என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மணத்தக்காளி கீரை துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளி கீரை - 1 கப்
    பெருங்காய தூள் - 1 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 1
    பச்சை மிளகாய் - 2
    உளுந்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி
    பூண்டு - 6 பற்கள்
    சின்ன வெங்காயம் - 10
    மிளகு -  6
    தேங்காய் துருவல் - கால் கப்
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    அடி கனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காய தூள் போட்டு பொரிய விடவும்.

    அடுத்து அதில் ஒரு காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.

    அடுத்து மிளகு, பூண்டு பற்கள், பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.

    அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரையை போட்டு நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.

    ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் தேங்காய் துருவல், புளி, தேவையான அளவு உப்பு, சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    மணத்தக்காளி கீரை துவையல் தயார்.

    இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் மலச்சிக்கல் பிரச்சனையும் ஒன்றாகும். இந்த பிரச்சனைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    குழந்தை பெற்ற பின்னர் உடம்பில் ஏராளமான மாற்றங்களை பெண்கள் சந்திக்க நேரிடும். அதில், மலச்சிக்கல் பிரச்சனை பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்களின் செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும்.

    இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது, அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும். அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். அதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * பசலைக் கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த பசலைக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களால், உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் குணப்படுத்தலாம். அதிலும் பிரசவத்திற்கு பின் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.

    * தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு சீரகம் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி என்றால், 2 டீஸ்பூன் சீரகத்தை நெய்யில் போட்டு வறுத்து, பொடி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.

    * வாழைப்பழம் மற்றும் பெர்ரிப் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வேறு எதிலும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதிலும் இத்தகைய பழங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

    * தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது நிச்சயம் குணமாகிவிடும்.

    * நவதானியங்களால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகமாவதை தவிர்ப்பதோடு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தவிர்க்கலாம்.

    * ஸ்நாக்ஸ்களில் உலர் திராட்சைகள், பேரிச்சம் பழம், உலர் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

    * தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே தினமும் குறைந்தது 3-4 டம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், 2 டம்ளர் இளநீர் குடித்தால், உடல் வறட்சி தடைபடுவதோடு, குடலியக்கமும் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

    * தயிரை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதோடு, சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் குணமாக்கும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தயிரை சாப்பிடும் போது, மிகவும் குளிர்ச்சியாக சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட வேண்டும்.
    எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம்.
    ஒவ்வொருவருக்கும் குழந்தை பருவம் என்பது மிக முக்கியமானது. குழந்தை பிறந்தவுடன் போதிய அளவு தாய்ப்பால் குடிப்பதில் இருந்து, சரிவிகித உணவு உண்பது வரையிலான பல முக்கிய செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் எதிர்காலம் குறித்த செயல்களை தீர்மானிக்கின்றன.

    அவ்வாறின்றி உணவு முறைகள் தவறிப்போன குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? எத்தகைய உணவில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது? குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணி கூறியதாவது:-

    நம் நாட்டில் குழந்தைகள் பிறப்பு முதல் 14 வயது வரை வளர்இளம் பருவம் என கணக்கிடப்படுகிறது. அதற்கேற்றவாறு குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

    குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான முழுமையான சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அவ்வாறு ஒரு வருடம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பார்கள்.

    இணை உணவு

    குழந்தைகளின் பிறப்பில் இருந்து 6 அல்லது 7-வது மாதத்தில் தாய்ப்பாலுடன் இணை உணவாக கஞ்சி கொடுக்க வேண்டும். அந்த சமயத்தில் தான் ருசியானது, குழந்தைகளின் மூளையில் பதிவாகும். எனவே அத்தகைய தருணத்தில் பருப்பு, கீரை, சாதம் இவற்றை கஞ்சியாக கடைந்து கொடுப்பது நல்லது.

    அவ்வாறு கொடுத்து பழக்குவதால் குழந்தைகள் 5 வயது வரை இத்தகைய உணவை மறுக்காமல் உண்பார்கள். இத்தகைய கஞ்சி உணவை கொடுத்து பழக்கவில்லை என்றால் இதன் ருசியை அறியாமல் அவற்றை சாப்பிடாமல் ஒதுக்குவார்கள். அதனால் அவர்களை வலுக்கட்டாயமாக உண்ண வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    4 மடங்கு எடை

    பொதுவாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து என்ற 3 வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் மாவுச்சத்து, உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. புரதச்சத்து, தசை, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து, மூளை, நரம்பு மண்டல வளர்ச்சி, நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதற்கும் உதவுகிறது. இந்த சத்துகள் அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட 2 வருடத்தில் 4 மடங்கு அதிகரிக்கும். எனவேதான் அவர்களுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.

