்களையும் மேலே தூக்கவும். கைகள் நேராக இருக்கட்டும். உடலின் பாரத்தை கைகளாலும், கால் விரல்களாலும் தாங்கிக் கொள்ளவும் மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : உடல் எடையை சமநிலைப்படுத்துவதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு : தலையில் இருந்து குதிகால் வரை உள்ள உடல் பகுதி சற்று சாய்ந்த நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். மார்பு மற்றும் பிருஷ்டத்தை மேலே உயர்த்தவோ கீழே இறக்கவோ கூடாது.
பயன்கள் : கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை அடையும்.
செய்முறை : நான்காம் நிலையில் உள்ளுக்குள் இழுத்த மூச்சை வெளியேவிடாமல் அடக்கி மற்றொரு காலையும் பின்நோக்கி நீட்டி வைத்திருந்த, காலோடு சேர்த்து வைத்து இரண்டு முழங்கால்களையும் மேலே தூக்கவும். கைகள் நேராக இருக்கட்டும். உடலின் பாரத்தை கைகளாலும், கால் விரல்களாலும் தாங்கிக் கொள்ளவும் மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : உடல் எடையை சமநிலைப்படுத்துவதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு : தலையில் இருந்து குதிகால் வரை உள்ள உடல் பகுதி சற்று சாய்ந்த நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். மார்பு மற்றும் பிருஷ்டத்தை மேலே உயர்த்தவோ கீழே இறக்கவோ கூடாது.
பயன்கள் : கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை அடையும்.
அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அவர் வாரிசு தனக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அவர் வாரிசு தனக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இருவருக்கும் பாதிப்பு இருந்தால் வாரிசுகளுக்குக் கூடுதல் கவனம் தேவை. இதனை அனைத்து மருத்துவர்களும் அதிகம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சமுதாயமும் நன்கு கவனத்துடன் இருக்கின்றனர்.
பொதுவில் இன்றைய கால கட்டத்தில் பலரும் சர்க்கரை நோய் பாதிப்பிற்குள்ளாவதால் இளைஞர்களும் அவ்வப்போது சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக இளைஞர்களுக்கு சர்க்கரையின் அளவு சற்று கூடுதலாகவே இருக்கின்றது. சிலருக்கு ஒரு நேரம் அளவாகவும், ஒரு நேரம் கூடுதலாகவும் இருக்கின்றது. உடற்பயிற்சி மட்டுமே உதவாது. நாம் உண்ணும் உணவினை முறையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நமது கணையத்தில் உள்ள செல்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்து தன்னை சரி செய்து கொள்ளும்.
உங்கள் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வர பழகி விட்டீர்கள் என்றால் இதுவே உங்கள் அன்றாட பழக்கமாகி விடும். சிலர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மிக அதிகமாக இருக்கின்றது என்பர். சர்க்கரை, மாவு சத்து இவை உடனடி ரத்தத்தில் சர்க்கரை அளவினை சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றி விடும். சிலருக்கு காலை வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருக்கின்றது என்று கூறுவர்.
இவர்கள் முறையாக மருந்தும் உணவும் எடுத்துக் கொண்டாலும் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு கூடுகின்றது என்பர். இது ஹார்மோன்களின் செயல்பாடு இரவில் அதிகமாக இருப்பதனால் இருக்கலாம். பகல் நேரத்தில் 120-140 அளவில் உங்கள் சர்க்கரை அளவு இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். காலை உயர் சர்க்கரை அளவினைப் பற்றி மருத்துவ ஆலோசனையும் பெறுங்கள்.
உங்கள் சர்க்கரை அளவின் ஏற்றத்திற்கு உங்களின் மற்ற மருந்துகளும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உட்பட) உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் சொல்லுங்கள்.
பொதுவில் கார்போ ஹைடிரேட் உணவுகள் 30-60 நிமிடத்தில் அதிக உயர்வினைக் காட்டும். புரத, கொழுப்புகள் இரண்டு மணி நேரம் பொறுத்து உடைய ஆரம்பிக்கும். ஸ்ட்ரெஸ், மனஉளைச்சல் இவை சர்க்கரை அளவினைக் கூட்டும்.
கேபின் கூட சர்க்கரை அளவினை கூட்டிக் காட்டும். சூடான தட்பவெப்பம் இருக்கும் பொழுது உடலில் நீர் சத்து குறைந்து சர்க்கரை அளவு மாறுபடலாம். ஆக அவ்வப்போது சிறிது நீர் குடித்துக் கொண்டு இருப்பதே மிகவும் நல்லது.