    அதிவேக வளர்ச்சி

    அதன்பிறகு, அதாவது 2 வயதுக்குப்பின் ஒவ்வொரு வருடத்துக்கும் 2 கிலோ எடை அதிகரிக்கும். 6 சென்டிமீட்டர் உயரம் வளர்வார்கள். அந்த காலகட்டத்தில் சரிவிகித உணவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பொதுவாக இந்த காலகட்டத்தை உடல் அதிவேக வளர்ச்சியுறும் காலம் என்பார்கள். இதனை வளர்இளம் பருவம் என்றும் கூறுவதுண்டு.இந்த வளர்ச்சி காலம் என்பது அவர்களின் 14 முதல் 16 வயது வரை இருக்கும். அதனால் சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உணவில் கலோரி

    பொதுவாக குழந்தையின் எடையில் சராசரியாக 1 கிலோவுக்கு 110 கலோரி அளவுக்கு சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு இட்லியில் 50 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது. தோசையில் 100-ம், உப்புமாவில் 250-ம், ஒரு பிஸ்கட்டில் 15-ம், ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 20 கலோரி அளவுக்கு சத்து இருக்கிறது.



    100 மில்லி லிட்டர் தாய்ப்பாலில் 70 கலோரி சத்தும், 3 கிராம் புரதமும் இருக்கிறது. ஒரு முட்டையில் 70 கலோரி அளவுக்கு சத்தும், 7 கிராம் புரதமும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு அவசியம் முட்டையும், சரிவிகித உணவும் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    வைட்டமின்கள்

    பொதுவாக பால், முட்டை, காய்கறி, பழங்கள் இவற்றில் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து ஆரோக்கியத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு இவற்றை சிறு வயதிலேயே உண்ண கொடுத்து வளர்க்க வேண்டும்.அதேபோல் அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அசைவ உணவிலான சூப் வகைகளை குடிப்பதும், இறைச்சி உண்பதும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு அவசியம் தேவை.

    துரித உணவுகள்

    இதுபோன்ற அத்தியாவசிய உணவு முறைகளை தவிர்த்து பீட்சா, பர்கர் போன்ற துரித மற்றும் பாக்கெட் உணவுகளை உண்பதால் குறைந்த வயதில் குழந்தைகளின் எடை அதிகரித்து விடுகிறது. பொதுவாக பாக்கெட் உணவுகளால் அதிக கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது என்பதை அறியாமலேயே குழந்தைகளும் அதை உண்கிறார்கள்.

    துரித, பாக்கெட் உணவுகளில் புரதச்சத்து இருக்காது. ஆனால் கொழுப்புசத்து அதிகம் இருக்கும். அதனால் எளிதில் உடல் பருமன் ஆகிவிடும். இதுபோன்று உடல் பருமன் உள்ள குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். சோம்பல் அதிகமிருக்கும். அதனால் மற்ற குழந்தைகளை விட அவர்களுக்கு புரிதல் சக்தி குறைந்து விடும். இதுபோன்ற காரணங்களால் அவர்கள் படிப்பில் பின்தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    பிரச்சினைகளை தவிர்க்க...

    அதுமட்டுமின்றி உடல் பருமன் உள்ள குழந்தைகள் தங்களது வாழ்நாளில் 30 முதல் 35 வயதில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, மூட்டுவலி, நாளமில்லா சுரப்பிகள் சரிவர செயல்படாதநிலை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் சுறுசுறுப்பு இன்மை, அறிவில் பின்தங்கியநிலையும் உண்டாகும்.

    இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, சிறுவயதில் சரிவிகித உணவு, சரியான நேரத்துக்கு சாப்பிடும் வழக் கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதனால் அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சி பெருகும். அதனுடன் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    இரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    சீரான ரத்த ஓட்டம் உடலியக்கத்திற்கு மிக அவசியம். சுவாசத்திற்கு அவசியமான ஆக்சிஜனை கடத்துவதற்கும், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள், செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவு பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கமுடியாதது.

    அவைகளை அப்புறப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது. அதற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அதனை சுத்திகரிப்பதும் முக்கியமானது. நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கின்றன. எனினும் ரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகள்!