வயது கூடும் பொழுது ஹார்மோன் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் நாம் ஒரே வகையான உணவு முறையினையே பழக்கப்படுத்திக் கொள்கின்றோம். காய்கறி, பழங்கள் இவற்றினை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள பழக வேண்டும். உங்கள் பரம்பரை காரணமாக வயது கூடும் பொழுது இன்சுலின் உருவாக்கம் குறையலாம்.
எனவே பாதுகாப்பு முறையாக மருத்துவ அறிவுரைபடியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, யோகா இவற்றினை அனைவருமே பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
சிறு சிறு அளவாக 6-7 முறை உணவினை எடுத்துக் கொள்வதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாதிருக்கச் செய்யும். பலருக்கும் வீட்டிலேயே சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ளும் வசதி இப்பொழுது உள்ளது. ஆனால் இதனை முறைப்படி கற்றுக் கொள்ளுங்கள்.
பொதுவில் இன்றைய கால கட்டத்தில் பலரும் சர்க்கரை நோய் பாதிப்பிற்குள்ளாவதால் இளைஞர்களும் அவ்வப்போது சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக இளைஞர்களுக்கு சர்க்கரையின் அளவு சற்று கூடுதலாகவே இருக்கின்றது. சிலருக்கு ஒரு நேரம் அளவாகவும், ஒரு நேரம் கூடுதலாகவும் இருக்கின்றது. உடற்பயிற்சி மட்டுமே உதவாது. நாம் உண்ணும் உணவினை முறையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நமது கணையத்தில் உள்ள செல்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்து தன்னை சரி செய்து கொள்ளும்.
உங்கள் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வர பழகி விட்டீர்கள் என்றால் இதுவே உங்கள் அன்றாட பழக்கமாகி விடும். சிலர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மிக அதிகமாக இருக்கின்றது என்பர். சர்க்கரை, மாவு சத்து இவை உடனடி ரத்தத்தில் சர்க்கரை அளவினை சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றி விடும். சிலருக்கு காலை வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருக்கின்றது என்று கூறுவர்.
இவர்கள் முறையாக மருந்தும் உணவும் எடுத்துக் கொண்டாலும் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு கூடுகின்றது என்பர். இது ஹார்மோன்களின் செயல்பாடு இரவில் அதிகமாக இருப்பதனால் இருக்கலாம். பகல் நேரத்தில் 120-140 அளவில் உங்கள் சர்க்கரை அளவு இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். காலை உயர் சர்க்கரை அளவினைப் பற்றி மருத்துவ ஆலோசனையும் பெறுங்கள்.
உங்கள் சர்க்கரை அளவின் ஏற்றத்திற்கு உங்களின் மற்ற மருந்துகளும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உட்பட) உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் சொல்லுங்கள்.
பொதுவில் கார்போ ஹைடிரேட் உணவுகள் 30-60 நிமிடத்தில் அதிக உயர்வினைக் காட்டும். புரத, கொழுப்புகள் இரண்டு மணி நேரம் பொறுத்து உடைய ஆரம்பிக்கும். ஸ்ட்ரெஸ், மனஉளைச்சல் இவை சர்க்கரை அளவினைக் கூட்டும்.
கேபின் கூட சர்க்கரை அளவினை கூட்டிக் காட்டும். சூடான தட்பவெப்பம் இருக்கும் பொழுது உடலில் நீர் சத்து குறைந்து சர்க்கரை அளவு மாறுபடலாம். ஆக அவ்வப்போது சிறிது நீர் குடித்துக் கொண்டு இருப்பதே மிகவும் நல்லது.
வயது கூடும் பொழுது ஹார்மோன் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. மேலும் நாம் ஒரே வகையான உணவு முறையினையே பழக்கப்படுத்திக் கொள்கின்றோம். காய்கறி, பழங்கள் இவற்றினை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள பழக வேண்டும். உங்கள் பரம்பரை காரணமாக வயது கூடும் பொழுது இன்சுலின் உருவாக்கம் குறையலாம்.
எனவே பாதுகாப்பு முறையாக மருத்துவ அறிவுரைபடியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, யோகா இவற்றினை அனைவருமே பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
சிறு சிறு அளவாக 6-7 முறை உணவினை எடுத்துக் கொள்வதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாதிருக்கச் செய்யும். பலருக்கும் வீட்டிலேயே சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ளும் வசதி இப்பொழுது உள்ளது. ஆனால் இதனை முறைப்படி கற்றுக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் பாஸ்தா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காளான் சேர்த்து எளிய முறையில் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 150 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 6 பற்கள்
மொசரெல்லா சீஸ் - ¼ கப் (Mozzarella cheese)
கோதுமை / மைதா - 2 மேஜைக்கரண்டி
பால் - 1 கப்
காய்ந்த துளசி - 1 தேக்கரண்டி
காளான் - 200 கிராம்
காய்ந்த ஆர்கனோ - 1 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
பட்டர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.
கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸ்தா - 150 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 6 பற்கள்
மொசரெல்லா சீஸ் - ¼ கப் (Mozzarella cheese)
கோதுமை / மைதா - 2 மேஜைக்கரண்டி
பால் - 1 கப்
காய்ந்த துளசி - 1 தேக்கரண்டி
காளான் - 200 கிராம்
காய்ந்த ஆர்கனோ - 1 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் - தேவையான அளவு
பட்டர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.
கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கையில் தசைகள் வளர்ச்சிப் பெற்று, உடல் எடை அதிகரிக்கும்.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கையில் தசைகள் வளர்ச்சிப் பெற்று, உடல் எடை அதிகரிக்கும்.
வெண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. எனவே உங்கள் குழந்தைக்கு வெண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் கொடுத்து வாருங்கள். இதனால் தானாக உடல் எடை அதிகரிக்கும்.
கடலை எண்ணெய் புரோட்டீன் மற்றம் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை குழந்தைகளுக்கு பிரட்டில் தடவிக் கொடுத்தால், ஆரோக்கியமான முறையில் அவர்களின் எடை அதிகரிக்கும்.
பால் பொருட்களான பால் மற்றும் க்ரீம்களில் கலோரிகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் உங்கள் குழந்தைக்கு தவறாமல் 2 டம்ளர் பால் கொடுங்கள். மேலும் செரில் ஏதேனும் சாப்பிடுவதற்கு கொடுப்பதாக இருந்தால், அத்துடன் க்ரீம் சேர்த்துக் கொடுங்கள்.
முட்டையில் புரோட்டீன் வளமாக உள்ளது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 போன்றவை அதிகம் உள்ளது.

வாழைப்பழத்தில் உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும் உட்பொருட்கள் மற்றும் கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
சிக்கனில் புரோட்டீன் நல்ல அளவில் உள்ளது. மேலும் இது தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். ஆகவே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாத குழந்தைகளுக்கு, சிக்கனை அடிக்கடி கொடுத்து வாருங்கள்.
பாஸ்தா மற்றும் ஆலிவ் ஆயில் பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்.
வெண்ணெய் பழம் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஓர் பழம். இதில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம்.
வெண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. எனவே உங்கள் குழந்தைக்கு வெண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் கொடுத்து வாருங்கள். இதனால் தானாக உடல் எடை அதிகரிக்கும்.
கடலை எண்ணெய் புரோட்டீன் மற்றம் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை குழந்தைகளுக்கு பிரட்டில் தடவிக் கொடுத்தால், ஆரோக்கியமான முறையில் அவர்களின் எடை அதிகரிக்கும்.
பால் பொருட்களான பால் மற்றும் க்ரீம்களில் கலோரிகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் உங்கள் குழந்தைக்கு தவறாமல் 2 டம்ளர் பால் கொடுங்கள். மேலும் செரில் ஏதேனும் சாப்பிடுவதற்கு கொடுப்பதாக இருந்தால், அத்துடன் க்ரீம் சேர்த்துக் கொடுங்கள்.
முட்டையில் புரோட்டீன் வளமாக உள்ளது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 போன்றவை அதிகம் உள்ளது.

வாழைப்பழத்தில் உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும் உட்பொருட்கள் மற்றும் கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
சிக்கனில் புரோட்டீன் நல்ல அளவில் உள்ளது. மேலும் இது தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். ஆகவே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாத குழந்தைகளுக்கு, சிக்கனை அடிக்கடி கொடுத்து வாருங்கள்.
பாஸ்தா மற்றும் ஆலிவ் ஆயில் பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்.
வெண்ணெய் பழம் உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஓர் பழம். இதில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம்.
சர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்? என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
“சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் பாதிக்கப்படுவது கால்கள். ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை பரிசோதிக்க வேண்டும்’ என்று பொதுவாக மருத்துவத்தில் சொல்வார்கள்.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்துவிடும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடும். நரம்புகள் பாதிப்படையும். பாதத்தைப் பொறுத்தவரை எலும்புப் பகுதியில் பாதிப்பு, காலில் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும், வீக்கம் இருக்கும்; வலி தெரியாது, உணர்ச்சி இருக்காது. பாதிப்புகள் எதுவும் தெரியாத நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் அசைவு கொடுப்பதால் அழுத்தம் ஏற்பட்டு புண் பெரிதாகும்.
* காலில் புண் ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது கால் நரம்புகளே. காலப்போக்கில் பாதிப்படைந்த பகுதியில் அழற்சி ஏற்படும். அதைக் கவனிக்காமல் விடுவதால் நரம்பில் பாதிப்புகள் தீவிரமடைந்து தசைகளின் செயல்பாடுகள் தடைபடும். காலை ஊன்றமுடியாமல் அவதிப்பட நேரிடும்.
* கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கால்களைப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், தங்களின் தோல், பாதம், ஊட்டச்சத்து, எலும்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

கால்களை எப்படிப் பராமரிப்பது?
* சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்குமுன் சூடான நீரைக் கொண்டு கால்களைக் கழுவ வேண்டும். காலில் உணர்ச்சி இருக்கிறதா? என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
* கால் கழுவும்போது, காலில் அடிபட்டிருக்கிறதா? புண், காயங்கள், சிராய்ப்புகள் காணப்படுகிறதா? தடித்திருக்கிறதா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
* கால் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வறண்டு போகும்பட்சத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் லோஷன், க்ரீம் பயன்படுத்துவது நல்லது.
* கால் விரலின் நகங்களை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். நகம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நகம் வெட்டும்போது, மிகவும் கவனமாக வெட்ட வேண்டும். சதையை வெட்டிவிட்டால், அது புண்ணாகி பிரச்னை ஏற்படுத்தும்.
* கால் நகங்களைப் பாதுகாக்க, லெதரால் செய்யப்பட்ட ஷூ-ஷாக்ஸ் போன்ற காலணிகளை அணிவது நல்லது. காலின் அளவுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.
* காலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். உட்காரும்போது கால்களை நீட்டி உட்கார்வது, காலுக்கான தனிப்பயிற்சிகள் செய்வது அவசியம்.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்துவிடும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடும். நரம்புகள் பாதிப்படையும். பாதத்தைப் பொறுத்தவரை எலும்புப் பகுதியில் பாதிப்பு, காலில் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும், வீக்கம் இருக்கும்; வலி தெரியாது, உணர்ச்சி இருக்காது. பாதிப்புகள் எதுவும் தெரியாத நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் அசைவு கொடுப்பதால் அழுத்தம் ஏற்பட்டு புண் பெரிதாகும்.
* காலில் புண் ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது கால் நரம்புகளே. காலப்போக்கில் பாதிப்படைந்த பகுதியில் அழற்சி ஏற்படும். அதைக் கவனிக்காமல் விடுவதால் நரம்பில் பாதிப்புகள் தீவிரமடைந்து தசைகளின் செயல்பாடுகள் தடைபடும். காலை ஊன்றமுடியாமல் அவதிப்பட நேரிடும்.
* கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கால்களைப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், தங்களின் தோல், பாதம், ஊட்டச்சத்து, எலும்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

கால்களை எப்படிப் பராமரிப்பது?
* சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்குமுன் சூடான நீரைக் கொண்டு கால்களைக் கழுவ வேண்டும். காலில் உணர்ச்சி இருக்கிறதா? என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
* கால் கழுவும்போது, காலில் அடிபட்டிருக்கிறதா? புண், காயங்கள், சிராய்ப்புகள் காணப்படுகிறதா? தடித்திருக்கிறதா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
* கால் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வறண்டு போகும்பட்சத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் லோஷன், க்ரீம் பயன்படுத்துவது நல்லது.
* கால் விரலின் நகங்களை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். நகம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நகம் வெட்டும்போது, மிகவும் கவனமாக வெட்ட வேண்டும். சதையை வெட்டிவிட்டால், அது புண்ணாகி பிரச்னை ஏற்படுத்தும்.
* கால் நகங்களைப் பாதுகாக்க, லெதரால் செய்யப்பட்ட ஷூ-ஷாக்ஸ் போன்ற காலணிகளை அணிவது நல்லது. காலின் அளவுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.
* காலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். உட்காரும்போது கால்களை நீட்டி உட்கார்வது, காலுக்கான தனிப்பயிற்சிகள் செய்வது அவசியம்.
காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புதினா - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும்.
மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும்.
புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புதினா - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும்.
மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும்.
புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்கள், கழுத்து, கை கால்கள், அடிவயிறு, தொடைகள் பலம் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
பெயர் விளக்கம் : ‘ஏக’ என்றால் ஒன்று என்றும் ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ப்ரசரணா’ என்றால் நீட்டி வைத்தல் என்றும் பொருள். இந்த ஆசன நிலையில் ஒரு கால் பாதத்தை நீட்டி வைத்து செய்வதால் ஏக பாத ப்ரசரணாசனம் என்று பெயர் பெற்றுள்ளது.
செய்முறை : மூன்றாம் நிலையிலிருந்தபடியே கைகளை வளைக்காமல், வலது காலை பின் நோக்கி நீட்டி கால்விரல்களை தரையில் ஊன்றி வைக்கவும். அதே சமயம் தலையை மேலே உயர்த்தவும்.
மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மடக்கிய இடது காலின் முழங்கால் நேராகவும், கைகளுக்கு முன் வரும்படியும் வைத்துக் கொள்ளவும். பார்வை மேல் நோக்கி இருக்கட்டும். மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி வைப்பதின் மீதும், மார்பு, கழுத்தை மேல் நோக்கி உயர்த்துவதின் மீதும், ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு : இப்பயிற்சியில் முன்னால் வைத்திருக்கும் காலின் பாதமும், உள்ளங்கைகளும் முழுமையாக தரையில் படிந்திருக்க வேண்டும். மார்பை நன்றாக உயர்த்தி தலையை முடிந்த அளவு பின்னால் வளைக்கவும்.
பயன்கள் : தோள்கள், கழுத்து, கை கால்கள், அடிவயிறு, தொடைகள் பலம் பெறும்.
செய்முறை : மூன்றாம் நிலையிலிருந்தபடியே கைகளை வளைக்காமல், வலது காலை பின் நோக்கி நீட்டி கால்விரல்களை தரையில் ஊன்றி வைக்கவும். அதே சமயம் தலையை மேலே உயர்த்தவும்.
மூச்சை உள்ளுக்குள் இழுக்கவும். மடக்கிய இடது காலின் முழங்கால் நேராகவும், கைகளுக்கு முன் வரும்படியும் வைத்துக் கொள்ளவும். பார்வை மேல் நோக்கி இருக்கட்டும். மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி வைப்பதின் மீதும், மார்பு, கழுத்தை மேல் நோக்கி உயர்த்துவதின் மீதும், ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு : இப்பயிற்சியில் முன்னால் வைத்திருக்கும் காலின் பாதமும், உள்ளங்கைகளும் முழுமையாக தரையில் படிந்திருக்க வேண்டும். மார்பை நன்றாக உயர்த்தி தலையை முடிந்த அளவு பின்னால் வளைக்கவும்.
பயன்கள் : தோள்கள், கழுத்து, கை கால்கள், அடிவயிறு, தொடைகள் பலம் பெறும்.
பலரும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்பதால், வேப்பிலையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும். குறிப்பாக தற்போது பலரும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்பதால், வேப்பிலையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்றும், அப்படி பயன்படுத்தினால் பெறும் நன்மைகள் என்னவென்றும் பார்ப்போம்.
பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம்.
உங்கள் முடி பொலிவிழந்து உள்ளதா? அப்படியெனில் அதனை வேப்பிலை நீரைக் கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை அலசி வந்தால், உங்கள் முடி பொலிவோடும், பட்டுப் போன்றும் இருக்கும்.
முடியின் வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வேப்பிலை எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். முக்கியமாக வேப்பிலை எண்ணெய் வழுக்கையான பகுதியிலும் முடியை வளரச் செய்யும்.
ஸ்கால்ப்பில் ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், அதனை வேப்பிலையைக் கொண்டு விரைவில் போக்கலாம். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.

உங்களுக்கு தலையில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்படுகிறதா? அப்படியெனில் வேப்பிலை நீரைக் கொண்டு தலையை அலசுங்கள். இதனால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனே அடங்கும்.
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் 3 டேபிள் ஸ்பூன் வேப்பிலை எண்ணெயை சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச, பொடுகுத் தொல்லை, அரிக்கும் உச்சந்தலை போன்றவை அடங்கும்.
ஒரு கையளவு வேப்பிலையை எடுத்துக் கொண்டு, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த வேப்பிலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி வர, பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் வேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, தலையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வேப்பிலையில் வெயிலில் உலர்த்தி, பின் அதனை பொடி செய்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவைப்படும் போது, அதனை எடுத்து, நீர் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளிர்த்து வாருங்கள்.
பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம்.
உங்கள் முடி பொலிவிழந்து உள்ளதா? அப்படியெனில் அதனை வேப்பிலை நீரைக் கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை அலசி வந்தால், உங்கள் முடி பொலிவோடும், பட்டுப் போன்றும் இருக்கும்.
முடியின் வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வேப்பிலை எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். முக்கியமாக வேப்பிலை எண்ணெய் வழுக்கையான பகுதியிலும் முடியை வளரச் செய்யும்.
ஸ்கால்ப்பில் ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், அதனை வேப்பிலையைக் கொண்டு விரைவில் போக்கலாம். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.

உங்களுக்கு தலையில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்படுகிறதா? அப்படியெனில் வேப்பிலை நீரைக் கொண்டு தலையை அலசுங்கள். இதனால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனே அடங்கும்.