    * உடலில் உள்ள நச்சுக் களை அகற்ற உதவும் இயற்கை சுத்திகரிப் பானாக பிராக்கோலி விளங் குகிறது. இது காய்கறி வகையை சேர்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக் களை நீக்கவும் பிராக் கோலி உதவுகிறது. பிராக்கோலியை காய்கறி சாலட்டாக தயாரித்தோ, சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

    * ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யாப் பழம் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பழ வகைகள். இவை ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புக்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கழிவுகளை நீக்கும் பணியையும் செய்கின்றன.

    * தக்காளி பழத்தில் இருக்கும் லைகோபின், குளுதாதயோன் போன்றவையும் உடலிலுள்ள கழிவுகள், ரசாயனங்களை நீக்கும் தன்மை கொண்டவை.

    * ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி இன பழங்களையும் சாப்பிட்டு வருவது நல்லது. அவை கல்லீரலின் ஆரோக்கியத்தை காக்க உதவும்.

    * கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.

    * பீட்ரூட் சாறு இயற்கை யாகவே உடலில் நச்சுத் தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆதலால் பீட்ரூட்டை ஜூசாகவோ, சாலட்டா கவோ, பொரியலாகவோ தயார் செய்து சாப்பிடுவது நல்லது.

    * சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது சிறந்தது. இதில் இரும்பு சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தையும் சீராக பராமரிக்கவும், ரத்தத்தை தூய்மைப் படுத்தவும் வெல்லம் உதவுகிறது.

    * குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளி யேற்றுகிறது. இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

    * முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக இருக்கின்றன. ரத்தத்தை சுத்திகரித்து தூய்மைப்படுத்துவதன் மூலம் தலைவலி, ஒவ்வாமை, குமட்டல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். 
    சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். இன்று பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 2  
    தக்காளி - 2
    புளி - நெல்லிக்காய் அளவு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு

    பக்கோடாவிற்கு...

    கடலைப் பருப்பு - 1/2 கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    பூண்டு - 4 பற்கள்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிது

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    கடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

    பின் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி, 5 நிமிடம் கழித்துப் பரிமாறினால், செட்டிநாடு பக்கோடா குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
    தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

    தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும்.

    பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும் போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது.
    குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகி விட்டது.

    இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

    வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகிவிடும்.

    மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

    எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும்.
    குழந்தைகள் 1 வயதை தொடும்வரை, ஒவ்வொரு மாதங்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும், 1 வயதை தொடும்வரை, குறிப்பிட்ட மாதங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை கொடுப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    0-4 மாதம் வரை

    தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

    4-6 மாதம் வரை

    நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள்
    ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் பழம் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.



    6-8 மாதம் வரை

    இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

    8-10 மாதம் வரை

    இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    10-12 மாதம்


    இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும். 
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சாம்பார் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    துவரம் பருப்பு - 150 கிராம்
    சின்ன வெங்காயம் - 100
    தக்காளி - 3
    சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
    புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம், வெந்தயம் தலா - 1 ஸ்பூன்
    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலை - தேவையான அளவு



    செய்முறை :

    பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். பருப்பு நன்றாக வெந்தவுடன் நன்றாக கடைந்து வைக்கவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    சின்ன வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வெந்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    சூப்பரான சின்ன வெங்காய சாம்பார் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
    பெண்ணடிமை எனும் விலங்கை உடைத்து எறிந்து இன்றைய நாகரீக உலகின் பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். பெண்ணடிமை என்ற இரும்பு கூண்டிலிருந்து இன்றைய பெண்கள் சுதந்திர பறவைகளாக சிறகடித்து பறக்கின்றனர். காவல்துறை, சட்டத்துறை, அரசியல், தகவல் தொடர்பு துறை உள்பட அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் பெரிய பதவிகளை வகித்து திறம்பட செயல்படுகின்றனர்.

    மருத்துவ துறையிலும் பெண்கள் வியக்கத் தக்க சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்தியாவை வழிநடத்திய பிரதமர் பதவியில் இந்திரா காந்தி இருந்திருக்கிறார். பல பெண்கள் முதல்-அமைச்சர் நாற்காலியை அலங்கரித்து இருக்கிறார்கள். இருந்து கொண்டும் இருக்கிறார்கள். விண்வெளிக்கு சென்ற கல்பனா சாவ்லா இந்திய வம்சா வளியை சேர்ந்தவர் தான்.