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் 3 டேபிள் ஸ்பூன் வேப்பிலை எண்ணெயை சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச, பொடுகுத் தொல்லை, அரிக்கும் உச்சந்தலை போன்றவை அடங்கும்.
ஒரு கையளவு வேப்பிலையை எடுத்துக் கொண்டு, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த வேப்பிலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி வர, பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் வேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, தலையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வேப்பிலையில் வெயிலில் உலர்த்தி, பின் அதனை பொடி செய்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவைப்படும் போது, அதனை எடுத்து, நீர் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளிர்த்து வாருங்கள்.
சப்பாத்தி, பூரி, சாதம், நாண், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கருப்பு உளுந்து தால். இன்று இந்த கருப்பு உளுந்து தால் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய கருப்பு உளுந்து - ஒரு கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
தக்காளி - 4,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் (மல்லித் தூள்) - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, கருப்பு உளுந்து சேர்த்து கலந்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
ஆறிய பின் திறந்து உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான கருப்பு உளுந்து தால் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முளைக்கட்டிய கருப்பு உளுந்து - ஒரு கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
தக்காளி - 4,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் (மல்லித் தூள்) - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, கருப்பு உளுந்து சேர்த்து கலந்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
ஆறிய பின் திறந்து உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான கருப்பு உளுந்து தால் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.
நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல பொருட்களுக்கு நாம் உரிய மரியாதையை வழங்குவதில்லை. அவைகளை தேவையற்றவைகளாக நினைத்து ஒதுக்கிவிடவும் செய்வோம். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு பொருள் தான் சுண்ணாம்பு.
முன்பு எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.
சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.
இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்கலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.
இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.
பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும். கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும்.
அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம். மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.
நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து. தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.
பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
முன்பு எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.
சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.
இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்கலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.
இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.
பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும். கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும்.
அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம். மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.
நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து. தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.
பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஆர்வம். ஆனால் நீண்டகால முதலீடுகளை எவ்வளவு காலம் தொடாமல் இருந்தால் நல்லது என்பது குறித்து நமக்குக் குழப்பமும் இருக்கிறது.
நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் நம்மில் பலருக்கும் ஆர்வம். ஆனால் நீண்டகால முதலீடுகளை எவ்வளவு காலம் தொடாமல் இருந்தால் நல்லது என்பது குறித்து நமக்குக் குழப்பமும் இருக்கிறது.
பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள், ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையே ஒரு நல்ல முதலீட்டு உத்தியாக கருதுகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பிடலிட்டி முதலீட்டு நிறுவனம் எத்தகைய முதலீட்டாளருக்கு அதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வை நடத்தியது.
தான் செய்த முதலீட்டை பல ஆண்டுகளுக்கு மறந்துவிட்ட அல்லது கண்டுகொள்ளாமல்விட்ட முதலீட்டாளர்களே மிக உயர்ந்த வருமானத்தை நிதிச் சந்தையில் இருந்து பெற்றனர் என அந்த ஆய்வு தெரிவித்தது. அது மட்டுமல்ல, இந்த முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் நீண்ட காலத்துக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவு கூறியது.
எனவே, உங்கள் முதலீட்டுப் பிரிவுகளை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, ஒரு செயலும் செய்யாமல் இருப்பது மிகவும் லாபகரமான உத்தி ஆகும். இது மிகவும் எளிதான, சிறந்த உபாயம்தான்.
ஆனால் முதலீட்டில் நீண்டகாலம் என்பதற்கு பலரும் பலவித வரையறையைக் கூறுகிறார்கள்.
உங்களுடைய வரியை கணக்கிடும் நோக்கத்துக்காக, நீங்கள் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் செய்த முதலீட்டுக் காலம் ஒரு வருடத்துக்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நீண்ட கால முதலீடாக கருதப்படும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளுக்கு, இந்தக் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும்.
இது இந்திய வரி விதிப்பு சட்டப்படி இருக்கலாம். ஆனால் அதிக வருமானம் தரும் முதலீடு என வரும்பொழுது இந்தக் கால வரம்பு அதற்குப் பொருந்தாது. அப்போது ஒரு வருடம் என்பது ஒரு குறுகிய காலம் ஆகும்.
பங்குகளில் நீண்ட காலத்திற்கு மட்டுமே ஏன் முதலீடு செய்யப்பட வேண்டும்? இதற்கான பதில், பங்குச்சந்தையில் நிச்சயமாக, ஏற்றத்தாழ்வு இருக்கும். தற்போது, மும்பை பங்குச்சந்தை சென்செக்சின் ஐந்து வருட வருவாய் வருடத்துக்கு தோராயமாக 12.77 சதவீதம் அல்லது ஒட்டுமொத்தமாக 79 சதவீதம் ஆக உள்ளது.
எது எவ்வாறாயினும், ஐந்து வருட காலத்தை ஒவ்வொரு வருடமாக அலசி ஆராய்ந்தால், இதன் வருவாய் 8.9 முதல் 41.8 சதவீதம் வரை உள்ளது. இது நீண்ட கால முதலீட்டுக்கு ஆதரவாக உள்ள ஒரு வலுவான வாதம் ஆகும்.
வருமானம் பெரியது, ஆனால் மாறுபாடு அதிகமாக உள்ளது. எந்த குறிப்பிட்ட குறுகிய காலத்தை எடுத்துக்கொண்டாலும் உங்களுக்கு வருவாய் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்படலாம். இவை அனைத்தும் நீண்டகால அளவில் மட்டுமே ஈடு செய்யப்படும்.
பங்குச் சந்தையானது சுழற்சிகளில் நகரும் ஒரு சக்கரம் போன்றது. இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு முழு சுழற்சியை சந்திக்கிறது. இதன் சுழற்சி சக்கரத்தில் ஓர் உச்சபட்ச உயர்வு, அதன் பின் சறுக்கல், அதன் பின்னர் நிலைபெறுதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கு சரியான அளவு வருவாய் வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முழு சுழற்சி முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கண்டிப்பாக நடக்காது.
பங்கு முதலீட்டில், ‘நீண்ட காலம்’ என்பது ஒரு தெளிவான வார்த்தை ஆகும். எனினும் வல்லுனர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி காலத்தை வரையறுப்பார்கள். ஆனால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை நீண்டகாலம் எனக் கூறலாம்.
பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள், ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு பின்னர் குறிப்பிட்ட காலத்துக்கு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையே ஒரு நல்ல முதலீட்டு உத்தியாக கருதுகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பிடலிட்டி முதலீட்டு நிறுவனம் எத்தகைய முதலீட்டாளருக்கு அதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஓர் ஆய்வை நடத்தியது.
தான் செய்த முதலீட்டை பல ஆண்டுகளுக்கு மறந்துவிட்ட அல்லது கண்டுகொள்ளாமல்விட்ட முதலீட்டாளர்களே மிக உயர்ந்த வருமானத்தை நிதிச் சந்தையில் இருந்து பெற்றனர் என அந்த ஆய்வு தெரிவித்தது. அது மட்டுமல்ல, இந்த முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் நீண்ட காலத்துக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த ஆய்வு முடிவு கூறியது.
எனவே, உங்கள் முதலீட்டுப் பிரிவுகளை நிர்வகிப்பதைப் பொறுத்தவரை, ஒரு செயலும் செய்யாமல் இருப்பது மிகவும் லாபகரமான உத்தி ஆகும். இது மிகவும் எளிதான, சிறந்த உபாயம்தான்.
ஆனால் முதலீட்டில் நீண்டகாலம் என்பதற்கு பலரும் பலவித வரையறையைக் கூறுகிறார்கள்.
உங்களுடைய வரியை கணக்கிடும் நோக்கத்துக்காக, நீங்கள் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் செய்த முதலீட்டுக் காலம் ஒரு வருடத்துக்கு அதிகமாக இருந்தால் அது ஒரு நீண்ட கால முதலீடாக கருதப்படும். அதே சமயத்தில் மற்ற முதலீடுகளுக்கு, இந்தக் கால வரம்பு மூன்று ஆண்டுகள் ஆகும்.
இது இந்திய வரி விதிப்பு சட்டப்படி இருக்கலாம். ஆனால் அதிக வருமானம் தரும் முதலீடு என வரும்பொழுது இந்தக் கால வரம்பு அதற்குப் பொருந்தாது. அப்போது ஒரு வருடம் என்பது ஒரு குறுகிய காலம் ஆகும்.
பங்குகளில் நீண்ட காலத்திற்கு மட்டுமே ஏன் முதலீடு செய்யப்பட வேண்டும்? இதற்கான பதில், பங்குச்சந்தையில் நிச்சயமாக, ஏற்றத்தாழ்வு இருக்கும். தற்போது, மும்பை பங்குச்சந்தை சென்செக்சின் ஐந்து வருட வருவாய் வருடத்துக்கு தோராயமாக 12.77 சதவீதம் அல்லது ஒட்டுமொத்தமாக 79 சதவீதம் ஆக உள்ளது.
எது எவ்வாறாயினும், ஐந்து வருட காலத்தை ஒவ்வொரு வருடமாக அலசி ஆராய்ந்தால், இதன் வருவாய் 8.9 முதல் 41.8 சதவீதம் வரை உள்ளது. இது நீண்ட கால முதலீட்டுக்கு ஆதரவாக உள்ள ஒரு வலுவான வாதம் ஆகும்.