    போக்குவரத்து துறையிலும் பெண் ஓட்டுனர்கள் வந்து விட்டனர். விளம்பர துறையிலும் பெண்கள் நல்ல நிலையை அடைந்து உள்ளனர். உலக அழகிப்போட்டியிலும் இந்திய பெண்கள் மகுடம் சூடி இருக்கிறார்கள். குடும்ப பெண்கள் தங்கள் வீட்டு கடமைகளை முடித்துவிட்டு பகுதிநேர வேலைக்கு சென்று கணவரின் கஷ்டத்தில் பங்கெடுக்கின்றனர். வேளாண்மை துறையிலும் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுபோல பல துறைகளில் பெண்களின் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படிப்பிலும் மாணவிகள் முதலிடத்தை பிடித்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகின்றனர். விளையாட்டு துறைகளிலும் பெண்கள் பங்கேற்று இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்று தந்துள்ளார்கள். அதேபோல மாணவ சமுதாயத்தை சேர்ந்த நாமும் நல்ல முறையில் படித்து தாய், தந்தையருக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்ப்போமாக.

    பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பெண்களின் பட்டுப்புடவைகளின் நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.
    காஞ்சிப்பட்டு முதல் பனாரஸ் பட்டு வரையில் பட்டு என்றாலே புடவைதான் நினைவிற்கு வரும். ஆனால் பட்டு நூலில் கண்ணை கவர்ந்து மனதை கொள்ளை கொள்ளும் நகைகள் பிரமிப்பூட்டுபவை. பெண்கள் தாங்கள் அணியும் பட்டுபுடவைக்கு ஏற்ப நகை அணிய விரும்பும் போது தங்க நகையையே விரும்புவர். ஆனால் தங்க நகைகளில் புடவைக்கு ஏற்ற நிறங்களில் அணிவது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

    பல வண்ண கற்கள் பதித்த கவரிங் நகைகள் போட்டாலும் அவை விலையுயர்ந்த பட்டுப்புடவைக்கு ஜோடியாவது சற்று சிரமம் தான். ஆனால் பட்டு நூலில் செய்யப்படும் நகைகள் பட்டுப்புடவைகளின் அதே நிறத்துடன், அதே பளபளப்பு மற்றும் வழுவழுப்புடனும் பளிச்சென்று புடவைக்கு ஏற்ப பொருந்தி விடுகிறது.

    பட்டு நூல் நகைகளின் வரலாறு :

    பட்டு நூல் நகைகள் வட இந்திய பகுதிகளில் தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. பெரு நாட்டில் பட்டு நூல் நகைகள் அதிகம் பிரசித்தம். அதே வகை நகைகள் கொடைகானலில் உள்ள பழங்குடி பெண்கள் செய்து விற்று வந்தனர். ஆனால் தற்போது இளம் பெண்கள் விரும்பி அணிவதால் இந்நகைகள் பல இணையதள கடைகளில் விற்கப்படுகின்றன.

    புதிய டிசைன்கள் புராதனம் இணைந்து...

    பொதுவாக நகைகளில் பாரம்பரியத்தன்மை கொண்டவை ஆன்ட்டிக் வகைகள், சிறு ஆன்ட்டிக் மணிகள், ஆன்ட்டிக் தொங்கட்டான், ஜிமிக்கி, பென்டன்ட் போன்றவைகளை பயன்படுத்தி செய்யப்படும் பெரிய நெக்லஸ், ஜிமிக்கி, கழுத்தணிகள், வளையல்கள் போன்றவை மிகவும் கம்பீரமாக இருக்கும். இவற்றின் இடையே பட்டு நூல் சுற்றிய மணிகள் மிகவும் எடுப்பாகவும் நேர்த்தியாகவும் தெரிகிறது.

    வெள்ளை நிற கற்கள், முத்துக்கள், மணிகள் போன்றவைகளும் இந்த நகைகளில் செய்யப்படும் நகைகள் தூரத்தில் பார்த்தால் தங்க நகைகள் போலவே தோற்றமளிக்கின்றன. பொதுவாக பட்டுப்புடவையின் நிறங்கள் தனித்தன்மையுடன் இருக்கும். இவற்றிற்கான ப்ளவுஸ் துண்டை எடுக்கும் போது அதே நிறங்கள் பொதுவாக கிடைப்பதில்லை. ஆனால் பட்டு நூலுனால் செய்யப்படும் நகைகள் புடவையின் நிறத்திற்கு வாந்தமாக பொருந்தி விடுகிறது.