வருமானம் பெரியது, ஆனால் மாறுபாடு அதிகமாக உள்ளது. எந்த குறிப்பிட்ட குறுகிய காலத்தை எடுத்துக்கொண்டாலும் உங்களுக்கு வருவாய் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்படலாம். இவை அனைத்தும் நீண்டகால அளவில் மட்டுமே ஈடு செய்யப்படும்.
பங்குச் சந்தையானது சுழற்சிகளில் நகரும் ஒரு சக்கரம் போன்றது. இது ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் ஒரு முழு சுழற்சியை சந்திக்கிறது. இதன் சுழற்சி சக்கரத்தில் ஓர் உச்சபட்ச உயர்வு, அதன் பின் சறுக்கல், அதன் பின்னர் நிலைபெறுதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கு சரியான அளவு வருவாய் வேண்டும் என்றால் நீங்கள் ஒரு முழு சுழற்சி முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அது ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் கண்டிப்பாக நடக்காது.
பங்கு முதலீட்டில், ‘நீண்ட காலம்’ என்பது ஒரு தெளிவான வார்த்தை ஆகும். எனினும் வல்லுனர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி காலத்தை வரையறுப்பார்கள். ஆனால், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை நீண்டகாலம் எனக் கூறலாம்.
நமது உடலமைப்புக்கு பழகிபோன பொருட்களை உண்பதே நல்லது. அதைபோலவே அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பொருட்களை உண்பதே நலம் பயக்கும்.
இப்போது பருவமாற்றம் நிகழும் காலம். குளிரில் இருந்து வெயிலுக்கு மாறும் இந்த நேரத்தில் நமது உடலிலும் மாற்றங்களை உணரலாம். உடலை சுத்தப்படுத்தி கொள்வது நல்லது. அதற்காக பேதி மருந்து எடுக்கலாம். அல்லது காலை விளக்கெண்ணெய் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது புதிய காலநிலைக்கு நம் உடலை தயாராக வைக்கும்.
அக்னி குளிர்காலத்தில் அதிகம் தேவையாக இருக்கும். அப்போது செரிமானம் அதிகம் நடக்கும். வெயிலுக்கு மாறும்போது செரிமானம் குறையும். அக்னி குறைவாக இருப்பதால் அதற்கு நமது உடலை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இயற்கையே, நமக்கு தேவையான உணவுகளை தருகிறது. பழவகைகள், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் அபரிமிதமாக இந்த பருவத்தில் கிடைக்கின்றன. அவற்றை உண்பது நல்லது.
இப்போது அறிவியல் முன்னேற்றத்தால் எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் காய்கறிகள், பழங்களின ஜீன் மாற்றப்படுகிறது. இது உடல் நலனுக்கு நல்லதல்ல. விதையே வராதபழங்கள் இயற்கைக்கு எதிரானவையே.
அந்தந்த பிரதேசங்களில் விளையும் பொருட்கள், மருந்துகள் அவரவர்க்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது நியதி. உலகம் முழுவதும் கிடைக்கும் பழங்கள், நம் ஊரிலேயே கிடைத்தாலும், நமது உடலமைப்புக்கு பழகிபோன பொருட்களை உண்பதே நல்லது.
அதைபோலவே அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பொருட்களை உண்பதே நலம் பயக்கும்.
அக்னி குளிர்காலத்தில் அதிகம் தேவையாக இருக்கும். அப்போது செரிமானம் அதிகம் நடக்கும். வெயிலுக்கு மாறும்போது செரிமானம் குறையும். அக்னி குறைவாக இருப்பதால் அதற்கு நமது உடலை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இயற்கையே, நமக்கு தேவையான உணவுகளை தருகிறது. பழவகைகள், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் அபரிமிதமாக இந்த பருவத்தில் கிடைக்கின்றன. அவற்றை உண்பது நல்லது.
இப்போது அறிவியல் முன்னேற்றத்தால் எல்லா காலங்களிலும் கிடைக்கும் வகையில் காய்கறிகள், பழங்களின ஜீன் மாற்றப்படுகிறது. இது உடல் நலனுக்கு நல்லதல்ல. விதையே வராதபழங்கள் இயற்கைக்கு எதிரானவையே.
அந்தந்த பிரதேசங்களில் விளையும் பொருட்கள், மருந்துகள் அவரவர்க்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது நியதி. உலகம் முழுவதும் கிடைக்கும் பழங்கள், நம் ஊரிலேயே கிடைத்தாலும், நமது உடலமைப்புக்கு பழகிபோன பொருட்களை உண்பதே நல்லது.
அதைபோலவே அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பொருட்களை உண்பதே நலம் பயக்கும்.