    பொடி முத்துக்கள் கொத்து கொத்தாக கோர்க்கப்பட்டு செயின் இடையேவும், இம்முத்துக்களால் ஆன காது வளையின் கீழ்புறம் தொங்கும் ஜிமிக்கியிலும், இதே முத்தக்கள் கொண்ட வளையல்களின் இடைஅயவும் பட்டு நூலினால் சுற்றப்பட்ட மணிகள் போர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் நகைகள் மிகவும் அழகாகவும் பட்டு புடவைகள் மட்டுமின்றி சுடிதார், ஜீன்ஸ், குர்தாவிற்கும் பொருந்தக்கூடியதாய் இருக்கிறது. மிகவும் எடை குறைவாகவும், பெரிய அளவிலும், விலை குறைவாகவும் கிடைக்கும் இந்த நகைகள் இளம் பெண்களின் மனம் கவர்ந்த நகையாக இருக்கும்.

    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகில் காலை நேர டிபனாக நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    தண்ணீர் - தேவைக்கு,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

    இந்த மாவு சிறிது ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் உருண்டைகளை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் சுவாச உறுப்புகள் பலம் பெறும். இந்த ஆசனம் சுவாச கோளாறுகளுக்கு பயனுள்ளது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : ‘தனுர்’ என்றால் வில் என்று பொருள் இந்த ஆசனத்தில் உடலை வில் போல் வளைப்பதால் தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : முதலில் தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும். தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். இருகால்களையும் மடக்கி வலது கைவிரல்களால் வலது கணுக்காலையும், இடது கை விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ளவும். இந்த நிலையில் 2-3 முறை மூச்சை ஆழமாகவும் நிதானமாகவும் இழுத்துவிடவும்.

    மூச்சை வெளியேவிட்டு மடக்கிய கால்களை அப்படியே மேலே தூக்கவும். அப்படி தூக்கும்போது தலையிலிருந்து மார்புவரை உள்ள உடல் பகுதியையும் மேலே தூக்க வேண்டும். வயிற்றுப் பகுதி மட்டும் தரை விரிப்பின் மேல் பதிந்திருக்க வேண்டும். கண்களால் மேல் நோக்கி பார்க்கவும். இந்த ஆசன நிலையில் நிதானமாக ஆழமான மூச்சுடன் 30 முதல் 60 வினாடி நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு வந்து அதிலிருந்து ஓய்வு நிலைக்கு செல்லவும்.
    இந்த ஆசனத்தை 2-3 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : அடி வயிறு, தொடைகள், முதுகுத்தசை மற்றும் மூச்சின் மீதும் விசுத்தி, அனாஹதம் அல்லது மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : பொதுவாக பருமனானவர்களும், பெருந்தொந்தி உள்ளவர்களும் கால்களை மடக்கி கணுக்கால் பகுதியை கைவிரல்களால் பிடிப்பதற்கு இயலாது. அத்தகையவர்கள் மற்றொருவரின் துணை கொண்டு எட்டாத காலை மெதுவாக பிடித்துக் கொடுக்கச் சொல்லி சில நாட்கள் பயிலலாம். அல்லது ஒரு காலை மட்டும் மாற்றி மாற்றி பிடித்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம். சிலருக்கு கால்களை கை விரல்களால் பிடித்துக் கொள்ள வரும். ஆனால் உடலை மேலே தூக்கும் போது தொடைகள் மேலே எழும்பாது. அத்தகையவர்கள் மார்பை கீழ் நோக்கியும் தொடைகளை மேல் நோக்கியும் கொண்டு வந்து உடனே தொடைகளை கீழே இறக்கி மார்பை மேலே தூக்குவதுமாக சிலமுறை உடலை மேலும் கீழுமாக ஆட்டி செய்து வந்தால் சில நாட்களில் தனுராசனம் சரியாக செய்ய வந்து விடும்.

    தடைகுறிப்பு : உயர் ரத்த அழுத்தம், குடல் பிதுக்கம், வயிறு, குடல் புண், இருதய பலகீனம், குடல் வீக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள் : முதுகெலும்பைச் சார்ந்த எல்லா நாடி நரம்புகளுக்கும் சுத்தமான ரத்தம் பரவி நரம்பு மண்டலம் முழுவதும் உறுதி அடைகிறது. முதுகெலும்பின் நடுப்பாகம் நன்கு வளைக்கப்படுவதால் எந்த வயதிலும் இளமையோடு சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. சுவாச உறுப்புகள் பலம் பெறும். சுவாச கோளாறுகளுக்கு பயனுள்ளது. 
    ×